திங்கள், 15 மே, 2017

நாம் பேசுவது தெலுங்கு நடையில் தமிழ்

aathi tamil aathi1956@gmail.com

27/1/15
பெறுநர்: எனக்கு
கபிரியேல் ராஜா வீரத்தமிழன்
தூய தமிழை காண ஒரு தேடல்:
.
செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவர்
வெளிவந்த நாட்களில் ஒரு வினா எழுந்தது,
அக்கால தமிழ் அப்படியா பேசப்பட்டிருக்கும்
என. அதை வடிவமைத்தவர் முனைவர்.ராமச்சந
்திரன், பழந்தமிழ், தொல்பொருள் பேரரறிஞர்.
1.அந்த தமிழ் யாழ்ப்பாணத்தமிழ் போல,
மலையாளம் போல ஒலித்தது என்றார்கள். பலர்
அறியாதது, பழங்குடிகளின் தமிழும்
அப்படித்தான் இருக்கும்.
2.ஓரளவு மீனவர்களின் தமிழும் அந்த
ஒலி கொண்டிருக்கும்.
3.தமிழ் இன்றுபேசப்படும் விதம்
தெலுங்கு ஒலிகொண்டது.
அதாவது தமிழை உருக்கி தெலுங்கு அச்சிலிட்டு வார்த்தது போல.
ஏனென்றால் முந்நூறு(நேரடியாக மேலும் 300
ஆண்டுகளாக மறைமுகமாக
தற்போது வரை)ஆண்டு தமிழகம்
தெலுங்கர்களால் ஆளப்பட்டது.
4.அவர்கள் பெருமளவில் தமிழ்நாட்டுக்குள்
குடியேறினார்கள். ஆனால் அன்னியர்களாக
இல்லாமல் இச்சமூகத்துடன் கலந்தார்கள்.
இன்றும் தமிழ்நாட்டின் தமிழ்
பேசும்செலவங்களாக உள்ள ஏரிகளையும்
சந்தைகளையும் ஆலயங்களையும்
உருவாக்கினார்கள். அவர்களுக்கு இசைவாக
தமிழ் மாறியது.
5.ஆனால் மலைகளால் பொத்தப்பட்ட கேரளம்
அந்த பாதிப்பை பெறவில்லை. அதன்
பாதிப்பு சம்ஸ்கிருதம். அது கீழே வராது.
ஆகவே அடித்தளத்தில் பழந்தமிழாகவும்
மேலே சம்ஸ்கிருதமாகவும் அது நீடித்தது.
ஆகவே ‘தூய’ மலையாளம் என்பது அடித்தள
மலையாளம். அது ஒரு வகை பழந்தமிழ்.
6.அதேதான் யாழ்ப்பாணத்தமிழும். அதேதான்
பழங்குடிகள் மற்றும் மீனவர்களின் தமிழும்.
மொழிக்கலப்பற்ற தன்மையால் பல அசல்
சொற்கள் பேணப்பட்டன.
6.குமரிமாவட்டத்தில் பிறந்த ஒருவர்
பழந்தமிழில் நுழைவது எளிது.
எஸ்.வையாபுரிப்பிள்ளை பெரும்பாலான தூய
மலையாள சொற்களை தமிழ் பேரகராதியில்
சேர்த்துக்கொண்டார்.
7.இது சொற்கள் விடயத்தில் மட்டும் அல்ல.
சடங்குகள், ஆசாரங்கள், விழாக்கள் போன்ற
பண்பாட்டுக்கூறுகளிலும்கூட உள்ளது.
பழந்தமிழ் வாழ்க்கை அம்சங்களே அசலான கேரள
பண்பாட்டை உருவாக்கியுள்ளன.
ஆக தற்போது குமரி,கேரள மக்களின்
பேச்சு தான் பழைமையான தூய தமிழ்.
தற்போது யாழ்பாண தமிழ் தான் எம்மொழியும்
கலக்காத தூய தமிழ்.
தமிழ் வாழ்க.

search வெதுப்பகம் வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக