திங்கள், 1 மே, 2017

காமராசர் சொந்த சாதி துரோகம் நாடார் சாணார் காமராஜர்

aathi tamil aathi1956@gmail.com

15/3/15
பெறுநர்: எனக்கு
கபிரியேல் ராஜா வீரத்தமிழன்
காமராஜர் நாடாருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள்
ஏற்படுத்தி கொடுத்து உள்ளார் என்போருக்கு:
1.குமரி மாவட்டம் தாய் தமிழகம் வர காரணமாக
இருந்த நேசமணி நாடார், குஞ்சன் நாடார்
போன்றோருக்கு காமராஜர் எப்படி உதவினார்
தெரியுமா "ஆறு,மேடு,பள்ளம் எல்லாம் இந்தியாவில்
தானே உள்ளது, பிறகு எதற்கு நீ போராடுகிறாய்
"என்றார்.
2.தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க
தியாகி.சங்கரலிங்கனார்(நாடார்) உண்ணாமல்
இருந்து சாக யார் காரணம் என்று அனைவருக்கும்
தெரியும்.
3.மா.பொ.சிவஞானம்(கிராமணி நாடார்) காமராஜரால்
புறக்கணிக்கப்பட்டார்.
4.இடுக்கி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய தமிழக
மாவட்டங்கள்(மூன்றும் சேர்த்து மக்கள் தொகை-60
இலட்சம், நாடார் மக்கள் தொகை-40 இலட்சம்)
தமிழகத்தோடு இணைக்க மறுத்து விட்டார்.
5.சி.பா. ஆதித்தனார்(நாடார்)கட்சியை கலைக்க
காரணமாக இருந்தார்.
6.நாடாரை பட்டியல் பிரிவில்(SC)
இருந்து தூக்கி தாழ்த்தப்பட்ட பிரிவில்(BC)
இணைத்து இன்று வரை மருத்துவ, பொறியியல்
படிப்பிற்கு அலைய விட்டார்.
7.கல்வி அரசுடைமை ஆக்கப்பட்டதால் பெரும்பாலான
கல்வி நிறுவனங்கள் வைத்து இருந்த நாடார்கள்
நடுத்தெருவில் நிற்கும் சூழல்.
8.கள் இறக்க அனுமதி ரத்து. பல நாடார்
குடும்பத்தினர் சென்னை நோக்கி செல்ல மிக முக்கிய
காரணம்.
9.நாடார்கள்
1850க்கு பிறகு கல்வி கற்று அவர்களாகவே பொருளாதாரைத்தை முன்னேற்றி கொண்டவர்கள்.
நாடார் உறவின் முறை 1890க்கு பிறகு தமிழகத்தில்
உள்ள 90%
கல்வி நிறுவனங்களை தன்னகத்தே கொண்டு இருந்தது.
10.இவர் ஆட்சி அமைச்சரவையில் தமிழகத்தில்
பெரும்பான்மை சமுதாயமாக இருந்தும்
எவ்வளவு நாடார் அமைச்சர்கள் இருந்தார்கள்
என்று அனைவருக்கும் தெரியும்.
.
இன்னும் பல உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக