வெள்ளி, 22 டிசம்பர், 2017

தீபாவளி தீவாளி முன்னோர் நினைவுகூறல் பண்டிகை

aathi tamil aathi1956@gmail.com

அக். 11
பெறுநர்: எனக்கு
பாசுகரன் மகன் நவீனன் , 4 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — சீனி.
மாணிக்கவாசகம் மற்றும் 66 பேர் உடன்.
நரகாசுரன் அரசியலும் - தீவாளி உண்மையும்
==========================================
ஆண்டுதோறும் புரட்டாசி திருவோணம் (விஜயதசமி) வந்துவிட்டால், தமிழர்கள்
எல்லாம் தமிழர் தெய்வமான கொற்றவைக்கு வெற்றி விழா எடுப்பார்கள். ஆனால்
இந்த கன்னட இராமசாமியார் பேராண்டிகள் மட்டும் வித்தியாசமாக, வடநாட்டு
ஆரிய பிராமணன் இராவணனுக்கு விழா எடுப்பார்கள்.
தமிழரின் பழமையான கொற்றவை வழிப்பாட்டை அழித்தமாறியும் ஆயிற்று, ஆரிய
பிராமணன் இராவணனுக்கும் விழா எடுத்தாற்போலவும் ஆயிற்று.
இப்போ, அடுத்த கட்ட வேலையில் இறங்கத் தொடங்கிவிட்டனர். ஐப்பசி அமாவாசையான
தீவாளியன்று, நரகாசுரன் விழா எடுக்க போகிறார்களாம்!!
! ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை நரகாசுரன் கதை என்றாலே என்னவென்று
தமிழக மக்களுக்கு தெரியாது. தீவாளி என்றாலே, முன்னோரை நினைத்து எண்ணெய்
தேய்த்து குளித்து, புத்தாடை படைத்து, அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை
படையல் போட்டு, வாயலில் ஒரு தீ வாளியை (தொங்கும் பானையில் விளக்கு) ஏற்றி
வைப்பார்கள். இந்த தீ வாளி
(விளக்கு பானை) என்பது நம் முன்னோரை நம் வீட்டிற்கு வர வழிக்காட்டும்.
(தற்போது கூட இறந்தவர் வீட்டிலிருந்து ஒரு தொங்கும் பானையை
எடுத்துக்கொண்டு செல்வார்கள். இதன் அர்த்தம் அந்த வீட்டில் இருந்து இறந்த
ஆன்மாவிற்கு வெளியே செல்ல வழிக்காட்டுவது) இதுதான் தீவாளி.
இப்படி முன்னோர் படையல் விழாவாக இருந்த தீவாளியை, ஆரியர்கள் நரகாசுரன்
விழாவாக மாற்றினார்கள் என்றால், அதை மேலும் பசுமரத்தாணிப்போல் பதிய செய்ய
நரகாசுரனுக்கு விழா எடுக்கிறார்களாம் இந்த திராவிடர்கள்.
நரகாசுரன் என்பவன் அஸாம்-குவஹாத்தி பகுதியை ஆண்ட கொடுங்கோலன். இவன் பெண்
பித்தன் என்று புராணங்கள் கூறுகின்றன. அவனை ஒரு பெண் அழிக்கிறாள். அந்த
பெண் காமியிகா என்ற பெண் தெய்வம் என்று ஒரு புராணமும், கிருஷ்ணருடன்
சென்ற சத்தியபாமா என்று மற்றொரு புராணமும் சொல்கிறது. இப்படி அசாம்
பகுதியை ஆண்ட கொடுங்கோல பெண் பித்தனை அழித்ததற்கு தமிழர்கள் ஏன் விழா
கொண்டாட வேண்டும்? அல்லது தமிழர்கள் ஏன் நரகாசுரனுக்கு அஞ்சலி செலுத்த
வேண்டும்??
இனியாவது திருந்துங்கள் அருமை தமிழினமே!!!!
தீவாளி = முன்னோர் திருநாள்
(பகிர்ந்து மற்ற தமிழருக்கும் உண்மையை தெரிவிக்கவும்)

Ajith Kumar
தீபாவளிக்கு வீட்டில் எல்லோரும் இறைச்சி எடுத்து சமைப்பார்கள்.. ஆனால்
பலர் விரதத்தை கடைபிடிப்பார்கள்.. உண்மையில் நம் முன்னோர் வழிபாட்டை
ஆரியமும் திராவிடமும் அழிக்க நினைத்த சதி..

Tanggamani Sugumaran
வடநாட்டு ஆரிய பிராமணன் இராவணன்...??? பின்ன ஏன் தென்தமிழ்நாடான இலங்கையை
ஆண்டான்.. வால்மீகி ராமாயணம் சொல்வது போல், வாணரங்களே நீங்கள்
தென்றிசைக்குச் சென்று, முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட கபாடத்தைக்
கொண்டுள்ள கபாடபுர பாண்டிய அவையில் தேடுங்கள்..சீதை அங்கு இருப்பாள்
என்று வாசகத்தை சுக்ரீவன் சொல்ல வரும்.. இப்போ ராவணன் பாண்டிய மன்னனா
ஆரிய பிராமணனா???


அ.ஆ.தமிழ்த்திரு. செந்தமிழ்மறவன்
முரண்பாடான பதிவு தம்பி முபெவே மகேசுவரன் .
இராவணன் தமிழர் அல்லாதவராகவும்,
தமிழர்கள் சாராதக் கதையாக இருந்திருந்தால் அதை தமிழில் மொழிப்பெயர்க்க
வேண்டிய அவசியம் அல்லது நிர்பந்தம்,திணிப்பு கம்பருக்கு வந்திருக்காதே !
கம்ப இராமாயணத்தின் தமிழ் பதிப்பானது ஆரியனை உயர்த்தி தமிழரைத் தாழ்த்தி
தமிழர்களுக்கு உளவியல் தாக்குதல் நடத்திடத் தானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக