வெள்ளி, 22 டிசம்பர், 2017

நெய்தல் சொல்லாய்வு திணை வேர்ச்சொல் நள் நெய் பாவாணர்

aathi tamil aathi1956@gmail.com

அக். 12
பெறுநர்: எனக்கு
அழகன். விம , 3 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
நெய்தல் பெயர் காரணம்:
நள்ளுதல் =
1. அடைதல்."உயர்ந்தோர் தமைநள்ளி" (திருவானைக்.கோச்செங்.25).
2. செறிதல். "நள்ளிருள்யாமத்
து" (சிலப்.15:105).
3. கலத்தல், பொருந்துதல்.
4.நட்புச்செய்தல். "நாடாது நட்டலின்கேடில்லை" (குறள்.761)
நள்ளார் = பகைவர்.
நள் - நண். நண்ணுதல் = 1.கிட்டுதல்."நம
்பனையுந் தேவ னென்று நண்ணுமது"(திருவாச.12:17).
2.பொருந்துதல்.
3.நட்புச் செய்தல்.நண்ணுநர் = நண்பர் (பிங்.). நண்ணார் =
பகைவர்."நண்ணாரும் உட்குமென் பீடு" (குறள்.1088)
நள் - நளி. நளிதல் = 1. செறிதல்."நளிந்துபலர் வழங்காச் செப்பந்
துணியின்"(மலைபடு.197). 2. ஒத்தல். "நாட நளிய நடுங்கநந்த" (தொல்.1232)
நள் - நெள் - நெய். நெய்தல் = 1.தொடுத்தல். "நெய்தவை தூக்க"
(பரிபா.19:80). 2.ஆடை பின்னுதல். "நெய்யு நுண்ணூல்"
(சீவக.3019).3.ஒட்டுதல்.
நெய் = ஒட்டும் பொருளாகிய உருக்கினவெண்ணெய். "நீர்நாண
நெய்வழங்கியும்"(புறம்.166:21).2. வெண்ணெய். "நெய்குடை தயிரினுரையொடும்"
(பரிபா.16:3).3. எண்ணெய்."நெய்யணி மயக்கம்"
தொல்.பொருள்.146).4.புனுகுநெய். "மையிருங் கூந்தல்நெய்யணி மறப்ப"
(சிலப்.4:56). 5. தேன்."நெய்க்கண் ணிறாஅல்" (கலித்.42).
6.அரத்தம்."நெய்யரி மற்றிய நீரெலாம்"(நீர்நிறக்.51).7.கொழுப்பு.
"நெய்யுண்டு"(கல்லா.71).8. நேயம், நட்பு. "நெய்பொதிநெஞ்சின் மன்னர்"
(சீவக.3049).
நெய் - நேய் - நேயம் = 1. நெய் (பிங்.).2. எண்ணெய் (பிங்.). 3.அன்பு.
"நேயத்த தாய்நென்ன லென்னைப் புணர்ந்து" (திருக்கோ.39).4.தெய்வப் பற்று.
"நேயத்தே நின்ற நிமலனடிபோற்றி" (திருவாச.1:13)
நேயம்-நேசம்= 1.அன்பு. "நேசமுடையவடியவர்கள்" (திருவாச.9:4) .2.
ஆர்வம்."வரும்பொரு ளுணரு நேசம்" (இரகு. இரகுவு.38).
நேசம்-நேசி. நேசித்தல். 1. அன்புவைத்தல். "நேசிக்குஞ் சிந்தை" (தாயு.உடல்பொய்.
32).2. மிக விரும்புதல்.
"நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்"
(தாயு. பரிபூர.13).
நெய் - நெய்தல் = நீர் வற்றியகாலத்திலும் குளத்துடன் ஒட்டியிருக்கும்
செடிவகை,அச் செடி வளரும் கடற்கரை நிலம், கடலும் கடல்சார்ந்த இடமும்.
"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு"
(மூதுரை,17)
என்பதை நோக்குக.
(தமிழர் வரலாறு பகுதி-1 பக்கம் 102,103)
நெய்தல் (ஒட்டி இருத்தல்) எனும் தொழிலின் பெயர் அத்தொழிலைச் செய்யும்
பூச்செடிக்கு ஆகி வந்ததால் இது தொழிலாகு பெயராகும்.நெய்தல் என்னும் மலர்
பெயர் அம்மலர் உள்ள கடற்கரை பகுதிக்கு ஆகி வந்ததால் இது இடவனாகு
பெயர்(இருமடி ஆகு பெயர்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக