வியாழன், 4 மே, 2017

ஓம் வேர்ச்சொல் சொல்லாய்வு மதம் யானை அறிவியல் ?

'ஓம்' - அறிவியல் பார்வை

'போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம்' - வள்ளலார்
'ஓசை ஒளியெலாம் ஆனாய் போற்றி'
'ஓம்' - இது பிரணவ மந்திரம்
'ஓம்' - Big Bang
ஓசையை அலைநீளத்தாலும், அழுத்த அதிர்வுகளாலும் அறிவியல் அளந்து பார்க்கிறது.
Hertz / Hz என்பது அதன் அலகு (அளவுக்குறியீடு).
மனிதர்கள் 20 முதல் 20,000 ஒலியலகுகள் இருந்தால்தான் ஓசையைக் கேட்க முடியும். 20-க்குக் குறைந்தால் மனிதர்களால் கேட்க முடியாது. சாதாரண மனிதன் 16,000 அலகுக்கு மேற்பட்ட ஒலியைக் கேட்க முடியாது. குழந்தை 20,000 அலகு வரையில் கேட்கும் திறம் பெற்றிருக்கிறது.
நாய் 35,000 அலகு வரையில் கேட்க முடியும்.
எலி 1,00,000 அலகு வரையில் கேட்க முடியும்.
யானை, திமிங்கலம் போன்றவை 20-க்குக் குறைந்த அலகுள்ள ஒலிகளை எழுப்பவும் கேட்கவும் முடியும். குறைந்த அலகுள்ள ஒலிகள் அதிக தூரம் செல்லும். இதனால் அவை அதிதொலைவிலுள்ள தன் இனத்தோடு பேசிக்கொள்ள முடியும்.
யானை 'ஓம்' என்று பிளிறுகிறது. எனவே இது போன்ற பிரணவ ஒலி பேரண்டம் முழுவதும் பரவக்கூடிய குற்றலை ஒலி infra-sound என உணர்ந்துகொள்ளலாம்.
Big Bang ஒலியின் molecular vibration நம்மால் கேட்க முடியாத 'ஓம்'

ஓம்

செய்வோம் (செய் வ் ஓம்) என்னும்போது வரும் ஓம் என்பதுதான் ஓம் மந்திரம்.
நீயும், நானும், அவனும் செய்வோம்.
கூடிச் செய்வதை உணர்த்துவது ஓம்.
அவன் அண்டத் தொகுதியோடு கூடி இருந்துகொண்டு செய்யும் செயலும், இயங்கும் இயல்பும் ஓம்.
தமிழியல் தரும் விளக்கம் இது.
ஓம் என்னும் மந்திரத்தின் பொருளைச் சொல்லவில்லை என்பதற்காக முருகன் பிரமனைச் சிறையில் அடைத்தான் என்பது பழங்கதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக