வியாழன், 27 ஜூலை, 2017

குறவர் மூத்தகுடி முதல் ஊர் நாகரேகம் கற்காலம் கல்தோன்றி

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 7
பெறுநர்: எனக்கு
கூர்ங்கோட்டவர்
தமிழர்களில் குறிஞ்சி நிலக்குடிகள் தோன்றிய காலத்திலேயே நிரந்தரக்குடியி
ருப்புகள் அமைத்துவிட்டனர் என்கிறேன் நான்.
ஐரோப்பிய ஆதிக்கத்திலேயே பழங்கற்கால ஆய்வு இருந்ததாலும் ஐரோப்பிய நாடுகள்
நிலநடுக்கோட்டில் இருந்து வெகுதூரம் தொலைவில் இருந்ததாலும் அங்கே
குறிஞ்சி நிலங்கள் பணி படர்ந்து இருந்தமையாலும் அங்குள்ள குறிஞ்சி நில
மக்களுக்கு உணவு தொடர்ந்து கிடைக்க வாய்ப்பில்லை. அதனால் அவர்கள் நாடோடி
வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும்.
ஆனால் ஐரோப்பிய ஆய்வாளர்கள் தங்கள் பணி படர்ந்த குறிஞ்சி நிலங்களை வைத்து
உலகமுழுதுமிருந்த குறிஞ்சி நில மக்களை நாடோடிகள் என கதை கட்டிவிட்டனர்.
தமிழ்நாட்டின் தட்பவெட்பம் 40,000 ஆண்டுகள் முன்னரே சைவ உணவுக்கான
மூலப்பொருட்களை விளைவிப்பதற்கான சூழலை பெற்றுவிட்டது. அதனால்
பழந்தமிழகத்தில் குறிஞ்சி நில குறவரே நிரந்தர குடியிருப்புகளை அமைத்து
சீறூர்களை அமைத்துவிட்டனர் என்கிறேன் நான்.
மெக்காலே பாடத்திட்டத்தைத
்தாண்டி யோசிக்க தெரியாத ஆய்வாளர்களால் இதை நிறுவவே முடியாது. ஆனால் நான்
உருவாக்கப்போகும் புது ஆய்வுமுறை 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
தமிழகத்தில் (அப்போது ஈழமும் தமிழ்நாடும் ஒன்றாய் இருந்தது) சீறூர்களை
குறவர்கள் அமைத்துவிட்டனர் என்பதை நிறுவும்.
உலகத்தில் எந்த ஒரு ஆய்வாளரும் குறிஞ்சி நில மக்கள் நாடோடிகள் என்றே
சொல்லிவருகின்றனர். இதற்கு பின் ஒழிந்திருக்கும் அரசியலும் மிகப்பெரிது.
ஆனால் அதை எல்லாம் தாண்டி என் ஆய்வுமுறை பழந்தமிழகத்தில் குறவரே முதல்
சீறூரை அமைத்தனர் என்ற வாதத்தை வழுவான சான்றுகளுடன் முன்மொழியும்.
- @தென்காசி சுப்பிரமணியன் (Rajasubramanian Sundaram Muthiah )
17 ஏப்ரல் 2016, 11:36 PM

 Sudharsan Baskar
தமிழகத்தில் உள்ள குறிஞ்சி நில மக்கள் குறித்த உமது கூற்று உண்மையென கொள்ளலாம்...
ஆயினும் 40000க்கு முன்னர் ஈழமும் தமிழ்நாடும் ஒன்றாக இருந்தது
மற்றும் குறிஞ்சி நிலத்தில் இருந்துதான் மற்ற நிலப்பரப்புக்கு மக்கள்
சென்றனர் என்ற இரண்டுக்கும் சான்றுகள் உண்டா ???
ஐவகை நிலங்களில் குறிஞ்சியில் தான் முதலில் தோன்றினார்கள் என்று கூறுவது
ஏற்றுக்கொள்ள தக்கதாய் இல்லையே...
பிடித்திருக்கிறது · புகாரளி · 18 ஏப்ரல் 2016
கூர்ங்கோட்டவர்
பழங்கற்கால ஆயுதங்கள் கிடைதது மலைக்குன்றுகளில் தான்.
Mahesh Rayar Mutharaiyar
பிடிக்கவில்லை · 2 · புகாரளி · 18 ஏப்ரல் 2016
கூர்ங்கோட்டவர்
//ஆயினும் 40000க்கு முன்னர் ஈழமும் தமிழ்நாடும் ஒன்றாக இருந்தது//
இது நிலவியலாளர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

தென்காசி சுப்பிரமணியன் 
சாதி பழங்குடி குற்றாலம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக