திங்கள், 15 மே, 2017

சிலம்பாட்டம் சிலம்பு கலை வளரி குத்துவரிசை கம்பு

aathi tamil aathi1956@gmail.com

24/2/15
பெறுநர்: எனக்கு
Melchi Jasper
சிலம்பம்
சிலம்பம், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும்,
பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும்
விளங்குகிறது. “சிலம்பம்’ என்ற சொல் “சிலம்பல்’ என்ற
வினையின் அடியாகப் பிறந்தது. “சிலம்பல்’ என்ற
வினைச் சொல்லுக்கு “ஒலித்தல்’ என்பது பொருள். மலைப்
பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின்
கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை,
மிருகங்களின் இரைச்சல் போன்ற நாலாவித ஓசைகள்
ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, “சிலம்பம்’
என்ற பெயருண்டு. எனவே, மலை நிலக் கடவுளான
முருகனுக்கும், “சிலம்பன்’ என்ற பெயருண்டு.
கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள்
ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்ற காரணங்களால்,
தமிழரின் தற்காப்புக் கலைக்கு “சிலம்பம்’ என்ற பெயர்
ஏற்பட்டது. நெல்லை மாவட் டத்தில் கடையநல்லூருக்கு
மேற்கே உள்ள மலைப்பகுதிகளில் வாழும்
பழங்குடியினருள் “சிலம்பரம்’ என்ற பெயரும் வழக்கில்
உள்ளது.
சிலம்பம், தமிழர்களின் வீரவிளையாட்டு.
திருக்குறளில் “கோல்’ என்ற பெயரிலும்,
கலிங்கத்துப்பரணியில்,
“வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே’ என்ற வரிகள் மூலம்,
“தண்டு’ என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப்
பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும்,
சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள்
காணப்படுகின்றன.
இவைகளைத் தவிர கம்பு சூத்திரம்,
குறந்தடி சிலம்பம், நடசாரி போன்ற
ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடியில் உள்ள
பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற
பிறகே யோகக் கலை மருத்துவம் போன்ற கலைகளைப்
பயின்றதாகத் தெரிவிக்கிறது.
ஆனால், சிலம்பக் கலை பற்றிய அகழாய்வுச் சான்றுகள்
மிகத் தொன்மையானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட
ஆதிச்சநல்லூர் அகழாய்வில், 32 வகையான சிலம்ப
ஆயுதங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன.
சிப்பி வளையல்கள், உலோகத் தொழிற்கலையில் வல்லவரும்,
ஜப்பானியத் தீவுகளை ஆய்வு செய்தவருமான
பேராசிரியர் கௌலாண்ட், “”பெரும் எண்ணிக்கையிலான
இரும்புப் படைக்கலங்கள், கருவிகள் மற்றும்
இரும்பை உருக்கும் ஆழ்ந்த
அறிவு ஆகியவை இருப்பதிலிருந்த
ு இரும்பை உருக்குதல் என்ற எதிர்பாரா நிகழ்ச்சி,
இரும்புத் தொழில் ஐரோப்பாவைக் காட்டிலும், பழைய
இரும்புக் காலத்தில் இடம் பெற்றிருந்த இந்திய
தீபகற்பத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும்” எனக்
கூறியுள்ளார்.
சிலம்பத்தில் சுவடு, தெக்கன் சுவடு, வடக்கன் சுவடு,
பொன்னுச் சுவடு, தேங்காய் சுவடு, ஒத்தைச் சுவடு,
குதிரைச்சுவடு, கருப்பட்டிச் சுவடு, முக்கோணச்
சுவடு, வட்டச் சுவடு, மிச்சைச் சுவடு, சர்சைச்
சுவடு, கள்ளர் விளையாட்டு, சக்கர கிண்டி,
கிளவி வரிசை, சித்திரச் சிலம்பம், கதம்ப வரிசை,
கருநாடக வரிசை போன்றவை அடங்கும்.
கராத்தே என்ற வீர விளையாட்டின் “கடா’ என்ற
போர்ப்பிரிவு, தன் பெயரைப் பெற்றதற்கு, கதம்ப
வரிசையைக் காரணமாக ஏற்கலாம். இரண்டின்
செயல்பாடுகளும் ஒன்றே.
சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான
சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக
மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம்
அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் வடக்கன் களரி,
தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு,
சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை,
நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம்
மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில்
ஆடப்பட்டு வருகின்றன.
சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு,
ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம்,
எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு,
பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி,
இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள்,
வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும்
உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும்,
கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும்,
சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக
விளங்கினர். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.,
திரைப்படங்களின் வாயிலாக சிலம்பக்கலைக்குப்
புத்துயிர் ஊட்டினார். சிலம்பத்தில் “வளரி’ என்ற
எறி ஆயுதம் மருதுபாண்டியர் காலத்தில் வழக்கில்
இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயரை எதிர்த்துப்
போரிட்ட மருது பண்டியர், வளரி வீசுவதில் வல்லவராய்
விளங்கினார்.
சின்ன மருதுவைத் தூக்கிலிட்ட கர்னல் வெல்ஸ் என்பவர்
எனது ராணுவ நினைவுகள் என்னும் நூலில், “”சின்ன
மருது தான் எனக்கு ஈட்டி எறியவும், வளரி வீசவும்
கற்றுக் கொடுத்தான். வளரி என்னும் ஆயுதம்
இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான்
பயன்படுத்தப்படுகிறது. ஆற்றலும், திறமையுமிக்க
ஒருவரால் 300 அடி தூரம் குறி தவறாமல் வீச
முடிகிறது” என்று கூறியுள்ளார்.
இந்த ஆயுதம் தமிழருக்கும் ஆஸ்திரேலிய
பழங்குடியினருக்கும் பொதுவானது. , அவர்களின்
மொழி, கலாசாரம், பண்பாடு உருவ
அமைப்பு முழுவதும்
தமிழரோடு ஒப்புமை உடையது எனவும்
கூறியுள்ளனர். —

தற்காப்பு கலை ஆதிச்சநல்லூர் பூமராங் ஆயுதம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக