வெள்ளி, 20 செப்டம்பர், 2019

கலிங்கம் சோழர் ஆட்சி பூரி கோவில் ஈழம் படையெடுப்பு கலிங்கமாகன் தமிழனே பௌத்தம் சைவம்

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்செவ்., 3 ஜூலை, 2018, முற்பகல் 9:26
பெறுநர்: எனக்கு
Logan K Nathan
தமிழ் சோழ மன்னன் அனந்தவர்மன் சோழ கங்கன் கட்டிய பூரி ஜகந்நாதர் ஆலயம். சைவ சோழனான இவனை இராமானுஜர் வைணவத்திற்கு மாற்றினார்.
இன்றைய கலிங்கமான ஒரிசாவில் தமிழ் கல்வெட்டுகள் அதிகமாக கிடைக்கின்றன என்றும், தமிழ் நாட்டுக்கு நிகராக அதிகமாக கல்வெட்டு கிடைக்கிறது என்றும், அதற்கான காரணம் கலிங்கத்துக்கும் சோழர்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு தான் என்றும் கூறுகின்றனர்.
.1015-இல் எழுதப்பட்ட கங்கை கொண்ட இராஜேந்திர சோழ தேவரின் மெய்கீர்த்திகளில் தன் மகன்களில் ஒருவனை சோழபாண்டியன் என்று பாண்டிய நாட்டிலும், சோழ இலங்கேஸ்வரன் என்று ஒருவனை இலங்கையிலும், சோழகங்கன் என்னும் ஒருவனை கலிங்க நாட்டிலும், சோழ வல்லபன்,சோழ குச்சிராயன் என கூர்சரத்திலும் அமர்த்தியதாக தெரிவிக்கின்றது.
இராஜேந்திர சோழ தேவரின் கலிங்க படையெடுப்பில் நடந்தது என்ன?
வீர ராஜேந்திர சோழ தேவருக்கு பிறகு இராஜேந்திர சோழரின் மகளான அம்மங்கை மற்றும் வேங்கி இளவரசன் நரேந்திரனுக்கும் பிறந்த சளுக்க சோழன் குலோத்துங்க சளுக்கனே பிற்கால சோழனாக முடிசூடினான்.
நம் தமிழ் நாட்டு வரலாறுகள் ஓரளவு திறந்த மனப்பான்மையுடையவை. அதாவது வீரராஜேந்திர சோழனோடு தமிழ் சோழ வம்சம் முடிந்து சளுக்க சோழ வம்சம் தமிழ் நாட்டின் ஆட்சி பொறுப்பேற்றது என நிஜத்தை எழுதி வைத்துள்ளனர்.
ஆணால் கலிங்க நாட்டு ஆய்வாளர்கள் உண்மையை இன்னும் முழுவதுமாக அம்பலப்படுத்தாமல் கங்க-சோழ வாரிசாக இன்னும் கூறி வருகின்றனர்.
கலிங்க மன்னனை வீழ்த்தி, சோழ கங்கன் என்ற தன் மகனை அரியாசனத்தில் அமர்த்தினான் என உள்ளது. எனவே இராஜேந்திர சோழரின் காலத்துக்கு பின்னே கலிங்கத்தை ஆண்டது கங்கர் வம்சமல்ல. சோழர் வம்சமே கலிங்கத்தை ஆண்டது.
வர்மன் என்ற பெயர் கொண்ட கீழை கங்கரின் பட்டங்கள் தேவர் என மாறியது.
இந்திரவர்மன்,குணவர்மன் ,ஜெயவர்மன் என்று பெயர் கொண்ட கீழை கங்கரின் வம்சத்தினர் பெயர்கள் இராஜேந்திர சோழ தேவரின் படை எடுப்புக்கு பின் தேவர் என்னும் பெயர் மாற என்ன காரணம்.
இதை கீழை கங்கர் மன்னர்களின் பட்டியலில் தெளிவாக பார்க்கலாம்.
Eastern Ganga Dynasty[edit]
Narasimhadeva I built the Konark temple
Indravarman I is earliest known king of the dynasty. He is known from the Jirjingi copper plate grant.[8][15]
Indravarman I (c. ?-537?)[8]
Samantavarman (c. 537-562)
Hastivarman (c. 562-578)
Indravarman II (c. 578-589)
Danarnava (c. 589-652)
Indravarman III (c. 589-652)
Gunarnava (c. 652-682)
Devendravarman I (c. 652-682?)
Anantavarman III (c. 808-812?)
Rajendravarman II (c. 812-840?)
Devendravarman V (c. 885-895?)
Gunamaharnava I (c. 895-939?)
Vajrahasta II (or Anangabhimadeva I) (c. 895-939?)
Gundama – (c. 939-942)
Kamarnava I (c. 942-977)
Vinayaditya (c. 977-980)
Vajrahasta IV (c .980-1015)
Kamarnava II (c. 1015-6 months after)
Gundama II (c. 1015-1038)
Vajrahasta V (c. 1038-1070)
கீழை கங்கரின் வம்சாவளிகளின் பெயர்கள் இராஜேந்திர சோழரின் படையெடுப்பிற்கு
வர்மன் என்னும் பெயர் முதலாம் இராஜ இராஜ தேவர், அனந்தவர்ம சோழ கங்க தேவர்,சடேஸ்வர தேவர்,மூன்றாம் இராஜ இராஜ தேவர் என பெயர் மாற்றம் ஏற்பட்டது.
கீழை கங்கரின் கடைசி மன்னனான வஜ்ரஹஸ்தன் என்னும் மன்னனை கொன்று அவனுக்கு பதில் தன் மகனை சோழ கங்கன் இராஜ இராஜ தேவன் என்பவனை கலிங்க அரியானத்தில் ஏற்றினான் என்றே வரலாறு கூறுகின்றது.
இதிலிருந்து கங்கர் பரம்பரை அழிந்து சோழர் பரம்பரை கலிங்கத்தை ஆண்டது என்று.
Rajaraja I (c. 1070-1077)
Anantavarman Codaganga (c. 1077-1147)
Jatesvaradeva (c. 1147-1156)
Raghavadeva (c. 1156-1170)
Rajaraja III (c. 1170-1190)
Anangabhimadeva II (c. 1190-1198)
Rajradeva III (c. 1198-1211)
Anangabhimadeva III (c. 1211-1238)
Narasimhadeva I (1238-1264)
Bhanudeva I (1264-1278)
Narasimhadeva II (1279-1306)
Bhanudeva II (1306-1328)
Narasimhadeva III (1328-1352)
Bhanudeva III (1352-1378)
Narasimhadeva IV (1378-1414)
Bhanudeva IV (1414-1434)
தஞ்சை பெருவுடையார் கோயிலின் சாயலில் கோனார்க் சூரிய கோவில்:
சரியாக முதலாம் இராஜ இராஜனான சோழ கங்க தேவனுக்கு பின் அரசு கட்டிலில் ஏறியவன் அனந்தவர்ம சோழகங்க தேவன். இவன் சோழ கங்கன் இராஜ இராஜ தேவரின் மகனாவான். இவனே தஞ்சையில் உள்ள பெருவுடையார் கோவிலின் சாயலில் கோனார்க் சூரிய கோவிலையும், பூரி ஜெகன்நாதர் கோவிலையும் கட்டினான். தமிழ் மன்னன் அனந்தவர்மன் சோழ கங்கன், (சாளுக்கிய) குலோத்துங்க சோழ மன்னன் மகள் இராஜ சுந்தரியை திருமணம் செய்து கொண்டான்.
அனந்தவர்ம சோழ கங்க தேவன் குறிப்பு:
அனந்தவர்ம சோழ கங்கனை ஒரிசாவின் ஆராய்ச்சியாளர்கள் நேரடி கங்கர் வம்சத்தில் வந்தவன் அல்ல என்றே இன்னும் விமர்சித்து வருகின்றனர். இவரின் காலத்தில் தமிழக மக்களும் நிறையே பேர் கலிங்கத்தில் குடி பெயர்ந்தனர்.
இந்த சோழ கங்க தேவன் தான் யாழ்பாணத்தில் உள்ள கோனேசர் கோவிலை கட்டியது இது கோனார்க் சூரியேஸ்வரர் கோவிலின் சாயலை ஒட்டியது. பிற்கால சோழ கங்கரின் வம்சம் யாழ்பாணத்தில் தொடர்ந்தது.
இன்னொன்று முக்கியமான விசயம் என்னவென்றால் சோழ கங்க தேவன் குலோத்துங்க சோழனை போல் மகள் வழி சோழன் அல்ல சோழரின் ஆண் வழி வாரிசு. இவனது வம்சத்தை சேர்ந்த பீம தேவன் என்பவனை எதிர்த்து தான் குலோத்துங்கன் கலிங்கத்தின் மீது போர் தொடுத்தான் என்றும் கூறுவர்.
கலிங்க மாகன் வருகை:
ஏலேல சிங்கன் என்னும் தமிழ் மறவனது காலத்துக்கு பின்னே சிங்கள மக்கள் கண்ட மிகப்பெரிய பேரழிவு கலிங்க மாகன் காலத்தில் தான். கலிங்க மாகனின் வருகை ஏன் என இன்னும் பலருக்கு புரியவில்லை. காரணம் கலிங்க தேசமும் அதன் கிழக்கு தேசங்களிலும் “பௌத்தம்” மதத்துக்கே முக்கியத்துவம் இருந்துள்ளது அப்படியிருக்க கலிங்க மாகன் இடித்து தள்ளிய புத்த விகாரங்களும் மிகப்பெரிய புத்தகோவிலும் ஏராளம். சிங்களர்கள் கலிங்க மாகனை “பௌத்தத்தை அழிக்க வந்த பேய்” என வர்ணிக்கிறது மகாவம்சம்.
கலிங்க மாகனது காலத்தில் தான் சைவ,வைனவ கோவில்கள் நிறைய கட்டப்பட்டன. திரிகோண மலை சிவன் கோவிலும்,கோனேசர் கோவிலும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று கட்டப்பட்டது. கலிங்க மாகன் என்பதற்கு “கலிங்க பேரரரசன்” என்பது ஒரு பொருளாகும். கலிங்க மாகனது கல்வெட்டும் சாசனங்களும் தமிழிலே இருந்துள்ளது. கலிங்க மாகனின் துணை அரசன் “செயபாகுதேவன்” என்பவன் “சோழ கங்கன்” என்பதே பின்னாளைய தெளிவு. கலிங்க மாகன் காலத்திலும் இராஜேந்திர சோழனின் வம்சமான “இராஜ இராஜ சோழ கங்கன்” காலத்திலும் கலிங்கத்திலும் தமிழே வழக்கு மொழியாகவும் கல்வெட்டு மொழியாகவும் இருந்துள்ளது.
கலிங்க மாகன் 20000 கலிங்க நாட்டு படையுடனும் தமிழ் நாட்டிலே திரட்டிய பெரும்படையுடனே இலங்கையை வென்று 40 ஆண்டு காலம் ஆட்சி செய்தான். அவ்வளவு பெரிய படையுடன் வந்த கலிங்க மாகன் தமிழகத்தின் மீது ஏன் படையெடுக்கவில்லை இலங்கை மீது ஏன் வன்மம்? சைவ சமயத்தை பரப்ப ஏன் முனைய வேண்டும் என்று பார்க்கும் போது. கலிங்க மாகனையும் ஆதி தமிழான “சோழ கங்கன்” பரம்பரையை சார்ந்தவன் என கருதலாம். இதை மகாவம்சம் “கலிங்க மாகன் மற்றும் ஜெயபாகுதேவன்” இருவரையும் தமிழ் அரசர்கள் என்கிறது.

Anilkumar Reddy
இலங்கை சென்றது தமிழக நீலகங்கரையர்கள். ஒரிசாவின் கங்கர்கள் கோப்பெருஞ்சிங்கனுக்கு துணையாக காஞ்சிபுரத்தில் இருந்த தகவல் உள்ளது. பூரி ஜகன்னாதரின் கிரீடம் காடக கீரிடம் என்றும் காஞ்சிபுரத்தில் இருந்து சோழகங்கர்கள் வெற்றி பெற்று கொண்டு வந்ததாக தளவரலாறு கூறுகிறது.

Logan K Nathan
பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் காஞ்சி கணபதி என்று தனி ஆலயமும் உள்ளது.

Logan K Nathan
தவறு. கல்வெட்டுகள் ஸ்வஸ்திஸ்ரீ இராஜராஜ சோழ தேவற்கு.... ஸ்ரீ விக்ரம குலோத்துங்க சோழ தேவற்கு... என்றுதான் தொடங்குகின்றன.

Muthuraja M K
ஒரிசா பாடப்புத்தகத்திலே தமிழ் அரசகுடும்ம் என எழூதியுள்ளனர்.

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2017/
03/75-2.html?m=1
அசோகர் கால தமிழகம் ஒரிசா வரை காரவேலன் மொழிதிரிந்த பகுதியும் தமிழர் கட்டுப்பாட்டில் சிலப்பத

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2017/
04/500.html?m=0
ஒரிசா தமிழர் தொடர்பு கலிங்கம் பாலு ஒடியா 500 வேர்ச்சொல் பள்ளர் பாணர்

Aathimoola Perumal Prakash
ஐயாவின் கவனத்திற்கு Orissa Balu


ஒரிசா ஒரிஸா கலிங்கம் பூரி கோவில் அதிகாரத்தில் கோயில் தொடர்பு 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக