வியாழன், 4 மே, 2017

கண்ணன் சேலை கொடுத்தான் வைணவம் மதம் திருமால்

கண்ணனும் சேலையும்

யமுனையில் குளித்த இடையர் பெண்களின் சேலையைத் திருடி மரத்தின்மேல் வைத்துக்கொண்டு கண்ணன் அப்பெண்களள அம்மணமாகப் பார்த்தான் என்கிறது பாகவதக் கதை. திருமால் அந்தப் பெண்களுக்குத் தழையாடை தைப்பதற்காக அவர்களாகவே தழை பறித்துக் கொள்ளும் வகையில் மரத்தை வளைத்துக் கொடுத்தான் என்கிறது சங்கப் பாடல்.
பெண்யானைக்கு ஆண்யயனை யா மரத்தை வளைத்துத் தின்னத் தருவது போல மாஅல் மரத்தை வளைத்துத் தந்தானான் என்கிறது சங்கப்பாடல்.

வடாஅது
வண்புனல் தொழுநை  வார்மணல் அகன்துறை
அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் போலப்
புன்தலை மடப்பபடி உணீஇயர் அங்குழை
நெடுநிலை யாஅம் ஒற்றி நனைகவுள்
படிஞிமிறு கடியும் களிறே  - (அகநானூறு 59. மருதன் இளநாகனார்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக