புதன், 31 ஜனவரி, 2018

பர்மா பிலிகான் தமிழர் கிராமம் கோவில் இனப்பற்று பண்பாடு கலாச்சாரம் புலம்பெயர் கள்ளர்

aathi tamil aathi1956@gmail.com

22/10/17
பெறுநர்: எனக்கு
சாரதா தேவி , 7 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
இதுதான் பிலிகான் கோயில்
மலேசியா முருகன் கோயில் போல பர்மா தமிழர்களோட அடையாளம்னே சொல்லலாம்
இக்கோயிலை , பல வருடங்கள் பழமையான தமிழர் வழிப்பாடு குலதெய்வ கோயில் இது
,
பர்மாவில் அழகான ,செழிப்பான ஒரு விவசாய கிராம் தான் 'பிலிகான்" ,90%
தமிழர்கள் வாழும் கிராமம் இது , விவசாயம் தான் மூலத்தொழில்
இங்கு மின்சாரம் இல்ல. குழந்தைகள் படிக்க அரசு பள்ளிக்கூடம் இல்ல , ஆனா
சுய முயற்சி தமிழ் பள்ளி உண்டு
குழந்தைகள் முதல் பெரியவங்கவரை துளியும் பிறமொழி கலப்பின்றி அழகான தமிழ் பேசுவாங்க
" கோயிலை பற்றி சில சிறப்புகள் "
- முணியான்டி கோயில் தமிழர்த்திரு " பெ.ந.குப்புசாமி கடாரத் தலைவர் "
அவர்களால் 1862 ஆண்டில் கட்டப்பட்டது
- அங்காளம்மன் கோயில் தமிழர்த்திரு " இருளாண்டி மழவராயர் " அவர்களால்
கட்டப்பட்டது ,
- முணியான்டி - அங்காளம்மன் என இரு கோயில்களும் அருகாமையிலே உள்ளனர்
- வருடத்தோரும் ஒரே நாளில் இரு கோயிலுக்கும் திருவிழா நடக்கும் , 1000
திற்கும் மேற்பட்டோர் அம்மனுக்கு பூக்குழி இறங்குவாங்க
- தமிழர்கள் மட்டுமின்றி பர்மா ,சீனர் போன்ற பிற இனத்தாரும் , பர்மா அரசு
அமைச்சர்கள்வரை பெரிதும் நம்பிக்கையோடு வணஙங்குவாங்க, பூக் குழி
இறங்குவாங்க , ஐயா வுக்கு பலிக்கொடுத்து வழிப்படுவாங்க , நம்பிக்கையோடு
கேட்டால் வேண்டுதல்கள் கண்டிப்பா நிறைவேறும் என பேர்போகும் தெயவம் இது
- திருவழா 10 நாட்கள் நடைப்பெறும், பர்மா தமிழர்கள் எங்கே வாழ்ந்தாலும்
ஒன்னு கூடிடுவோம் ,குட்டி தமிழ் நாட்டை அப்போது காணலாம் ,
- 365 நாளும் நீங்க எப்ப போனாலும் தலைவாழ இலைப்போட்டு உபசரிப்பாங்க , அது
இரவு 2 மணியானாலும் சரி , அந்த கிராமத்துக்கு போனாலே அவங்க கேட்கும்
முதல் கேள்வி " சாப்பிடீங்களா? மொதல கை கழுவுங்க ,சாப்பிட்ட பிறகு
பேசலாம் " இதுதான்
- ஒரே வரில சொல்லனும்னா பழங்கால தமிழரை நீங்க அங்கே காணலாம்
- தைமாசமானா பொங்கலை பெரிய விழாவா கொண்டாடுவாங்க , குறிப்பா மஞ்சவிரட்டு
சிறப்பாக நடக்கும்
-கோயில் சார்பா எங்கேயும் சென்று யாரிடமும் நன்கொடை வாங்கமாட்டாங்க
,விருப்பமுள்ளவர்கள் கோயில் உண்டியில் போடலாம்,அம்புட்டுதான்
- தமிழகத்தில் இருந்தோ வெளி நாட்டு தமிழர் யாரேனும் வந்தார் கிராமவாசிகள்
விரும்பி கேட்பது ஒன்னே ஒன்னுதான்
" படிக்க தமிழ் புத்தகம் எதும் இருந்தால் கொடுத்துட்டு போங்க, நீங்க
படித்து முடித்த பழைய புத்தகமானாலும் பரவாயில்லை "
இதுதான் பிலிகான் கோயிலும் கிராமம் வாழ் தமிழர்கள் பற்றிய சிறு தகவல்
தொடரும்.....

Bee Palan
பிலிகானில் தீ மிதிப்புதான் விஷேசமாக நடக்குமாம். அந்த காலத்தில்
செட்டியார்கள் கட்டியதாக சொல்வார்கள்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 4 மணி நேரம் முன்பு
சாரதா தேவி
இல்ல அண்ணா , கள்ளர் இனக்குழுவினர் கட்டியது , பிலிக்கான் கிராமமே கள்ளர்
மக்கள்தான் அதிகம் , கோயில் கட்டியவர் "குப்புசாமி கடாரத்தலைவர்" &
இருளாண்டி மழவராயர் , இவரோட கொள்ளு பேத்தியதான் என் சொந்த அண்ணணுக்கு
கட்டிருக்கோம்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 4 மணி நேரம் முன்பு
Bee Palan பதிலளித்தார் · 1 பதில்
Winston Thangaraja
நான் 1999ல் மொலமியன் போகும்வழியில் ஒரு உயரமான குன்றில் ஒரு பழைய
முருகன் கோயில் பார்த்தேன். கவனிப்பார் அற்றுக் கிடந்தது. 1960 நீவின்
அக்கிரமத்தின் பின் தமிழர்கள் இங்கிருந்து இடம் பெயர்ந்து சென்று
விட்டார்களா?

சாரதா தேவி
தொலைக்காட்சி இல்ல , செய்தி தாள் இருக்கு , சாதி உண்டு ,சாதி வெறி
கொலைகள் ,சாதி கலவரங்கள் இல்ல, ஏன்னா தூண்டிவிட ஆரியனுமில்ல
,திராவிடனுமில்ல

Tamilamudhan Amudhan
பராசக்தி படத்தில் பர்மா கலவரம் பார்த்திருக்கிறேன். மீண்டும் அதற்கான
சூழல் வராமல் தடுப்பு நடவடிக்கை என்ன எடுத்திருக்கிறார்கள்.

Tamilamudhan Amudhan
நீங்க பள்ளிக்கூடம் ஆரம்பிங்க புத்தகங்கள் உங்கள் விலாசம் தேடி வரும்.

Dhanabal Murugesan
பா்மாவில் தமிழர்களின் மக்கள் தொகை தற்பொழது
எவ்வளவு இருக்கும்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · இன்று, 10:51 AM க்கு
சாரதா தேவி
சரியான கனக்கெடுப்பு இன்னும் இல்ல சகோ , குத்துமதிப்பா 15-20 லட்சம் இருக்கும்

புலத்தமிழர் பர்மிய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக