சனி, 27 ஜனவரி, 2018

சீமான் மீது விமர்சனம் பிரிவினை எதிர்ப்பு இந்தியம்


aathi tamil aathi1956@gmail.com

20/10/17
பெறுநர்: எனக்கு
Mathi Vanan
"தமிழ்த்தேசியம் என்றால் இந்தியாவிலிருந்
து தமிழ்நாட்டை பிரிப்பது என நினைப்பவன் பைத்தியக்காரன். நம் நாடு
தமிழ்நாடு அல்ல, பாரத நாடே பைந்தமிழர் நாடு. தமிழ்நாடு என சொன்னால்
ஏற்கமுடியாது. மொத்த பாரத நாடும் என்னுடையது என சொல்ல வேண்டும்"
- சீமான்..
*******
1) அம்பேத்கர் சொல்வது, ஆரிய வந்தேறி இனக்குழு பரத குழு பேரால், பாரதம்
என இந்த பகுதி அழைக்கப்படுகிறது. அதனாலேயே பிராமணர்கள் இந்தியாவை பாரதம்
என அழைக்க துடிக்கிறார்கள். சீமான் இந்த வரலாறு தெரியாமல் பாரதம் பாரதம்
என பேசுவது ஏன்?
2) பாரத நாடு பைந்தமிழர் நாடு என்றால், அன்றைய பாரத நாட்டில்
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானும் அடங்கும். எனில் ஆப்கானிஸ்தானும்
பாகிஸ்தானும் தமிழர்நாடு என்பதா? தமிழ்நாட்டில் பாகிஸ்தானையும்
ஆப்கானிஸ்தானையும் சேர்ப்போம் என்பதா?
3) இந்தியாவில் தெலுங்கு மலையாள கன்னட மராத்தி வங்க குசராத்தி பீகாரி என
பல தேசிய இனங்களும் அதற்கான மாநிலங்களும் உருவான பின்னர், பாரத நாடே
தமிழனுக்கு சொந்தம் என பேசினால், தமிழனை விட அடிமுட்டாள் எவனாவது
இருப்பானா? அப்படிப்பட்ட முட்டாள்களைத்தான் சீமான் உருவாக்க போகிறாரா?
4) ஒருபுறம் இந்தியன் எவனுமில்லை, திராவிடன் எவனுமில்லை, தமிழனே அடையாளம்
என்றுவிட்டு, இன்னொரு புறம் வேலைக்கு உதவாத பாரத நாடே பைந்தமிழர் நாடு என
பேசினால், தெலுங்கன், கன்னடன், மலையாளி, இந்திக்காரன் எல்லாம்
தமிழனிலிருந்து பிரிந்தவர்கள், எல்லோரும் ஆதி தமிழர்களே என்றுவிட்டு
அரசியல் துறவறம் பூணலாமா?
தமிழ்நாடு, தமிழினம், தமிழ்த்தேசியம் எழுச்சி பெறும் வேளையில்,
தமிழினத்தின் தன்னுரிமை பேசாமல் பாரத நாடே பைந்தமிழர் நாடு என பிராமண
பனியாக்களின் காலில் தமிழ்த்தேசியத்த
ை கரைக்கும் கருத்தியலை பரப்புவது கொடுமை.
வரலாற்றில் பிரபாகரனின் தம்பியாக இடம்பெற வேண்டியவர்கள் கருணாவின்
தம்பியாக இடம் பெற்றுவிடக்கூடா
தென்பதே தமிழினத்தின் விருப்பம்..
https://youtu.be/BOescjmXDDU
2 மணி நேரம் · பொது

Tanggamani Sugumaran
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக் கோடு கொடுங்கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி
~இளங்கோவடிகள்
இளங்கோவடிகள் கூட RSSதான் மக்கா.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக