வியாழன், 27 ஜூலை, 2017

அம்பேத்கர் மொழிவழி மாநில எதிர்ப்பு ஹிந்தி

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 13
பெறுநர்: எனக்கு
Mathi Vanan
அம்பேத்கர் சட்டத்திற்கு முன்பேயே தமிழ்நாட்டில் நூறுசத இட ஒதுக்கீடு
இருந்தது என்ற தகவலுடன்....
ஆர்.எஸ்.எஸ் கொண்டாடும் அம்பேத்கர் - தேசிய இனங்களின் ஒடுக்குமுறையாளன்..
"இந்தியர்கள் தன் சதையிலும் ரத்தத்திலும் பேச்சிலும் மூச்சிலும்
இந்தியனாக இருக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் மொழி அதன் ஆட்சி மொழியாக
இருக்கவே கூடாது. இதற்கு அரசியல் சட்டத்திலேயே வழிசெய்துவிட வேண்டும்.
இந்தியே எல்லா மாநிலத்தின் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும். இதை
செய்யவில்லையென்றால் மொழிவாரி மாநிலங்கள் இந்தியாவுக்கு பெரும் அபாயமாக
மாறிவிடும்.
ஒரு மொழி இருந்தால் மக்களை ஒன்றுபடுத்தும். பலமொழிகள் இருந்தால்
பிளவுபடுத்தும். இந்தியாவின் கலாச்சாரம் மொழியால்தான் பாதுகாக்கப்படும
். இந்தியர்களிடம் ஒரே கலாச்சாரத்தை உருவாக்க இந்தியை தங்கள் மொழியாக ஏற்கவேண்டும்.
இதை ஏற்காத எவனும் ஒர் இந்தியனாக இருக்க தகுதியற்றவன். உரிமையற்றவன்.
அவன் நூற்றுக்கு நூறு குசராத்தியாக இருக்கலாம். நூற்றுக்கு நூறு தமிழனாக
இருக்கலாம். ஆனால் இந்தியனாக இருக்க முடியாது.
பாகிஸ்தான் பிரிந்ததை வரவேற்றேன். மகிழ்ந்தேன். பிரிவினை மூலம்
இந்துக்கள் சுதந்திரமாக இருக்கமுடியும் என நினைத்தேன். பாகிஸ்தானும்
சேர்ந்து ஒரே நாடாக இருந்தால் முசுலிம்கள் தயவில் இந்துக்கள்
வாழவேண்டியிருக்கும். இந்து மகாசபை, ஜனசங்கம் இருந்தாலும் இந்துக்களை
முஸ்லிம்களே ஆள்வார்கள். ஆனால் இந்த மொழிவாரி மாநிலங்களால் மீண்டும்
அபாயம் வந்து விட்டது.
மொழிவாரி மாநிலம் கோருபவர்கள் தங்கள் மொழியை ஆட்சிமொழியாக்க
துடிப்பவர்கள். ஏக இந்தியா என்பதற்கு சாவுமணி அடிப்பவர்கள். இந்த மொழிகள்
ஆட்சிமொழியானால் இந்தியா ஒன்றுபட்ட நாடாகாது. இந்தியர்களை முழுக்க
முழுக்க இந்தியர்களாக்க வேண்டும். அவர்களது சதையிலும் ரத்தத்திலும்
பேச்சிலும் மூச்சிலும் இந்தியனாக மாற்ற வேண்டும். அதற்கு இந்தியே எல்லா
மக்களின் மொழியாக வேண்டும்."
( இந்துத்துவ அம்பேத்கர்.. 46,47-
பாபா சாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 1 ப. 213,214)
தலித் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக