வியாழன், 27 ஜூலை, 2017

டெல்லி தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம் தரையில் உருண்டு அய்யாக்கண்ணு மோடி விவசாயம் வேளாண்மை காவிரி காவேரி

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 12
பெறுநர்: எனக்கு
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள், இன்று பிரதமர்
அலுவலகம் எதிரே திடீரென நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஏற்பட்டது.
விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,
தமிழக விவசாயிகள், அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 28 நாட்களாக டெல்லியில்
போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நிதியமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்களை அவர்கள் சந்தித்த போதும், பிரதமர்
நரேந்திர மோதி, தங்களைச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்க வேண்டும் என்று
வலியுறுத்தி வருகின்றனர்.
டெல்லி சாலையில் உருண்டு விவசாயிகள் போராட்டம்
இந் நிலையில், அவர்களுக்கு ஏற்கெனவே உறுதியளித்திருந்தபடி, போலீசார்
அவர்களை இன்று முற்பகல் பிரதமர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 7 விவசாயிகள் போலீஸ் வாகனத்திலேயே
அழைத்துச் செல்லப்பட்டனர்.
நாடாளுமன்றத்தை அடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகை அருகே உள்ள செளத்
பிளாக் கட்டடத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்துக்கு அழைத்துச்
செல்லப்பட்ட அவர்கள், வரவேற்பறையில் உள்ள அதிகாரிகளிடம், தங்கள்
கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
ஆனால், பிரதமரை நேரில் சந்தித்து மனுக்கொடுக்க வேண்டும் என விவசாயிகள்
வலியுறுத்தினர். ஆனால், அது சாத்தியமில்லை என அதிகாரிகள் கூறியதால்
வேறுவழியின்றி அதிகாரிகளிடம் மனுவை சமர்ப்பித்தனர்.
பின்னர் காவல் துறை வாகனத்தில் ஏறி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டனர்.
அந்த வளாகத்தை விட்டு வெளியே வந்ததும், வாகனத்தில் இருந்த விவசாயி ஒருவர்
வெளியே குதித்தார். வாகனம் நிறுத்தப்பட்டவுடன், மேலும் சில விவசாயிகளும்
கீழே இறங்கி, தங்கள் ஆடைகளைக் களைந்து நிர்வாணப் போராட்டத்தில்
ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலையில் உருண்டு
முழக்கமிட்டார்கள். பின்னர் போலீசார் அவர்களைப் பிடித்து மீண்டும்
வாகனத்தில் ஏற்றி, ஜந்தர் மந்தர் பகுதிக்குக் கொண்டு வந்தார்கள்.
குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சகம், எதிரே
நார்த் பிளாக்கில் நிதித்துறை மற்றும் உள்துறை அமைச்சகங்கள் அமைந்துள்ள
முக்கியப் பகுதி என்பதால், இந்தப் போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பான
சூழல் ஏற்பட்டது.
www.bbc.com/tamil/india-39553101

பிரதமர் அலுவலகம் முன்பு திடீர் முழு நிர்வாண போராட்டம்- தரையில் உருண்ட
7 தமிழக விவசாயிகள் கைது!
டெல்லியின் பிரதமர் அலுவலகம் அருகே நிர்வாணமாக போரடிய தமிழக விவசாயிகள் 7
பேர் கைது செய்யப்பட்டனர்.
Updated: Mon, Apr 10, 2017, 13:01 [IST]
டெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம் அருகே நிர்வாணமாக தரையில்
உருண்டு போராடிய தமிழக விவசாயிகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக விவசாயிகள் கடந்த 28 நாட்களாக அரை நிர்வாணமாக போராடி வருகின்றனர்.
தேசிய வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக
விவசாயிகள் போராடி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு
தலைமையில் 26 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள்
பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி
வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் ஆகிய
கோரிக்கைகள் விவசாயிகளின் கோரிக்கையாகும்.
28 நாட்களாக போராட்டம்
பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து போராடி
வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டத்தை கையிலெடுத்து
தங்களது பாதிப்பையும் கோரிக்கையையும் மத்திய அரசுக்கு தெரிவித்து 28வது
நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகள் போராட்டம்
இன்று பிரதமர் மோடியை சந்திக்கப் போவதாக கூறினர். இந்த நிலையில்
திடீரென்று விவசாயிகள் நாடாளுமன்றம் முன்பு துணிகளை களைந்து விட்டு
நிர்வாணமாக ஓடினர். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நிர்வாண உருள்வலம்
நாடாளுமன்ற வளாகத்தில் கைகளை மேலே தூக்கியவாறு முழக்கமிட்ட அவர்கள்
பிரதமர் மோடிக்கு எதிராக முழக்மிட்டனர். கீழே விழுந்து உருண்டனர்.
உடனடியாக போலீசார் அவர்களை கைது செய்தனர்.
எங்களுக்கு வேறு வழியில்லை
அப்போது பேசிய விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு, பிரதமர் மோடியை
சந்திக்க வைப்பதாக கூறி தங்களை ஏமாற்றவிட்டனர் என்று கூறினர். எங்களுக்கு
இதைத்தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.
tamil.oneindia.com/news/india/tn-farmers-naked-protest-against-modi-delhi-279354.html


பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் திடீர் நிர்வாணப் போராட்டம்!
டெல்லியில் பரபரப்பு
டெல்லியில் 28-வது நாளாகப் போராடிவரும் தமிழக விவசாயிகள், நிர்வாணப்
போராட்டம் நடத்திவருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று
பிரதமர் அலுவலகம் முன்பு திடீரென நிர்வாணமாகப் போராடினர். அவர்களை,
டெல்லி போலீஸார் கைதுசெய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.
கடந்த 14-ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தேசிய தென்னிந்திய
நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், சங்கத்தின் தலைவர்
அய்யாக்கண்ணு தலைமையில் காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது. காவிரி
மேலாண்மை அமைப்பது, விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களைத்
தள்ளுபடிசெய்தல், நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை முன்வைத்து, வித்தியாசமான போராட்டங்களில்
ஈடுபட்டுவருகின்றனர்.
www.vikatan.com/news/india/85957-tn-farmers-in-delhi-holds-nude-protest.html

டெல்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்: பிரதமரை சந்திக்க
முடியாததால் விரக்தியடைந்ததாக அய்யாக்கண்ணு விளக்கம்
Updated: April 11, 2017 09:35 IST | ஆர்.ஷபிமுன்னா
டெல்லியில் நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுள் ஒருவர்.
டெல்லியில் பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் நேற்று திடீரென
நிர்வாணப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் 28
நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியும் பிரதமரை சந்திக்க முடியாததால்
விவசாயிகள் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கிய போராட்டம்
தீவிரமடைந்து வருகிறது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்
சங்கம் சார்பில் அதன் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் இப்போராட்டம்
நடைபெற்று வருகிறது.
நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வறட்சிக்கான கூடுதல்
நிவாரணம், வங்கிக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள்
வலியுறுத்தி வருகின்றனர். இவற்றை பிரதமரிடம் நேரில் முறை யிடவும் முயன்று
வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, அய்யாக் கண்ணு தலைமையில் 7 விவசாயிகளை பிரதமர்
அலுவலகம் அழைத்துச் செல்ல டெல்லி போலீஸார் முடிவு செய்தனர். ஜந்தர்
மந்தரில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இடதுபுறம் உள்ள நார்த்
பிளாக் நோக்கி அனைவரும் போலீஸ் வாகனத்தில் கிளம்பினர். அங்கு
அய்யாக்கண்ணு மட்டும் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு, பிரதமர்
அலுவலகத்தில் மனுவை வழங்கினார். பிறகு ஜந்தர் மந்தர் திரும்புவதற்காக
அனைவரும் போலீஸ் வாகனத்தில் ஏறினர்.
பிறகு திடீரென கீழே இறங்கிய 3 விவசாயிகள், தங்கள் ஆடை களை களைந்துவிட்டு
கோஷமிடத் தொடங்கினர். நாட்டின் விவசாயி களை காப்பாற்றுங்கள் என கைகளை
உயர்த்திக் கூப்பியபடி இந்தியில் கோஷமிட்டனர். பிறகு முன்புறமுள்ள
ராஜ்பாத் சாலை யில் படுத்த விவசாயிகள், முன்னும், பின்னும் உருண்ட
படியும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உருவானது.
இது குறித்து பி.அய்யாக் கண்ணு கூறும்போது, “பிரதமருடன் சந்திக்க
வைப்பதாக கூறி விவசாயிகளை ஏமாற்றி விட்டனர். 28 நாட்களாகப் போராடி வரும்
எங்களை சந்திக்க பிரதமர் மறுத்து விட்டார். நாங்கள் இந்த நாட்டின்
அடிமைகளாகி விட்டோம். இதுதான் எங்கள் பரிதாபநிலை. இந்த நாட்டின்
விவசாயிகள் பரிதாபத்திற்கு உரியவர்களாகி விட்டனர்” என்றார்.
தமிழக விவசாயிகளின் இந்த திடீர் செயலைக் கண்டு போலீஸார் சில நிமிடங்கள்
செய்வதறியாது திகைத்தனர். பின்னர் விவசாயிகளை மடக்கிப் பிடித்து வேனில்
ஏற்றி ஜந்தர் மந்தர் கொண்டு சென்றனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி போலீஸ் வட்டாரம் கூறும்போது,
“விவசாயிகளின் நிர்வாணப் போராட்டம் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்றாக
தோன்றுகிறது. ஏனெனில் நாங்கள் அவர்களிடம் பிரதமர் அலுவலகம் அழைத்துச்
செல்கிறோம் என்று கூறினோமே தவிர, பிரதமரை சந்திக்கலாம் என்று கூறவில்லை.
இப்போது அவர்களை அழைத்துச் சென்ற எங்கள் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க
உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
பிறகு ஜந்தர் மந்தர் திரும்பிய தமிழக விவசாயிகள் அங்கு தங்கள்
போராட்டத்தை தொடர்ந்தனர். இவர்களை திமுக எம்.பி. திருச்சி சிவா, மகளிர்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா, தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சி
ராணி உள்ளிட்டோர் சந்தித்தனர்.
செய்தியாளர்களிடம் நக்மா கூறும்போது, “மத்திய அரசு மாட்டி றைச்சிக்கு
அளிக்கும் முக்கியத் துவம் கூட விவசாயிகளுக்கு அளிக்கவில்லை” என்றார்.
m.tamil.thehindu.com/tamilnadu/டெல்லியில்-தமிழக-விவசாயிகள்-நிர்வாணப்-போராட்டம்-பிரதமரை-சந்திக்க-முடியாததால்-விரக்தியடைந்ததாக-அய்யாக்கண்ணு-விளக்கம்/article9626453.ece
தமிழ்ஹிந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக