திங்கள், 15 மே, 2017

அண்ணாதுரை ஈ.வே.ரா லீனா மணிமேகலை தெலுங்கர் பிராமண எதிர்ப்பு வந்தேறிகள் ஜெயமோகன் பத்ரி எழுத்தாளர்

aathi tamil aathi1956@gmail.com

19/2/15
பெறுநர்: எனக்கு
..........."தன் நாயக்கர் இனத்தின் பழைய
ஆட்சி,அதிகாரத்தை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவர
பெரியார் ராமசாமி நாயக்கர் போட்ட
திட்டமே தமிழர்களை முட்டாளாக்கிய "திராவிடர்கள்"
என்ற கருத்து.அவரை பின்பற்றிய அறிஞர் அண்ணா,
கருணாநிதி,வைகோ,விஜயகாந்த், போன்ற திராவிட
இயக்க தலைவர்கள் அனைவரும் தெலுங்கர்களே"..
............................................நண்பர்களே!
திராவிட இயக்கங்களின் சுயரூபத்தை அறிய இந்தப்
பதிவை முழுவதும் படியுங்கள் .பல
உண்மைகளை அறிவீர்கள்........................"பெரியார்
தனது ஜாதிய பற்றை மறைத்துக்கொள்ளவே பிராமண
எதிர்ப்பு கோஷத்தை முன்வைத்தார்"..
......என்று கூறியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.......
....................................
ஊடகதுறையை சேர்ந்தவரும், கிழக்கு பதிப்பக
உரிமையாளருமான பத்ரி சேஷாத்ரி ஆங்கில
பத்திரிகையில் எழுதியிருந்த ஒரு கட்டுரையில்,
தமிழகத்தில் பிராமணர்கள்
குறிவைத்து ஒடுக்கப்படுவதாக கூறியிருந்தார்.
இதனால் எதிர்ப்புகளையும் சம்பாதித்தார். சில
எழுத்தாளர்கள் அவரது பதிப்பகத்தில்
புத்தகத்தை வெளியிட மறுப்பு தெரிவிப்பதாகவும்
தகவல்கள் வந்தன........................................
....................... இந்நிலையில் எழுத்தாளரும்,
காவியத்தலைவன் திரைப்பட வசனகர்த்தாவுமான
ஜெயமோகன் தனது வலைத்தளத்தில்
சேஷாத்திரி கருத்தில்
உண்மையுள்ளது என்று கூறியுள்ளார்.
ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்? என்ற தலைப்பில்
ஜெயமோகன் கூறியுள்ளதாவது: ..............................
............"பிராமணவெறுப்பின் அரசியல் பின்னணி:
இங்கே பிராமண வெறுப்பு எதனால் உருவாக்கப்பட்டது?
அதன் பண்பாட்டு அடித்தளம்தான் என்ன? சங்ககாலம் முதல்
நாம் காணும் தமிழகப் பண்பாட்டு மோதல் என்பது தமிழர்
x வடுகர் என்பதுதான். [வடுகர் என்றால் தெலுஙகர்,
கன்னடர். கிருஷ்ணைக்கும் கோதாவரிக்கும் நடுவே உள்ள
வேசரநாட்டைச் சேர்ந்தவர்கள்]
கோதாவரி கிருஷ்ணா படுகையில் இருந்து மக்கள்
இங்கே குடியேறிக்கொண்டே இருந்திருக்கிறா
ர்கள்.அதை இங்குள்ளவர்கள் எதிர்த்துப்போரா
டி தோற்றபடியே இருந்தனர் உண்மையில்
இருபது நூற்றாண்டாக தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள்
வடுகர்களே...................................................
............. தமிழக வரலாற்றில் தமிழ்மன்னர்கள்
ஆண்டகாலம் மொத்தமாகவே முந்நூறு வருடம்
இருக்காது. தமிழக ஆட்சியை வடுகர்களிடமிருந
்தே வெள்ளையர் கைப்பற்றினர். அதன்பின்னரும்
அவர்களையே ஜமீன்தார்களாக வைத்திருந்தனர்.
வெள்ளையரின் ஊழியர்களாக இருந்த பிராமணர்களுக்கு
ம் வெள்ளையரின் நிலக்கிழார்களாக இருந்த
வடுகர்களுக்கும் இடையே போட்டியும் கசப்பும்
இருந்தது....................................................
....... ஈவேரா அவரது கட்டுரை ஒன்றில்
காவலதிகாரியாக ‘நிமிர்வும் மிடுக்கும் கொண்ட'
நாயிடுவுக்குப் பதிலாக 'மீசையில்லாத பார்ப்பனன்'
வரும் நிலையை வெள்ளையன் உருவாக்கிவிட்டத
ை எண்ணி வருந்தி எழுதியிருக்கிறார். இதுதான்
அக்காலத்தின் முக்கியமான முரண். இதில் மெல்லமெல்ல
பிராமணர் கை ஓங்கி வந்தது. மறுபக்கம்
ஜமீன்தாரிமுறை ஒழிப்பால் தெலுங்கர்களின் ஆதிக்கம்
சரிந்தது. சுதந்திரப்போராட்டம் வந்தபோது பிராமணர்
மேலும் அதிகாரம் பெற்றனர். அதற்கு எதிரான
வடுகர்களின் கசப்பே திராவிட இயக்கம்........
..........................................
அக்கசப்பை அவர்களிடம் பெருக்கி இயக்கம் கண்டவர்கள்
மலபார் நாயர்கள். திராவிடர் என்ற
சொல்லை ஈவேரா எடுத்துக்கொண்டத
ு தெலுங்கர்களை உள்ளடக்கும்பொருட்டே. ஏனென்றால்
அதற்கு முன்னரே தமிழர் என்ற
சொல்லையே மிகப்பரவலாக அன்றைய தமிழ்மறுமலர்ச்ச
ி இயக்கம்
கையாண்டு வந்தது வரதராஜுலு நாயிடு தலைமையில்
ஈவேரா வெளியேறி திராவிட இயக்கம் உருவானதன்
பின்னணியில் உள்ள இந்த மொழி அரசியலை நாம்
கோவை அய்யாமுத்து போன்றவர்களின் சுயசரிதையில்
காணலாம்...............................................
சி.என்.அண்ணாத்துரை போன்றவர்கள்கூட வீட்டில்
தெலுங்கு பேசியவர்கள் என்பதை பாரதிதாசனின்
கட்டுரை காட்டுகிறது. இத்தனை ஆண்டுக்கால அரசியல்
வழியாக வடுகர் x தமிழர்
பிரச்சினையை வெற்றிகரமாக பிராமணர் X தமிழர்
என்று மாற்ற இவர்களால் முடிந்தது.
அன்று எழுச்சி பெற்று வந்த
இடைநிலைச்சாதி அரசியலுக்கு இந்த
இருமை உதவிகரமாகவும் இருந்தது.
இதுவே வரலாறு.......................................
.................................................. சிலகாலம்
முன்பு அசோகமித்திரனுக்கு சென்னையில் நிகழ்ந்த
ஒரு கூட்டத்தை லீனா மணிமேகலை பிராமணியக் கூட்டம்
என்று கடுமையாகத் தாக்கி எழுதியிருந்தார். நான்
லீனாவை நன்றாக அறிவேன். தனிப்பட்ட முறையில்
மதிப்பும் பிரியமும் அவர்மேல் உண்டு. அந்தக்
கட்டுரை எனக்கு ஒரு ஆச்சரியம். நான்
நண்பரைக்கூப்பிட்டு ‘லீனா தெலுங்கரா" என்றேன்.
"இல்லை சார் தலித் என்றார்கள்" என்றார். ‘அது அவர்
உருவாக்கும் பிம்பம். தலித் இத்தனை பிராமண
வெறுப்பைக் கக்கமாட்டார். கண்டிப்பாக
இந்தம்மா தெலுங்குதான்' என்றேன். அவர்
அரைமணிநேரத்தில் கூப்பிட்டு "எப்டிசார் சொன்னீங்க?
உண்மைதான்' என்றார். "தமிழகத்தின் பிராமணக்காழ்ப்ப
ு அரசியலின் பின்புலத்தை அறிந்தால்
இதை ஊகிப்பது ஒன்றும் கஷ்டமே இல்லை" என்றேன்........
.............................................. இந்த அதிகார
அரசியலை கொஞ்சம் கொஞ்சமாக தலித்துக்கள்
இன்று உணரத் தொடங்கியிருக்கிறார்கள். தங்கள் சொந்த
அரசியலை அவர்கள் உருவாக்கத் தொடங்கியிருக்கி
றார்கள். பிராமண வெறுப்பின் பண்பாட்டுப் பின்னணி:
இந்தியாவில் பிராமண மறுப்பு என்றும் இருக்கும்.
அதற்கான வேர் நமது சமூக அமைப்பிலேயே உள்ளது. நம்
சாதிச் சமூகத்தின் உச்சியில் இருந்தவர்கள்
பிராமணர்கள். அதன் கருத்தியலை நிலைநிறுத்தியவர
்கள். ஆகவே அவர்களை அடித்தளத்தில்
இருந்துகொண்டு சாதியத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
எதிர்ப்பது இயல்பானதே பிராமணிய
மதிப்பீடுகளை நிராகரிக்காமல் சென்ற
நிலப்பிரபுத்துவகால மனநிலைகளை நாம் கடக்க
முடியாது. கொள்கைத்தளத்தில் இது மிக
இன்றியமையாதது...................................
மிகத்தீவிரமாக, ஈவேராவை விட
பலமடங்கு முழுமையுடன் அதைச் செய்தவர்
நாராயணகுரு. நடராஜகுருவும் நித்யசைதன்ய
யதியும் அவ்வகையில் பிராமண எதிர்ப்பாளர்களே.
ஆனால் பிராமண எதிர்ப்பு வேறு பிராமணக்
காழ்ப்பு வேறு.........................................
............ பிராமண எதிர்ப்பு என்பது பிராமணர்களால்
முன்வைக்கப்பட்ட சென்றகால நிலப்பிரபுத்துவ யுக
மதிப்பீடுகளை தர்க்கபூர்வமாக மறுத்து உடைப்பது.
அவர்கள் உருவாக்கிய நம்பிக்கைகளைக் கடப்பது.
அவர்களின் மனநிலைகளை நிராகரிப்பது.
அதை மிகத்தீவிரமாக நித்ய சைதன்ய யதியின்
எழுத்துக்களில் காணலாம். என் முன்னுதாரணம் இந்த
மரபே. பண்டித அயோத்திதாசரின் எழுத்துக்களில்
உள்ளதும் பிராமண நிராகரிப்பே. பிராமணக்
காழ்ப்பு என்பது அது அல்ல.அது கண்மூடித்தனமான
வசைபாடல். அவமதித்தல். சிறுமை செய்தல்.
அதற்கு வரலாற்றுணர்வோ வாசிப்போ சிந்தனையோ தேவையில்லை. .ஈவேரா முன்வைத்தது
அதைத்தான்.
அதன் முதன்மை நோக்கம் தன் சொந்த
சாதிப்பற்றை மறைப்பதுதான். நேற்றைய சாதியமைப்பில்
நடுப்பகுதியில் இருந்து அனைத்தையும்
அனுபவித்துவிட்டு பிராமணனை கூண்டில்
ஏற்றி தப்பிப்பது மட்டும்தான். ...............
.........................................................இந்
து மெய்ஞான மரபுக்குள்ளேயே பிராமண
எதிர்ப்பு என்றும் இருந்தது. பிராமணர்கள்
வைதிகமரபின் குரல்களாகவே பெரும்பாலும்
ஒலித்தனர். அவைதிக மரபுகள்
அவர்களுக்கு எதிராகவே செயல்பட்டன.
அது முற்றிலும் வேறு ஒரு தளம். இன்றைய நிலையில்
சாதிப்பற்று பற்றிய குற்றச்சாட்டுகளை பிராமணர்கள்
மேல் சுமத்துபவர்கள் முதலில் தங்கள் சொந்தச்
சாதிப்பற்றை அறிக்கையிட வேண்டும்.
சாதிக்கு எதிரான எந்தக் கலகமும் சொந்தச் சாதியின்
சாதிவெறிக்கு எதிரான நிலைபாட்டில்
இருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும்........................
...................... இத்தனை சாதி எதிர்ப்புக் குரல்கள்
ஒலிக்கும் தமிழ்ச்சூழலில் இடைநிலைச்சாதியில்
இருந்து அச்சாதியை விமர்சனம் செய்து ஒரு குரல்
எழுவதை நம்மால் காணமுடிவதில்லை.
ராஜாஜியை கிழித்து தோரணம் கட்டலாம்.
முத்துராமலிங்கத் தேவர்
பற்றி ஒரு விமர்சனத்தை தமிழகத்தில்
எழுதிவிடமுடியாது. இதுவே இங்குள்ள
சாதி எதிர்ப்பின் உண்மையான நிலை பாலைவன மக்கள்
ஒரு சடங்குசெய்வார்களாம். வருடத்தில்
ஒருமுறை ஒரு வெள்ளாட்டைப்பிட
ித்து கிராமத்திலுள்ள அத்தனை நோய்களையும் அதன்மேல்
ஏற்றுவதற்குரிய சில பூசைகளைச் செய்தபின்
அதை ஊரைவிட்டுத் துரத்தி பாலைவனத்தில்
விடுவார்கள்.
அது நீரின்றி செத்து காய்ந்து அழியும். நோய்கள்
ஊரைவிட்டு விலகிவிட்டதாக இவர்கள் எண்ணிக்கொள்வார்
கள். சாதி வெறியில் ஊறிய தமிழகம், அப்படிக்
கண்டெடுத்த வெள்ளாடுதான் பிராமணர்கள்...................
.................................. அதன்மூலம் இங்கே இன்னமும்
தலித்துக்களை அடிமைகளாக்கி வைத்திருக்கும்
பழியில் இருந்து இடைநிலைச்சாதிகளும்
பிரமணரல்லா உயர்சாதியினரும் தப்பித்துக்கொள்
கிறார்கள் பிராமணர்களும் சாதிமுறையும்: இந்த
வெறுப்பை பிராமணர்கள் மேல் பிறர் மேல் காட்ட என்ன
காரணம் சொல்லப்படுகிறது? அவர்கள்
சாதிமேட்டிமை கொண்டவர்கள். சாதிமுறையின்
லாபங்களை அனுபவித்தவர்கள்
.சாதியை நிலைநிறுத்தியவர்கள்.
ஆகவே அவர்களை அவமதிப்பது ‘சாமிக்கு நேத்திக்கடன்'.
[ராமசாமியும் சாமியே] சாதியைப்பற்றி அம்பேத்கர்
முதல் கோசாம்பி வரை எத்தனையோ பேர் எழுதிவிட்டனர்.
இன்று பக்கம் பக்கமாக அவை மொழியாக்கம்
செய்யப்பட்டு கிடைக்கின்றன.சாதியை பிராமணன்
உருவாக்கி பிறரிடம் பரப்பி அவர்களைச்
சுரண்டி அவன் மட்டும் கொழுத்து வாழ்ந்தான்
என்பதுபோன்ற அப்பட்டமான திரிபை அடிப்படை ஞானம்
கொண்ட எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்..........
................................ அப்படி ஒருவர் சொல்கிறார்
என்றான் அது சுயநலத்தின் விளைவான அயோக்கியத்தனம்
மட்டுமே சாதிமுறை இங்கிருந்த பழங்குடிச் சமூக
அமைப்பில் இருந்து மெல்லமெல்ல உருவாகி வந்தது.
சாதிகள் என்பவை பழங்குடி இனக்குழுக்களின்
தொகுப்பு. ஆகவே தான் ஒவ்வொரு சாதியும்
உபசாதிகளாகவும் கூட்டங்களாகவும்
பிரிந்துகொண்டே செல்கிறது. இச்சாதிபேதங்களை
ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி இங்கே நிலப்பிரபுத்துவம்
கட்டிஎழுப்பப்பட்டது. அந்தச்
சுரண்டலே இங்கே பேரரசுகளை உருவாக்கியது அந்த
நிலவுடைமை முறையின் புரோகிதர்களாக இருந்த
பிராமணர்கள் அந்த முறையை நிலைநாட்டுவதற்குரிய
சிந்தனைகளை பரப்பியவர்கள்.அந்த அமைப்பின்
லாபங்களை அனுபவித்தவர்கள். அதற்கு அவர்கள்
பொறுப்பு ஏற்றாகவேண்டும். ஆனால் அவர்கள் மட்டும்தான்
அதற்குப் பொறுப்பா என்ன?.....................................
இங்கே நாடாண்டவர்கள், நிலத்தை உரிமைகொண்டவர்கள்,
வணிகம் செய்து பொருள்குவித்தவர்கள்
எவ்வகையிலும்பொறுப்பில்லையா? அவர்களெல்லாம்
பிராமணர்களை கைகாட்டி தப்பித்துக்கொள்லலாமா?
இங்குள்ள சாதிமுறை நேற்றைய சமூகப் - பொருளியல்
அமைப்பின் உருவாக்கம். இன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக