சனி, 27 ஜனவரி, 2018

சித்தமருத்துவம் எயிட்ஸ் குணப்படுத்தியவர் மாணவர் நிலவேம்பு டெங்கு பிரச்சாரம்

aathi tamil aathi1956@gmail.com

19/10/17
பெறுநர்: எனக்கு
நிலவேம்பால் அலோபதிக்கு நேர்ந்த நில நடுக்கம் !!
-----------------------------------------------------------------------
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் ....சென்னை அரசு நெஞ்சக
மருத்துவமனையின் ( தாம்பரம் ) இயக்குனராக சிறப்பாக செயல்பட்டு வந்தார்
"மக்கள் மருத்துவர்" தெய்வநாயகம் . இவர் தலைமையில் தயாரிக்கப்பட்ட
"கூட்டு மருந்து" ( சித்தா +) அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று
வந்த எயிட்ஸ் மற்றும் காச நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு அவர்கள்
நோயிலிருந்து விடுபடத் தொடங்கினர். இச்செய்தி வெளிவந்த அடுத்த சில
நாள்களில் மருத்துவர் அய்யா தெய்வநாயகத்தை தமிழக அரசு இயக்குனர் பணியில்
இருந்து விடுவித்து விடுகிறது .
பின்னர் செஞ்சிலுவைச் சங்கத்தில் தன் மருத்துவப்பணியை சிறப்புடன்
செய்துவந்த தெய்வநாயகம் அய்யா இயற்கை எய்தினார்.
தற்போது டெங்கு எனும் கொல்லை நோயால் தமிழக மக்கள் கொத்துக்கொத்தாக
மடிந்து வருகின்றனர். முன்பு சிக்கன் கூனியாவைக் கட்டுப்படுத்திய
நிலவேம்பு தற்போது டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் பணியில் பெரும்
பங்காற்றி வருகிறது.
டெங்கு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வக்கில்லாத அலோபதி மருத்துவ
விஞ்ஞானிகள், மக்கள், நில வேம்பு மீதும் சித்த மருத்துவத்தின் மீதும்
வைக்கும் அளவற்ற நம்பிக்கையால் அதிர்ந்துப்போயு
ள்ளனர் .
விளைவு...ஊடகங்கள் மூலம் விஷமப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். "எந்த
ஆராய்ச்சியின் அடிப்படையில் மக்களுக்கு நில வேம்பு நன்னீர்
வழங்கப்படுகிறது? " என்று கேட்கும் அலோபதி மருத்துவர்களின் பின்னால்
பகாசுர அலோபதி மருந்து நிறுவனங்கள் உள்ளன.
முன்பு மருத்துவர் அய்யா தெய்வநாயகம் எப்படி எயிட்ஸ் நோயை தீர்க்கும்
வல்லமை சித்த மருத்துவத்துக்கு உண்டு என்று நிருபித்ததால்
அவமதிக்கப்பட்டாரோ , இன்று அவரது மாணவர் மருத்துவர் சிவராமன் நமது தமிழ்
மருத்துவமான நிலவேம்பு நன்னீரை உயர்த்திப்பிடிப்பதால் சில அலோபதி
மருத்துவர்களால் அவமானப்படுத்தப்படுகிறார். இதன் பின்னணியில் பண்ணாட்டு
நிறுவனங்கள் நிற்கின்றன.
நமது ஒரே கேள்வி....அலோபதி எனும் ஆங்கில மருத்துவத்தை இன்றைய
உலகச்சூழலில் நாம் முற்றிலும் புறக்கணித்து விட முடியாது. அவசர
சிகிச்சைக்கு அலோபதி அவசியம். ஆனால் , இதுவரை சிக்கன் கூனியா , டெங்கு
மற்றும் தற்போது பரவிவரும் பல மர்மக் காய்ச்சல்களுக்கு அலோபதியில்
மருந்தில்லை என அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். இன்நிலையில் அன்று சிக்கன்
கூனியா , இன்று டெங்கு நோயயை கட்டுப்படுத்தும் நமது நிலவேம்பை ஏன்
அவர்கள் கொச்சைப்படுத்துகிறார்கள் என்பது ஊரறிந்த ரகசியம்!
ஏற்கனவே மக்கள் இயற்கை உணவுகள் பக்கம் திரும்பியதுப்போல் , தமிழ்
மருத்துவம் பக்கமும் முற்றிலும் திரும்பி விடுவார்களோ என அலோபதி உலகம்
அஞ்சுகிறது.
இப்போதுதான் நீட் மூலம் அலோபதி மருத்துவத்தை அவர்கள் வசமாக்கி
இருக்கிறார்கள். நில வேம்பு அவர்கள் வயிற்றில் புளியைக்கரைக்கிறது.
திடீரென இன்று "ஒலக வியாபாரி" கமல் நிலவேம்புக்கு எதிராக குரல்
கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. அரசியலில் ஏற்கனவே அவரை பண்ணாட்டு
முதலைகள் இயக்குவதாக தகவல் கசிந்தது ( ஸ்டார் நிறுவனம் உட்பட ).
நம் மருத்துவர் தோழர் சிவராமனுக்கு துணை நிற்போம் மக்களே. நம் சித்த
மருத்துவத்தை உயர்த்திப்பிடிப்போம் !
# பகிருங்கள்
- தாகம் செங்குட்டுவன்

சித்தா மூலிகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக