திங்கள், 15 மே, 2017

சிறுபான்மை எதிராக ஈவேரா இசுலாமியர்

aathi tamil aathi1956@gmail.com

24/1/15
பெறுநர்: எனக்கு
நாட்டு இலட்சணப்படி எந்த நாட்டிலும்
மைனாரிட்டி (சிறுபான்மையினர்) சமூதாயம், மதம்,
கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ,
செல்வாக்கோ இருக்குமானால் அது அந்த நாட்டின்
நலத்துக்கு, பொது வளர்ச்சிக்கு கேடாகவே முடியும்.
மைனாரிட்டிகளான பார்ப்பனர், முஸ்லீம்
ஆகியவர்களுக்கு அந்நிய ஆட்சியும், காங்கிரசும்
காட்டி வந்த சலுகைகளாலும், தனி நீதி போன்ற
காரணத்தினாலும், மேலும்
அவர்களது ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்ததனாலும்,
நாடு வளர்ச்சி அடையாமலும், மெஜாரிட்டி மக்கள்
மனிதத் தன்மை பெறாமலுமே போய் விட்டார்கள்!
...குறிப்பாகத் தமிழ்நாட்டின் இன்றைய
நிலைக்கு இதுவே காரணம் என்பதை வலியுறுத்திக்
கூறுகிறேன். இதற்கு உதாரணம், இந்த நாட்டில்
இன்று மைனாரிட்டியாக உள்ள
சமுதாயத்திற்கு இருந்து வரும் வசதியும்,
ஆதிக்கமும், நடப்பு வசதியுமேயாகும்.
அதாவது 100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப்
பெருவாரி சமுதாய பெண்கள் நாற்று களை பிடிங்கி,
ரோட்டில் கல் உடைத்து, வீதியில் மக்கள் நடக்க மண்
சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம் பெண்கள்
உடலுமைப்பு வேலைகள் எதுவும் செய்யாமல், அவர்கள்
பெண்கள் நம் மனிதர்கள் கண்ணுக்கே தென்படக்
கூடாது என்கின்ற நிலையிலும், பிச்சை எடுப்பவன்
வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில்
உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில்
சொகுசாக அனுபவிக்கிறார்கள்!
- ஈவெ ராமசாமி நாயக்கர் (விடுதலை 6.3.1962)
ஈ.வே.ரா 

1 கருத்து:

  1. இதிலிருந்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? பெரியார் கூறியது சரிதானே? இதில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக என்ன இருக்கிறது? அவர்களிடம் இருக்கும் ஒரு தேவைற்ற விதிமுறையைச் சாடுகிறார்.

    பதிலளிநீக்கு