வெள்ளி, 22 டிசம்பர், 2017

கோசர் தமிழர் வேற்றினம் அல்லர் பாவாணர்

aathi tamil aathi1956@gmail.com

அக். 11
பெறுநர்: எனக்கு
தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N மற்றும் தமிழன் நந்தா உடன் உள்ளார்.
# செங்குந்தர்_கைகோளர் பதிவு போட்டா ஏன் வஹ்நியர் பதறுகிறார்கள் புரியலை..???
# பதிவு_6 .. (செங்குந்தர்_கைகோளர்)
# கோசர் கட்டுறை @# பாவாணர்..
++++++++
"நன்றல் காலையு நட்பிற் கோடார்
சென்று வழிப்படூஉந் திரிபில் சூழ்ச்சியிற்
... ... ... ... ... ... ... ... ... ... கோசர்"
(அகம். 113)
எனவும்
"ஒன்றுமொழிக் கோசர்"
(அகம். 196)
எனவும்
"வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை
வளங்கெழு கோசர்"
(அகம். 205)
எனவும்
"கோசர் நன்மொழி போல வாயாகின்றே"
(குறுந். 15)
எனவும் வருவனவெல்லாம், கோசர் ஒரு பூட்கையை அல்லது கோட் பாட்டை
யுடையவரென்றே புலப்படுத்தல் காண்க.
இனி,
"இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
கருங்கட் கோசர்"
(அகம். 90)
எனவும்
"துணைகா லன்ன புனைதேர்க் கோசர்"
(அகம். 251)
எனவும்
"வளங்கெழு கோசர் விளங்குபடை"
(அகம். 205)
எனவும்
.. ... ... ... ... .... .... .... .... வென்வேல்
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
இகலின ரெறிந்த அகலிலை முருக்கிற்
பெருமரக் கம்பம் போல,
(புறம். 169)
எனவும்
"வலம்புரி கோசர் அவைக்களத் தானும்"
(புறம். 283)
எனவும்
"மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர்'
(அகம். 15)
எனவும்
"கோசர் துளுநாட் டன்ன
வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பின்"
(அகம். 15)
எனவும்
வருவனவெல்லாம், கோசர் தமிழர்க்கு மாறான ஓரியல்பும் உடையரல்லர் எனக்
காட்டுதல் காண்க.
இனி, செங்குட்டுவன் மோகூர்ப் பழையனை வென்று அவன் காவன் மரமாகிய வேம்பின்
அடியை வெட்டிய செய்தியைக் கூறும்,
"வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து
மொய்வளஞ் செருக்கி மொசிந்துவரு மோகூர்
வலம்படு குழூஉநிலை யதிர மண்டி
நெய்த்தோர் தொட்ட செங்கை # மறவர்
நிறம்படு குருதி நிலம்படர்ந் தோடி
மழைநாட் புனலின் அவற்பரந் தொழுக
... ... ... ... ... .... .... .... .... .... .... ....
கருஞ்சினை விறல்வேம் பறுத்த குட்டுவன்"
(49)
என்னும் பதிற்றுப்பத்துப் பகுதியுள் வரும்
'நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்'
என்னும் தொடர்.
"இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்"
(குறள். 779)
என்னும் குறளொடு பொருந்திய, தமிழ்ப் பூட்கை மறவரின் பொது வியல்பைக்
குறிப்பதன்றி, வேற்றுநாட்டு மறவரின் சிறப்பியல்பைக் குறிப்பதாகாது.
ஆதலால்,
"இழிசின னாகிய காசன் அரசனுடைய
ஐய நடுக்கம் போக்க உதிரத்தால் நனைந்த
தோலில் இன்று கோசமுறையில் ஆணையிட்டனன்"
எனப் பெரும்புலவர் ரா. இராகவையங்கார் மேற்கோள் காட்டும் காசுமீர நாட்டு
வரலாறாகிய இராச தரங்கணிப் பகுதி, கோசர் தமிழரல்லர் என்னுங் கொள்கைக்குச்
சான்றாகாமை காண்க...
பூட்கை # மறவா புரிஞ்சிக்கோ பிழைச்சிக்கோ....
நேற்று, 04:34 PM · பொது

வடுகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக