வியாழன், 26 ஜூலை, 2018

செல்வா பாண்டியர் இறுதிச்சடங்கு கலந்துகொண்ட தமிழ்தேசிய இயக்கங்கள்

aathi1956 aathi1956@gmail.com

மார். 24
பெறுநர்: எனக்கு
நேற்று தமிழர் நடுவம் தலைவர் தமிழர்.திரு.செல்வாபாண்டியன் அவர்களின் இறுதி ஊர்வலத்திற்கு சென்றிருந்தேன். அவர் இருக்கும்போது மட்டும் தமிழ்தேசியம் பேசவில்லை. அவரின் ஊர்வலத்திலேயே அவர் யாரெல்லம் தமிழ்தேசியர்கள் என்பதை அடையாளம் காட்டிவிட்டுச்சென்றார்.

இந்த நிகழ்விற்க்கு எனக்கு தெரிந்தவரை வந்த தமிழ்தேசிய கட்சித்தலைவரும் தொண்டர்களும்
தமிழர் நடுவம்
தமிழ்தேச மக்கள் கட்சி
தமிழர் முண்ணனி
தமிழ்தேச பேரியக்கம்
தமிழர் முன்னேற்ற கழகம்
தமிழ்தேசிய கூட்டமைப்பு
செந்தமிழர் கழகம்
திருவள்ளுவர் கழகம்
மக்கள் இணையம் (தன்னாட்சி தமிழகம்)
நாடுகடந்த தமீழீழ அரசு (நாடாளுமன்ற உருப்பினர்)
தமிழர்வணிகக்களம்
என தமிழ்தேசிய அமைப்புகளை தமிழர்களுக்கான அமைப்பாக அடையாளம் காட்டிச் சென்றார்.
அவரின் இறுதி ஊர்வலத்தில் வழக்கமான முழக்கங்களை முழங்கிக்கொண்டிருந்த போது ஒருவர் வெற்றிவேல் வீரவேல் என்று முழங்கிய முழக்கம் அனைவரையும் ஒருநிலைப்படுத்தியதை உணர்ந்தேன்.

குறிப்பான செய்தி.
வழக்கம்போல் நாம் நினைவேந்தல் மட்டும் நடத்திவிட்டு இந்த நிகழ்வை கடந்துபோகாமல் அவர்களுடைய குடும்பத்திற்கான பொருளாதார ஒத்துழைப்புக்காக ஒரு பெரும் நிகழ்வை நடத்தி நிதி திரட்டி அவர்களுக்கு பக்கபலமாக இருந்து இதன் மூலம் நாம் ஒரு முன்மாதிரியை துவங்கி வைப்போம்.

வெற்றிவேல் வீரவேல்.

இயக்கம் தமிழ்தேசியம் கட்சி தேர்தல் ஈமச்சடங்கு நினைவேந்தல் நடுவம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக