வியாழன், 26 ஜூலை, 2018

2009 தண்ணீர் போர் உத்தி சிங்களவர் வியூகம் தளபதி தீபன்

aathi1956 aathi1956@gmail.com

மார். 24
பெறுநர்: எனக்கு

Veeraa VK
# நந்திக்கடல்_கோட்பாடுகள் ...
திமுக அல்லக்கைகளுக்கு எதிரான கடைசி பதிவாக இது இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். முடியலை.
நாகர்கோயிலிலிருந்து முகமாலை மற்றும் கிளாலி வரை நீண்டிருந்த தெற்காசியாவின் மிக நீண்ட இராணுவ வேலியை எதிரிகள் உடைக்க முடியாத யுக்திகளுடன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் பிரிகேடியர் தீபன்.
முழங்காவில், பரந்தன், கிளிநொச்சியை விட்டு புலிகளின் அணிகள் விலக நேர்ந்ததால் வேறு ஒரு இராணுவ திட்டத்தை வரைவதற்காக பிரிகேடியர் தீபனை தலைமை பின்வாங்குமாறு பணித்தபோதே அது எதிரியின் கைக்கு போனது. அதுவரை அந்த இராணுவ வேலியை உடைக்கவே முடியவில்லை.
இது இந்த நூற்றாண்டின் ஒரு போரியல் சாதனை. சம காலத்தில் வாழ்வதால் நம்மால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் வரலாற்றில் இவை ஒரு பாடமாக இருக்கும்.
இப்படி எண்ணற்ற சாதனைகளை புரிந்து விட்டுத்தான் புலிகள் ஓய்ந்திருக்கிறார்கள். இதுவே உலக ஒழுங்கை மாற்றியமைக்கும் 'நந்திக்கடல்' கோட்பாடுகளாக முகிழ்ந்திருக்கின்றன.
எனவே இந்த பின்புலத்தில் தீபனை ஒரு 'தளபதி' என்று வர்ணிக்கலாம்.
ஆனால் சட்டசபையில் நிற்க முடியாமல் தனது சட்டையை தானே கிழித்துவிட்டு நாலு நல்லி எலும்பு தெரிய தெறிச்சு ஓடிவந்த ஸ்டாலினை 'தளபதி' என்பது என்ன வகையானது என்பதை 200 ருபா தம்பிகள்தான் சொல்ல வேண்டும்.
இறுதி போர் ஆரம்பாகியதும் சிங்களம் இதுவரை கால இராணுவ யுக்திகளை மாற்றியமைத்தது வெளிப்படையாகவே எமக்கு தெரியும். ஆனால் பலருக்கு தெரியாதது அவன் எப்படி அதை கையாண்டான் என்று..
அங்கு உருவானதுதான் எதிரியின் ' தண்ணீர் ' கோட்பாடு.
அதாவது புலிகளின் அணிகளுடன் ஒப்பிடும்பொழுது எதிரியின் படை பல மடங்கு பெரியது. எனவே அவன் தண்ணீர் போல பல முனைகளில் படைகளை திறந்து விட்டான். தண்ணீர்போல் படைகள் தமிழர் நிலத்தில் வழிய புலிகள் எதிர்த்தாக்குதல், ஊடறுப்புத் தாக்குதல் என்பவற்றை செய்ய முடியாது தடுப்பு சமரை மட்டும் செய்ய வேண்டிய நிலை. தண்ணீர் என்பது ஒழுகும் தன்மை கொண்டது. அது எப்படி அடைத்தாலும் ஏதோ ஒரு வகையில் கசிந்து உட்புகுந்து விடும். எதிரிகள் தமிழர் நிலத்தில் புகுந்த கதை இதுதான்.
தலைவர் இதை கணித்தார். குறியீட்டுரீதியாக எதிரிக்கு அதை புரிய வைத்தது மட்டுமல்ல பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எதிர்த் தாக்குதல்களை நடத்தி பல மறிப்பு சமரை நடத்தி தண்ணீர் கோட்பாட்டின் எதிர்த்தாக்குதல
ை அந்தக் களத்திலேயே அறிமுகம் செய்தார். 'நந்திக்கடலின்' தண்ணீர் கோட்பாடு அப்போதே உருவாகி விட்டது.
எதிரிகளுக்கு படைத்துறை ஆலோசனை வழங்கிய அனைத்துலக சக்திகள் மிரண்டு போய் போரியல் விதிகளை மீறும் ஆலோசனைகளை வழங்கியதன் ( இராசயணக் குண்டு, கொத்தணி குண்டு, மக்களை தாறுமாறாகக் குறி வைத்தல், மக்களுக்கான மருத்துவ மற்றும் உணவு வழங்கல் பாதைகளை தடைசெய்தல் இன்ன பிற..) நிமித்தமே புலிகள் பின்னடைய நேரிட்டது.
ஆனால் வரலாற்றில் 'பிரபாகரனியம'; மற்றும் 'நந்திக்கடல்' கோட்பாடுகளை எதிரிகளே ஒரு நாள் புகழ்ந்து ஏற்றுக் கொள்ளும் நிலை வரும்.
இது இராணுவ பரிமாணம் சார்ந்த உதாரணம் மட்டுமே..
அரசியல், இராஜதந்திர, சமூக, பண்பாட்டு தளத்திலும் 'பிரபாகரனியம்' என்பது இந்த நூற்றாண்டின் ஒரு பிரளயம். அது இதுவரை கால மனித குல வரலாற்றின் ஒரு திருப்பம்.
அதை வரலாறு சான்றாக்கும்.
நிலைமை இப்படியிருக்க திமுக செம்புகள் 'பிரபாகரனை ஏற்க மாட்டோம'; என்று பிதற்றுவதை என்னவென்று சொல்வது?
~ Parani Krishnarajani ...
புலிகள் தந்திரம் கோட்பாடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக