வெள்ளி, 22 டிசம்பர், 2017

தமிழகம் நாடுகள் கூற்றம் அகநாடு சிற்றரசு பட்டியல்

aathi tamil aathi1956@gmail.com

அக். 13
பெறுநர்: எனக்கு
Shiva
அகநாடுகள் - கூற்றம்
~~~~~~~~~~~~~~~
தமிழகத்தில் மூவேந்தர் நாடுகளான சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கிடையி
லுள்ள எல்லைகளில் அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்ந்து வந்தன. இம்மூவேந்தர்
நாடுகளுக்கு இடைப்பட்ட நாடுகளும், உட்பிரிவுகளும், அவ்வப்போது மாறிய
எல்லைகளும் குறு நாடுகளாக எழுந்தன. அவை # அகநாடுகள் அல்லது # கூற்றம்
எனப்படும்.
சங்ககால அகநாடுகள்
பாண்டிநாட்டு அகநாடுகள்
1. நாஞ்சில் நாடு
2. பறம்பு நாடு
3. ஒல்லையூர் நாடு
சேரநாட்டு அகநாடுகள்
1. கொங்கு நாடு
2. மலையமான் நாடு
3. குடநாடு
4. துளு நாடு
5. கொண்கான நாடு
6. கட்டிய நாடு
சோழநாட்டு அகநாடுகள்
1. கோனாடு
2. வேங்கட நாடு
3. ஒய்மானாடு
மற்ற அகநாடுகள்
இவற்றுள் சில சங்ககாலத்திலும், மற்றும் சில பிற்காலங்களிலும் தோன்றியவை.
1. இரணிய முட்டநாடு
2. புறப்பறளைநாடு
3. ஆரிநாடு
4. களக்குடி நாடு
5. திருமல்லிநாடு
6. தென்புறம்புநாடு
7. கருநிலக்குடிநாடு
8. வடபறம்புநாடு
9. அடலையூர்நாடு
10. பொங்கலூர்நாடு
11. திருமலைநாடு
12. தென்கல்லகநாடு
13. தாழையூர்நாடு
14. செவ்விருக்கைநாடு
15. கீழ்ச்செம்பிநாடு
16. பூங்குடிநாடு
17. விடத்தலைச்செம்பிநாடு
18. கீரனூர்நாடு
19. வெண்புலநாடு
20. களாந்திருக்கைநாடு
21. பருத்திக் குடிநாடு
22. அளநாடு புறமலை நாடு
23. துறையூர்நாடு
24. துருமாநாடு
25. வெண்பைக் குடிநாடு
26. இடைக்குளநாடு
27. நெச்சுரநாடு
28. கோட்டூர்நாடு
29. சூரன்குடிநாடு
30. பாகனூர்க்கூற்றம்
31. ஆசூர்நாடு
32. தும்பூர்க்கூற்றம்
33. ஆண் மாநாடு
34. கீழ்வேம்பநாடு
35. மேல்வேம்பநாடு
36. தென்வாரிநாடு
37. வடவாரிநாடு
38. குறுமாறைநாடு
39. குறுமலைநாடு
40. முள்ளிநாடு
41. திருவழுதிநாடு
42. முரப்புநாடு
43. தென்களவழிநாடு
44. வானவன் நாடு
45. கீழ்களக்கூற்றம்
46. கானப்பேர்க்கூற்றம்
47. கொழுவூர்க்கூற்றம்
48. முத்தூர்க்கூற்றம்
# 49_மிழலைக்கூற்றம்
50. மதுரோதயவளநாடு
51. வரகுண வள நாடு
52. கேளர சிங்கவளநாடு
53. திருவழுதி வளநாடு
54. வல்லபவள நாடு
55. பராந்தகவள நாடு
56. அமிதகுண வளநாடு
#49_மிழலைக்கூற்றம்
~~~~~~~~~~~~~~~
“நான் தலையாலங்கானத்துப் போரில் தோல்வியுற்றால், மாங்குடி மருதன் போன்ற
புலவர்கள் என்னைப் பாடாது என் நாட்டைவிட்டு நீங்குக” என்று பாண்டியன்
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடல் மூலம் கூறுவதிலிருந்து,
அவன் இவரால் பாடப்படுவதை மிகவும் பெருமையாகக் கருதினான் என்பது
தெரியவருகிறது.
மிழலைக் கூற்றம் முன்னர் பாண்டிய மண்டலத்தில் இருந்த உள் நாடாகும்.
" கோச்சடையவன்மரான திரிபுவனச் சக்ர
வர்த்திகள் சீவல்லபதேவற்கு யாண்டு இருபத்தஞ்சா
வது மேஷ நாயிற்றப் பூர்வபக்ஷ்த்து ஏகாதசியும்
சனிக்கிழமையும் பெற்ற மகத்துநாள் பாண்டி
மண்டலத்து மிழலைக்கூற்றத்த
ு ஒக்கூறுடையார்"
# திருக்களர் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
1063 முதல் 1070 வரை கங்கை கொண்ட சோழனின் புதல்வன் வீர இராசேந்திரன்
பொன்பற்றி காவலன் புத்தமித்திரனைக் கொண்டு வீர சோழியம் நூலை
செய்வித்தான்.
" மேவிய வெண்குடைச் செம்பியன் வீர ரசேந்தின்றன் நாவியல் செந்தமிழ்ச்சொல்"
"தேர்வீரன் திருப்பெயரால் பூமேலுரைப்பன்".
இக்கூற்றால் தெளிவாக தெரியவருகிறது. மிழலைக் கூற்றத்து பொன் பற்றி
இந்நாளில் பொன் பேத்தி என அறந்தாங்கி தாலுகாவில் உள்ளது.
மணமேற்குடி என்ற ஊர் மிழலைக்கூற்றது கீழ்கூற்று மணமேற்குடி என மாறமங்கலம்
கல்வெட்டால் அறிய முடிகிறது. சேக்கிழார் மணமேற் குடியை பாண்டி நாட்டூர்
என கூறுவதால் பாண்டி நாட்டின் வட எல்லையாக வெள்ளாற்றின் தெற்கே
அறந்தாங்கி தாலுகாவில் உள்ளது.
முற்காலத்தில் மிழலைக் கூற்றம் எனப்படுவது சோழ மண்டலத்திற்கு தென்
எல்லையவகவும் வெள்ளாற்றின் திருபுவன வாசலுக்கு அண்மையில் கடலோடு கலக்கும்
பாம்பாற்றுக்கு வடக்கும் பாண்டி மண்டலத்திற்கு இருக்கும் உள் நாடாகும்.
இதுகாறும் மிழலை நாடும், மிழலைக் கூற்றமும் ஒன்றுக்கொன்று மிக சேய்மையில்
இருந்த நாடுகள் ஆகும். சோழ மண்டலத்தில் கும்பகோணம் காவிரி ஆற்றுக்கு
வடக்கும் மண்ணியாற்றுக்கு தெற்குலும் உள்ளது. பின்னர் மிழலைக் கூற்றம்
பாண்டிமண்டலத்தில் அறந்தாங்கியில் ஓடும் வெள்ளாற்றுக்கும் தெற்கே
பாம்பற்றுக்கும் வடக்குள்ள நிலப்பரப்பு ஆகும். இவ்விரண்டிற்கும் உள்ள
வேறுபாடு ஆகும்.
*எழுத்து பிழை இருப்பின் பொறுத்தருளுக.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக