வெள்ளி, 20 செப்டம்பர், 2019

ஆரியர் என்ற இனம் கிடையாது அருள்நிலா

aathi1956 aathi1956@gmail.com

சனி, 14 ஜூலை, 2018, முற்பகல் 10:36
பெறுநர்: எனக்கு
இந்தியாவில் உள்ளவர்கள் யாவரும் வந்தேறிகளா? ஆரிய இனம் என்றோர் இனமுண்டா?
June 17, 2017 · nilaavengadavan
(இன்றைய ஆங்கில இந்து நாளேடில் ஒரு முக்கிய ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது. ( How Genetics is settling the Aryan Migration Debate..by Tony Joseph) இதில் இந்தியாவில் உள்ளவர்கள் யாவரும் வந்தேறிகள் என கடைசிவரி முடிகிறது… – Palani Deepan 17-06-2017-FB)
ஆரிய இனம் என்றோர் இனமுண்டா?
ஆரிய இனம் என்று ஓர் இனம் இருப்பதாக இந்நாள் வரை பரப்பப்பட்டும் நம்பப்பட்டும் வருகிறது. அப்படியோர் இனம் இல்லவே இல்லை!ஏனெனில் ஆரிய இனத்திற்கென்று ஒரு மொழி இல்லை; வரையறுக்கப்பட்ட வாழ்நிலம் இல்லை! அதனாலேயே, எங்கிருந்தோ ஆரியர்கள் வந்ததாகக் கதை கட்டப்பட்டது. ஆரியர் புறப்பட்டு வந்ததாகச் சொல்லப்படும் ’புறப்பாட்டிடம்’ இதுவரை யாராலும் சான்றுகளுடன் மெய்ப்பிக்கப்படவில்லை.
பதினாறாம் நூற்றாண்டுக் காலத்திலிருந்து உலகமெங்கும் அடிமை நாடுகளைக் கைப்பற்ற புறப்பட்ட ஐரோப்பியர்கள், அவர்களுடைய தேவைக்காக மொழியியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டனர். அந்த அடிப்படையில்,வில்லியம் சோனிசு[William Jones], மாக்கிசு முல்லர் [ Max Muller] ஆகியோர் இந்தியாவினுடைய மேட்டுக்குடி மக்களின் மொழி சமற்கிருதம் என்றும், அவர்கள் ஆரியர் என்று அழைக்கப் படுகிறார்கள் என்றும் அறிந்தார்கள். சமற்கிருதமே, இந்திய மொழிகளுக்கும்,ஐரோப்பிய மொழிகளுக்கும் மூலமாக இருக்கும் என்றும் நம்பினர்! உடனடியாக ஐரோப்பியர்களும், இந்திய ஆரியர்களும் உறவினர்கள் என்ற கருத்தாக்கத்தை ஏற்படுத்தினர்.அதன் விளைவுதான்,இந்தியாவில் உள்ள ஆரியர்கள், இந்தியாவிற்கு வெளியேயிருந்து வந்தவர்கள் என்ற கோட்பாட்டை முன்மொழிந்தனர்.இந்தக்கருத்திற்கு துணைசெய்வதற்காக, மாக்கிசு முல்லர் அவர்கள், ’ஆரியன்’ என்ற சொல்லின் வேர், இலத்தீன் மொழியிலுள்ள ‘ஏர்’ என்பதாக முன்மொழிந்தார்.ஆனால்,’ஏர்’ என்பது இலத்தீன் மொழியிலும் உறவு சார்ந்த பொருளிலேயே இருக்கிறது. ஆனால்,மாக்கிசு முல்லர் காலத்து இந்திய -ஆரியர்களுக்கு, ’உழவு’ என்பது இழிதொழில். எனவே, மாக்கிசு முல்லரின் வேர்ச்சொல் ஆய்வால்,இந்திய -ஆரியத்தைக் காப்பாற்ற முடியவில்லை! பின்னர், ஆரியத்தின் வேர்,’ரூ’ என்று சமற்கிருதவாணர்களால் முன்மொழியப்பட்டது. ‘ரூ’ என்ற முன்மொழிவு, முழுக்க முழுக்க மொழியியல் நெறிகளின்படி பொருத்தமற்றது என்று பல மொழியியல் அறிஞர்களால் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது!
அண்மைக்காலத்தில் வெளியான ‘பாலிமொழி அகரமுதலியில்’ ஆரியர் என்ற சொல்,ஆசியாக்கண்டம் முழுக்கவும்,பல மொழிகளிலும் ‘உயர்ந்தவன்’, ’தலைமையானவன்’, ‘அரிய ஆற்றலுள்ளவன்’ என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று சொல்லப்பட்டுள்ளது! மேலும் அந்த அகரமுதலி ‘ஆரியர்’ என்ற சொல்லின் வேர் ‘தமிழில் தான் உள்ளது’ என்று அறிவித்துள்ளது. அந்தவேர் >அருமை – அருமையர் -அரியவர் > ஆரியர் ‘. இந்த வெளிப்பாட்டுக்குப் பின்னால் ஐரோப்பியர்கள் எவரும் ஆரியத்தோடு தம்மை இணைத்துக்கொண்டு உறவாட முன்வரவில்லை!
ஆனால்,தமிழ்நாட்டிலுள்ள வடுக அநாகரிகர்கள்,இன்றுவரை ஆரிய வந்தேறி இனம் இருப்பதாகவும், அதுவே அனைத்துக் கேடுகளுக்கும் கரணியம் என்பதாகவும், அந்த ஆரிய இனத்திலிருந்து, தமிழர்களைக் காக்க,வடுகர்களால் மட்டுமே முடியும் என்றும் கூறி,தமிழ்நாட்டு இறையாண்மையை திராவிட முகமூடியின் கீழ் இருந்துகொண்டு தக்கவைத்து வருகின்றனர்.
எப்படி ’காலிடு வெல்’ முன்மொழிந்த திராவிடக் கருத்தியலும், மூலதிராவிட மொழிக்கோட்பாடும் முழுப்பொய்யானது, அடிப்படையற்றது என்று பாவாணர் போன்றோரால் மெய்ப்பிக்கப்பட்டதோ, அதுபோலவே, ஆரிய இனக் கோட்பாடும் முழுப்பொய்யானது, அடிப்படையற்றது! எப்படி மூல திராவிடமொழியின் எச்சங்கள் உலகில் எங்கு தேடினாலும் கிடைக்கவில்லையோ, அப்படியே ஆரிய இனம் என்ற கருத்தாக்கத்தின் சான்று அடிப்படைகள், உலகில் எங்கு தேடினாலும் ,இதுவரை கிடைக்கவில்லை; இனியும் கிடைக்காது!
இனி, ஆரியத்தை, பாலிமொழி அகராதி தெளிவு படுத்தியதற்கு ஒப்ப, தமிழிலிருந்தே தொடங்கவேண்டும். அந்த வகையில், ஆரிய இனம் தனி இனமன்று,தமிழ்க்குடியில் இருந்த ஓர் அரிய உட்குடி மட்டுமே! மேலும் தொடருமுன்னால், ஆரியர் என்ற சொல்பற்றி சில விளக்கங்கள் : எந்தவோர் ஆரியப்படையும், வடக்கிலிருந்து தமிழ்நாட்டிற்கு {குறிப்பாக கும்பகோணத்திற்கு } படையெடுத்து வந்ததாக வரலாற்றுச் சான்றில்லை! ஆனால்,கும்பகோணத்துக்குப் பக்கத்தில் இன்றும் ‘ஆரியப் படையூர்’ ; பம்பப் படையூர் ‘ என்று இரண்டு சிற்றூர்கள் உள்ளன. இப்போதைய நிலையில், இரண்டு ஊர்களிலும், தமிழ்க்குடியினரே வாழ்ந்து வருகின்றனர்! தங்களை ஆரிய வழி வழியினர் என்று சொல்லிக் கொள்ளும் மனுவாதிகளுடைய சில குடும்பங்கள் மட்டும், பக்கத்திலுள்ள ‘ பத்தீசுரம்’ என்ற சிற்றூரில் காணலாம். தமிழர்களுடைய அந்தக்கால படைப் பிரிவுகளில், மிக அரிய ஆற்றல் படைத்த படைப் பிரிவிற்கு ‘அரிய படை’ அல்லது ‘ஆரியப் படை’ என்று பெயரிட்டு அழைத்தார்கள். பம்பப் படை என்பது அந்தக் காலத்திலிருந்த தனியொரு படை! இந்தச் செய்திகளைத்தான் ‘ஆரியப் படையூரும்’ , ‘பம்பப் படையூரும்’ சொல்கின்றன.இந்தத் தெளிவின் அடிப்படையில், பாண்டியன் நெடுஞ்செழியன், ஆரிய இனத்துப் படையை வென்று வரவில்லை; வடபுலத்திலிருந்த ஓர் அரிய படையை வென்றுவந்தான் என்று விளங்கிக் கொள்ளவேண்டும்.
மேலும் ‘ஆரியம்’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு ‘அருகிச் சிறந்தது’; ‘அருமை உடையது’ என்று பொருள். இந்த அடிப்படையில் தான் அருமை கருதி ‘அரிசி’ என்றும்,அரிய ஊட்டங்கள் கொண்டது என்ற அடிப்படையில் ‘கேழ்வரகு’ – ஆரியம்’ என்றும் அழைக்கப் படுகின்றன.. மேலும், 2001, 2011 மக்கள் குடிக்கணக்கில் பழனிமலை வாழ் மக்கள், தங்களை ‘ஆரிய வேளாளர்’ அதாவது ‘ அரிய வேளாளர்’ என்று பதிந்துள்ளனர். இன்று , மனுவாதி ஆரியன் என்று சொல்லிக்கொள்கிறவனுக்கும் ’வேளாண்மைக்கும்’ ஏதேனும் தொடர்புண்டா? எனவே , ஆரியர் என்பது, வேற்றினத்தைக் குறிப்பதல்ல,தமிழ்க்குடியில் ஓர் அரிய உட்குடியைக் குறித்த சொல்லே ஆகும்!
இந்த அரிய தமிழ்க்குடிதான், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கொள்கைத் தமிழ்ச் சான்றோர் குடியாகும்! இவர்கள் காலத்தில் தான், ‘கொடுப்பது உயர்வு – அதனை மறுத்தல் அதனினும் உயர்வு’
என்றும்
‘ தீதும் நன்றும் பிறர் தர வாரா’
என்றும்,
‘துய்ப்போம் எனினே தப்புந பலவே’
என்றுமாய்
அமைந்த பொதுமை நெறி சார்ந்த தமிழியக் கருத்துக்கள் நிலைநிறுத்தப்பட்டன.
இந்த அரிய தமிழ்க்குடி, மக்களுக்காக வாழ்ந்தனர்; மன்னனைக் கட்டுப்படுத்தி, மக்கள் நலனுக்காக வழிநடத்தினர்! எனவேதான், அந்தக் காலத்தில் ‘அரச கருமத்தலைவர்’ ஆரியர் அதாவது ‘அரியர்’ என்றே அழைக்கப்பட்டுள்ளார். காலப் போக்கில்,அரசர்கள், அறிஞர் சொல் கேட்பதைவிட, தந்நலப் போக்கிலும்,தம்முணர்வுப் போக்கிலும் செயலாற்றுவதே படிநிலை வளர்ச்சியாயிற்று. எனவே, செம்மாந்த அரிய தமிழ்க்குடி, அரசனுக்குட்பட்ட அடிமைக்குடியாயிற்று.அரசர்களின் ஆட்சி, அறத்தின்பாற்பட்ட வெளிப்படையான,மக்களுக்கான ஆட்சி என்ற நிலையிலிருந்து, அரசர்கள் நலம் சார்ந்த, கரவான ஆட்சி என்ற நிலைக்கு மாற்றம் கொண்டது. இந்தச் சூழ்நிலையில், மக்களுக்காகவே வாழ்ந்த அரிய தமிழ்க் குடியினரில் பெரும்பகுதியினர் அரசப் பிடியிலிருந்து விலகி, மக்களோடு சேர்ந்து வழக்கம்போல மக்களுக்காகவே வாழ்ந்தனர்.
அரிய தமிழ்க்குடியில், தந்நலம் சார்ந்த ஒரு பகுதியினர் மட்டும், தங்களுடைய அரிய ஆற்றலை, மன்னனுக்குப் பயன்படுத்தி, தாங்களும்,மேனிலையும் – தந்நலப் பயன்பாடும் கொள்ளத் துணிந்தனர். இந்த அரிய ஆற்றல் கொண்ட கும்பல்தான், மன்னனுக்கு கரவான ஆட்சி புரிவதற்குத் துணையாக, ஒரு கரவான ஆட்சிமொழியை உருவாக்கிக் கொடுத்தனர் ; அதுதான் ‘சமற்கிருதம்’.
இந்தக் கும்பல்தான் பின்னாளில், அரசர்களுடைய மக்கள் இரண்டக செயல்பாடுகளை முழுக்கத் தெரிந்துகொண்டு ,மன்னர்களை, மக்களைக் காட்டிக் காட்டி மிரட்டி ,அவர்களை [அரசர்களை]த் தங்களுக்குக் கீழ்ப்படுத்தினர். இந்தக் கும்பல்தான், பின்னாளில் வந்த ’வர்ண மனுதர்மக்’ கோட்பாட்டுக்கும் அடிப்படை.
இந்தக் கும்பல் உருவாக்கிய கரவுமொழியாம் சமற்கிருதமே தமிழ் பலநூறுமொழிகளாய்ச் சிதையக் காரணம். இந்த தந்நல அரிய தமிழ்க்குடி, முழுக்க முழுக்க தமிழர்களுக்கு எதிரான குடியாக மாறிப்போனது.
இந்தக்குழுவினர், வாய்ப்புக் கிடைக்கும் போது மன்னர்களையே ஆள்வதும், வாய்ப்பில்லாத காலங்களில் மன்னர்களுக்கு அடங்கிக் கிடப்பதும் வரலாற்றில் நெடுகவும் காணக்கூடியதாக இருக்கிறது.
இந்த நச்சு குழுவினர்களின் கை ஓங்கியதற்குப் பின்னர், தமிழியத்தில் இருந்த பல விழுமியங்கள் அழிக்கப்பட்டன.மக்களின் பொதுச் சொத்தாக தமிழில் இருந்த :’வானியல் நூல்கள்,மருத்துவ நூல்கள்,கட்டிடக்கலை நூல்கள்,கப்பல்படை நூல்கள்..’ போன்ற பலதுறை நூல்கள் தமிழில் முற்றாக அழிக்கப்பட்டு, சமற்கிருதத்துக்கு மாற்றப்பட்டன.
இந்த நச்சுக் குழுவினரின், நச்சு விளைச்சலின் ஒரு வடிவம்தான், ‘வடுக அநாகரிகர்’ !
இப்பொழுது புரிகிறதா? ஆரிய இனம் எங்கிருந்தோ வரவில்லை,இங்கிருந்துதான் கிளம்பியிருக்கிறது. இன்றுவரை தன் தாய் இனத்தை, ஈவிரக்கமின்றி கீழ்மைப்படுத்தி வருகின்றது!இந்த நச்சுக் கும்பலின் அட்டகாசம் தாங்கமுடியாமல் , உண்மையிலேயே ‘ஆரியன்’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு ‘தலைவன்’,உயர்ந்தவன்’, ’அரியவன்’, ‘அரசகருமத்தலைவன்’ என்றெல்லாம் பொருளிருக்க, சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த ‘திவாகர பிங்கல நிகண்டு’களில் ‘ஆரியன்’ என்ற சொல்லுக்கு ‘மிலேச்சன்’, இழிந்தவன்’..என்று பொருள் எழுதி வைத்தனர்.
இந்த நச்சுக் குழுவினரை மறுத்து, மக்களோடு சேர்ந்து வாழ்ந்தார்களே – அந்த அரியர்கள் வழி வழியினர்தான் :’தொல்காப்பியர்’, திருவள்ளுவர்’, ‘கணியன் பூங்குன்றனார்’,’சங்க இலக்கியப் படைப்பாளிகளாக இருந்தவர்கள்’, பின்னாளில் வந்த ’சித்தர்கள்’,’ஐயா வைகுந்தர்’,’வள்ளலார்’..போன்றோர்.
இன்றைய தமிழர் சமூகநிலையைப் பார்ப்போம் : ’தமிழர் தங்களைத் தமிழராக அறிந்து உணர்ந்தவர்களாக இல்லை’. ஒரு பக்கம், வடுகர்கள், திராவிட வில்லையைத் தமிழர்கள் நெற்றியில் கட்டிவிட்டிருக்கிறார்கள்; மறுபக்கம், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழருக்கு எதிராகக் கிளம்பிவிட்ட அரிய நச்சுத் தமிழ்க் குடியினர், இந்தியாவெங்கும் கால்பரப்பி சமற்கிருதத்தைப் பயன்படுத்திக் கொண்டு,ஒரு இந்திய மேலாளுமைக் கும்பலை நிலைநிறுத்தி பல அரசாட்சிகளையும், கடைசியாக வந்த ஆங்கிலப் பேராட்சியையும் தாக்குப் பிடித்து, தொடர்ந்து நிலைத்துவரும் தங்களுடைய மேலாண்மையின் பேரால், தமிழர்களுடைய நெற்றியில் ‘இந்தியன் ‘ என்ற வில்லையை தொங்கவிட்டிருக்கின்றனர். தமிழன், தனக்குரிய ’தமிழன் வில்லையைக்’ கண்டறிவது எப்போது?
அதைப் போலவே தமிழர் இறையாண்மையைப் பறித்துக்கொண்டு,தொடர்ந்து தமிழர்தம் இறையாண்மை தமிழ்நாட்டில் தலையெடுக்காதபடி அத்துணை சதிவேலைகளையும் செய்துவருகிற தெலுங்கு,கன்னட,மராத்திய,உருது-முகமதிய படையெடுப்பாளர்கள் தமிழர்களின் பிறவிப் பகைவர்கள்! தமிழ்நாட்டில், தமிழர் இறையாண்மை தலையெடுக்க வேண்டுமானால்,தமிழ்நாட்டு சமூகவாழ்க்கையிலிருந்து தள்ளிவைக்கப் படவேண்டியவர்கள். தமிழ்நாட்டில் தமிழருக்காக இயங்கிவரும் தமிழர் அமைப்புக்களிலிருந்து அகற்றப்படவேண்டியவர்கள். உடனடியாகத் தமிழர்களுக்காக இயங்கிவரும் அமைப்புகளில், தலைமைப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்படவேண்டியவர்கள்.
சொல்லுக்குச் சொல் சமூகநீதி பிதற்றும் வடுகர்களே, 10-பேர் அறக்கட்டளை உறுப்பினர் என்றால், 9-பேர் தமிழராக இருக்கவேண்டும்! வடுகர்கள் சமூகநீதியை நிலைநாட்டாவிட்டால்,தமிழர்களே போராட்டங்களை முன்னெடுத்துத் தமிழர்க்கு தமிழர் சொத்துக்களின் மீதுள்ள உரிமையை நிலைநாட்டுங்கள்.இந்தவகையில் போலி சமத்துவம் பேசும் வடுக அநாகரிகர்கள், தமிழர்களிடமிருந்தே சொத்துக்களைப் பறித்துக்கொண்டு,தமிழர்கள் துணையுடனே, தமிழர்களுடைய சொத்துக்களின் இறையாண்மையை தக்கவைத்துக் கொண்டிருக்கிற அயோக்கியத்தனத்தாலும்,குள்ளநெறித்தனத்தாலும் உடனே அம்பலப்படுத்தப் படவேண்டியவர்கள்!
எனவே மேற்கண்ட படையெடுப்பாளர்கள், அவர்கள் படையெடுத்து தமிழரிடமிருந்து பிடுங்கிக் கொண்டவற்றையெல்லாம், தமிழரிடம் ஒப்படைத்து,தமிழர் இறையாண்மையை ஏற்கும்வரை, அத்தரப்பினர் அனைவரும் தமிழர்களின் எதிரிகளே! இதில் எந்தவித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை.
மேலே குறித்த மூலப்பகைவனாம் ‘தமிழோ-சமற்கிருதனையும்’, அடுத்து படையெடுத்து தமிழர் இறையாண்மையைப் பறித்த பிறமொழி எதிரிகளையும் இன்னும் அறியாமையால், அல்லது கைக்கூலித் தன்மையால் போற்றித்துதிபாடும் தமிழர்க்கு, அறிவார்ந்த தமிழர்களே, தக்கப் பாடம் புகட்டுங்கள். இன்னும்கூட, படையெடுத்து வந்த பிறமொழியாளர்களிடம் அறிவுப்படையாகவும், ஆளணிப்படையாகவும்,பணியாற்ற நேர்ந்த அவலத்தை மறந்துவிட்டு, பிறமொழிப் படையெடுப்பாளர்களை எதிரிகளாகக் கருதும் தமிழர் நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.
சுருக்கமாக, ஆரியன் என்று ஓர் இனத்தவனோ, அந்த ஆரிய இனத்தைச் சார்ந்த மனுதர்மவாதியோ, மனுதர்மத்தைக் கடைபிடிப்பதாகச் சொல்லிக்கொள்கிற ஆரியப் பார்ப்பனனோ , தமிழ்க்குடிக்கு வெளியேயிருந்து வந்தவர்களல்லர்,ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அரிய ஆற்றல்களைக் கொண்ட நச்சுத் தமிழறிஞர்களின் வழிவழியினரே! எனவே தமிழோ-சமற்கிருதன் [ஆரிய இன வடிவமைப்பாளன்] என்றைக்கும் தமிழரின் மூலப் பகைவனே! தமிழோ-சமற்கிருதர்களின் மற்றொரு வடிவமானவர்களும்,தமிழ்நிலத்தின் இறையாண்மையைப் பறித்தவர்களுமான ‘தெலுங்கு-கன்னட-மராத்திய-உருது முகமதியர்’கள், தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்கும்வரை, விட்டுக்கொடுப்பிற்கு இடமில்லா எதிரிகள்! மேற்குறித்த இரண்டு வகை எதிரிகளோடும் ஏதோவொருவகையில் உறவாடுபவர்கள், தமிழர்களாகப் பிறந்திருப்பினும், அவர்களும் தமிழர்க்கு எதிரிகளே!
எனவே, எதிரிகளை ஈவிரக்கமின்றிப் புறந்தள்ளிவிட்டு, தமிழை வாழ்வியல் மொழியாகவும்,தமிழியத்தை [இயற்கை தழுவிய வாழ்வியல், ஐந்திணையியல், ஐம்பூதவியல்,ஐந்திரவியல்,எண்ணியம்,உலகாய்தம்,துன்பப்படும் தமிழர்க்கு உடனடித் தீர்வுடன் தொண்டுசெய்யும் ஆசீவகநெறி,சமத்துவத்தையும் பொதுமைநெறியையும் போற்றிய வள்ளுவம்,சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக அன்புக்கொடி ஏந்தி, அனைத்துத்தரப்பு மக்களையும் திரட்டிப் போராடிய தமிழர்தம் தன்மானத்தந்தை ஐயா வைகுந்தரின் ‘ஒவ்வொரு மனிதனும் கடவுள், சமத்துவ அடிப்படையில் நடக்கும் சடங்குகளற்ற மனிதக் கூடலே இறைவழிபாடு, பதிகள்தோறும் பள்ளிகள் அமைத்தல் ‘ போன்ற கோட்பாடுகள்,சாதிமதம் கண்மூடிப்பழக்கங்கள் போன்றவற்றை மறுத்து, உயிரிநேயம் போற்றும் வள்ளலாரியம்] வாழ்க்கை நெறியாகவும், விட்டுக்கொடுப்பிற்கு இடமில்லாத தாய்நிலமாம் தமிழ்நாட்டை போற்றிக்காப்பவனும் மட்டுமே தமிழன்!
தமிழர்களே , தமிழர்களாகத் திரளுங்கள், விழிப்புடன் எதிரிகளை ஈவிரக்கமின்றிப் புறந்தள்ளுங்கள்,தமிழர் இனத்தைக் கட்டுங்கள், தமிழர் இறையாண்மை தானே தழைத்து வரும்! தமிழர் இன மீட்பர்களின் வரிகளை எண்ணிப் பாருங்கள் :
“ எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்… இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”. [பாவேந்தர்] ;
“தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் – அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் “ [பாவாணர்].
“[தமிழர்க்கு] விடுதலை வேண்டும் முதல் வேலை, வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை!” [பாவலரேறு].
Published by
nilaavengadavan
View all posts by nilaavengadavan
Share this:
Twitter Facebook Google அறிவர்-சி.பா.அருட்கண்ணனார்.
(கடந்த ஆண்டுப்பதிவு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக