வியாழன், 11 மே, 2017

பிறமொழி தமிழ் சாதிகள் 1956

aathi tamil aathi1956@gmail.com

27/2/15
பெறுநர்: எனக்கு
Asa Sundar
தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பால் தமிழ் இனக்குழுக்கள்:
==============================
=============
தமிழ்நாட்டில் வசித்தாலோ அல்லது தமிழ்
பேசினாலோ எவரும் தமிழர் ஆகி விட முடியாது.
ஏனெனில் தமிழ் பேசும் பார்ப்பனர் தம்மை தமிழர்
என்றும் தமிழ் பேசும் வடுகர் சிலர் தம்மை தமிழர்
என்றும் கூறிக் கொள்வதால் எவர் தமிழர் என்று ஆராய
வேண்டியுள்ளது. தமிழ் நாட்டில் இருப்போரில் சுமார்
எண்பத்தைந்து விழுக்காட்டினர் மட்டுமே தமிழர் ஆவர்.
அவர்களது இனக்குழு (சாதி)
அதனை புலப்படுத்தி விடும். தமிழ்நாட்டில் சுமார்
அறுநூறு சாதிகள் வகைப் படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் இருநூறு சாதிகள்
மட்டுமே தமிழர்க்கானது ஆகும். மற்றவை வடுக/ஆரிய
அல்லது இவற்றின் கலப்பின இனக்குழுவினர் ஆவர். தமிழ்
பேசும் சிலர் எப்படி தமிழர் ஆக முடியாதோ,
அதே போல் தெலுங்கு அல்லது கன்னடம் பேசுவோரும்
முறையே தெலுங்கர் அல்லது கன்னடர் ஆகி விட
மாட்டார்கள்.
தெலுங்கு பேசும் தமிழ் இனக்குழுக்கள்:
=============================
வன்னிய ரெட்டி:
============
ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மற்றும் நெல்லூர்
மாவட்டங்களில் செறிவாக உள்ள தமிழ் இனத்தார் இந்த
வன்னிய ரெட்டி ஆவர். இவர்களை ரெட்டி (கஞ்சம்) மற்றும்
ரெட்டி (கம்மா) ஆகியரோடு ஒப்பிடக் கூடாது. கஞ்சம
ரெட்டி மற்றும் கம்மா ரெட்டி ஆகியோர் வடுகர் ஆவர்.
ரெட்டி என்பது தெலுங்கு பட்டம் மட்டுமே ஆகும்.
தமிழர்களான வன்னிய ரெட்டிகளை வடுகர்களான கஞ்சம்
மற்றும் கம்மா ரெட்டிகளோடு இணைத்துப்
பார்ப்பது தவறு. முன்னூறு ஆண்டுகளாக
வடுகர்களோடு வடுக மொழியான
தெலுங்கு பேசி வந்தாலும் இவர்கள்
நூறு விழுக்காடு தமிழர் இனக்குழுவினர் ஆவர்.
முத்தரையர்:
==========
முத்துராஜா, முடிராஜு அல்லது அரையர் என்ற
பெயரில் சித்தூர், நெல்லூர், மற்றும்
கடப்பை மாவட்டங்களில் வசிக்கும் இவர்கள்
மற்றொரு தமிழினக் குழுவினர் ஆவர்.
இவர்களோடு வடுக ராஜுக்களை இணைப்பது கூடாது.
குறும்ப சாம்ராஜ்யத்தை வீழ்த்திய பாளையக்கார வடுக
ராஜுக்கள் முத்துராஜாக்களோடு இணைத்து ஆந்திர
பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.
இவர்கள் நூறு விழுக்காடு வடுகர் ஆவர்,
எனவே முத்தரையர்களில் வலையர், அரையர், திரையர்,
மூப்பர் ஆகியோர் மட்டுமே தமிழினக் குழுவினர் ஆவர்.
முதலியார்கள்: (ஆந்திரம்)
====================
சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் பரவலாக
காணப்படும் ஒரு இனத்தினர் முதலியார்கள் ஆவர்.
இவர்கள் தங்களை தொண்டை மண்டல அகமுடையார்
என்று அழைத்துக் கொள்கின்றனர்,
இவர்களோடு நெசவு தொழில் செய்யும் கைக்கோளர்
மற்றும் செங்குந்தரும் இணைந்து தங்களை முதலியார்
என்று அழைத்துக் கொள்கின்றனர். இவர்கள் வன்னிய
ரெட்டி அல்லது முடிராஜு போல்
அல்லாது இன்று வரை தமிழே பேசி வருகின்றனர்.
தற்போது ஆந்திரத்தின் சித்தூர்
மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்கவேண்டும்
என்று குரல் கொடுப்போரும் இந்த இனத்தாரே ஆவர்.
குறும்பர்: (ஆந்திரம்)
================
சங்க காலத்தில் அருவா வடதலை நாடு என்றழைக்கப்பட்ட
ு தற்போது தென் கருநாடகம் மற்றும் தென்
மேற்கு ஆந்திரம் பகுதிகளில் உள்ள மாவட்டங்களான
தும்கூர், கோலார், அனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில்
குறைந்த எண்ணிக்கையினராக அறியப்படுவார் குறும்பர்
ஆவர். சங்க இலக்கியங்களில் குறும்பர் குறித்த
செய்திகள் ஏராளம். தமிழ்ச் சாதியான இவர்கள்
தற்போது பிழைப்பிற்காக முறையே கன்னடம் மற்றும்
தெலுங்கை கொண்டுள்ளனர். வடுகர் வரலாற்றில்
குறும்பர்கள் என்றுமே எதிரியாகத் தான்
அறியப்படுவர். குறும்பர் உருவாக்கிய
பேரரசை நிர்மூலம் ஆக்கிய பெருமை ஆரிய-
வடுகர்களுக்கு உண்டு. குறும்பர்களுக்கு “அரவர்”
என்ற பெயரும் உண்டு. தமிழர்களை கொச்சையாக
திட்டுவதற்கு வடுகர் “அரவ வாடு” என்ற சொல்லைப்
பயன் படுத்துவர்.
கன்னடம் பேசும் தமிழ் இனக்குழுக்கள்:
==============================
குறும்பர்: ( Kurumba or Kuruba)
======================
தும்கூர், ஷிமோகா, சித்திரதுர்கம், ஹசன் ஆகிய
மாவட்டங்களில் கணிசமாக உள்ள கன்னடம் பேசும்
குறும்பர் இன வழி தமிழே ஆகும். குறும்பர் குறித்த
செய்திகள் சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன.
சீனி.வேங்கடசாமி நாட்டார் “ஆயிரத்தெண்ணூறு
ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்” என்ற நூலில்
குறும்பர்களை நன்கு பகுத்தாய்ந்துள்ளார்.
குறும்பர்கள் மற்றும் பல்லாளர் என்ற துளுவ
நாட்டு வெள்ளாளர்களான பண்டுகளுக்கும் நடந்த
பூசல்களும் குடகு நாட்டில் வடுகர்கள் குடியேற்றம்
நிகழாவண்ணம் குறும்பர்களும் பண்டுகளும்
கவனத்தோடு இருந்தமையும் எட்கர் தர்ஸ்டன் நூலில்
சுட்டிக் காட்டப் படுகின்றன.
ஒக்கலியர்: ( Okkaliga)
================
தென் கருநாடகத்தில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினர்
இந்த ஒக்கலியர் ஆவர். இவர்களது பூர்வீகம்
காஞ்சி ஆகும். இவர்கள் தமிழகத்தில் காணப்படும்
கொங்கு வெள்ளாளர்களின் கன்னடம் பேசும் பிரிவினர்
ஆவர். வடுக மொழியான கன்னடத்தை பிழைப்பிற்காகவும்
மாநிலப் பிரிவினைக்குப் பின்னர் தங்களை தனி கன்னட
இனக்குழுவாக காட்டிக் கொள்வதற்கும் கன்னட
நாடே தங்களது பூர்வீகப்
பகுதி என்பதை நிலை நிறுத்திக் கொள்வதற்கும்
தங்களை கன்னடர் என்று வகைப் படுத்திக் கொண்ட தமிழ்
இனக்குழுவினர் ஆவர். மைசூர், மாண்டியா, ஹசன்,
ராமநகரம், சித்திரதுர்கம் ஆகிய மாவட்டங்களில்
இவர்களது வலிமை அளப்பரியது ஆகும்.
பல்லாளர் என்ற துளு நாட்டு வெள்ளாளர் :
===============================
( Ballala or Bunt or Nadava)
==================
மங்களூர், குடகு, உடுப்பி, சாம்ராஜ்நகர் ஆகிய
மாவட்டங்களில் அரசியல் வலிமை பெற்ற மற்றொரு தமிழ்
இனக்குழுவினர் இந்த துளு நாட்டு வெள்ளாளர் ஆவர்.
இவர்களது மொழி தமிழ் சொற்கள் விரவி வரும்
துளு ஆகும். வெள்ளாளர்--> பெள்ளாளர்--->
பெல்லாளர்--->பல்லாளர் என்று மருவியது.
இவர்களுக்கு பண்டு என்ற இனப்பெயரும் உண்டு. இவர்கள்
வணிகத்தில் சிறந்து விளங்கியதால் பதினாறாம்
நூற்றாண்டில் தங்களை வகைப் படுத்திக்கொள்ள “ஷெட்டி”
என்ற “செட்டி” பட்டத்தை சூட்டிக் கொண்டனர். இவர்கள்
நாடு என்ற அமைப்பைக் கொண்டு வசிப்பதால்
இவர்களுக்கு “நாடவர்” என்ற பெயரும் உண்டு.
ஈடிகர் மற்றும் பில்லவர்: (Ediga and Billava)
===============================
தமிழக பண்டைய வில்லவர் வழித்தோன்றலே இந்த
பில்லவா என்ற தற்போதைய கன்னட இனத்தினர் ஆவர்.
இவர்கள் இதே பெயரில் வட கேரளத்தில் அழைக்கப்
படுகின்றனர் ஆனால் மலையாளமே இவர்களது தாய்
மொழியாகும். உடுப்பி, சிக்மகளூர், ஷிமோகா, ஹசன்
ஆகிய மாவட்டங்களில் இவர்கள் பரவலாக வாழ்கின்றனர்.
பழம் பெரும் தமிழர்களில் வில்லவர் என்பார் சேரர் குல
தோன்றல்கள் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது. கள்
இறக்குவதே இவர்களது தொழில் ஆகும். வில்லவர்,
ஒக்கலியர், பல்லாளர் மற்றும் குறும்பர் ஆகிய தமிழ்
இனத்தாரை பதினைந்தாம் நூற்றாண்டில் வீழ்த்தி சேர
நாட்டிற்குள் நுழைந்த வடுக இனத்தார் “நாயர்” ஆவர்.
திகளர் என்ற வன்னியர்: (Thigala @ Vanniya)
================================
கோலார், பெங்களூர் ஊரகம், பெங்களூர் நகரம் மற்றும்
தும்கூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க
எண்ணிக்கையினர் இந்த திகளர் ஆவர். ஆந்திர வன்னிய
ரெட்டியை போல் இல்லாமல் இவர்கள்
இன்று வரை தமிழே பேசி வருகின்றனர்.
பிழைப்பிற்காக தும்கூர் பகுதிகளில்
கன்னடத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். பெங்களூரில் உள்ள
தமிழர்களான முதலியார்களைப் போல் இவர்களுக்கும்
மண்ணின் மைந்தர் என்ற உரிமையோடு வாழ்கின்றனர்.
முதலியார்:
=========
பெங்களூர் நகரம், பெங்களூர் ஊரகம், பல்லாரி ஆகிய
பகுதிகளில் முதலியார்கள் வாழ்கிறார்கள். இவர்கள்
செங்குந்தர், தொண்டை மண்டலத்தார், கைக்கோளர்
என்று பிரிந்துள்ளனர். கருநாடகத்தில் வசித்தாலும்
தமிழே இவர்களது தாய் மொழி. தொலை தூர மாவட்டமான
பல்லாரியிலும் இவர்கள் தமிழே பேசி வருகின்றனர்.
மண்மீட்பு தமிழ்ச்சாதிகள் ஆந்திரா கர்நாடகா 

3 கருத்துகள்:

  1. சக்கிலியர் என்பவர்கள் யார் விஜயநகர படையெடுப்புக்கு முன்னேரே தமிழ் மண்ணில், தமிழ் சோழமன்னர்கள் காலத்திலேேயே கி.பி 1030 ம் ஆண்டு கல்வெட்டிலேேயே இவர்கள் நிலங்களுடன் வாழ்ந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கிறது அப்படியெனில் விஜயநகர படையெடுப்பின் நாயக்க மன்னர்களுடன் வந்தது யார்? ஏன் ஆந்திரா பழங்குடி சாதி பட்டியலில் சக்கிலியர் என்ற பெயரே இல்லை விளக்கம் தருக

    பதிலளிநீக்கு