செவ்வாய், 10 அக்டோபர், 2017

தேவரடியார் அப்பர் பாடல் டிகேசண்முகம் நாடகம்

Govindarajan Subramaniam
டி.கே.சண்முகத்தின் இராசராச சோழன் நாடகத்திலும் வருகிறது அப்பர்
பெருமானின் இப்பாடல்கள்.
பிற்காலத்தில், கொச்சைப் படுத்தப்பட்ட, சோழர் கால ஆடல் மகளிரின் மன நிலை.
இவர்களுக்கு இருந்த உரிமை கருவறையில் இருந்த பிராமணனுக்கு கிடையாது.
ஏனெனில் இ வ்வாடல் மகளிர் ஆகமங்களும் இரு மொழிகளும் கலைகளும்
பயின்றவர்கள். இவர்கள் ஏற்றிக்கொடுத்த தீபத்தைத்தான் குருக்கள்
காட்டவேண்டும். திராவிட இயக்கத்தினர் இவற்றைக் கருத்தில் கொள்ளாது,
இவர்களை மறுபடியும் மேல்நிலை க் குக் கொண்டுவராமல் தள்ளிவிட்டு, இப்போது
இவர்கள் கருவறையி லும் இல்லை, நட்டுவாங்கத்திலும் இல்லை. நட்டுவாங்கம்
பிராமணர் கையில். இசை வேளாளர் குடும்பத்தில் இப்போது பாணர் மட்டுமே.
விறலியர் இல்லை.
முன் னம்அவனுடையநாமம் கேட்டாள்
மூர்த் தி அ வ னிருக்கும் வண் ணம் கேட்டாள்
பின்னைஅவனுடையஆரூர் கேட்டாள்
பெம்மான் அவனுக்கே பிச்சியானாள்
அன்னையையும் அத்தணையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தனை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தளைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக