நீட் வழக்கில் அநீதிகள்!
==========================
அநீதியான நீட் தேர்வுக்கு உயிர் பலியான தங்கை அனிதா அவர்தம்
குடும்பத்தினர் மற்றும் நீட் தேர்வால் அநீதியான முறையில் தங்கள் மருத்துவ
படிப்பை பறிகொடுத்த ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் உளப்பூர்வமாக மன்னிப்பு
கேட்டுக்கொண்டு இதை தட்டச்சு செய்ய ஆரம்பிக்கிறேன். நான் ஏன் மன்னிப்புக்
கேட்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? ஒரு வழக்கறிஞராக இருந்துகொண்டு நீட்
தேர்வு குறித்த வழக்குகளில் இத்தனை சட்டத் தவறுகள் இருந்தும் அவைகளை
நீதிமன்றம் முன்பாக, மக்கள் முன்பாக எடுத்து செல்லாமல் அமைதியாக
இருந்துவிட்டேனே! தங்கை அனிதா மரணத்திற்கு ஒரு காரணமாக இருந்துவிட்டேனே!!
இனியும் சட்ட தவறுகளை அம்பலப்படுத்தாமல் இருக்க முடியுமா? அதுதான் இந்த
நீண்ட பதிவு.
நீட் தேர்வு சரியா தவறா என்ற நீண்ட விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
என்றாலும் இந்த நீட் தேர்வு எப்படி கொல்லைப்புறம் வழியாக நுழைந்தது
என்பது தெரியுமா? ஒரு சரியான தீர்ப்பு, சட்டத்திற்கு புறம்பான முறையில்
ஒரு தவறான முறை மூலம் அவசர அவசரமாக வழக்கு விசாரிக்கப்பட்டு, மீண்டும்
புதியதாக விசாரிக்கபோகிறோம் என்று சட்டத்திற்கு முரணாக முந்தைய தீர்ப்பு
தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலேயே
அநியாயமான முறையில் இன்று நீட் தேர்வு நம் குழந்தைகள் மீது
திணிக்கப்பட்டுள்ளது. இதனை நம்மில் பெரும்பாலானவர்கள் அறியவில்லை. நீட்
தேர்வு சட்டப்படி சரியானது என்றும், உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு
வழங்கிவிட்டது என்றும், அந்த தீர்ப்பு சட்டத்தின்படி தான்
வழங்கப்பட்டிருக்கும் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரிலேயே நீட்
தேர்வு நடத்தப்படுகிறது என்றும், மத்திய ஆளும் பாஜக அரசுக்கும் நீட்
தேர்வு திணிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்றும், இனி மாணவர்கள் நீட்
தேர்வுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை
என்றும் தவறாக கருதிக்கொண்டிருக்கும் அப்பாவிகளுக்காக இந்த பதிவு. இதைப்
படிக்கும்போது தங்களுக்கு, “இப்படியெல்லாம் ஒரு நீதிபதி இருந்திருக்க
முடியுமா? இப்படிப்பட்ட நீதிபதிதான் நீட் தேர்வை விசாரித்து
தீர்பளித்தாரா? ஒரு நீதிபதி சட்டத்தை மீறி இப்படி ஒரு அநீதியான தீர்ப்பை
வழங்கி அதனை செயல்படுத்தவும் அரசையும் அரசு இயந்திரத்தையும் இயக்க
முடியுமா?” என பல ஆச்சரிய கேள்விகள் மனதில் தோன்றலாம். ஆனால் அதுதான்
அப்பட்டமான உண்மை. இதனை படித்து முடித்த பின்னர் நடந்த அநீதிகளை
எதிர்த்து குரல் கொடுப்பீர்கள் என்றால் பாசிச பாஜக எச்ச ராஜா பார்வையில்
நீங்களும் என்னைப்போல் ஒரு ஆன்டி இந்தியர்தான்.
நீட் வழக்குகள் ஒரு கழுகுப் பார்வை:
இந்தியா முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு (NEET) மூலம் மருத்துவ
படிப்பிற்கும் மருத்துவ மேற்படிப்புக்கும் மற்றும் பல் மருத்துவப்
படிப்பிற்கும் பல் மருத்துவ மேற்படிப்புக்கும் மாணவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கடந்த 21.12.2010ல் இந்திய மருத்துவக்
கழகம் (MCI) இரண்டு அறிவிக்கைகளையும், 31.05.2012ல் இந்திய பல்
மருத்துவக் கழகம் (DCI) இரண்டு அறிவிக்கைகளையும் வெளியிட்டன. இந்த
அறிவிப்புகளை எதிர்த்து வேலூர், கிருத்துவ மருத்துவக் கல்லூரி [CHRISTIAN
MEDICAL COLLEGE (CMC)] உள்ளிட்ட பல மருத்துவக்கல்லூரிகளும், தமிழ்நாடு
உள்ளிட்ட பல மாநில அரசுகளும் பல வழக்குகளை தாக்கல் செய்தன. இவ்வாறு
தாக்கல் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச
நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.அல்டாமஸ்
கபீர். திரு.விக்ரமஜித் சென் மற்றும் திரு.அனில் தவே ஆகிய மூன்று
நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்றாக விசாரித்து கடந்த 18.07.2013 அன்று
தீர்ப்பினை 203 பக்கங்களில் விரிவாக அளித்தது. நீதிபதிகள் திரு.அல்டாமஸ்
கபீர் மற்றும் திரு.விக்ரமஜீத் சென் ஆகிய இருவரும் அரசியல் அமைப்புச்
சட்டத்தின் படியும், 2002ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் 11 நீதிபதிகள்
அடங்கிய அரசியல் சாசன முழுமையான அமர்வு (Full Bench) T.M.A. Pai
Foundation Vs. State of Karnataka [(2002) 8 SCC 481] என்ற வழக்கில்
அளித்த தீர்ப்பு, அதனைப் பின்னிட்டு Islamic Academy of Education Vs.
State of Karnataka [(2003) 6 SCC 697] வழக்கு, உச்சநீதிமன்றத்தின் 7
நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு P.A. Inamdar Vs. State of
Maharashtra [(2005) 6 SCC 537] என்ற வழக்கில் அளித்த தீர்ப்பு மற்றும்
Indian Medical Association Vs. Union of India[(2011) 7 SCC 179] ஆகிய
வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையிலும் நீட்
தேர்வு நடத்த இந்திய மருத்துவ கழகம் மற்றும் இந்திய பல் மருத்துவ கழகம்
வெளியிட்ட நான்கு அறிவிக்கைகளையும் இரத்து செய்து நீட் தேர்வு நடத்த
அவைகளுக்கு அதிகாரமில்லை என்றும் நீட் தேர்வு இந்திய அரசியலமைப்பு
சட்டத்திற்கு எதிரானது என்றும் தெளிவாக 176 பக்கங்களில்
தீர்ப்பளித்தனர். நீதிபதி திரு.அனில் தவே அவர்கள் இரண்டு நீதிபதிகளின்
தீர்ப்பில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறி தனது மாறுபட்ட
(Dissenting) தீர்ப்பை அதே தீர்ப்பில் தொடர்ந்து 177 முதல் 203வரையில்
அதாவது 27 பக்கங்களில் மட்டுமே Dr.Preeti Srivastava and Another vs.
State of M.P. and Others (1999) 7 SCC 120 மற்றும் Veterinary Council
of India vs. Indian Council of Agricultural Research, (2000) 1 SCC 750
ஆகிய தீர்ப்புகளின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்த MCI & DCI
ஆகியவற்றிற்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளிக்கிறார். சட்டப்படி 2:1
என்ற அடிப்படையில் திரு.அனில் தவே அவர்களின் சிறுபான்மை மாறுபட்ட
தீர்ப்பு செல்லாததாகிவிட்டது. எனவே நீட் தேர்வு தடை செய்யப்பட்டது.
பின்னிட்டு 18.07.2013ல் வழங்கப்பட்ட மேற்படி Christian Medical College
Vellore & Ors.Vs.Unionof India & Ors. [(2014) 2 SCC 305] வழக்கின்
தீர்ப்பை எதிர்த்து இந்திய மருத்துவ கழகம் உள்ளிட்ட சிலர்
மறுஆய்வு(Review Petitions) மனு தாக்கல் செய்கின்றனர். அந்த வழக்கு
2013ல் இருந்து வழக்கு தரப்பினர்களுக்கு அறிவிப்பு (Court Notice) அனுப்ப
சார்பு செய்யப்படாமல் நிலுவையில் இருந்துவந்த நிலையில் நீதிபதிகள்
திரு.அல்டாமஸ் கபீர் மற்றும் திரு.விக்ரமஜீத் சென் ஆகிய இருவரும் ஒய்வு
பெற்று விட்டனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய மருத்துவக்
கழகம் திறமையாக காய்களை நகர்த்தியது. எனவே மேற்படி மறுஆய்வு மனு இதனை
ஒத்த வேறு ஒரு Civil Appeal No.4060/2009 என்ற ஒரு வழக்குடன் சேர்த்து
விசாரிக்க வேண்டி 21.01.2016 அன்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு
விசாரணை மாற்றப்படுகிறது. அந்த அமர்வுக்கு தலைவர் மேற்படி Christian
Medical College Vellore & Ors. Vs. Union of India & Ors. [(2014) 2 SCC
305] வழக்கில் மாறுபட்ட தீர்ப்பளித்த சாட்சாத் அதே நீதிபதி திரு.அனில்
தவே அவர்களேதான். மற்ற நீதிபதிகள் A.K.சிக்ரி, R.K.அகர்வால், ஆதர்ஸ்
குமார் கோயல், R.பானுமதி ஆகியோர்.
இந்த மறுஆய்வு வழக்கில் வழக்கு தரப்பினர்கள் பலருக்கு நீதிமன்ற அறிவிப்பு
(Notice) சார்வு ஆகாதநிலையில் இரண்டு நாளிதழ்களில் விளம்பரம் மூலமாக
மாற்று முறையில் அறிவிப்பு செய்ய உத்தரவிடப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டு
15.02.2016 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு
விசாரிக்கப்பட்டு 16.03.2016 அன்று இறுதி விசாரணைக்குப் பின்னர்
11.04.2016 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பு என்றால் எதோ
நூற்றுக்கணக்கான பக்கங்களில் அரசியலமைப்பு சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள்,
பல உச்சநீதிமன்ற தீர்ப்புகளை அலசி ஆராய்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பு என்று
அப்பாவித்தனமாக எண்ணிவிட வேண்டாம். நான்கே பக்கங்களில் வழங்கப்பட்ட அந்த
தீர்ப்பின் வரிகளை அப்படியே இங்கு பதிவிடுகிறேன்.
These review petitions have been filed against the judgment of this
Court dated 18th July, 2013 passed in Christian Medical College
Vellore & Ors. Vs. Union of India & Ors. reported in (2014) 2 SCC 305.
The review petitions were placed before a Three-Judge Bench and
notices were issued on 23rd October, 2013 and thereafter, it was
brought to the notice of the Bench that Civil Appeal No.4060/2009 and
connected matters involving an identical issue, had been referred to a
Five-Judge Bench.
Accordingly, on 21st January, 2016, these review petitions were
ordered to be heard by a Five-Judge Bench. On 21st January, 2016,
notice was ordered to be served through substituted service and in
pursuance of the said order, necessary publication was made in two
newspapers and proof thereof was filed on 15th February, 2016.
Thereafter, we have heard the matters. Civil Appeal No.4060/2009 and
its connected matters have been heard and order has been reserved on
16th March, 2016.
We have heard the counsel on either side at great length and also
considered the various judgments cited by them, which include
judgments cited by the non-applicants on the scope of review in
Kamlesh Verma vs. Mayawati and Others (2013) 8 SCC 320, Union of India
vs. Namit Sharma (2013) 10 SCC 359 and Sheonandan Paswan vs. State of
Bihar andothers (1987) 1 SCC 288.
After giving our thoughtful and due consideration, we are of the view
that the judgment delivered in Christian Medical College (supra) needs
reconsideration. We do not propose to state reasons in detail at this
stage so as to see that it may not prejudicially affect the hearing of
the matters. For this purpose we have kept in mind the following
observations appearing in the Constitution Bench judgment of this
Court in Sheonandan Paswan (supra) as under: “.... If the Review Bench
of the apex court were required to give reasons, the Review Bench
would have to discuss the case fully and elaborately and expose what
according to it constitutes an error in the reasoning of the Original
Bench and this would inevitably result in pre-judgment of the case and
prejudice its re-hearing. A reasoned order allowing a review petition
and setting aside the order sought to be reviewed would, even before
the re-hearing of the case, dictate the direction of the re-hearing
and such direction, whether of binding or of persuasive value, would
conceivably in most cases adversely affect the losing party at the
re-hearing of the case. We are therefore of the view that the Review
Bench in the present case could not be faulted for not giving reasons
for allowing the Review Petition and directing re-hearing of the
appeal. It is significant to note that all the three Judges of the
Review Bench were unanimous in taking the view that “any decision of
the facts and circumstances which … constitutes errors apparent on the
face of record and my reasons for the findings that these facts and
circumstances constitute errors apparent on the face of record
resulting in the success of the review petition, may have the
possibility of prejudicing the appeal which as a result of my decision
has to be re-heard....”
Suffice it is to mention that the majority view has not taken into
consideration some binding precedents and more particularly, we find
that there was no discussion among the members of the Bench before
pronouncement of the judgment.
We, therefore, allow these review petitions and recall the judgment
dated 18th July, 2013 and direct that the matters be heard afresh. The
review petitions stand disposed of as allowed.
அதாவது மேற்படி வேலூர் CMC வழக்கை நாங்கள் (நீதிபதிகள்) மீண்டும்
விசாரிக்க வேண்டும் என்று கருதுகிறோம். அதற்கான காரணம் எதையும் விரிவாக
இந்த நேரத்தில் நாங்கள் (நீதிபதிகள்) சொல்ல விரும்பவில்லை. அவ்வாறு
சொல்வது நிலுவையில் உள்ளவைகளை பாதிக்கும். தீர்ப்பு வழங்கும் முன்பாக
வழங்கப்போகும் தீர்ப்பு குறித்து நீதிபதிகளுக்குள் விவாதிக்கப்படவில்லை.
எனவே இந்த மறுஆய்வு மனு அனுமதிக்கப்பட்டு 18.07.2013 தீர்ப்பு திரும்பப்
பெறப்பட்டு மீண்டும் புதிதாக விசாரிக்க உத்தரவிடப்படுகிறது. இதுதான்
மேற்படி தீர்ப்பின் சாராம்சம்.
இந்த உலகில் எந்த ஒரு தீர்ப்பும் இவ்வாறு விசாரிக்கப்படாமலேயே ஒரு
மறுஆய்வு மனு மூலம் எந்த சட்ட முரண்பாடும் காரணமும் சொல்லாமலேயே மூல
வழக்கில் தீர்ப்பளித்த பெரும்பான்மை நீதிபதிகள் ஓய்வுபெற்ற பின்னர்
அவ்வழக்கில் சிறுபான்மையாக மாறுபட்ட (dissenting) தீர்ப்பளித்த
நீதிபதியின் தலைமையில் வேறு ஒரு அரசியல் சாசன அமர்வில் சட்டங்களுக்கு
முரணாக இரத்து செய்யப்பட்ட அநீதி நடந்ததாக வரலாறு இல்லை.
முதலில் வழக்கின் அனைத்து தரப்பினர்களுக்கும் மறுஆய்வு மனு வழக்கு
குறித்து நீதிமன்ற அறிவிப்பு 2013ஆம் ஆண்டிலிருந்து சார்வு செய்யப்பட்டாத
நிலையில் ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டதும் அவசரமாக
மாற்றுமுறையில் பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவிப்பு கொடுக்க
உத்தரவிட்டதன் காரணம் அமர்வின் தலைவர் நீதிபதி திரு.அனில் தவே விரைவில்
ஒய்வு பெற உள்ளார் அதற்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான். அதாவது
தான் ஒய்வு பெறும் முன்பாக நீட் தேர்வை நடத்தியே ஆகவேண்டும் என்ற நீதிபதி
திரு.அனில் தவே அவர்களின் ஆர்வம் தான் தற்போதைய நீட் தேர்வு. இவ்வாறு
அவசரமாக வழக்கு தரப்பினர்களுக்கு நீதிமன்றம் மூலம் நேரடி அறிவிப்பை
தருவதிலிருந்து தவறி, மீறியது மற்றும் நீதிபதி திரு.அனில் தவே
விசாரித்தது ஆகியவை இயற்கை நீதியை குழிதோண்டிப் புதைத்ததற்கு சமமாகும்.
இயற்கை நீதி என்றால் என்ன? இயற்கை நீதி என்றால் அடிப்படை நீதி ஆகும். மிக
முக்கியமான இரண்டு இயற்கை நீதிகள்
1. Nemo judex in causa sua: No man shall be a judge in his own cause,
or the deciding authority must be impartial and without bias.
அதாவது, தனது வழக்கில் எவரும் நீதிபதியாக இருக்கக் கூடாது (அல்லது)
நீதிபதி அவசியம் நடுநிலையானவராக இருக்கவேண்டும். மேலும் நீதிபதி ஒரு
தரப்பினர் சார்பானவராகவோ முன்னதாகவே முடிவை தீர்மானித்துவிட்டவராகவோ
இருக்கக் கூடாது.
2. Audi Alteram Partem: To hear the other side, or both the sides must
be heard, or no man
should be condemned unheard, or that there must be fairness on the
part of the deciding
authority.
ஒரு தீர்ப்பின் மீதான மறுஆய்வு (Review) மனுக்களைப் பொறுத்தவரையில்
சட்டப்படி முன்னதாக விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதிகளே விசாரிப்பார்கள்.
அது இயற்கை நீதிக்கு புறம்பானது அல்ல. ஏனெனில் மறுஆய்வு மனு என்றால்
தீர்ப்பில் பார்த்த மாத்திரத்தில் வெளிப்படையாக தெரியக்கூடிய தவறுகள்
இருந்தால் மட்டுமே மறுஆய்வு மனு மூலம் தீர்ப்பில் உள்ள தவறுகள்
திருத்திக்கொள்ளப்படும். ஆனால் நீட் தேர்வு குறித்த வேலூர் CMC வழக்கு
மீதான மறுஆய்வு மனுவைப் பொறுத்தவரையில், குறுகிய காலத்தில்
தீர்மானிக்கப்பட வேண்டிய மறுஆய்வு மனு நீண்ட காலம் நிலுவையில் இருந்த
நிலையில், தீர்ப்பை அளித்த மூன்று நீதிபதிகளில் பெரும்பான்மைத்
தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகளும் ஓய்வுபெற்று விட்டனர். இந்த நிலையில்
புதியதாக வேறு ஒரு அமர்வுக்கு விசாரணை மாற்றப்படும் நிலையில் மூல
வழக்கில் மாறுபட்ட தோல்வியுற்ற தீர்ப்பளித்த நீதிபதியையே தலைவராகக்
கொண்டு விசாரணை செய்ய முடியுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அவர்
நியாயமாக, நடுநிலையாக விசாரித்து தீர்ப்பளிப்பாரா என்ற சந்தேகம்
எவருக்கும் இயல்பாகவே எழும் என்பதில் ஐயமில்லை. அதற்கு தகுந்தாற்போல்
இந்த மறுஆய்வு மனு வழக்கில் விசாரணை எதுவும் செய்யாமல் எந்த சட்டத்
தவறுகளையும் குறிப்பிடாமல் CMC மூல வழக்கை மீண்டும் புதியதாக விசாரிக்க
விரும்புகிறோம் என்று மட்டும் காரணம் கூறி முந்தைய தீர்ப்பு திரும்பப்
பெறப்பட்டுள்ளது. இது மறுஆய்வு மனுவிற்கான சட்ட வரம்புகளுக்கே எதிரானது
ஆகும். இங்கு குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால் நீதிபதி
அனில்தவே அவர்கள் நீதிமன்றத்தின் உள்ளேயே, தான் ஹிட்லராக இருந்தால்
அனைத்து பள்ளிகளிலும் பகவத்கீதையை கட்டாயப் பாடமாக்குவேன் என்று
முழங்கியவர். மேலும் நீதிபதி ஆதர்ஸ் குமார் கோயல் அவர்கள் பாஜக சார்பாக
பல வழக்குகளில் ஆஜரானவர். இயற்கை நீதி அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது தானே?
குப்புறத் தள்ளிய குதிரை குழியையும் பறித்ததாம்:
அநியாயம் அதோடு நிற்கவில்லை. இவ்வாறு வேலூர் CMC வழக்குத் தீர்ப்பை
இரத்து செய்த மறுஆய்வு தீர்ப்பில் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று
சொல்லப்படவில்லை. அவ்வாறு சொல்லியிருந்தால் மற்ற நீதிபதிகள் ஒப்புக்கொள்ள
மறுத்திருக்க வாய்ப்புள்ளது.
சொல்லிவைத்தது போல் உடனடியாக சங்கல்ப் சாரிடபிள் டிரஸ்ட் என்ற அமைப்பு
இந்த (2016) ஆண்டே நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்று ஒரு
ரிட் வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது. அந்த வழக்கு அவசர
வழக்காக நீதிபதிகள் திரு.அனில் தவே, திரு.சிவ கீர்த்தி சிங் மற்றும்
திரு.ஆதர்ஷ் குமார் கோயல் ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பாக
விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு மிக விரைவாக விசாரிக்கப்பட்டு 28.04.2016
அன்று தீர்ப்பளிக்கப்படுகிறது. விரைவான தீர்ப்பு அநீதிக்குச் சமம்
என்றும், தாமதமான தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதி என்றும் சொல்வார்கள். நீட்
தேர்வு வழக்கில் விரைவான தீர்ப்பு அநீதி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆம் உடனடியாக நீட் தேர்வு 2016 ஆம் ஆண்டிலேயே நாடு முழுவதும் நடத்தப்பட
வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் எதிர் தரப்பினர்களாக யார்
யார் சேர்க்கப்பட்டார்கள் அவர்கள் என்ன வாதிட்டார்கள் என்பது தான்
சுவாரசியமான தகவல். சங்கல்ப் சாரிடபிள் அறக்கட்டளை தாக்கல் செய்த இந்த
வழக்கில் நான்கு பேர் எதிர்தரப்பினர்களாக கொண்டு வழக்கு தாக்கல்
செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் நான்காவது எதிர்மனுதாரரை (அது யார்
விரைவான தீர்ப்புக்கு அவர் எவ்வாறு தடையாக இருப்பார் எனத் தெரியவில்லை)
நீக்கச்சொல்லி அவர் நீக்கப்பட்ட பின்னர் வழக்கில் எதிர்மனுதாரர்களாக
இருந்தவர்கள் மத்திய அரசு, இந்திய மருத்துவக் கழகம், மற்றும் CBSC ஆகிய
மூவர் மட்டுமே. அவர்களும் குறுகிய காலத்தில் தங்களால் தேர்வு நடத்த
முடியாது, மூல வழக்கு நிலுவையில் உள்ளபோது தேர்வு நடத்துவது தவறானது
என்று சொல்லி வாதாடியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? ஆம் எனில்
உங்களை விட வெள்ளந்தியை பார்க்க முடியாது. அவர்கள் சொல்லியதைக் கேட்டால்
எவருக்கும் இரத்த அழுத்தம் சற்றே அதிகரிக்கும். ஆம் 2015 ஆம் ஆண்டிலேயே
நாங்கள் நீட் தேர்வுக்காக பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளோம் என்று ஒரு
எதிர்மனுதாரரும், மூன்றே நாட்களில் நாங்கள் AIPMT 2016 தேர்வை வருகிற மே
1ஆம் தேதியே நடத்துகிறோம் அதனையே நீட் phase I தேர்வாக
எடுத்துக்கொள்ளலாம் என்றும், ஜூலை மாதத்தில் நீட் phase II என
விண்ணப்பிக்காமல் விடுபட்ட மாணவர்களுக்காக நடத்திவிடுகிறோம் என்று ஒரு
எதிர்மனுதாரரும் போட்டிபோட்டு கொண்டு நீட் நடத்தி தரமான மருத்துவக்
கல்வியை உடனடியாக இந்தியாவிற்கு அளிக்க தயாராக இருப்பதை சொல்லி
நீதிமன்றத்தில் தங்கள் கற்றறிந்த வழக்கறிஞர்கள் மூலம் உறுதியளித்தார்கள்.
2013ல் இருந்து 2016ல் இந்த வழக்கு வரை நீட் தேர்வு உச்ச நீதிமன்றத்தால்
தடை செய்யப்பட்டு இருந்த நிலையில் 2015ஆம் ஆண்டில் நீட் தேர்வுக்கான
பாடத்திட்டத்தை ஏன் MCI வெளியிட்டார்கள் என்று புத்திசாலித்தனமாக ஆண்டி
இந்தியர் எவரும் சிந்தித்து கேள்வி கேட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
இந்த வழக்கில் தரப்பினர் இல்லாத ஆனால் சமூக நீதியில் அக்கறை கொண்ட ராஜீவ்
தவான் போன்ற பல ஜாம்பவான் வழக்கறிஞர்கள் தாமாக முன்னிலையாகி தங்கள்
வாதங்களை முன்வைத்தனர். வேலூர் CMC வழக்கு மீண்டும் புதிதாக விசாரிக்க
வேண்டிதான் மறுஆய்வு மனுவில் தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
தகுதியின் அடிப்படையில் மறுஆய்வு மனு தீர்மானிக்கப்படவில்லை. எனவே
நீதிபதி அல்டாமஸ் கபீர் தலைமையில் வழங்கப்பட்ட தீர்ப்பு Over Rule
செய்யப்படவில்லை. எனவே புதியதாக விசாரித்து தீர்ப்பளிக்கப்படும் வரையில்
நீட் தேர்வு நடத்தப்படக் கூடாது என்று பலவாறு வழக்கறினர்கள் சட்டங்களை
விளக்கினாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு வெறும் நான்கு
பக்கங்களில் தீர்ப்பளித்து நீட் நம் குழந்தைகள் மீது திணிக்கப்பட்டது.
பொதுவாக நடைமுறையில் உள்ள எதனையும் மாற்றும் நடைமுறைகளில்
பெருவாரியானவர்கள் ஈடு செய்ய இயலாத அளவிற்கு பாதிப்பு ஏற்படும்
சூழல்களில் இறுதியாக தீர்மானிக்கப்படும் வரையில் இருக்கும் நிலையே
(Status quo) இறுதி தீர்ப்பளிக்கப்படும் வரையில் தொடர வேண்டும் என்றே
நீதிமன்றங்கள் உத்தரவிடும். அதாவது ஒரு கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்ற
ஒரு வழக்கில் மேல்முறையீடுகள் அனைத்தும் முடியும் வரையில் கட்டிடம்
இடிக்க தடை விதித்தே நீதிமன்றங்கள் உத்தரவிடும். இதுதான் சட்டமும்,
நியாயமும் ஆகும். ஆனால் நீட் தேர்வு வழக்கில் விநோதமாக புதியதாக
விசாரிக்கப்பட்டு இறுதி தீர்ப்பு வரும் வரையில் புதிதாக திணிக்கப்படும்
நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீட்
தேர்வு சட்ட விரோதம் என்று இறுதியாக தீர்ப்பளிக்கப்பட்டால் பலியான சகோதரி
அனிதாவுக்கும், மருத்துவப் படிப்பை பறிகொடுத்த ஆயிரக்கணக்கான
மாணவர்களுக்கும் ஏற்பட்ட இழப்புகளை யார் ஈடு செய்வார்கள்?
“ஆமாம். நீட் தேர்வு நடத்த தினசரி வாய்தா போட்டு விசாரணை செய்து
அளிக்கப்பட தீர்ப்பில் வேலூர் CMC வழக்கு தீர்ப்பு புதியதாக விசாரணை
செய்ய வேண்டித்தானே இரத்து செய்யப்பட்டது. தற்போது அந்த வழக்கின் நிலை
என்னவானது?” என்று புத்திசாலித்தனமாக சிந்திப்பவர்களுக்கு மட்டும்
சொல்கிறேன். தொடர்ந்து படியுங்கள்...
வேலூர் CMC மறுஆய்வு வழக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன
அமர்வுக்கு மாற்றப்பட்டதே அதனை ஒத்த வேறு ஒரு வழக்குடன் சேர்த்து
விசாரிக்க வேண்டிதான். அந்த Modern Dental College vs State Of Madhya
Pradesh & Ors, Civil Appeal No.4060/2009 வழக்கில் CMCவழக்கின்
மறுஆய்வு வழக்கில் தீர்ப்பளித்த கையோடு உடனடியாக 02.05.2016ஆம் தேதியே
தீர்ப்பளித்துவிட்டு, அந்த வழக்கில் இந்திய மருத்துவக் கழகத்தை சீரமைக்க
வேண்டி ஒரு வல்லுனர்கள் குழுவை அமைத்து அந்த குழு MCI மத்திய அரசால்
சீரமைக்கப்படும் வரையில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அதனை
உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஆண்டிற்கு பின்னர்
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வாய்தா போடப்பட்டுள்ளது.
“அத விடுங்கள் சார் நீட் தேர்வுக்கு எதிரான வேலூர் CMC வழக்கு வாய்தா
என்றைக்கு வருகிறது” என்று கேட்கிறீர்கள்.
உங்கள் அவசரம் எனக்குப் புரிகிறது. ஆனால்....
உச்ச நீதிமன்ற இணையதளப் பதிவுகள் படி வேலூர் CMC வழக்கின் அடுத்த வாய்தா
கடந்த ஆண்டு மே மாதம் 2016க்குப் பிறகு ஒன்னரை ஆண்டுகள் கழித்து வரும்
நவம்பர் மாதத்தில் அதாவது 21.11.2017 அன்றைக்கு வாய்தா
குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து தாமதமான தீர்ப்பு மறுக்கப்பட்ட
நீதிக்கு சமம் என்பதும் நிரூபிக்கப்படுகிறது.
“அடப்பாவிகளா! 21.11.2017க்கு பின் எப்ப விசாரிச்சு எப்ப
தீர்ப்பளிச்சு.... அதற்குள் மூன்று நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமே”
என்று தாங்கள் கேட்பது எனது காதில் விழுகிறது. ஆனால் ஆளும் பாசிச பாஜக
அரசோ வேறுமாதிரி மாத்தி யோசிச்சு ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவில் பல
ஆண்டுகளுக்கு மண்ணை அள்ளிப் போட்டே விட்டது. அதாவது இந்திய மருத்துவ
கழகத்திற்கு நீட் UG & PG நடத்த அதிகாரம் அளித்து கடந்த 04.08.2016 ஆம்
தேதியிலேயே THE INDIAN MEDICAL COUNCIL (AMENDMENT) ACT, 2016 என சட்ட
திருத்தம் நிறைவேற்றி அதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலையும் உடனடியாக
பெற்று கொண்டுவந்து அரசிதழிலும் வெளியிட்டு விட்டது. நாம் நீட் தடைக்கு
தீர்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வேலூர் CMC வழக்கோ MCI
வெளியிட்ட நீட் தேர்வுக்கான அறிவிக்கைகளுக்கு எதிராக மட்டும்தான்.
(வழக்கு மனுதாரரான CMC யால் திருத்தம் கேட்டுள்ளதா என தெரியவில்லை).
“அப்போ வழக்கின் நிலை?”
“Petition infract us. Hence Petition dismissed.”
“அப்படி என்றால்?”
“வழக்கின் கோரிக்கை அற்றுப்போய் விட்டது. அதனால் வழக்கு தள்ளுபடி செய்யப்படலாம்.”
“வழக்கு நிலுவையில் உள்ளபோது சட்டம் இயற்றலாமா நீதிமன்றம் சும்மா விடுமா?”
“பாசிச பாஜக அரசு இதையெல்லாம் சாதாரணமாக சமாளித்துவிடும்.”
“அப்போ என்னதான் செய்வது?”
“நீட் நடத்துவதற்காகவே மத்திய பாஜக அரசால் அவசரமாக இயற்றப்பட்ட THE
INDIAN MEDICAL COUNCIL (AMENDMENT) ACT, 2016 சட்டத் திருத்தம், அதாவது
நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது, இந்திய கூட்டாச்சி தத்துவத்திற்கு
எதிரானது, சமூக நீதிக்கு எதிரானது எனவே அது அரசியலமைப்பு சட்டப்படி
செல்லாது என புதியதாக ஒரு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கில் நீட்
தேர்வு இரத்து செய்யப்பட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். அது
நிச்சயம்.” சார் இதை கேட்டதும் எங்கே வேகமா புறப்படுறீங்க. உச்ச
நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்யவா? சொல்லுங்க சார் நானே
வக்கீல் தான்.”
“அட போங்க சார். நம்ம சட்டமன்றம் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து
விலக்கு அளிக்க வேண்டி ஏகமனதாக சட்டம் இயற்றி அது குடியரசுத்தலைவர்
ஒப்புதலுக்காக கடந்த எட்டு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு
வச்சிருக்காங்க. அதனை உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து
ஒப்புதலை பெற்றால் நீட்டு தீட்டு நம்மை விட்டு நீங்கிடப் போகுது. பீட்டா
வை எதிர்த்து ஜல்லிக்கட்டே நடத்திட்டோம். இந்த ரீட்டா நீட்டா வையெல்லாம்
என்ன செய்யிறதுன்னு எங்களுக்குத் தெரியும். ஏதாவது கேசு போட்டால் ஜாமீன்
எடுக்க வந்து சேருங்க சார். ஆமாம் இவ்வளவு விபரங்கள் சொன்னீங்களே உங்க
பேரு?”
“கமருதீன். இந்தாங்க விசிட்டிங் கார்டு. நீட்டை நீக்க சட்ட உதவி செய்ய
எப்போதும் தயாராக இருக்கிறோம்.”
Ref:
1. Christian Medical College Vellore & Ors.Vs.Unionof India & Ors.
[(2014) 2 SCC 305]
https://indiankanoon.org/doc/ 54508777/
2. SANKALP CHARITABLE TRUST AND ANR VS. UNION OF INDIA AND ORS
http://supremecourtofindia. nic.in/jonew/judis/43577.pdf
3. Medical Council’s NEET: Unfair, Unjust, Arbitrary written by Rajiv
Dhavan senior advocate at the Supreme Court.
https://thewire.in/36274/mcis- neet-unfair-unjust-arbitrary/? utm_source=socialshare&utm_ medium=whatsapp
4. CMC Case Status
http://www.sci.nic.in/php/ case_status/case_status_ process.php?d_no=60287&d_yr= 2012
அ.கமருதீன், பி.எஸ்சி., பி.எல்.,
வழக்கறிஞர் / ஒருங்கிணைப்பாளர்,
குடிமக்கள் உரிமைகள் பொதுமன்றம்,
திருச்சி 620018.
Email: k4kamar@gmail.com
செல[truncated by WhatsApp]
==========================
அநீதியான நீட் தேர்வுக்கு உயிர் பலியான தங்கை அனிதா அவர்தம்
குடும்பத்தினர் மற்றும் நீட் தேர்வால் அநீதியான முறையில் தங்கள் மருத்துவ
படிப்பை பறிகொடுத்த ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் உளப்பூர்வமாக மன்னிப்பு
கேட்டுக்கொண்டு இதை தட்டச்சு செய்ய ஆரம்பிக்கிறேன். நான் ஏன் மன்னிப்புக்
கேட்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? ஒரு வழக்கறிஞராக இருந்துகொண்டு நீட்
தேர்வு குறித்த வழக்குகளில் இத்தனை சட்டத் தவறுகள் இருந்தும் அவைகளை
நீதிமன்றம் முன்பாக, மக்கள் முன்பாக எடுத்து செல்லாமல் அமைதியாக
இருந்துவிட்டேனே! தங்கை அனிதா மரணத்திற்கு ஒரு காரணமாக இருந்துவிட்டேனே!!
இனியும் சட்ட தவறுகளை அம்பலப்படுத்தாமல் இருக்க முடியுமா? அதுதான் இந்த
நீண்ட பதிவு.
நீட் தேர்வு சரியா தவறா என்ற நீண்ட விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
என்றாலும் இந்த நீட் தேர்வு எப்படி கொல்லைப்புறம் வழியாக நுழைந்தது
என்பது தெரியுமா? ஒரு சரியான தீர்ப்பு, சட்டத்திற்கு புறம்பான முறையில்
ஒரு தவறான முறை மூலம் அவசர அவசரமாக வழக்கு விசாரிக்கப்பட்டு, மீண்டும்
புதியதாக விசாரிக்கபோகிறோம் என்று சட்டத்திற்கு முரணாக முந்தைய தீர்ப்பு
தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலேயே
அநியாயமான முறையில் இன்று நீட் தேர்வு நம் குழந்தைகள் மீது
திணிக்கப்பட்டுள்ளது. இதனை நம்மில் பெரும்பாலானவர்கள் அறியவில்லை. நீட்
தேர்வு சட்டப்படி சரியானது என்றும், உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு
வழங்கிவிட்டது என்றும், அந்த தீர்ப்பு சட்டத்தின்படி தான்
வழங்கப்பட்டிருக்கும் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரிலேயே நீட்
தேர்வு நடத்தப்படுகிறது என்றும், மத்திய ஆளும் பாஜக அரசுக்கும் நீட்
தேர்வு திணிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்றும், இனி மாணவர்கள் நீட்
தேர்வுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை
என்றும் தவறாக கருதிக்கொண்டிருக்கும் அப்பாவிகளுக்காக இந்த பதிவு. இதைப்
படிக்கும்போது தங்களுக்கு, “இப்படியெல்லாம் ஒரு நீதிபதி இருந்திருக்க
முடியுமா? இப்படிப்பட்ட நீதிபதிதான் நீட் தேர்வை விசாரித்து
தீர்பளித்தாரா? ஒரு நீதிபதி சட்டத்தை மீறி இப்படி ஒரு அநீதியான தீர்ப்பை
வழங்கி அதனை செயல்படுத்தவும் அரசையும் அரசு இயந்திரத்தையும் இயக்க
முடியுமா?” என பல ஆச்சரிய கேள்விகள் மனதில் தோன்றலாம். ஆனால் அதுதான்
அப்பட்டமான உண்மை. இதனை படித்து முடித்த பின்னர் நடந்த அநீதிகளை
எதிர்த்து குரல் கொடுப்பீர்கள் என்றால் பாசிச பாஜக எச்ச ராஜா பார்வையில்
நீங்களும் என்னைப்போல் ஒரு ஆன்டி இந்தியர்தான்.
நீட் வழக்குகள் ஒரு கழுகுப் பார்வை:
இந்தியா முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு (NEET) மூலம் மருத்துவ
படிப்பிற்கும் மருத்துவ மேற்படிப்புக்கும் மற்றும் பல் மருத்துவப்
படிப்பிற்கும் பல் மருத்துவ மேற்படிப்புக்கும் மாணவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கடந்த 21.12.2010ல் இந்திய மருத்துவக்
கழகம் (MCI) இரண்டு அறிவிக்கைகளையும், 31.05.2012ல் இந்திய பல்
மருத்துவக் கழகம் (DCI) இரண்டு அறிவிக்கைகளையும் வெளியிட்டன. இந்த
அறிவிப்புகளை எதிர்த்து வேலூர், கிருத்துவ மருத்துவக் கல்லூரி [CHRISTIAN
MEDICAL COLLEGE (CMC)] உள்ளிட்ட பல மருத்துவக்கல்லூரிகளும், தமிழ்நாடு
உள்ளிட்ட பல மாநில அரசுகளும் பல வழக்குகளை தாக்கல் செய்தன. இவ்வாறு
தாக்கல் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச
நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.அல்டாமஸ்
கபீர். திரு.விக்ரமஜித் சென் மற்றும் திரு.அனில் தவே ஆகிய மூன்று
நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்றாக விசாரித்து கடந்த 18.07.2013 அன்று
தீர்ப்பினை 203 பக்கங்களில் விரிவாக அளித்தது. நீதிபதிகள் திரு.அல்டாமஸ்
கபீர் மற்றும் திரு.விக்ரமஜீத் சென் ஆகிய இருவரும் அரசியல் அமைப்புச்
சட்டத்தின் படியும், 2002ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் 11 நீதிபதிகள்
அடங்கிய அரசியல் சாசன முழுமையான அமர்வு (Full Bench) T.M.A. Pai
Foundation Vs. State of Karnataka [(2002) 8 SCC 481] என்ற வழக்கில்
அளித்த தீர்ப்பு, அதனைப் பின்னிட்டு Islamic Academy of Education Vs.
State of Karnataka [(2003) 6 SCC 697] வழக்கு, உச்சநீதிமன்றத்தின் 7
நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு P.A. Inamdar Vs. State of
Maharashtra [(2005) 6 SCC 537] என்ற வழக்கில் அளித்த தீர்ப்பு மற்றும்
Indian Medical Association Vs. Union of India[(2011) 7 SCC 179] ஆகிய
வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையிலும் நீட்
தேர்வு நடத்த இந்திய மருத்துவ கழகம் மற்றும் இந்திய பல் மருத்துவ கழகம்
வெளியிட்ட நான்கு அறிவிக்கைகளையும் இரத்து செய்து நீட் தேர்வு நடத்த
அவைகளுக்கு அதிகாரமில்லை என்றும் நீட் தேர்வு இந்திய அரசியலமைப்பு
சட்டத்திற்கு எதிரானது என்றும் தெளிவாக 176 பக்கங்களில்
தீர்ப்பளித்தனர். நீதிபதி திரு.அனில் தவே அவர்கள் இரண்டு நீதிபதிகளின்
தீர்ப்பில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறி தனது மாறுபட்ட
(Dissenting) தீர்ப்பை அதே தீர்ப்பில் தொடர்ந்து 177 முதல் 203வரையில்
அதாவது 27 பக்கங்களில் மட்டுமே Dr.Preeti Srivastava and Another vs.
State of M.P. and Others (1999) 7 SCC 120 மற்றும் Veterinary Council
of India vs. Indian Council of Agricultural Research, (2000) 1 SCC 750
ஆகிய தீர்ப்புகளின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்த MCI & DCI
ஆகியவற்றிற்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளிக்கிறார். சட்டப்படி 2:1
என்ற அடிப்படையில் திரு.அனில் தவே அவர்களின் சிறுபான்மை மாறுபட்ட
தீர்ப்பு செல்லாததாகிவிட்டது. எனவே நீட் தேர்வு தடை செய்யப்பட்டது.
பின்னிட்டு 18.07.2013ல் வழங்கப்பட்ட மேற்படி Christian Medical College
Vellore & Ors.Vs.Unionof India & Ors. [(2014) 2 SCC 305] வழக்கின்
தீர்ப்பை எதிர்த்து இந்திய மருத்துவ கழகம் உள்ளிட்ட சிலர்
மறுஆய்வு(Review Petitions) மனு தாக்கல் செய்கின்றனர். அந்த வழக்கு
2013ல் இருந்து வழக்கு தரப்பினர்களுக்கு அறிவிப்பு (Court Notice) அனுப்ப
சார்பு செய்யப்படாமல் நிலுவையில் இருந்துவந்த நிலையில் நீதிபதிகள்
திரு.அல்டாமஸ் கபீர் மற்றும் திரு.விக்ரமஜீத் சென் ஆகிய இருவரும் ஒய்வு
பெற்று விட்டனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய மருத்துவக்
கழகம் திறமையாக காய்களை நகர்த்தியது. எனவே மேற்படி மறுஆய்வு மனு இதனை
ஒத்த வேறு ஒரு Civil Appeal No.4060/2009 என்ற ஒரு வழக்குடன் சேர்த்து
விசாரிக்க வேண்டி 21.01.2016 அன்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு
விசாரணை மாற்றப்படுகிறது. அந்த அமர்வுக்கு தலைவர் மேற்படி Christian
Medical College Vellore & Ors. Vs. Union of India & Ors. [(2014) 2 SCC
305] வழக்கில் மாறுபட்ட தீர்ப்பளித்த சாட்சாத் அதே நீதிபதி திரு.அனில்
தவே அவர்களேதான். மற்ற நீதிபதிகள் A.K.சிக்ரி, R.K.அகர்வால், ஆதர்ஸ்
குமார் கோயல், R.பானுமதி ஆகியோர்.
இந்த மறுஆய்வு வழக்கில் வழக்கு தரப்பினர்கள் பலருக்கு நீதிமன்ற அறிவிப்பு
(Notice) சார்வு ஆகாதநிலையில் இரண்டு நாளிதழ்களில் விளம்பரம் மூலமாக
மாற்று முறையில் அறிவிப்பு செய்ய உத்தரவிடப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டு
15.02.2016 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு
விசாரிக்கப்பட்டு 16.03.2016 அன்று இறுதி விசாரணைக்குப் பின்னர்
11.04.2016 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பு என்றால் எதோ
நூற்றுக்கணக்கான பக்கங்களில் அரசியலமைப்பு சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள்,
பல உச்சநீதிமன்ற தீர்ப்புகளை அலசி ஆராய்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பு என்று
அப்பாவித்தனமாக எண்ணிவிட வேண்டாம். நான்கே பக்கங்களில் வழங்கப்பட்ட அந்த
தீர்ப்பின் வரிகளை அப்படியே இங்கு பதிவிடுகிறேன்.
These review petitions have been filed against the judgment of this
Court dated 18th July, 2013 passed in Christian Medical College
Vellore & Ors. Vs. Union of India & Ors. reported in (2014) 2 SCC 305.
The review petitions were placed before a Three-Judge Bench and
notices were issued on 23rd October, 2013 and thereafter, it was
brought to the notice of the Bench that Civil Appeal No.4060/2009 and
connected matters involving an identical issue, had been referred to a
Five-Judge Bench.
Accordingly, on 21st January, 2016, these review petitions were
ordered to be heard by a Five-Judge Bench. On 21st January, 2016,
notice was ordered to be served through substituted service and in
pursuance of the said order, necessary publication was made in two
newspapers and proof thereof was filed on 15th February, 2016.
Thereafter, we have heard the matters. Civil Appeal No.4060/2009 and
its connected matters have been heard and order has been reserved on
16th March, 2016.
We have heard the counsel on either side at great length and also
considered the various judgments cited by them, which include
judgments cited by the non-applicants on the scope of review in
Kamlesh Verma vs. Mayawati and Others (2013) 8 SCC 320, Union of India
vs. Namit Sharma (2013) 10 SCC 359 and Sheonandan Paswan vs. State of
Bihar andothers (1987) 1 SCC 288.
After giving our thoughtful and due consideration, we are of the view
that the judgment delivered in Christian Medical College (supra) needs
reconsideration. We do not propose to state reasons in detail at this
stage so as to see that it may not prejudicially affect the hearing of
the matters. For this purpose we have kept in mind the following
observations appearing in the Constitution Bench judgment of this
Court in Sheonandan Paswan (supra) as under: “.... If the Review Bench
of the apex court were required to give reasons, the Review Bench
would have to discuss the case fully and elaborately and expose what
according to it constitutes an error in the reasoning of the Original
Bench and this would inevitably result in pre-judgment of the case and
prejudice its re-hearing. A reasoned order allowing a review petition
and setting aside the order sought to be reviewed would, even before
the re-hearing of the case, dictate the direction of the re-hearing
and such direction, whether of binding or of persuasive value, would
conceivably in most cases adversely affect the losing party at the
re-hearing of the case. We are therefore of the view that the Review
Bench in the present case could not be faulted for not giving reasons
for allowing the Review Petition and directing re-hearing of the
appeal. It is significant to note that all the three Judges of the
Review Bench were unanimous in taking the view that “any decision of
the facts and circumstances which … constitutes errors apparent on the
face of record and my reasons for the findings that these facts and
circumstances constitute errors apparent on the face of record
resulting in the success of the review petition, may have the
possibility of prejudicing the appeal which as a result of my decision
has to be re-heard....”
Suffice it is to mention that the majority view has not taken into
consideration some binding precedents and more particularly, we find
that there was no discussion among the members of the Bench before
pronouncement of the judgment.
We, therefore, allow these review petitions and recall the judgment
dated 18th July, 2013 and direct that the matters be heard afresh. The
review petitions stand disposed of as allowed.
அதாவது மேற்படி வேலூர் CMC வழக்கை நாங்கள் (நீதிபதிகள்) மீண்டும்
விசாரிக்க வேண்டும் என்று கருதுகிறோம். அதற்கான காரணம் எதையும் விரிவாக
இந்த நேரத்தில் நாங்கள் (நீதிபதிகள்) சொல்ல விரும்பவில்லை. அவ்வாறு
சொல்வது நிலுவையில் உள்ளவைகளை பாதிக்கும். தீர்ப்பு வழங்கும் முன்பாக
வழங்கப்போகும் தீர்ப்பு குறித்து நீதிபதிகளுக்குள் விவாதிக்கப்படவில்லை.
எனவே இந்த மறுஆய்வு மனு அனுமதிக்கப்பட்டு 18.07.2013 தீர்ப்பு திரும்பப்
பெறப்பட்டு மீண்டும் புதிதாக விசாரிக்க உத்தரவிடப்படுகிறது. இதுதான்
மேற்படி தீர்ப்பின் சாராம்சம்.
இந்த உலகில் எந்த ஒரு தீர்ப்பும் இவ்வாறு விசாரிக்கப்படாமலேயே ஒரு
மறுஆய்வு மனு மூலம் எந்த சட்ட முரண்பாடும் காரணமும் சொல்லாமலேயே மூல
வழக்கில் தீர்ப்பளித்த பெரும்பான்மை நீதிபதிகள் ஓய்வுபெற்ற பின்னர்
அவ்வழக்கில் சிறுபான்மையாக மாறுபட்ட (dissenting) தீர்ப்பளித்த
நீதிபதியின் தலைமையில் வேறு ஒரு அரசியல் சாசன அமர்வில் சட்டங்களுக்கு
முரணாக இரத்து செய்யப்பட்ட அநீதி நடந்ததாக வரலாறு இல்லை.
முதலில் வழக்கின் அனைத்து தரப்பினர்களுக்கும் மறுஆய்வு மனு வழக்கு
குறித்து நீதிமன்ற அறிவிப்பு 2013ஆம் ஆண்டிலிருந்து சார்வு செய்யப்பட்டாத
நிலையில் ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டதும் அவசரமாக
மாற்றுமுறையில் பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவிப்பு கொடுக்க
உத்தரவிட்டதன் காரணம் அமர்வின் தலைவர் நீதிபதி திரு.அனில் தவே விரைவில்
ஒய்வு பெற உள்ளார் அதற்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான். அதாவது
தான் ஒய்வு பெறும் முன்பாக நீட் தேர்வை நடத்தியே ஆகவேண்டும் என்ற நீதிபதி
திரு.அனில் தவே அவர்களின் ஆர்வம் தான் தற்போதைய நீட் தேர்வு. இவ்வாறு
அவசரமாக வழக்கு தரப்பினர்களுக்கு நீதிமன்றம் மூலம் நேரடி அறிவிப்பை
தருவதிலிருந்து தவறி, மீறியது மற்றும் நீதிபதி திரு.அனில் தவே
விசாரித்தது ஆகியவை இயற்கை நீதியை குழிதோண்டிப் புதைத்ததற்கு சமமாகும்.
இயற்கை நீதி என்றால் என்ன? இயற்கை நீதி என்றால் அடிப்படை நீதி ஆகும். மிக
முக்கியமான இரண்டு இயற்கை நீதிகள்
1. Nemo judex in causa sua: No man shall be a judge in his own cause,
or the deciding authority must be impartial and without bias.
அதாவது, தனது வழக்கில் எவரும் நீதிபதியாக இருக்கக் கூடாது (அல்லது)
நீதிபதி அவசியம் நடுநிலையானவராக இருக்கவேண்டும். மேலும் நீதிபதி ஒரு
தரப்பினர் சார்பானவராகவோ முன்னதாகவே முடிவை தீர்மானித்துவிட்டவராகவோ
இருக்கக் கூடாது.
2. Audi Alteram Partem: To hear the other side, or both the sides must
be heard, or no man
should be condemned unheard, or that there must be fairness on the
part of the deciding
authority.
ஒரு தீர்ப்பின் மீதான மறுஆய்வு (Review) மனுக்களைப் பொறுத்தவரையில்
சட்டப்படி முன்னதாக விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதிகளே விசாரிப்பார்கள்.
அது இயற்கை நீதிக்கு புறம்பானது அல்ல. ஏனெனில் மறுஆய்வு மனு என்றால்
தீர்ப்பில் பார்த்த மாத்திரத்தில் வெளிப்படையாக தெரியக்கூடிய தவறுகள்
இருந்தால் மட்டுமே மறுஆய்வு மனு மூலம் தீர்ப்பில் உள்ள தவறுகள்
திருத்திக்கொள்ளப்படும். ஆனால் நீட் தேர்வு குறித்த வேலூர் CMC வழக்கு
மீதான மறுஆய்வு மனுவைப் பொறுத்தவரையில், குறுகிய காலத்தில்
தீர்மானிக்கப்பட வேண்டிய மறுஆய்வு மனு நீண்ட காலம் நிலுவையில் இருந்த
நிலையில், தீர்ப்பை அளித்த மூன்று நீதிபதிகளில் பெரும்பான்மைத்
தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகளும் ஓய்வுபெற்று விட்டனர். இந்த நிலையில்
புதியதாக வேறு ஒரு அமர்வுக்கு விசாரணை மாற்றப்படும் நிலையில் மூல
வழக்கில் மாறுபட்ட தோல்வியுற்ற தீர்ப்பளித்த நீதிபதியையே தலைவராகக்
கொண்டு விசாரணை செய்ய முடியுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அவர்
நியாயமாக, நடுநிலையாக விசாரித்து தீர்ப்பளிப்பாரா என்ற சந்தேகம்
எவருக்கும் இயல்பாகவே எழும் என்பதில் ஐயமில்லை. அதற்கு தகுந்தாற்போல்
இந்த மறுஆய்வு மனு வழக்கில் விசாரணை எதுவும் செய்யாமல் எந்த சட்டத்
தவறுகளையும் குறிப்பிடாமல் CMC மூல வழக்கை மீண்டும் புதியதாக விசாரிக்க
விரும்புகிறோம் என்று மட்டும் காரணம் கூறி முந்தைய தீர்ப்பு திரும்பப்
பெறப்பட்டுள்ளது. இது மறுஆய்வு மனுவிற்கான சட்ட வரம்புகளுக்கே எதிரானது
ஆகும். இங்கு குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால் நீதிபதி
அனில்தவே அவர்கள் நீதிமன்றத்தின் உள்ளேயே, தான் ஹிட்லராக இருந்தால்
அனைத்து பள்ளிகளிலும் பகவத்கீதையை கட்டாயப் பாடமாக்குவேன் என்று
முழங்கியவர். மேலும் நீதிபதி ஆதர்ஸ் குமார் கோயல் அவர்கள் பாஜக சார்பாக
பல வழக்குகளில் ஆஜரானவர். இயற்கை நீதி அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது தானே?
குப்புறத் தள்ளிய குதிரை குழியையும் பறித்ததாம்:
அநியாயம் அதோடு நிற்கவில்லை. இவ்வாறு வேலூர் CMC வழக்குத் தீர்ப்பை
இரத்து செய்த மறுஆய்வு தீர்ப்பில் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று
சொல்லப்படவில்லை. அவ்வாறு சொல்லியிருந்தால் மற்ற நீதிபதிகள் ஒப்புக்கொள்ள
மறுத்திருக்க வாய்ப்புள்ளது.
சொல்லிவைத்தது போல் உடனடியாக சங்கல்ப் சாரிடபிள் டிரஸ்ட் என்ற அமைப்பு
இந்த (2016) ஆண்டே நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்று ஒரு
ரிட் வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது. அந்த வழக்கு அவசர
வழக்காக நீதிபதிகள் திரு.அனில் தவே, திரு.சிவ கீர்த்தி சிங் மற்றும்
திரு.ஆதர்ஷ் குமார் கோயல் ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பாக
விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு மிக விரைவாக விசாரிக்கப்பட்டு 28.04.2016
அன்று தீர்ப்பளிக்கப்படுகிறது. விரைவான தீர்ப்பு அநீதிக்குச் சமம்
என்றும், தாமதமான தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதி என்றும் சொல்வார்கள். நீட்
தேர்வு வழக்கில் விரைவான தீர்ப்பு அநீதி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆம் உடனடியாக நீட் தேர்வு 2016 ஆம் ஆண்டிலேயே நாடு முழுவதும் நடத்தப்பட
வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் எதிர் தரப்பினர்களாக யார்
யார் சேர்க்கப்பட்டார்கள் அவர்கள் என்ன வாதிட்டார்கள் என்பது தான்
சுவாரசியமான தகவல். சங்கல்ப் சாரிடபிள் அறக்கட்டளை தாக்கல் செய்த இந்த
வழக்கில் நான்கு பேர் எதிர்தரப்பினர்களாக கொண்டு வழக்கு தாக்கல்
செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் நான்காவது எதிர்மனுதாரரை (அது யார்
விரைவான தீர்ப்புக்கு அவர் எவ்வாறு தடையாக இருப்பார் எனத் தெரியவில்லை)
நீக்கச்சொல்லி அவர் நீக்கப்பட்ட பின்னர் வழக்கில் எதிர்மனுதாரர்களாக
இருந்தவர்கள் மத்திய அரசு, இந்திய மருத்துவக் கழகம், மற்றும் CBSC ஆகிய
மூவர் மட்டுமே. அவர்களும் குறுகிய காலத்தில் தங்களால் தேர்வு நடத்த
முடியாது, மூல வழக்கு நிலுவையில் உள்ளபோது தேர்வு நடத்துவது தவறானது
என்று சொல்லி வாதாடியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? ஆம் எனில்
உங்களை விட வெள்ளந்தியை பார்க்க முடியாது. அவர்கள் சொல்லியதைக் கேட்டால்
எவருக்கும் இரத்த அழுத்தம் சற்றே அதிகரிக்கும். ஆம் 2015 ஆம் ஆண்டிலேயே
நாங்கள் நீட் தேர்வுக்காக பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளோம் என்று ஒரு
எதிர்மனுதாரரும், மூன்றே நாட்களில் நாங்கள் AIPMT 2016 தேர்வை வருகிற மே
1ஆம் தேதியே நடத்துகிறோம் அதனையே நீட் phase I தேர்வாக
எடுத்துக்கொள்ளலாம் என்றும், ஜூலை மாதத்தில் நீட் phase II என
விண்ணப்பிக்காமல் விடுபட்ட மாணவர்களுக்காக நடத்திவிடுகிறோம் என்று ஒரு
எதிர்மனுதாரரும் போட்டிபோட்டு கொண்டு நீட் நடத்தி தரமான மருத்துவக்
கல்வியை உடனடியாக இந்தியாவிற்கு அளிக்க தயாராக இருப்பதை சொல்லி
நீதிமன்றத்தில் தங்கள் கற்றறிந்த வழக்கறிஞர்கள் மூலம் உறுதியளித்தார்கள்.
2013ல் இருந்து 2016ல் இந்த வழக்கு வரை நீட் தேர்வு உச்ச நீதிமன்றத்தால்
தடை செய்யப்பட்டு இருந்த நிலையில் 2015ஆம் ஆண்டில் நீட் தேர்வுக்கான
பாடத்திட்டத்தை ஏன் MCI வெளியிட்டார்கள் என்று புத்திசாலித்தனமாக ஆண்டி
இந்தியர் எவரும் சிந்தித்து கேள்வி கேட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
இந்த வழக்கில் தரப்பினர் இல்லாத ஆனால் சமூக நீதியில் அக்கறை கொண்ட ராஜீவ்
தவான் போன்ற பல ஜாம்பவான் வழக்கறிஞர்கள் தாமாக முன்னிலையாகி தங்கள்
வாதங்களை முன்வைத்தனர். வேலூர் CMC வழக்கு மீண்டும் புதிதாக விசாரிக்க
வேண்டிதான் மறுஆய்வு மனுவில் தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
தகுதியின் அடிப்படையில் மறுஆய்வு மனு தீர்மானிக்கப்படவில்லை. எனவே
நீதிபதி அல்டாமஸ் கபீர் தலைமையில் வழங்கப்பட்ட தீர்ப்பு Over Rule
செய்யப்படவில்லை. எனவே புதியதாக விசாரித்து தீர்ப்பளிக்கப்படும் வரையில்
நீட் தேர்வு நடத்தப்படக் கூடாது என்று பலவாறு வழக்கறினர்கள் சட்டங்களை
விளக்கினாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு வெறும் நான்கு
பக்கங்களில் தீர்ப்பளித்து நீட் நம் குழந்தைகள் மீது திணிக்கப்பட்டது.
பொதுவாக நடைமுறையில் உள்ள எதனையும் மாற்றும் நடைமுறைகளில்
பெருவாரியானவர்கள் ஈடு செய்ய இயலாத அளவிற்கு பாதிப்பு ஏற்படும்
சூழல்களில் இறுதியாக தீர்மானிக்கப்படும் வரையில் இருக்கும் நிலையே
(Status quo) இறுதி தீர்ப்பளிக்கப்படும் வரையில் தொடர வேண்டும் என்றே
நீதிமன்றங்கள் உத்தரவிடும். அதாவது ஒரு கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்ற
ஒரு வழக்கில் மேல்முறையீடுகள் அனைத்தும் முடியும் வரையில் கட்டிடம்
இடிக்க தடை விதித்தே நீதிமன்றங்கள் உத்தரவிடும். இதுதான் சட்டமும்,
நியாயமும் ஆகும். ஆனால் நீட் தேர்வு வழக்கில் விநோதமாக புதியதாக
விசாரிக்கப்பட்டு இறுதி தீர்ப்பு வரும் வரையில் புதிதாக திணிக்கப்படும்
நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீட்
தேர்வு சட்ட விரோதம் என்று இறுதியாக தீர்ப்பளிக்கப்பட்டால் பலியான சகோதரி
அனிதாவுக்கும், மருத்துவப் படிப்பை பறிகொடுத்த ஆயிரக்கணக்கான
மாணவர்களுக்கும் ஏற்பட்ட இழப்புகளை யார் ஈடு செய்வார்கள்?
“ஆமாம். நீட் தேர்வு நடத்த தினசரி வாய்தா போட்டு விசாரணை செய்து
அளிக்கப்பட தீர்ப்பில் வேலூர் CMC வழக்கு தீர்ப்பு புதியதாக விசாரணை
செய்ய வேண்டித்தானே இரத்து செய்யப்பட்டது. தற்போது அந்த வழக்கின் நிலை
என்னவானது?” என்று புத்திசாலித்தனமாக சிந்திப்பவர்களுக்கு மட்டும்
சொல்கிறேன். தொடர்ந்து படியுங்கள்...
வேலூர் CMC மறுஆய்வு வழக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன
அமர்வுக்கு மாற்றப்பட்டதே அதனை ஒத்த வேறு ஒரு வழக்குடன் சேர்த்து
விசாரிக்க வேண்டிதான். அந்த Modern Dental College vs State Of Madhya
Pradesh & Ors, Civil Appeal No.4060/2009 வழக்கில் CMCவழக்கின்
மறுஆய்வு வழக்கில் தீர்ப்பளித்த கையோடு உடனடியாக 02.05.2016ஆம் தேதியே
தீர்ப்பளித்துவிட்டு, அந்த வழக்கில் இந்திய மருத்துவக் கழகத்தை சீரமைக்க
வேண்டி ஒரு வல்லுனர்கள் குழுவை அமைத்து அந்த குழு MCI மத்திய அரசால்
சீரமைக்கப்படும் வரையில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அதனை
உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஆண்டிற்கு பின்னர்
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வாய்தா போடப்பட்டுள்ளது.
“அத விடுங்கள் சார் நீட் தேர்வுக்கு எதிரான வேலூர் CMC வழக்கு வாய்தா
என்றைக்கு வருகிறது” என்று கேட்கிறீர்கள்.
உங்கள் அவசரம் எனக்குப் புரிகிறது. ஆனால்....
உச்ச நீதிமன்ற இணையதளப் பதிவுகள் படி வேலூர் CMC வழக்கின் அடுத்த வாய்தா
கடந்த ஆண்டு மே மாதம் 2016க்குப் பிறகு ஒன்னரை ஆண்டுகள் கழித்து வரும்
நவம்பர் மாதத்தில் அதாவது 21.11.2017 அன்றைக்கு வாய்தா
குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து தாமதமான தீர்ப்பு மறுக்கப்பட்ட
நீதிக்கு சமம் என்பதும் நிரூபிக்கப்படுகிறது.
“அடப்பாவிகளா! 21.11.2017க்கு பின் எப்ப விசாரிச்சு எப்ப
தீர்ப்பளிச்சு.... அதற்குள் மூன்று நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமே”
என்று தாங்கள் கேட்பது எனது காதில் விழுகிறது. ஆனால் ஆளும் பாசிச பாஜக
அரசோ வேறுமாதிரி மாத்தி யோசிச்சு ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவில் பல
ஆண்டுகளுக்கு மண்ணை அள்ளிப் போட்டே விட்டது. அதாவது இந்திய மருத்துவ
கழகத்திற்கு நீட் UG & PG நடத்த அதிகாரம் அளித்து கடந்த 04.08.2016 ஆம்
தேதியிலேயே THE INDIAN MEDICAL COUNCIL (AMENDMENT) ACT, 2016 என சட்ட
திருத்தம் நிறைவேற்றி அதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலையும் உடனடியாக
பெற்று கொண்டுவந்து அரசிதழிலும் வெளியிட்டு விட்டது. நாம் நீட் தடைக்கு
தீர்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வேலூர் CMC வழக்கோ MCI
வெளியிட்ட நீட் தேர்வுக்கான அறிவிக்கைகளுக்கு எதிராக மட்டும்தான்.
(வழக்கு மனுதாரரான CMC யால் திருத்தம் கேட்டுள்ளதா என தெரியவில்லை).
“அப்போ வழக்கின் நிலை?”
“Petition infract us. Hence Petition dismissed.”
“அப்படி என்றால்?”
“வழக்கின் கோரிக்கை அற்றுப்போய் விட்டது. அதனால் வழக்கு தள்ளுபடி செய்யப்படலாம்.”
“வழக்கு நிலுவையில் உள்ளபோது சட்டம் இயற்றலாமா நீதிமன்றம் சும்மா விடுமா?”
“பாசிச பாஜக அரசு இதையெல்லாம் சாதாரணமாக சமாளித்துவிடும்.”
“அப்போ என்னதான் செய்வது?”
“நீட் நடத்துவதற்காகவே மத்திய பாஜக அரசால் அவசரமாக இயற்றப்பட்ட THE
INDIAN MEDICAL COUNCIL (AMENDMENT) ACT, 2016 சட்டத் திருத்தம், அதாவது
நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது, இந்திய கூட்டாச்சி தத்துவத்திற்கு
எதிரானது, சமூக நீதிக்கு எதிரானது எனவே அது அரசியலமைப்பு சட்டப்படி
செல்லாது என புதியதாக ஒரு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கில் நீட்
தேர்வு இரத்து செய்யப்பட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். அது
நிச்சயம்.” சார் இதை கேட்டதும் எங்கே வேகமா புறப்படுறீங்க. உச்ச
நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்யவா? சொல்லுங்க சார் நானே
வக்கீல் தான்.”
“அட போங்க சார். நம்ம சட்டமன்றம் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து
விலக்கு அளிக்க வேண்டி ஏகமனதாக சட்டம் இயற்றி அது குடியரசுத்தலைவர்
ஒப்புதலுக்காக கடந்த எட்டு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு
வச்சிருக்காங்க. அதனை உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து
ஒப்புதலை பெற்றால் நீட்டு தீட்டு நம்மை விட்டு நீங்கிடப் போகுது. பீட்டா
வை எதிர்த்து ஜல்லிக்கட்டே நடத்திட்டோம். இந்த ரீட்டா நீட்டா வையெல்லாம்
என்ன செய்யிறதுன்னு எங்களுக்குத் தெரியும். ஏதாவது கேசு போட்டால் ஜாமீன்
எடுக்க வந்து சேருங்க சார். ஆமாம் இவ்வளவு விபரங்கள் சொன்னீங்களே உங்க
பேரு?”
“கமருதீன். இந்தாங்க விசிட்டிங் கார்டு. நீட்டை நீக்க சட்ட உதவி செய்ய
எப்போதும் தயாராக இருக்கிறோம்.”
Ref:
1. Christian Medical College Vellore & Ors.Vs.Unionof India & Ors.
[(2014) 2 SCC 305]
https://indiankanoon.org/doc/
2. SANKALP CHARITABLE TRUST AND ANR VS. UNION OF INDIA AND ORS
http://supremecourtofindia.
3. Medical Council’s NEET: Unfair, Unjust, Arbitrary written by Rajiv
Dhavan senior advocate at the Supreme Court.
https://thewire.in/36274/mcis-
4. CMC Case Status
http://www.sci.nic.in/php/
அ.கமருதீன், பி.எஸ்சி., பி.எல்.,
வழக்கறிஞர் / ஒருங்கிணைப்பாளர்,
குடிமக்கள் உரிமைகள் பொதுமன்றம்,
திருச்சி 620018.
Email: k4kamar@gmail.com
செல[truncated by WhatsApp]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக