வெள்ளி, 22 டிசம்பர், 2017

முல்லை சொல்லாய்வு திணை வேர்ச்சொல் முல் முள் பாவாணர்

aathi tamil aathi1956@gmail.com

அக். 12
பெறுநர்: எனக்கு
அழகன். விம , 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
முல்லை பெயர் காரணம்:-
முல் - முன் - முனை = கூர்மை, கடலிற்குள்நீண்டுசெல்லும் கூரிய நிலப் பகுதி.
முல் - முள் = 1. கூர்மை. "முள்வாய்ச்சங்க
ம்" (சிலப். 4:78). 2. கூரிய நிலைத்திணையுறுப்பு. "இளைதாக முண்மரங்
கொல்க" (குறள். 879).3. ஊசி. 4. பலாக்காய் முனை.
முள் - முளை = கூரிய முனை. "முள்ளுறழ்முளையெயிற்று" (கலித்.4)
முல்-முல்லை=கூரிய அரும்புவகை, அஃதுள்ளகொடி, அக் கொடி வளரும் காடு,
காடும் காடு சார்ந்தஇடமும்.
"முல்லை வைந்நுனை தோன்றவில்லமொடு" (அகம். 4:1).
என்பதில், முல்லையரும்பை வைந்நுனை என்று அதன் கூர்மையைச் சிறப்பித்திருத்
தல்காண்க. வை = கூர்மை.
(பாவாணர்;தமிழர் வரலாறு பகுதி1-பக்கம் 100,101)
முல்லை என்னும் பூவின் பெயர் அந்த பூவை உடைய செடிக்கு ஆகி வந்தது
சினையாகு பெயராகும்(சினை-
உறுப்பு,பூ என்னும் உறுப்பின் பெயர் அவ்வுறுப்பை உடைய செடிக்கு ஆகி
வந்ததால் சினை ஆகு பெயர் என்க.செடியின் பெயர் அச்செடி உடைய நிலத்திற்கு
ஆகி வந்ததால் இருமுடி ஆகுபெயராகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக