சனி, 27 ஜனவரி, 2018

வைக்கம் போராட்டம் ஈவேரா பெரிதாக பங்கு இல்லை

aathi tamil aathi1956@gmail.com

21/10/17
பெறுநர்: எனக்கு
திராவிட பொய்யும் புரட்டும் !!!!
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உழைத்தவரா இந்த ஈவே ரா ? "வைக்கம் வீரரா
ஈ.வெ.ராமசாமி (திராவிடப் பெரியார்)".???
இது தான் மிக மிக முக்கியமான செய்தி. ஏன் என்றால் - இந்த ஈவே ராமசாமியை,
தலித் மக்களை் மீட்டவர் போல இங்கே கடந்த 60-ஆண்டு திராவிட ஆட்சியில் ஒரு
மிக பெரிய பொய்யை மீண்டும் மீண்டும் கூறி,பள்ளிகூடங்களில் சொல்லி
கொடுக்கபட்டு உண்மை போல் ஆக்கிவிட்டனர். ஒரு Brand name போல இந்த
பெரியார் என்ற வார்த்தை சாதி ஒழிப்புக்கு பயன்படுகிறது. ஆனால் இது இந்த
நூற்றாண்டின் மிக பெரிய பொய். திட்டமிட்டு திராவிட கழக ஆட்சியர்களால் இது
தமிழக மக்கள் மத்தியில் பரப்பபடுகிறது.
தமிழ் , தலித் விடுதலை இரண்டுக்கும் அதிகம் இந்த ஈ.வெ.ரா கூட்டம்
கொண்டாடுவது அண்மையில் அதிகரித்துவிட்டது. இது ஒரு பொய்.
"வைக்கம் வீரர் பெரியார்".????
இது தான் ஈ.வெ.ராவைத் தூக்கி பிடித்து மக்களிடம் பள்ளிகளில் சொல்லி
கொடுக்கபட்டு இந்த ராமசாமியை சாதனையாளர் போல உயர்த்தி காட்ட உதவியது.
ஆனால் இது உலக மகா பொய்.
வைக்கம் போராட்டம் தான் தீண்டாமை ஒழிப்புக்கு மிக மிக முக்கியமான இந்திய
அளவில் பேசப்படும் போராட்டம்.வைக்கம் போராட்டம் - 1924ல் ஆரம்பம் ஆகி
1925ல் முடிந்த இந்த மொத்த போராட்டத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரை
நீங்கள் இந்திய அளவில் - கேரளாவின் PSC பள்ளி பாடத்திட்டத்தில் தேடுங்கள்
, அன்று வெளிவந்த அனைத்து பத்திரிகைகள் வரலாறுகள் என்று தேடி படிக்கவும்,
இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வு தயாராகும் மாணவர்களிடம் சென்று
"வைக்கம் சத்தியாகிரக" பற்றி கேளுங்கள், இந்திய அளவில் NCERT
பாடத்திட்டத்தில் தேடுங்கள் இந்த வரலாறு உண்மை முகம் தெரியும்.
கேரளாவில் வைக்கம் சென்று - அங்கே வைக்கம் வீரர் ஈவே ராமசாமி என்று
கூறினால் சிரிக்க மட்டும் அல்ல உங்கள் முகத்தில் காரி உமிழ்வார்கள். ஏன்
என்றால் இந்த வைக்கம் வீரர் ”தந்தை பெரியார்” என்ற கதை படிக்கும் ஒரே
மாநிலம் தமிழ் நாடு தான். மாநில பாடத்திட்டம் தங்கள் கையில் இருப்பதால்
திராவிட கழக ஆட்சியில் இந்த பொய்யான வரலாறு பள்ளிகளில் சேர்க்கபட்டு ,
மாணவர்களுக்கு தேர்வில் வருடம் வருடம் கேட்கப்படும் முக்கியமான கேள்வியாக
கேட்க பட்டு வம்படியாக திணிக்கபட்ட ஒரு பொய்யான வரலாறு.
இது சத்தியம். ஏன் என்றால் இந்த மொத்த போராட்டத்தை வடிவமைத்தவர் TK
மாதவன், K வேலப்பன்.வைக்கம் போராட்டம் உருவாக ஆதரவு திராட்டிய TK மாதவன்
அதற்காக குறைந்தது 3வருடம் மேலாக அனைவரையும் ஒன்றிணைத்தார் என்று வரலாறு
கூறுகிறது.
தீண்டாமை ஒழிப்புக்கு உருவாக்கபட்டு இந்த வைக்கம் போராட்டம் உருவாக்கபட்ட
போராட்ட அமைப்பில் உழைத்தவர்கள் நீலகண்ட நம்பூதிரி, கிருட்டிணசாமி
அய்யர், K வேலாயுதமேனன். இவர்கள் தான் முதலில் ஒடுக்கபட்ட மக்கள் நுழைய
கூடாது என்று கூறும் அனைத்து இடங்களிலும் நுழைவோம் என்று அனைத்து
கட்டுபாடுகளும் மீறுவோம் என்று அறிவித்தவர்கள்.
இந்த வைக்கம் போராட்டத்தில் தினமும் அந்த கோவில் சாலையில் ஒரு குழு
நுழைவது - கைதாவது என்று அமைதியான வழியில் போராட்டம் ஆரம்பம் ஆனது.
ஏறக்குறைய ஒரு வருடம் தொடர்ந்து விடாபிடியாக நடந்த போராட்டம் இது.
1924, மார்ச் மாதம் கொச்சாப்பி(Kunjappy), பாகுலேயன்(Bahuleyan),
கோவிந்தப்பணிக்கர்(Govinda Panicker) இந்த மூவரும் முதலில் கைதானவர்கள்.
இதில் கோவிந்தர் என்பவர் நாயர் சமூகத்தை சார்ந்தவர். இவருக்கு அந்த
சாலையில் செல்ல எந்த தடையும் இல்லை. ஆனால் இவர் மற்றவர்கள்
கூட்டிக்கொண்டு செல்வேன் இல்லை கைதாவேன் என்றாதால் சிறை சென்றார்.
இப்படி தினமும் கூட்டம் கூட்டமாக காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு
கைதானார்கள். அதில் அனைத்து பக்கம் இருந்தும் ஆதரவு தேடினர். அதில்
பின்னாளில் வந்து கலந்து கொண்டவர் தான் ஈவே ராமசாமி. இவருடைய பங்களிப்பு
என்று பெரிதாக எதுவும் கிடையாது. கைதாகும் குழுவில் இவரும் இருந்தார்.
மிக முக்கியம் ஈவே ராமசாமி இந்த போராட்டத்தில் காங்கிரசுக்காரராகத் தான்
கலந்து கொண்டார். காங்கிரசு அழைப்பின் பேரில். அந்த நேரத்தில் இவர் பெரிய
பிரபலமானவரும் அல்ல. ஏன் கூறுகிறேன் என்றால் இதை தங்கள் போராட்டம் போல
வாய்கிழிய மேடைகளில் பேசி பொய் பரப்பும் இந்த பெரியார் இயக்கம் அதாவது
திராவிட கழகம் வந்தது 1944ல்.
வைக்க போராட்டம் வெற்றிபெற காரணம் முழுக்க முழுக்க நாராயண குரு அவர்களின்
இயக்கமும் - TK மாதவன் , K வேலப்பன் போராட்டமும் - காந்தி அவர்களின்
முயற்சியும் தான் காரணமே தவிர வேறு யாரும் இல்லை.
போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து காங்கிரசுகாரர்களுக்கும் இது பெருமை
தரும் விசயமே. மாற்று கருத்து இல்லை. ஆனால் எவனாது நான் தான் காரணம் நான்
தான் காரணம் என்று கூறினாரா??? இல்லை. ஆனால் இந்த கேடு கேட்ட ஈ.வெ.ரா
இயக்கம் மட்டும் வெக்கமே இல்லாமல் நாங்க தான் நடத்தினோம் என்று
இன்னொருவர் நடத்தி வெற்றி பெற்ற போராட்டத்தின் வரலாற்றில் தங்கள் Label
ஒட்டும் வேலையை செய்வதுக்கு இவர்களுக்கு வெட்கம் வேண்டாமா?
ஆனால் தமிழ் நாட்டில் முக்கியமாக state board படிக்கும் மாணவர்கள் என்ன
சொல்லி கொடுக்கபடுகிறது????இப்படி தவறான வரலாற்றை திரித்து - மாணவர்களை
படிக்க வைத்து - ஊர் ஊருக்கு பெரியார் பஸ் நிலையம் என்று பெயர் வச்சு ,
சிலையை நட்டு வச்சு தான் இந்த பெரியார் தலித் மக்கள் பிரதிநிதி போல
உருவகம் செய்யபட்டார் தவிர உண்மை கிடையாது.
இதை நான் உங்கள் தேடலுக்கே விட்டு விடுகிறேன்.
மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் முயற்சியில் இலவச உணவு கொடுத்து
மாணவர்களை கல்விநிலையங்களுக்கு வரவைத்து படிக்க வச்சு - அவர்களை இலவச
மதிய உணவு திட்டத்தில் ஒன்றாக உக்கார வச்சு சாதியை ஒழித்து சமபந்தி
நடத்தி காட்டி- புத்திசாலித்தனமாக மக்களை இணைத்தவர் காமராசர் தானே தவிர
இந்த திராவிட கூட்டம் அல்ல.
1924ல் TK மாதவன் , கேலப்பன் , கிருஷ்ணய்யர் , நாராயண குரு என்று
முன்வைத்த வைக்கம் போராட்டம் ; 1927ல் அம்பேத்கார் முன்வைத்த சவ்தார்
குளத்தில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்கும் போராட்டம்;
இது போல ஒன்றை இங்கே பெரியார் என்ற ஈவே ராமசாமி நாட்டை உழுக்கும்
அளவுக்கு நடத்தினார் என்று சொல்லுங்கள்? எனக்கு தெரிந்து தாலி அறுப்பது ,
சும்மா போறவர பிராமணனை பிடிச்சு அடிப்பது, பூணல் அறுப்பது , பிள்ளையார்
சிலையை மிதிப்பது , சரசுவதி கடவுள் சிலையை வைத்து வக்கிரமாக பேசுவது இது
தான் இவர்களின் சீர்திருத்த பகுத்தறிவுப் போராட்டங்கள்.
இன்னும் சொல்வதானல் 1995ல் கூட அதாவது பாருங்க திராவிட ஆட்சியர்கள் ஆண்ட
45வருடம் தாண்டியும் கூட இங்கே தீண்டாமை அப்படியே தான் இருந்தது. இல்லையே
என்று எவனாது சொல்வானா???
{wikipediaல் சமிபத்தில் ஒரு 3ஆண்டுகள் முன் தான் periyar movement என்று
vaikom satyagraha என்ற தலைப்பில் கீழ் சேர்த்துவிட்டனர் இந்த
வெக்கங்கெட்ட கூட்டம். இது யார்? புதிதாக ?என்று எல்லோருமே கேட்டுக்கொண்ட
நேரம். இன்றுவரை அதை நீக்கினால் சேர்பதற்கு என்று ஒரு டீம் வச்சு வேலை
செய்கிறார்கள் பெரியார் பகுத்தறிவு கூட்டங்கள். அந்த அளவு வைக்கம் உண்மை
எங்கே தெரிந்து விடுமோ என்று பயந்து திரிகிறது இந்த கூட்டம்.
விக்கிபிடியவில் அந்த periyaar movement பதிவை அப்போ அப்போ நீக்குவது
யார் என்று சிலர் கேட்பது புரிகிறது. அது அடியேன் மாரிதாசு(ஸ்) தான்.
ஆனால் முழுமையாக நீக்க முடிவது இல்லை. நானும் சரி போறானுக ,கேவலமா
விளம்பரம் தேடும் அவனு புத்தி திருந்தாது என்று விட்டுவிட்டேன்.}
எனவே இப்படி தமிழ் மொழிக்கோ , தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்துக்கோ ,
தலித் மக்கள் வாழ்வுக்கோ காரணமே இல்லாத ஈவே ராமசாமியை வச்சு "இது
பெரியார் மண் என்று கூறினால்" கேட்கும் நீங்கள் என்ன முட்டாளா?
நீதிகட்சியோட சமீன்தார்கள் சொத்து 1இலட்சம் கோடி இருக்கிறது , அதை
வச்சுட்டு என்ன செய்வானுக பாவம். அதான் எதையாது கத்திகிட்டு திரியுறானுக
அவ்வளவு தான்.
"பெரியார் மண் என்று கற்பித்தவன் முட்டாள் ;
பெரியார் மண் என்று பரப்புபவன் அயோக்கியன்;
பெரியார் மண் என்று நம்புபவன் ஒரு வரலாறு தெரியாத வெகுளி"
Courtesy : Maridhas

பட்டியல்சாதி தலித் தாழ்த்தப்பட்டோர் ஈ.வே.ரா பொய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக