வெள்ளி, 22 டிசம்பர், 2017

தமிழருவி மணியன் சீமான் உடன் பிறகு விலகல் இரட்டைவேடம்

aathi tamil aathi1956@gmail.com

அக். 11
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம்
# முகமூடி_எண்_1
நாம் தமிழர் இயக்கத்தை தூசி தட்டி மீண்டும் கட்டியெழுப்பிக்
கொண்டிருந்தார் அண்ணன் சீமான். மாநாட்டு, பொதுக்கூட்ட மேடைகளில் அப்போது
அவருக்கு அருகே இருந்தவர் தமிழருவி மணியன். அதற்கு சில மாதங்களுக்கு
முன்பு தான் மணியன் எனக்கு அறிமுகமானார்..
இப்போது உள்ளது போல சமூக ஊடகங்கள் அப்போது வளர்ந்திருக்கவில்லை.
நாளிதழ்களும், வார இதழ்களும் தான், அரசியல் பசிக்கு தீனியாக இருந்தது.
ஒரு வார இதழில் மணியனின் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. இன அழிப்பில்
காங்கிரசின் பங்கு, திமுகவின் துரோகம், உலகநாடுகளின் மௌனம் என்று
விளாவாரியாக எழுதியிருந்தார். அதன் மூலம் கருணாநிதி மீதான எனது
அபிப்பிராயத்தை முதலில் தகர்த்தவர் தமிழருவி மணியன் தான். அப்பேர்ப்பட்ட
ஒருவர் அண்ணன் சீமானோடு நிற்கிறார் என்ற பெருமிதத்தோடு அவரைக் கவனித்து
வந்தோம்..
இயக்கத்தை அரசியல் கட்சியாக அண்ணன் மாற்றுகிறார். தேர்தல் அரசியல்
ஒத்துவராது என்று முரண்பட்டார் மணியன். வாக்கரசியலில் தனக்கு நம்பிக்கை
இல்லையென்று விலகி நின்றார்.. சொந்தமாக காந்திய மக்கள் இயக்கத்தை
உருவாக்கினார். வைகோவை முதல்வராக்குவேன் என்று சூளுரைத்தார். மோடியை
பிரதமாராக்குவோம் என்று பல கட்சிகளை ஒன்றிணைத்தார். விசயகாந்தின்
வாக்குவங்கியைப் பற்றிப் பேசினார். இயக்க அரசியல் தான் சரி என்று
அண்ணனோடு விவாதித்தவர், தனது இயக்கத்தை அரசியல் கட்சியாக
மாற்றினார்.தேர்தலில் நம்பிக்கை இல்லை என்று சொன்னவர் கடந்த தேர்தலில்
வேட்பாளர்களையும் நிறுத்தினார்.. இன்று ரசினிக்கு துடுப்பாக புது
அவதாரமும் எடுத்திருக்கிறார்..
முகமூடி நம்பர் ஒன்!!
----- பதிவாளர்: தம்பி Selvago Mathi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக