வெள்ளி, 20 செப்டம்பர், 2019

கோவில் சிலை கடத்தல் பற்றி நூல்

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 3 ஜூலை, 2018, பிற்பகல் 3:46
பெறுநர்: எனக்கு
Prakash JP > அரசியல் களம்
பார்பனர்களும் கோயில் சிலை திருட்டுகளும்..
தஞ்சை பெரிய கோயிலில் இருந்து ராஜராஜ சோழனின் சிலையை கடத்தவும் மறைக்கவும் உதவிய பார்பனர்கள் சீனிவாச கோபாலாச்சாரி & இரா. நாகசாமி.. அதேபோல, "சிலை கடத்தல் மன்னன்" என குறிப்பிடப்படும் தீனதயாளனும் பார்ப்பனான் தான்.. இந்த தீனதயாளன் வீட்டிலிருந்து மட்டுமே நூற்றுகணக்கான சிலைகள் மீட்கப்பட்டன.. மீடக்கப்பட்டதே நூற்றுக்கணக்கானகில் என்றால், பல ஆண்டுகளாக, அந்த கும்பல் திருடி விற்ற சிலைகள் ஆயிரத்தை தொடும்...
பண்டைய காலம் தொட்டு கோயிலில் பார்பனர்கள் அடித்த கொள்ளைகள் குறித்த தகவல்களை 1940 களில் இந்துமத பரிபாலன சபையின் இயக்குநராக இருந்த சி.ஆர்.இராம சந்திர செட்டியார் (கோவையை சார்ந்தவர்), 'கோவை கிழார்’ என்ற புனைப் பெயரில் எழுதிய "கோயில் பூனைகள்" என்ற புத்தகத்தின் மூலம் தெரிதுகொள்ளலாம்..
சிறிய திருட்டு நகையை ஒரு நகைகடை வியாபாரி வாங்கினாலே, போலீஸ் உடனடியாக அந்த வியாபாரியை கைதுசெய்யும்.. ஆனால், திருடப்பட்ட சிலைகளை வாங்கிய யாரையாவது போலீஸ் இதுவரை கைதுசெய்துள்ளதா??? குறிப்பாக ராஜராஜன் சிலை குஜராத் மாநில தனியார் காட்சியகத்தில் இருந்து, மீட்டுவரப்பட்டத
ு.. அந்த சிலையை வாங்கி அங்கே வைத்திருந்த ஆட்களை கைது செய்யாமல் இருப்பது ஏன்?? காரணம், அவர்களை கைது செய்தால், யாரிடமிருந்து அந்த சிலையை அவர்கள் வாங்கினார்கள் என்ற உண்மை வெளிவந்துவிடும் அல்லவா??
ராஜராஜ சோழன் சிலை மீட்பு - சில உண்மைகள்
காணாமல் போன வருடம் - 1960 (காங்கிரஸ் ஆட்சி காலம்)
திருடவும் விற்கவும் - ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி
திருட தூண்டியவர்கள் - குஜராத்தை வியாபாரிகள்
திமுகவின் முயற்சியும் நாகசாமியின் சூழ்ச்சியும்..
திமுக ஆட்சிக் காலத்தில் குஜராத்தில் தனியார் அருங்காட்சியத்தில் இருந்து இராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகளை மீட்க முயற்சி நடந்தது. அப்போழுது குஜராத் முதலமைச்சர் மோடி. தமிழ்நாட்டில் இருந்து அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலா துறைச் செயலர் இறையன்பு, தொல்லியல் துறை இயக்குநர் நாகசாமி, தொல்லியல் அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழு குஜராத் சென்று மோடியை சந்தித்தது. அப்பொழுது சிலைகளை ஒப்படைக்க மோடி ஒப்புக் கொண்டார். ஆனால், குஜராத் தொல்லியியல் துறை உயரதிகாரி ஒருவர் இது இராஜராஜ சோழன் சிலைதான் என்று நாகசாமி சொன்னால் சிலைகளை ஒப்படைக்கிறோம் என்று கூறிவிடுகிறார். ஆனால், இது இராஜராஜ சோழன் சிலை இல்லை, கண்டேஸ்வரர் சிலை என்று நாகசாமி அறிக்கை அளித்தார். இதனால், அப்போழுது இந்தச் சிலைகளை மீட்க முடியாமல் போனது.

ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் »
தமிழகம்
தீனதயாளன் வீட்டில் திரும்பிய திசையெல்லாம் கடத்தல் சிலைகள்: வலையில் சிக்கும் விஐபிகள்!
Updated: Mon, Jun 13, 2016, 11:34 [IST]
சென்னை: சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வீட்டிலிருந்து மட்டும் கடந்த 2 நாட்களில் 187 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. சிலை கடத்தல் வழக்கில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதையடுத்து மேலும் பலர் விரைவில் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக பழங்கால சிலைகளை கடத்தி விற்று வந்த சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தீனதயாளன், கடந்த வாரம் போலீசாரிடம் சரணடைந்தார். பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் வீட்டின் அருகில் உள்ள ஒரு குடோனில் மேலும் பல சிலைகள் இருப்பதாக கூறினார். இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டன.
இந்த சிலைகள் கேரளா, மகாராஷ்ரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று தொல்லியியல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள தீனதயாளன் வீட்டில் பொருளாதார குற்றவியல் பிரிவு போலீஸார் இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர். இதில் 159 கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் தீன தயாளன் வீட்டிலிருந்து 189 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குடோனில் குவியல்குவியலாக பழங்கால பொருட்கள் சிக்கின.
ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரும், சிலை கடத்தல் மன்னனுமான தீனதயாளனின் ஆழ்வார்பேட்டை பங்களா வீட்டில் முதல் முறையாக அதிரடியாக புகுந்து போலீசார் சோதனை நடத்தினர்.
3 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த இந்த சோதனையில் பழங்காலத்தை சேர்ந்த 71 கற்சிலைகளும், 49 ஐம்பொன் சிலைகளும் 75 அரிய வண்ண சோழர்கால ஓவியங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
•போலீஸ் பிடி இறுகியதை தொடர்ந்து கடந்த 3ம் தேதி இரவு தீனதயாளன் போலீசில் சரண் அடைந்தார். உடனடியாக அவரை கைது செய்து சிறையில் அடைக்காமல், போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
•கடந்த 10 நாட்களாக சிலை கடத்தல் பற்றியும், வெளிநாட்டு தொடர்புகள் பற்றியும் தீனதயாளனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு பொறுமையாக பதில் அளித்த அவர் சிலை கடத்தலின் பின்னணி குறித்த மர்மங்களையும் விளக்கி கூறியிருக்கிறார்.
•சிலை கடத்தல் வழக்கில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதையடுத்து மேலும் பலர் விரைவில் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
•ஆழ்வார்பேட்டை முர்ரேஸ்கேட் சாலையில் உள்ள வீட்டில் மட்டுமே தீனதயாளன் சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் அப்பகுதியில் மேலும் 2 இடங்களில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
•முர்ரேஸ் கேட் சாலையில் வேறு ஒரு இடத்தில், தீனதயாளனின் குடோனும் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2வது தெருவில் அவருக்கு இன்னொரு வீடும் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இது வாடகை வீடாகும்.
கோரிக்கையை நிறைவு செய்ய தொலைநிலை சர்வர் மறுக்கிறது . முகவரி கிடைக்கவில்லை .
தற்போது இல்லாத
https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-6601380052549923&outpu
•இந்த வீட்டில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். குடோனிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தீனதயாளனுக்கு சொந்தமான குடோனில் இருந்து மேலும் 189 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
•55 பழங்கால ஓவியங்கள், 55 பழங்கால கற் பொருட்கள், 2 விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட சிலைகளின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. அவற்றின் மதிப்பு 1000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
•கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு புராதனமான கோவில்களில் இருந்து பழங்கால சிலைகளை திருடி வெளிநாட்டில் விற்பனை செய்துள்ளதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
•பெங்களூருவிலும் குடோன் அமைத்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் பதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதால் அங்கு விரைவில் சோதனை நடத்தப்படவுள்ளது காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
•சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் துருவி துருவி நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. சிலை கடத்தல் விவகாரத்தில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று சிலை கடத்தல் பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.
•தோண்ட தோண்ட புதையல் வருவது போல தீனதயாளனின் வீடுகளில் இருந்து அரிய பொக்கிஷங்களாக திகழக்கூடிய சாமி சிலைகள் குவியல் குவியலாக கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்றுடன் சோதனை முடிவுற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தேவைப்பட்டால் தொடர் தேடுதல் வேட்டை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
•இதற்கிடையில், தீனதயாளனின் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை தொல்லியல் துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்ய உள்ளனர். அதைத் தொடர்ந்து ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே பறிமுதல் செய்யப்பட்ட சாமி சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். அடுத்த வாரம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக