திங்கள், 1 மே, 2017

சுப.முத்துக்குமார் ஈழம் தொடர்பு தனித்தமிழ்நாடு பிரிவினை விடுதலை தமிழர்நாடு

aathi tamil aathi1956@gmail.com

16/3/15
பெறுநர்: எனக்கு
சுபா.முத்துக்குமார் பேரவை
சுபா.முத்துக்குமார்....!!
இன்னமும்
புலிகளை புரிந்துகொள்ளாத
,தெரிந்துகொள்ளாத ஏராளம்
இளைஞர்கள் வாழ்கிற
அதே தமிழ்நாட்டில்
இருந்து எண்பதுகளிலேயே ஈழத்துக்கு
நம்பிக்கைக்கு பாத்திரமாகி,தலைவரின்
தனிப்பாதுகாப்பு
பிரிவுக்கு பொறுப்பாக இருந்து,பல
போர்க்களங்களை கண்டு இறுதிவரை
விடுதலைக்காக போராடிய
ஒரு மாவீரனை தேவையான சமயத்தில்
இழந்து விட்டோம்.
...
எண்பதுகளின் பிற்பகுதியில் ஆயுத
பயிற்சிக்காக தமிழீழம் சென்றார்.
அங்கு தேசியத்தலைவர் பிரபாகரனின்
வழிகாட்டுதலோடு சிங்கள
படைகளுக்கு எதிராக
விடுதலை புலிகளின் பல
வெற்றிகரமான தாக்குதல்களில்
பங்கு பெறுகிறார். தொடர்ச்சியாக
தேசிய தலைவரின்
தனி பாதுகாப்பு அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்
.
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்
தமிழகம் திரும்புகிறார்.
தமிழகத்தில் தமிழ்தேசிய
விடுதலைக்காக தமிழ் தேசிய
மீட்ச்சிப்படையை
தலைமையேற்று வழிநடத்துகிறார்.
அத்துடன் தமிழ் ஈழ விடுதலைக்காக
புலிகளுக்கு தேவையான
அனைத்தையும் தொடர்ச்சியாக
வேதாரணியம் கட்டுமாவடி,
மணமேல்குடி பகுதிகளிலிருந்த
ு அனுப்பி வருகிறார். தலைவர்
பிரபாகரனின் தனிப்பாதுகாப்பு
அதிகாரி ரோமியோ மற்றும்
நான்கு பெண்போராளிகள் உட்பட
பதினாறு போராளிகளை வேலூர்
சிறையில் இருந்து தப்ப வைக்கும்
அசைன்மென்ட் (பொறுப்பு)
அண்ணன் முத்துகுமாரிடம்
வழங்கபடுகிறது.
இப்போது அறிவியல் தொழில்நுட்ப
வசதிகளுடன் ஹாலிவுட்
திரில்லர்களில் வரும்
காட்சிகளைப்போல உலகே வியக்கும்
வண்ணம் புலிகள் வேலூர்
கோட்டையிலிருந்து நீண்ட நெடிய
சுரங்கம் தோண்டி தப்புகிறார்கள்.
அவர்கள் உட்பட 43
போராளிகளை மிகக்கடுமையான
மத்திய காவல் மற்றும்
புலனாய்வுத்துறையின்
கண்காணிப்புக்கு நடுவே கல்யாண
வீட்டார்
'கெட்டப்'போடு (பாவனையில்)
தமிழகத்தில் இருந்து தப்ப
வைத்து விடுகிறார் முத்துக்குமார்.
அண்ணனின் சாதுர்யமும்,
சாமார்த்தியமும் பல
போராளிகளையும்,
புலித்தலைமையையும் ஆச்சரியத்தில்
ஆழ்த்துகிறது.
இதன் பின்னரும் பல
செய்யவியலாது என்று மற்றவர்களால்
கூறப்பட்டவற்றை செய்துகாட்டிய
மாவீரனாய் அண்ணன் வாழ்ந்தார

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக