வெள்ளி, 20 செப்டம்பர், 2019

பள்ளி கல்லூரி சிறை தனியார் வசம் நிதி ஆயோக்

aathi1956 aathi1956@gmail.com

வியா., 5 ஜூலை, 2018, பிற்பகல் 11:04
பெறுநர்: எனக்கு
மத்திய அரசாங்க அமைப்பின் ஒன்றாகிய "நிதி ஆயோக் " எனும் அமைப்பு கூறும் இந்த அறிவுரையில் , "இனி எல்லா சேவைகளும் தனியாரே செம்மையாக வழங்குவதால், மக்கள் இனி அரசாங்கத்திற்கு வரி செலுத்துவதற்கு பதில்  தனியாருக்கே செலுத்திக்கொள்ளலாம் " என ஏன் கூறுவதில்லை ?

அட ஆளும் அயோக்கியர்களே ...

தனது வருமானத்தின் மூலம்

தனியொரு இந்திய குடிமகன் ரோடு போட முடியாது ...

தான் நடக்க / தனது வாகனத்தில் பயணிக்க தனக்கான சாலையை தானே  போட முடியாது...

தன் வாரிசுகள் படிக்க தனியாக ஒரு பள்ளி / கல்லூரிகள் கட்டி தனியாக ஆசிரியரை நியமித்து ஊதியம் வழங்கி படிக்க வைக்க முடியாது ...

தனக்கான மருத்துவ சிகிச்சைக்கு தனி மருத்துவமனை கட்டி அதில மருத்துவரை நியமித்து ஊதியம் வழங்கி சிகிச்சை பெற முடியாது ...

தன குடும்ப தேவைக்கு குடிநீர் பெற ஆற்றிலிருந்து கிணறுலிருந்து தனியாக குழாய் பதித்து கொண்டு வந்து பயன்படுத்திக்கொள்ள முடியாது...

என்பதாலேயே தானே , இந்திய அரசுக்கு வரி செலுத்தி அதன் மூலம் பிரதமர்/முதலமைச்சர் என ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சர்கள் , செயல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் , மாவட்ட/வட்ட அதிகாரிகள் நியமித்து அதன் மூலம் தனக்கான சேவையை பெற தானே இந்த கட்டமைப்பை உருவாக்க பட்டது.

*இதில் நீங்கள் மேற்கண்ட சேவையினை நீங்கள் உங்கள் துறை மூலம் செம்மையாக பணியாற்றி சேவையை மக்களுக்கு வழங்க முடியாவிட்டால், என்ன கூந்தலுக்கு நீங்கள் பதவியில் இருக்கிறீர்கள் ?* *தரகர் வேலை பார்க்கவா உங்களுக்கு வெட்டி தண்டமாக வரியும் சம்பளமும் உங்களுக்கு கொடுக்குறோம் ?*



https://www.timenew.in/1011349-2/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக