வியாழன், 4 மே, 2017

ராத்திரி வேர்ச்சொல் சொல்லாய்வு

aathi tamil aathi1956@gmail.com

12/3/15
பெறுநர்: எனக்கு
இராத்திரி என்ற சொல்லும் தமிழ்ச் சொல்லே. இரு எனும்
சொல் உரிச்சொல்லாக வரும்பொழுது இருண்ட, கரிய
முதலிய பொருள்களைக் குறிக்கும். இச்சொல்லிலிருந்
து தோன்றியவையே இருள், இருட்டு, இருண்டு மற்றும்
இரவு ஆகிய சொற்களாகும். நிலவு>நிலா,
உலவு>உலா, வினவு>வினா, விழவு>விழா என்பதைப்
போல இரவு>இரா எனவும் விளிக்கப்படும். உதாரணம்,
இரா, இராப்பொழுது, இராப்பகல், இராப்பாடி,
முதலியன(etc). இந்த இரா எனும் சொல்,
இரா+திரம்=இராத்திரம், இரா+திரி=இராத்த
ிரி எனவும் வரும்.(சாத்திரம்>சாத்திரி,சாத்திரன்,
மந்திரம்>மந்திரி,மந்திரன், புத்திரம்>புத்த
ிரி,புத்திரன், சுந்திரம்(>சுந்தரம்>சுந்தர்)>ச
ுந்திரி,சுந்திரன் என்பதைப் போல) இராத்திரம் எனும்
சொல்லிற்கு, இருண்ட திரம் கொண்டது என்று பொருள்.
இதனடியே தோன்றியதே இராத்திரி(>ராத்
திரி(பேச்சு வழக்குத் திரிபு)) எனும் சொல்லாகும்.
இச்சொல் தான் சமஸ்கிருத வழக்கிற்கு(மொழியல்ல)
சென்றது. இந்தி மொழியில் ராத் என்ற சொல்லும்
இராத்திரி என்ற சொல்லின் திரிந்த வழக்கே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக