புதன், 31 ஜனவரி, 2018

ஈவேரா அண்ணாதுரை ஆங்கிலேயர் அடிவருடி தமிழில் அர்ச்சனை நிறைவேற்றவில்லை 2

aathi tamil aathi1956@gmail.com

22/10/17
பெறுநர்: எனக்கு
உள்ளிட்ட தலைவர்கள் பற்றி கேட்டால், ‘…அவர்கள்..பிரிட்டிஷ் அரசுடன் இ..ன..க்..க..மா
..க’ இருந்தார்கள் என்று இழுத்துப் பேசுவார்கள்.
சரி, பெரியார் மட்டும் என்ன செய்தார்?
1944-ல் ஆகஸ்ட் மாதம் சேலத்தில் மாநாடு. அதில், “நீதிக் கட்சியை,
திராவிடர் கழகமாக” பெயர் மாற்றம் செய்ததை மட்டும் வரலாறு தோறும்
சொல்கிறார்கள். ஆனால் மறைக்கப் பட்ட ஒரு தீர்மானத்தை சொல்வதே இல்லை.
இருட்டடிப்பு. அந்த மாநாட்டில் என்ன தீர்மானம் போட்டார்?
அந்த தீர்மானத்தின் தலைப்பு,
“பெருமைதாங்கிய பிரிட்டிஷ் ராணியாருக்கு ஒரு வேண்டுகோள்.”! என்பது.
“மேன்மை தாங்கிய பிரிட்டிஷ் ராணியாருக்கு இந்த மாநாடு ஒரு வேண்டுகோளை
வைக்கின்றது. இந்தியாவிற்கு சுதந்திரம் தரப்போவதாக கேள்விப்படுகிறோம்.
நீங்கள் சுதந்திரம் தரக்கூடாது. தருவதென்று முடிவு செய்துவிட்டாலும்
சென்னை ராஜதானிக்கு நீங்கள் சுதந்திரத்தை தரவேக்கூடாது.
‘நாங்கள் என்றென்றும் மேன்மை தாங்கிய பிரட்டிஷ் ராணியின் ஆட்சியின் கீழ்
வாழவே விரும்புகிறோம்” என்று எழுதப்பட்டிருந்தது.
‘வராற்றுப் புகழ்’ மிக்க இந்த தீர்மானத்தை முன்மொழிந்து வாசித்தது
அண்ணாதுரை. (இதற்கும்- சுதந்திரத்தை கருப்பு தினம் என எதிர்த்ததற்கும்
ஒரு காரணத்தைச் சொன்னார்கள். அந்த காரணத்தை பின்னாளில் அதிகாரத்திற்கு
வந்த அவரின் தம்பிகளே ஏலம் போட்டு விட்டார்கள்)
அடுத்து, செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் வந்த ‘திராவிட நாடு’
பத்திரிகையில்., “சேலம் மாநாட்டில் சி.என். அண்ணாதுரையின் தீர்மானம்”
என்ற தலைப்பிட்டே மூன்று பக்கத்திற்கு மாநாட்டுச் செய்தி, தீர்மானம்
பற்றியும் எழுதியிருந்தார்கள்.
அயோத்திதாச பண்டிதரும், தாத்தா ரெட்டைமலை சீனிவாசனும் பிரிட்டிஷ்
சாம்ராஜ்யத்திற்கு சாமரம் வீசினார்கள் என்றால், “மேன்மை தாங்கிய
பிரட்டிஷ் ராணியின் ஆட்சியின் கீழ் வாழவே விரும்புகிறோம்” என்பதென்ன
பெரியாரின் கலகக்குரல் தீர்மானமா?
பின்னாளில் மறைக்கப்பட்ட அந்த தீர்மானம் பித்தலாட்டமா இல்லையா?
அடுத்து, தோழர் ஒருவர் எனக்கு ‘சாட்டையடி’ என்று ஒரு லிங்க் அனுப்பியிருந்தார்.
அதில், ‘1925-லேயே கோயில்களை எல்லாம் ‘அரசுடமை ஆக்கியது நீதிக்கட்சி.
முதல்வராக இருந்த பனகல் அரசர் அதை சாதித்தார். பார்ப்பனர்களின்
ஆதிக்கத்தில் இருந்த கோயில்களை அரசுடமையாக்கியத
ு எவ்வளவு பெரிய சாதனை! என்றார்.
நல்லது! அந்த ‘அரசுடமையாக்கப்பட்ட கோயில்களில் இருந்து பிராமணர்களை
விரட்டி விட்டீர்களா?
கோயில் நிலத்தை எல்லாம் பிரித்து, ‘இதுதான் சமூக நீதி’ என்று
தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பிரித்து
கொடுத்தார்களா? குறைந்த பட்சம், அந்த கோயில் நிர்வாகத்தில் மிகவும்
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ‘சுயமரியாதை இடம்’
கொடுக்கப்பட்டதா?
தேடினால் ஒரு ஆணியையும் காணவில்லை.
உடனே நாங்கள் 1971-லேயே ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கலாம்’ என்ற
சட்டத்தை இயற்றினோம் என்கிறார்கள். பெரியாருக்கு தொடர்பில்லாத கேரளாவில்
உடனே நடைமுறைக்கு வரும்போது, ‘பெரியார் மண்ணில்’ யார் தடுத்தது.
மூன்று சதவீதம் உள்ள பிராமனர்கள் தான் தடுத்தார்கள் என்றால், அதிகாரத்தை
வைத்து என்ன செய்தீர்கள்.?
‘ஒன்றுமே செய்ய முடியாத’ அதிகாரத்தை பெறவா, பெரியாரை கழட்டி விட்டுவிட்டு
தேர்தல் அரசியலுக்குள் ஓடினீர்கள். ஒன்றுமே செய்ய முடியாத அதிகாரத்தைப்
பெறாவா, ‘திராவிட நாடு கோரிக்கையை’யை அடகு வைத்தீர்கள்?
இருக்கட்டும், இவர்களின் ‘ஈயம் பூசின மாதிரியும்-பூசாத மாதிரியுமான
‘பெரியாரிய-திராவிட-சமூக நீதி’ கொள்கைக்கு வருவோம்.
நம், ‘தமிழ்க்குடி மகன்’ இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்தார்.
தமிழில் அர்ச்சனை செய்யாமல் ஓயமாட்டேன் என நாற்காலியில் உட்கார்ந்தார்.
பிறகு என்ன சொன்னார், “அது வந்து..தமிழில் அர்ச்சனை என்பதை மக்கள்தான்
விரும்பி கேட்கனும்’ என்று படுத்துக் கொண்டார்.
கோயில்களில் எல்லாம் “தமிழிலும்” அர்ச்சனை என எழுதப்பட்டிருந்ததை,
“தமிழில்’’ அர்ச்சனை என மாற்றிய ‘புரட்சி’யோடு நிறுத்திக் கொண்டார்கள்.
அதற்கு முன்பு சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை இருந்தது. தமிழில் அர்ச்சனை
வேண்டும் என கேட்பவர்கள், அதை ‘ரசீதில்’ கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்
என உத்தரவிட்டார்கள்.
அந்த நேரத்தில் மெய்க்கண்ட தேவன் என்ற அதிகாரி இந்து அறநிலையத்துறை
ஆணையராக இருந்தார். ‘தமிழில் அர்ச்சனை என்பது வழக்கமாக இருக்கட்டும்.
‘சமஸ்கிரதத்தில் அர்ச்சனை’ வேண்டும் என்பவர்கள் அதைக் குறிப்பிட்டுக்
கேட்டு வாங்கிக் கொள்ளட்டும் என வாய்மொழியான உத்தரவை போட்டார்.
இதைக் கண்டு கொதித்துப்போன செம்மங்குடி சீனிவாச அய்யங்கார் பிரமாணர்களை
திரட்டிக் கொண்டு நேராக முதல்வர் கருணாநிதியைப் போய் பார்த்து,
‘இதெல்லாம் தப்பு ஓய்’. சமஸ்கிரத அர்ச்சனைதான் மெயின். தமிழில் வேணும்னா
கேட்டு வாங்கிக்கொள்ளட்
டும். பழசை மாற்றாதீரும்” என முறையிட்டார்.
“இது பெரியாரின் பூமி. நாங்கள் பெரியாரின் பிள்ளைகள். தமிழ் எங்கள்
உயிருக்கு நேர் என்றெல்லாம் விஸ்வரூபமெடுத்து நின்றிருக்க வேண்டிய
கருணாநிதி அப்படியே குணிந்து கொண்டார். தலையை பத்தடி பள்ளத்தில் புதைத்து
வைத்துக் கொண்டார்.
இதான் ஈயம் பூசி மாதிரியும்- பூசாத மாதிரியுமான திராவிட கட்சிகளின்
பெரியாரிய கொள்கை.!
மற்றொரு ’ஈயம் பூசுன’ வேலையையும் கூறலாம்.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் நந்தன் போன போது எரித்து கொன்றுவிட்டு
சோதியில் கலந்து விட்டதாக, தீட்சிதர்கள் ‘புராணம்’ எழுதினார்கள். பிறகு
வந்த காலங்களில், வள்ளலார் சென்றபோது அவரை அடித்து துவைத்து தூக்கி
வெளியில் வீசினார்கள். அப்பாதெல்லாம் ‘பெரியார் புரட்சி’
மலர்ந்திருக்கவில்லை. தப்பு நடந்து விட்டது.
இப்போது பெரியாரின் மண்ணில், பெரியாரின் பிள்ளைகள் அதிகாரத்தில் இருக்கும் போது….
“ஆறுமுகசாமி என்ற ஓதுவார் அந்த கோயிலின் உள்ளே சென்றார்.
கர்ப்பகிரகத்திற்குள் தமிழில் அர்ச்சனை செய்வதற்காக அல்ல. கர்பகிரகத்தின்
எதிரே இருக்கும் மண்டபத்தில், தமிழில் ஓத வேண்டும் என்றுதான் கேட்டார்.
அவரையும் அடித்துத் தூக்கி வெளியே போட்டார்கள். உச்சநீதி மன்றம் வரை
மல்லுக்கட்டினார் ஆறுமுகசாமி. அவருக்கு பெரியார் வழிவந்த தமிழக அரசோ,
கோடி கோடியாய் நிதியை வைத்திருக்கும் ‘பெரியார் நிதி நிறுவனமோ’ உதவி
செய்யவில்லை.
மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்களும், ம.க.இ.க. தோழர்களும்தான் துணை
நின்றார்கள். வழக்கம்போல் பெரியாரிஸ்ட்டுகள் ‘அடையாள’ போராட்டத்தோடு
நின்றுகொண்டிருக
்கலாம். அது வேறு. இப்போது எது பித்தலாட்டம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இன்னொரு ‘யோக்கிய

அர்ச்சகர் தமிழ்மொழி கோயில் கோவில் கருணாநிதி பிராமணர் மிரட்டல் நீசபாசை
நீசபாஷை ஆறுமுகசாமி சிதம்பரம் தீட்சிதர் ஆலயநுழைவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக