ஞாயிறு, 23 ஜூலை, 2017

வளைகாப்பு போன்ற சடங்கு பிள்ளை பிறந்ததும் அப்பா காணவருதல்

aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு
புதல்வனைக் காணல்- புத்திரமுக தரிசனம்
 நள்ளென் கங்குற் கள்வன் போல
அகன்றுறை யூரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே
கோமால் நெடுங்கோடனார். நற்.40: 10 – 12
கன்ற நீர்த்துறையை உடைய ஊரனும் சிறந்த தந்தையின் பெயர் கொண்ட தன் மைந்தன் பிறந்தமைக்கு மகிழ்ந்து ……………
 மகன் முகத்தையும் மனைவி முகத்தையும்  நோக்குமிடத்துச் சுருங்கிய பார்வையுடையனாய்ச் சட்டென நீங்கினமையின் கள்வன் போல என்றும்.கூறினார்.
 மகப்பேறு  நிகழ்ந்த மனையைத் தூய்மை செய்து முற்றத்தே பந்தரிட்டுப் புது மணல் பரப்பி .மணி ஒலிக்க  மங்கல மகளிர் மகப்பெற்ற தாய்க்கு நெய்யாட்டீரணி செய்வர். தலைமகன் அக்காலத்தே தூய நீராடிச் சீரிய உடை அணிந்து பிறந்த புதல்வனைக் காண்பான். மகன் பிறந்தானைக் காணப் போந்த அதியமான் நெடுமான் அஞ்சியை உடனிருந்த மகளிருள் ஒருவராகிய ஒளவையார் பாடிய புறப்பாட்டு இங்கே நினைவு கூரத்தக்கது. இஃது இடைக்காலத்தே புத்திரமுக தரிசனம் என மொழிபெயர்க்கப்பட்டு வழக்கில் இருந்துவந்தமை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் வாயிலாக அறிகின்றோம்.
சங்ககால இலக்கியம் குறிப்பு
களப்பாள் இணையம் நற்றிணை இல்லறம் திருமணம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக