வெள்ளி, 22 டிசம்பர், 2017

அனைத்து சாதி அர்ச்சகர் ஆகும் வழக்கு திமுக அதிமுக நடத்தவில்லை மகஇக பூசாரி

aathi tamil aathi1956@gmail.com

அக். 11
பெறுநர்: எனக்கு
மாஞ்சு மாஞ்சு எல்லாத் திராவிடக் கட்சியினரும் இயக்கத்தினரும்
தாழ்த்தப்பட்ட மலையாளிகளை அச்சகராக்கிய பிரனாயி விஜயனுக்கு
வாழ்த்துசொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஸ்டாலின் தனது அறிக்கையில் திமுக ஆட்சியில் இயற்றப்பட்ட அனைத்து
சாதியினரும் அச்சகராகும் சட்டத்தை எதிர்த்து ஒரு சிலர் உச்சநீதிமன்றம்
சென்று தடையாணை பெற்றனர், 9 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசின் சட்டம்
செல்லும் என்று தீர்ப்பு வந்தது இரண்டு வரியில் சொல்லி
முடித்திருக்கிறார்.

ஒரு சிலர்(?) தடையாணை பெற்றார்கள் சரி, வழக்கு நடந்த அந்த 9 வருடத்தில்
நடந்தவைகளைச் சொல்லவேண்டாமா? சொல்ல மாட்டார்கள் ஏனென்றால் அந்த 9
ஆண்டுகள் அந்த வழக்கை எந்தத் திராவிடக் கட்சியும், எந்தத் திராவிட
இயக்கமும் சீந்தவில்லை. ஒரு முறை கூடத் தங்களது கட்சி/இயக்கத்தின்
சார்பில் யாரும் ஆஜராகவில்லை. ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கில் காட்டிய
ஆர்வத்தில் 1% இந்த வழக்கில் காட்டவில்லை. வழக்கில் கடைசிவரை வாதாடியது
மகஇக மட்டுமே. மகஇக மீது ஆயிரம் முரண் இருந்தாலும் இப்போது மகஇக
திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக மாறி இருக்கிறதென்றாலும் அப்பொழுது நடந்த
உண்மை இது தான். எதற்கெடுத்தாலும் ஆதாரம் உருவாக்கியாவது கட்டுரை எழுதும்
திராவிட இயக்க அறிவுசீவிகள் எவனாவது இதை மறுத்து எழுதட்டுமே பார்க்கலாம்.

# சட்டம் இயற்றுவது போல இயற்றிவிட்டுப் பின்னால் ஆள் அனுப்பித் தடையும்
வாங்கச்செய்து கிடப்பில் போட்ட திமுகவும் அதற்குக் குடை பிடிக்கும்
திராவிட இயக்கங்களும் தான் இப்பொழுது பிள்ளைக்குத் தங்களது இனிசியலை
பயன்படுத்தும் அவர்களின் பரம்பரை வழக்கப்படி வைக்கம் போராட்டம் தான்
பிரனாயி விஜயன் இப்படி உத்தரவிடவும் வழிவகுத்தது என்று
பேசித்திரிகிறார்கள். என்ன நடிப்பு டா சாமி..

https://m.facebook.com/story.php?story_fbid=489084568132903&id=100010940922052

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக