வெள்ளி, 20 செப்டம்பர், 2019

நெபுரு கரோஷிமா திராவிடம் எதிர்ப்பு தமிழார்வலர் தமிழறிஞர் ஜப்பான்

aathi tamil aathi1956@gmail.com

செவ்., 10 ஜூலை, 2018, பிற்பகல் 4:41
பெறுநர்: எனக்கு

நொபுரு கராஷிமா: தமிழ், கல்வெட்டு, செம்மொழி மாநாடு, திராவிட இயக்கம்

நொபுரு கராஷிமா: தமிழ், கல்வெட்டு, செம்மொழி மாநாடு, திராவிட இயக்கம்
தமிழகத்தில் ஆராய்ச்சி செய்த ஜப்பானியர்: ஜப்பானைச் சேர்ந்த நொபுரு கராஷிமா எனும் தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். 80 வயதாகும் நொபுரு கராஷிமா, தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ் ஆய்வுகள் மேற்கொண்டவர். பின்னர் தமிழ்மொழி மீது கொண்ட ஆர்வம் காரணமாக சென்னை வந்து, சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியின் வரலாறு, கல்வெட்டுகள் பற்றி ஆராய்ந்தார்[1]. சரளமாக தமிழ் மொழியில் பேசக் கூடியவர். 1964-ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கல்விப் பணியைத் தொடங்கிய நொபுரூ கராஷிமா, 1974-ஆம் ஆண்டில் தெற்காசிய வரலாற்றுத் துறையின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்று 20 ஆண்டுகள் பணியாற்றியவர். இப்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராக உள்ளார்.
நொபுருகராஷிமாவிற்கு ஜப்பானிலேயே பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது: இவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை (28-05-2013) பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார். இவ்வாண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உடல் நிலை காரணமாக, புது தில்லியில் ஏப்ரல் மாதம் (05-04-2013) நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை[2]. இந்நிலையில், மூன்று நாள் பயணமாக ஜப்பான் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் பத்மஸ்ரீ விருதை நொபுரு கராஷிமாவுக்கு வழங்கினார். டோக்கியோவில் செயல்படும் ஜப்பான்-இந்தியா நட்புறவு பரிமாற்ற கவுன்சில் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் நொபுரு கராஷிமாவுக்கு பத்மஸ்ரீ விருதை பிரதமர் வழங்கி கௌரவித்தார். முன்பு செந்தமிழ் மாநாட்டுப் பிரச்சினையிலும், வயதாகி விட்டது என்று ஒதுங்கிக் கொண்டார். ஒருவேளை, இப்பொழுதும், அரசியலில் தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தாரோ என்னமோ அதே காரணம் சொல்லித் தவிர்த்து விட்டார். பிரணாப் முகர்ஜியும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
1995லிருந்து 14 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த, உலகத் தமிழ் மாநாடு: 1995ற்குப் பிறகு, முக்கியமாக இலங்கைப் பிரச்சினையால், தமிழர்களின் ஆத்ரவு சரியானமுறையில் இல்லாததாலும், யாரும் முன்வந்து நடத்த வராதலாலும், தள்ளிப்போடப் பட்டது. 1981 மற்றும் 1995 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது, கருணாநிதி அதை புறக்கணித்துள்ளார்[3]. இதனால், ஜெயலலிதா அவருக்கு அம்மாந்நாட்டை நடத்தவே தகுதியில்லை என்று விமர்சித்தார். 1995லிருந்து 14 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த, உலகத் தமிழ் மாநாடு நடத்துவேன் என்று திடீரென்று கருணாநிதி பிடிவாதம் பிடித்து ஆரம்பித்தார், ஆனால், அதற்கு ஒப்புதல் இல்லை என்பதனை, முன்னர் எட்டு “உலகத் தமிழ் மாநாடுகளை” நடத்திய[4], நொபுரு கராஷிமா எடுத்துக் காட்டினார்[5].அதுமட்டுமல்லாது, பிறகு ஒப்புதல் அளிக்கவும் மறுத்தார்[6]. ஐராவதம் மஹாதேவன், சுப்பராயலு போன்றோரை வைத்து சமாதானம் செய்ய கருணாநிதி முயன்றார், ஆனால், அவர் ஒப்புக் கொள்ளாவில்லை[7]. மாறாக விலகிக் கொண்டார்[8]. இளைஞர்கள் இணைந்து வேலை செய்யட்டும், எனக்கு வயதாகி விட்டது என்று ஒதுங்கிக் கொண்டார்.
உலகத் தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடாக மாற்றப்பட்டாலும் கலந்து கொள்ளாத நொபுருகராஷிமா:. செம்மொழி மாநாடாக மாற்றப்பட்டாலும் கலந்து கொள்ளவில்லை, ஆனால், ஆஸ்கோ பர்போலா கலந்து கொண்டார், அவருக்கு விருதும் கொடுக்கப்பட்டது. கருணாநிதி “பொங்குற்ற சிலர் பொல்லாத வழியில் திசை திருப்பப் பார்க்கின்றனர்” என்று ஏசவும் செய்தார்[9]. முன்னர் பிப்ரவரி 2007ல் “தமிழகமும் சிந்துவெளிப் பண்பாடும்” என்ற பன்னாட்டுக் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தபோதும், ஜப்பானிய அறிஞர்கள் கலந்து கொள்ளவில்லை, ஏனென்றால், அப்பொழுது “கண்டியூர் கல்வெட்டு” என்பதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆஸ்கோ பர்போலாவும் சிந்து வரிவடிவம் தமிழ்தான்[10] என்று தீர்ர்மானமாக சொல்லவில்லை[11]. மேலும் விமர்சனங்கள் அதிகமாக வருவது கண்டு, “சமஸ்கிருதமும் சிந்துசமவெளிக்கு பங்களித்துள்ளாது” என்று விளக்கமும் கொடுத்தார்[12]. ஐராவதம் மகாதேவன் தனது கருத்தைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டக் கேள்விகளுக்கும் இவர்கள் நேரிடையாக பதில் சொல்லவில்லை[13]. இப்பிரச்சினை தொடர்ந்து “தி ஹிந்து” மற்றும் ரோசா முத்தையா நூலகத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் தொடர்ந்தது[14].
சைவசித்தாந்தம் தோற்றம் பற்றிய இவரது கருத்து: கல்வெட்டுகள் ஆதாரமாக, கிராமங்களில் இருந்த மக்கள் குழுமங்கள் அவர்களது சமயத் தொடர்பான விஷயங்கள் முதலியவற்றை வைத்துக் கொண்ண்டு, கீழ்கண்ட வாதங்களை வைக்கின்றார்[15]. மடங்களில் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடப்பட்டு வந்ததிலிருந்து, பக்தி இயக்கம் தோன்றிய காலம் 7 முதல் 10 நுற்றாண்டுகள் என்று கொள்ளப்படுகிறது. இது 11ம் நுற்றாண்டு கூட தொடர்ந்தது. பிறகு, 11-12 நுற்றாண்டுகளில் வடவிந்தியாவிலிருந்து, சைவத் துறவிகள் தென்னிந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டனர். ராஜராஜன்–1 மற்றும் ராஜேந்திரன்-1 பிராமணத்துறவியர்களை அரசகுரு ஸ்தானத்தில் அமர்த்தினார்கள். இவையிரண்டும் கலந்து, ஒரு பிரபலமான  சமூக இயக்கம் உருவானது. அதில் விவசாயிகள், வியாபாரிகள், கைவினைஞர்கள், மலைவாசிகள், வீரர்கள் என்று சமூகத்தின் கீழடுக்களில் இருந்தவர்களும் கலந்து கொண்டதால் அவ்வியக்கம் தோன்றியது[16]. அவர்களது ஆதிக்கம் 12ம் நுற்றாண்டில் வளர்ந்தது, அது 13ம் நுற்றாண்டில் மடங்களின் காரியங்களுடன் இணைந்தது. இது பிறகு தமிழகம் எங்கும் பரவியது. 13ம் நுற்றாண்டில் உருவான சிவஞானபோதம் இதற்கு ஒரு சிறப்பான உதாரணமாகும். இத்தகைய கலவையினால் சைவசித்தாந்தம் 13ம் நுற்றாண்டில் உண்டாக்கப்பட்டது, ஏற்படுத்தப்பட்டது[17].  கைலாசநாத கோயில் கல்வெட்டு, பல்லவ அரசன் “சித்தாந்தம்” உணர்ந்தவன் என்று கூறுவதால், சைவசிதாந்தத்தின் தொன்மையை 13ம் நுற்றாண்டில் உண்டாக்கப்பட்டது என்று சுருக்குவது ஏற்புடையதல்ல.
திராவிட இயக்கத்தை விமர்சித்தது: நொபுரு கராஷிமா திராவிட இயக்கம் தனது தேவைக்கு மீறி அதிகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று விமர்சித்துள்ளார்[18]. 1970களிலேயே, அவ்வியக்கத்தின் தேவை பூர்த்தியாகிவிட்டது[19]. அதாவது, அரசியல் மயமாக்கப்பட்ட அந்த இயக்கம் தேவையற்றது, அல்லது அதன் தேவை முடிந்து விட்டதால், இனியும், அதனை அரசியல் ஆதாயங்களுக்கு நடத்துவதை விரும்பவில்லை என்று சுட்டிக் காட்டினார்[20]. இதனாலும், ஆரிய-திராவிட இனவாதங்களை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்திவரும் ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்புப் போய்விட்டது. அதுமட்டுமல்லாது, இனி தமிழகத்திற்கு வெளியில் அத்தகைய சரித்திர ஆதாரமில்லாத சித்தாந்தங்கள் எடுபடாது என்பதால், இங்கு அவற்றை ஆதரித்துப் பேசுவது-எழுதுவது, வெளியில், மற்ற இடங்களில், வெளிநாடுகளில் வேறுவிதமாகப் பேசுவது-எழுதுவது என்று ஆரம்பித்தார்கள். இதனால் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் முரண்பாடுகள் காணப்பட்டன.
© வேதபிரகாஷ்
29-05-2013


[3] Ms Jayalalitha said”the fact that no country has come forward to host the 9th World Tamil Conference for 14 long years since 1995 is an indication of the turmoil the Tamil world is going through”. Indicating that her party might boycott the conference, Ms. Jayalalitha said Mr. Karunanidhi was the first leader of a Tamil political party to boycott 1981 and 1995 conferences held in Tamil Nadu when M G Ramachandran and she were Chief Ministers respectively.
[6] Renowned Tamil scholar Noboru Karashima of Japan, the president of International Association of Tamil Research (IATR), the body that had organised the previous eight Tamil meets — then called ‘World Tamil Conference’ — refused to give formal consent to Karunanidhi’s impromptu announcement, prompting the DMK leader to convene a parallel meet under a new name.
[8] I have already clarified my thoughts and stand concerning the Tamil Conference and the IATR, in an article published in The Hindu on July 23, 2010, and have nothing more to say about it. Somebody had to sound the alarm about the IATR, which got entangled with local politics, and that is what I did. The reason for my resignation as its President is that I had no hope of reviving the IATR from within. In addition, there were the factors of my age and health. I hope its resurrection will be taken up by young and sincere Tamil scholars.
[9] செம்மொழி மாநாட்டை திசைதிருப்ப முயற்சிகருணாநிதி: சென்னை (19-06-2010): கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை திசை திருப்ப முயற்சி நடப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து முரசொலியில் அவர் எழுதியுள்ளகடிதத்தைப் பார்க்கவும்.
[16] Parvati Menon, Unless knowledge of epigraphy develops, no ancient or medieval history of this country can be studied‘, an interview with Noboru Karashima in The Hindu dated December 2, 2010
[17] The first was the Bhakti movement of the period from the 7th to 10th centuries, which is attested to by the recitation of Devaram hymns and Tirumurai in mathas of the 11th century and after. The second is the North Indian Brahmanical tradition brought by the influx of Saiva ascetics to the Tamil country during the 11th and 12th centuries, which is shown by the appointment of those Brahmana ascetics asrajagurus by Rajaraja I and Rajendra I. These two traditions merged when the people of the lower social sections, such as cultivators, merchants, artisans, [members of the] hill tribes and soldiers, who had increased their power during the 12th century, also joined in matha activities in the 13th century, as our study of the inscriptions indicate. Their activities are spread all over the Tamil country. Sivananabodam, written in Tamil by Meykandar, a Vellalla ascetic, in the 13th century, is the hallmark of this fusion of the two traditions and the establishment of South Indian Saivasiddhantism in the 13th century.
[18] For many, like noted Japanese Tamilologist Noboru Karashima, the Dravidian movement has ‘outlived its utility’. Read more at:http://indiatoday.intoday.in/story/dmk-chief-m-karunanidhi-has-lost-the-plot-in-tamil-nadu/1/176260.html
[19] From the 1970s, however, the situation changed in accordance with the changes in caste society and the gradual economic growth of the South. The Dravidian Movement could be said to have fulfilled its historical role to a certain extent. From the 1980s, we see a shift in the aims of the movement. The political mobilisations by the DMK and AIADMK, and their appeals to the regional sentiments of the Tamil people, were primarily aimed at the expansion of their political vote base.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக