திங்கள், 23 ஜூலை, 2018

காடுகளில் தீ வனத்துறை வைக்கிறது ஆண்டுதோறும்

aathi1956 aathi1956@gmail.com

மார். 12
பெறுநர்: எனக்கு
Tamilri.com
வனத்தில் தீ-வைப்பதும், தீ-வைத்ததும் யார்?
ஆண்டுகொருமுறை வனத்தில் வனவிலங்கள் கணக்கெடுப்பு நடைபெறும் அது குறித்த தகவல்கள் பத்திரிக்கைகள் மூலம் வனத்துறை செய்திகளை வெளியிடுவார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மரங்கள் கணக்கெடுப்பு நடை அதாவது வரையரைக்கப்பட்ட (SCHEDULE) பாதுக்காக்கப்பட்ட (பட்டியல் மரங்களை தனியார்கள் வளர்த்தாலும் வெட்ட வேண்டுமானால் அரசு அனுமதி பெற வேண்டும்) மரங்களின் எண்ணிக்கையை வனத்துறையினரே கணக்கிடுவார்கள்.
அப்போது மரங்கள் வெட்டப்பட்டிருந்தால் அதன் மோட்டு என்ற தூர்பகுதியின் விட்டத்தை கணக்கிட்டு அதற்கான தண்டத்தொகையை வனச்சரகர் சம்பளத்தில் பிடித்தம் செய்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும். விளக்கம் ஏற்புடைதாக இருந்தால் பிடித்தம் செய்த தொகை விடுவிக்கப்படும். இல்லை என்றால் பொதுவான நடவடிக்கை எடுப்பார்கள். வெட்டபட்ட மரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் மாவட்ட வன அலுவலர் என பதவியில் உள்ள டிபுடி கண்சர்வெட்டர் ஆர் பாரரஸ்டர் பதவியில் உள்ள வன அலுவர்கள் வரை நடவடிக்கை தொடரும். (இப்படியான நடவடிக்கைகள் எப்போதாவது நடைபெறும்).
''கேரளம் தமிழக எல்லையில் உள்ள போடி வனச்சரக எல்லையில் உள்ள கொட்டகுடி பகுதியில் காட்டுத்தீ பரவியது அதனால் தமிழக எல்லையான கொழுக்குமலையிலிருந்து காட்டு நடையாக வந்த கல்லூரி மாணவிகள் தீ புகையில் சிக்கினார்கள்'' என்பதே இன்றைய பரபரப்பு செய்தி. இதில் உள்ள உள்ளார்ந்த செய்திகளை அறிந்திடவே இந்த பதிவு.
01. காட்டுத்தீ என்பது மூங்கில் மரங்கள் உரசுவதால் இயற்கையாக தீ ஏற்பட்டு வனங்களில் தீ பரவும். ஆனால் போடி வன சரகத்தில் மூங்கில் என்பது கருங்காவு அதாவது அடந்த தண்ணீர் சோங்குள்ள வனத்தில் மிககுறைவாக உள்ளது. இந்த பகுதியில் தீ பிடிக்க வாய்ப்பே இல்லை. அந்த பகுதியில் தீ பிடித்ததாக அங்குள்ள முதுவாகுடிகள் சொல்லவில்லை. வனத்துறை பதுவேடுகளில் பதிவு இல்லை.
02. ஆடு மேய்ப்பவர்கள், மாடு, மேய்த்து வனத்திற்குள் கிடை வைத்திருப்பவர்கள், வனத்தின் அருகில் நிலம் வைத்திருப்பவர்கள், கறிக்கட்டைக்காக தீ வைப்பவர்கள், கஞ்சா பயிடுபவர்கள், விலங்குள் வேட்டையாடுபவர்க ள், சமூக விரோதிகள், இவர்களே வனத்தில் தீ வைக்கிறார்கள் என்ற பொய் புழுகை வனத்துறையினர் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து சொல்லி வருவதால் சமூக ஆர்வலர்கள்? என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்? என்ற லையன் கிளம்ப் கூட்டம் இந்த புழுகை ஆளும் வர்கத்தோடு சேர்ந்து நமக்கு ஒத்தூதுவார்கள். இதை இந்த தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும
் செய்தியாக வெளியிடும்.
03. வனத்திற்கும் மக்களுக்குமான பயன்பாடு என்பது வனத்தில் மாடு ஆடு மேய்த்தல், கிடை அமைத்தல். அடுப்பு எரிக்க விறகு பொறுக்குதல், மரம் வெட்டி கடத்துதல், உணவுக்காக வேட்டியாடுதல். இவை முழுவதுமாக வனத்திலிருந்து அன்னியப்பட்டு விட்டது.
அ.மரம் வெட்டி காட்டுக்குள் தலைசுமையாக சுமந்த தலைமுறை இன்று வயதாகி வீட்டுடன் முடங்கி விட்டது.
ஆ. வனத்துள் ஆடு மாடு மேய்க்க முழுமையாக தடை போடப்பட்டுள்ளது. நீதி மன்ற ஆணை மூலமாக மட்டுமே மாடுகள் மேய்க்க இயலும். இப்படி மேய்ப்பவர்கள் தொழில் முறையாக இருப்பவர்கள் மட்டுமே அவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. இவர்கள் காட்டுக்குள் தீ வைக்க மாட்டார்கள். கடந்த காலங்களில் இவர்கள் வனத்திற்குள் காய்ந்த புல்லில் தீ வைத்தார்கள். இதற்கு காரணம் தீ வைத்த புல் கோடை மழையில் வெகுவாக தளைந்து ஆடு, மாடு மேய்க்க புல் கிடைக்கும் இதனால் தீ வைப்பது நடைபெறும். இவர்களை வனத்திலிருந்து அப்புறப்படுத்தியதால் இவர்கள் தீ வைக்க வாய்ப்பு மிக குறைந்து விட்டது. இதை ''கோடைகால தீ தடுப்பு குழு (வனத்துறை காவல்துறை, தீ அணைப்பு துறை, பொதுமக்கள் இவர்கள் கூட்டால் தற்காலியமாக உருவாக்கப்படும் குழுவை 1993ல் கலைத்த தமிழக அரசு ''பொதுமக்கள் வனத்தை பயன்படுத்துவது வெகுவாக குறைந்து விட்டதால் இந்த குழு இனி தேவையில்லை'' என வனத்துறை மூலம் அறிவித்துள்ளது.
இ. கஞ்சா பயிடுபவர்கள் வனத்துறையினர் போதை தடுப்பு காவலர், மய்ய அரசின் கீழுள்ள கஸ்டம்ஸ், மாநில சட்ட ஒழுங்கு காவல் துறை இவர்களுக்கு தெரியாமல் காட்டுக்குள் தங்கியே பயிடுவார்கள். இவர்கள் தங்கும் இடத்தில் தீ பிடித்தால் அந்த புகை மூலம் இவர்கள் இருக்கும் இடம் அடையாளப்படுத்தப்படும் என்பதால் அவர்கள் சமைப்பது கூட பாறை இடுக்குகளில் மட்டுமே அடுப்பு வைப்பார்கள். ஆக இவர்கள் தீ வைப்பது என்பது அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளிப்போடுவது போல் என்பதால் தீ வைப்பது என்பது இவர்கள் மூலமாக நடக்கவே நடக்காது.
ஈ. அடுப்புக்கு பதிலாக வாய் உருளை (GAS) அடுப்பு பெரும்பான்மை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் வனத்தை ஒட்டி உள்ள மிக சொற்பமான கிராமங்கள் விறகு பொறுக்க செல்வதில்லை. கொடைக்கானல் வட்டத்தில் உள்ள கவுஞ்சி, பூப்பாறை உள்பட்ட ஐந்து பஞ்சாயத்துகளில் பூண்டுகளை பூச்சியிலிருந்த
ு பாதுக்காக்க புகை மூட்டத்திற்காக விறகு பயன்படுத்தபபடுகிறது. இவர்கள் வனத்தில் தீ வைத்தால் அடுத்து விறகிற்கு என்ன செய்வது என தீ வைப்பதில் கவனமாக இருப்பார்கள் என்பது வனத்துறை ஆய்வறிக்கையே குறிப்பிடுகிறது.
உ. உணவுக்காக விலங்குகளை மக்களின் வாழ்வியல் மாற்றத்தால் வேட்டையாடுது என்பது மிக மிக குறைந்து விட்டது. காரணம் 01. உரிமம் இல்லாத துப்பாக்கிகளை காவல்துறை பெரும்பாலும் கைப்பற்றி விட்டது. சிலர் திருட்டுத்தனமாக வைத்துள்ளார்கள் அவர்களுக்கும் வனத்துறை காவல்துறைக்கும் கூட்டுள்ளதால் அதை அவ்வளவு எளிதாக அரசு கைப்பற்ற முடியாது. ஆக வேட்டையாடிகள் மூலம் தீ வைப்பது மிக மிக குறைந்து விட்டது.
அப்படியானால் யார்த்தான் வனத்தில் தீ வைப்பார்கள் வைக்கிறார்கள்.
''வனத்துறை ஒப்புதலுடன் மரங்களை வெட்டி லாரிகளில் கடத்தும் தொழில் முறை கூட்டம் போடி, பெரியகுளம், சீ(ஸ்ரீ)விலிபுத்தூர், தென்காசி, ராசபாளையம், கடயநல்லூர், கொடைக்கானல், பழனி, அதன் அருகில் உள்ள கொழுமம், ஆண்டிபட்டி, ஆனைமலை (ஈரோடு,கோவை, தர்மபுரி எனக்கு தெரியாது) பகுதிகளில் உள்ளனர். இவர்கள் வனத்துறை அனுமதியுடன் வனத்தில் மரங்களை அறுவை செய்து மரங்களை லாரிகள் மூலமாகவே கடத்துகிறார்கள். இந்த மரங்களில் மோட்டுகளை ஆண்டுக்கொருமுறை வனத்துறை மூலமாக எண்ணப்படும். இந்த மோட்டுகள் தெரியாமல் அழிக்க வனத்துறையினர் உயர் அலுவர்களின் ஒப்புதலுடன் வனத்தில் தீ வைப்பார்கள் வைக்கிறார்கள். ஆக வனத்தில் தீ வைக்கும் சமூக விரோத கூட்டம் வனத்துறையே வனத்துறையே.
தோழர் MUTHUNAGU NAGU அவர்களது பதிவிலிருந்து..

வளங்கள் சுரண்டல் காட்டுத்தீ தேனி போலீஸ் மரம் கடத்தல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக