வியாழன், 4 மே, 2017

தாலி பற்றி பாவாணர் திருமணம் சடங்கு

aathi tamil aathi1956@gmail.com

13/3/15
பெறுநர்: எனக்கு
அறிஞர் குணா பேரவை
தாலிகட்டும் வழக்கம் தமிழரதே
ஒரு காதலன் தன் காதலிக்கு, அல்லது ஒரு மணமகன் தன்
மணமகளுக்கு, அல்லது கணவன் தன் மனைவிக்கு,
கழுத்தில் தாலி கட்டுவதன் வாயிலாய், அவளைத் தன்
வாழ்க்கைத்துணைவி என்று பிறர்க்குக் காட்டுவது,
தமிழகத்துத் தொன்றுதொட்ட
வழக்கமாயி ருந்துவருகின்றது.
கட்டுதல் என்னும் சொல் மணத்தல் என்று பொருள்படுவது,
தாலிகட்டும் வழக்கம் பற்றியே. ஓர்
இளையானை அல்லது இளையாளை நோக்கி, 'நீ யாரைக்
கட்டப்போகிறாய்?' என்று கேட்பது உலக வழக்கு.
மணமக்கள் இருவருள்ளும் தாலி கட்டுவது மணமகனும்
அவனால் கட்டப்படுவது மணமகளுமா யிருப்பினும்,
கட்டுதல் என்னும் சொல் மணத்தல் என்னும் பொருளில்
வழங்கத் தலைப்பட்டபின், அது இருவர்க்கும் பொதுவான
சொல்லாயிற்று-மொழிஞாயிறு பாவாணர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக