அசோகர் காலத்திற்குப் பிற்பட்டதே சமஸ்கிருதம் – வழிப்போக்கன்
‘சமசுகிருதம் முதலில் தோன்றியதா…அல்லது தமிழ் முதலில் தோன்றியதா’ – நீண்ட
காலமாக நீண்டுக் கொண்டு இருக்கும் ஒரு விவாதம்.
இன்று பெரும்பாலான மக்கள் சமசுகிருதத்தினையே முதல் மொழி என்று கருதிக்
கொண்டு இருக்கின்றனர். இதற்கு முழு முதற்க் காரணம் நாம் முதல் பதிவில்
கண்ட சர் வில்லியம் சோன்சும் மாக்சு முல்லேருமே அவர். அவர்கள் தான்
சமசுகிருதத்தினை ஆராயும் பொழுது அதனில் கிரேக்கச் சொற்கள், இலட்டின்
சொற்கள் போன்ற பல ஐரோப்பியச் சொற்கள் இருப்பதனைக் கண்டு வியந்து “இவர்கள்
வேதங்கள் பல்லாயிரக்கணக்க
ான வருடங்கள் பழமையானவை என்று கூறுகின்றனர்… அதில் தொடங்கியது தான்
சமசுகிருதம் உலகின் பழமையான மொழி என்றக் கோட்பாடு. இது சரியான கோட்பாடா
என்பதனை நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.
அந்நிலையில் ஒரு மொழியினைப்பற்றி முழுதும் அறிய அந்த மொழியினைப் பேசிய
மக்கள் எங்கே இருந்தனர்…அவர்கள் இருந்தமைக்குச் சான்றுகள் இருக்கின்றனவா
என்று பலவும் ஆராய வேண்டி இருக்கின்றது. ஏனெனில் பேசினோம் ஆனால் அதற்குச்
சான்றுகள் இல்லை என்று கூறுவது என்றுமே தகுந்த கூற்றாக அமையாது. இன்றும்
கூட அலுவலுகத்திலும் சரி வேறு இடங்களிலும் சரி நீங்கள் ஏதேனும்
முக்கியமான செய்திகளைப் பற்றிப் பேசுகின்றீர்கள் என்றால் அதற்கு சான்றாக
எழுத்து வடிவத்தில் ஏதேனும் ஒன்றை வைத்துக் கொள்ளத்தான் வேண்டி
இருக்கின்றது. எனவே ஆயிரம் ஆயிரம் வருடங்கள் பேசிக் கொண்டு வந்த மொழி
என்று கூறினாலும் அது எப்பொழுது எழுத்துருவில் கிடைக்கின்றதோ அப்பொழுது
இருந்து தான் ஒரு மொழியின் காலத்தினை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். அதுவே
முறை.
சரி…இப்பொழுது நாம் அசோகரை கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சந்திக்க வேண்டி
இருக்கின்றது. இந்திய வரலாற்றில் நாம் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய
ஒருவர் இவர். இவரைப் பற்றி நாம் முன்னரே மூன்றாம் பதிவில் கண்டு
இருக்கின்றோம். புத்தத்தினைத் தழுவி இருக்கும் அவர் புத்த மதக்
கொள்கைகளையும், பலி கூடாது என்ற கொள்கைகளையும் மக்களிடம் பரப்ப பல
மொழிகளில் கல்வெட்டுகளைத் தயார் செய்கின்றார். அவர் அன்று செய்த
கல்வெட்டுகளே இன்று இந்தியாவின் வரலாற்றினை நாம் அறிந்து கொள்ள உதவும்
மேலும் சில கருவிகளாகத் திகழ்கின்றன. எனவே நாம் அவற்றினைக் காண வேண்டிய
அவசியம் வருகின்றது. அசோகரின் கல்வெட்டுகள் பின் வரும் மொழிகளிலேயே
கிடைக்கப்பட்டு உள்ளன.
பாலி
அருத்தமாகதி
தமிழ்
கிரேக்கம்
அரமேயம்
ஆச்சரியவசமாக சமசுகிருதத்தில் ஒரு கல்வெட்டு கூட இதுவரை கிட்டவில்லை.
இதில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கின்றது என்று பார்த்தால், அசோகர்
பலிகள் இடும் பழக்கத்தை தடுப்பதற்கே முக்கியமாக கல்வெட்டுகளை
உருவாக்குகின்றார். வேதங்களோ பலியினை உடைய வழிபாட்டு முறையினை உடையதாக
உள்ளன. மேலும் வேதங்கள் அனைத்தும் சமசுகிருதத்திலேயே உள்ளன. இந்நிலையில்
வேதங்களை போற்றும் மக்கள் மத்தியில் உள்ள பலி இடும் பழக்கத்தினை மாற்ற
அசோகர் நிச்சயம் அம்மொழியில் கல்வெட்டுக்களை அமைத்து இருக்க
வேண்டும்தானே. ஆனால் அசோகரின் கல்வெட்டு ஒன்று கூட சமசுகிருதத்தில்
காணப்பட வில்லை.
“அட என்னங்க சமசுகிருதம் தெய்வ மொழி… அதனைப் பொது மக்கள் அறிந்து
கொள்ளுமாறு எவ்வாறு கல்வெட்டினை வடித்து வைப்பர்” என்று பார்த்தோமானால்,
கி.பி இரண்டாம் நூற்றாண்டில் நமக்கு முதல் சமசுகிருதக் கல்வெட்டுக்
கிடைக்கின்றது. அதுவும் சந்திர குப்த மௌரியர் கட்டிய ஒரு அணையைப் பழுது
பார்த்த செய்தியை சுமந்து கொண்டு கிடைக்கின்றது. ஆனால் இங்கு கிடைக்கும்
சமசுகிருதம் தனது முழுமையான வடிவத்தினை அடையவில்லை என்றே ஆராச்சியாளர்கள்
கருதுகின்றனர். செப்பமான சமசுகிருத கல்வெட்டுகள் மற்றும் எழுத்துகள்
கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தே கிடைக்கப் பெறுகின்றன.
அதாவது முதல் சமசுகிருதக் கல்வெட்டே கி.பி இரண்டாம் நூற்றாண்டில்தான்
கிடைக்கின்றது. அதுவும் செப்பமான வடிவில் அல்லாது கிடைக்கின்றது.
ஆய்வாளர்கள் கூறுவது, அசோகர் சமசுகிருதத்தை பயன்படுத்தவில்ல
ை காரணம் அவர் காலத்தில் சமசுகிருதம் என்ற மொழியே இல்லை.
ஒன்று கி.பி இரண்டாம் நூற்றாண்டின் வரை சமசுகிருதம் என்ற சொல் எங்கேயும்,
எந்த இலக்கியத்திலும் சரி கல்வெட்டுகளிலும் சரி காணப்படவில்லை. நான்
சமசுகிருத எழுத்துகளைச் சொல்ல வில்லை, சமசுகிருதம் என்ற சொல்லையே எங்கும்
காண முடியவில்லை. வேதங்களை வாய் மொழியில் சொன்னார்கள் சரி… அப்படி
அவர்கள் சொன்னார்கள் என்ற தகவலாவது காணப்பட வேண்டும் அல்லவா…இது வரை
அத்தகைய வேதங்கள் கி.மு காலங்களில் இருந்ததாகவும் சரி வேதங்களின் படி
மக்கள் பிரிந்து இருந்தார்கள் என்பதற்கும் சரி சான்றுகளே இல்லை.
மேலும் அசோகர் காலத்து எழுத்துகளை, பிராகிருத எழுத்துகள் என்பர்.
பிராகிருதம் என்றால் – இயற்கையாகவே எழுந்த மொழிகள் என்று பொருள்.
அனால் சமசுகிருதமோ – நன்கு செய்யப்பட்டது என்ற பொருளினைத் தருகின்றது.
நன்கு செய்யப்பட்டது என்றால் என்ன… யாரால் செய்யப்பட்டது என்றும் நாம்
காண வேண்டி இருக்கின்றது.
அதாவது ஒரு மொழி இருக்கின்றது. ஆனால் அம்மொழியின் எழுத்துகளோ…
அம்மொழியைப் பற்றிய தகவல்களோ, அதனை யார் பேசினர்… எங்கு பேசினர் என்ற
தகவல்களோ கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை கிட்டவில்லை.
இல்லை… சமசுகிருதத்தில் வேதப்பாடல்கள் உள்ளனவே. எனவே சமசுகிருதம்
பழமையானதான ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தும் இப்பொழுது
எழலாம். உண்மைதான்.
வேதங்கள் இன்று சமசுகிருதத்தில் இருக்கின்றன. ஆனால் அவை வெறும்
பாடல்களாய் இருந்த பொழுது சமசுகிருதத்தில்தான் இருந்தன என்று எவ்வாறு
நாம் சொல்ல முடியும். பின்னால் தொகுக்கப்பட்டு இருக்கலாம் அல்லவா.
ஏன் எனில் இந்திரன், வருணன் ஆகிய கடவுள்கள் தமிழில் மொழியில் தினைக்
கடவுள்களாக அறியப்பட்டு உள்ளனர். மேலும் வேதத்தில் உள்ள ‘தியெளசு’ என்ற
வான் கடவுள் கிரேக்கத்தில் உள்ள ‘சுஃசு’ கடவுளை நினைவுபடுத்துகி
ன்றார். மேலும் பெர்சியர்களின் வழிபாட்டுப் பழக்கங்களும் சரி கடவுள்களின்
பெயர்களும் சரி வேதங்களில் காணப்படும் சில பெயர்களையும் வழிபாட்டு
முறைகளையும் ஒத்தே இருக்கின்றன. அந்த வழிபாட்டுப் பழக்கங்கள் எல்லாம்
சமசுகிருதத்தின் காலத்துக்கு முன்னரே காணப்படுவதால் அப்பாடல்களே பின்னர்
வேதங்களாக தொகுக்கப்பட்டன என்றும் நாம் கருத வாய்ப்பிருக்கின்றது.
சான்றுக்கு, இன்று ஆங்கிலம் இருக்கின்றது. நம்முடைய நூல்கள் பலவற்றை
மக்கள் பலரும் அறிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கின்றோம். பல மொழி பேசும் மக்களின் இலக்கியங்கள், பாடல்கள்,
வழிபாட்டு பழக்கங்கள் ஆகியவை ஆங்கிலத்தில் இப்பொழுது காணப்படுகின்றன.
ஆனால் அதை வைத்துக் கொண்டே ஆங்கிலத்தில் இருந்துதான் அம்மொழிகளின்
இலக்கியங்கள் எல்லாம் வந்தது என்றுக் கருதுவது சரியாகுமா? அப்பொழுது எந்த
மொழியில் இருந்து எந்த மொழி வந்தது என்று அறிவதற்கு மொழியின் காலத்தைக்
கணக்கிட்டுத்தான் பார்க்க வேண்டும். ஆனால் அப்பொழுது ஆங்கிலம் எழுதப்படவே
இல்லை வாய் வழியாகவே நாங்கள் அந்தப் பாடல்களைக் கூறிக் கொண்டு வந்தோம்
பின்னரே அவற்றை எழுத நேர்ந்தது என்று கூறினால் அதை மறுக்க முடியுமா
அல்லது ஏற்றுக் கொள்ளத் தான் முடியுமா?
எனவே, சான்றுகள் இன்றி ஒரு மொழியின் காலத்தைக் கணிக்க முடியாது.
சமசுகிருத மொழி உலகில் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை
இருந்ததற்குச் சான்றுகளே இல்லை. எனவே சமசுகிருதத்தின் காலத்தினை, கி.பி
இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் தான் வைக்க முடியும் மாற்று ஆதாரங்கள்
கிட்டும் வரை.
@வழிப்போக்கன்.
‘சமசுகிருதம் முதலில் தோன்றியதா…அல்லது தமிழ் முதலில் தோன்றியதா’ – நீண்ட
காலமாக நீண்டுக் கொண்டு இருக்கும் ஒரு விவாதம்.
இன்று பெரும்பாலான மக்கள் சமசுகிருதத்தினையே முதல் மொழி என்று கருதிக்
கொண்டு இருக்கின்றனர். இதற்கு முழு முதற்க் காரணம் நாம் முதல் பதிவில்
கண்ட சர் வில்லியம் சோன்சும் மாக்சு முல்லேருமே அவர். அவர்கள் தான்
சமசுகிருதத்தினை ஆராயும் பொழுது அதனில் கிரேக்கச் சொற்கள், இலட்டின்
சொற்கள் போன்ற பல ஐரோப்பியச் சொற்கள் இருப்பதனைக் கண்டு வியந்து “இவர்கள்
வேதங்கள் பல்லாயிரக்கணக்க
ான வருடங்கள் பழமையானவை என்று கூறுகின்றனர்… அதில் தொடங்கியது தான்
சமசுகிருதம் உலகின் பழமையான மொழி என்றக் கோட்பாடு. இது சரியான கோட்பாடா
என்பதனை நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.
அந்நிலையில் ஒரு மொழியினைப்பற்றி முழுதும் அறிய அந்த மொழியினைப் பேசிய
மக்கள் எங்கே இருந்தனர்…அவர்கள் இருந்தமைக்குச் சான்றுகள் இருக்கின்றனவா
என்று பலவும் ஆராய வேண்டி இருக்கின்றது. ஏனெனில் பேசினோம் ஆனால் அதற்குச்
சான்றுகள் இல்லை என்று கூறுவது என்றுமே தகுந்த கூற்றாக அமையாது. இன்றும்
கூட அலுவலுகத்திலும் சரி வேறு இடங்களிலும் சரி நீங்கள் ஏதேனும்
முக்கியமான செய்திகளைப் பற்றிப் பேசுகின்றீர்கள் என்றால் அதற்கு சான்றாக
எழுத்து வடிவத்தில் ஏதேனும் ஒன்றை வைத்துக் கொள்ளத்தான் வேண்டி
இருக்கின்றது. எனவே ஆயிரம் ஆயிரம் வருடங்கள் பேசிக் கொண்டு வந்த மொழி
என்று கூறினாலும் அது எப்பொழுது எழுத்துருவில் கிடைக்கின்றதோ அப்பொழுது
இருந்து தான் ஒரு மொழியின் காலத்தினை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். அதுவே
முறை.
சரி…இப்பொழுது நாம் அசோகரை கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சந்திக்க வேண்டி
இருக்கின்றது. இந்திய வரலாற்றில் நாம் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய
ஒருவர் இவர். இவரைப் பற்றி நாம் முன்னரே மூன்றாம் பதிவில் கண்டு
இருக்கின்றோம். புத்தத்தினைத் தழுவி இருக்கும் அவர் புத்த மதக்
கொள்கைகளையும், பலி கூடாது என்ற கொள்கைகளையும் மக்களிடம் பரப்ப பல
மொழிகளில் கல்வெட்டுகளைத் தயார் செய்கின்றார். அவர் அன்று செய்த
கல்வெட்டுகளே இன்று இந்தியாவின் வரலாற்றினை நாம் அறிந்து கொள்ள உதவும்
மேலும் சில கருவிகளாகத் திகழ்கின்றன. எனவே நாம் அவற்றினைக் காண வேண்டிய
அவசியம் வருகின்றது. அசோகரின் கல்வெட்டுகள் பின் வரும் மொழிகளிலேயே
கிடைக்கப்பட்டு உள்ளன.
பாலி
அருத்தமாகதி
தமிழ்
கிரேக்கம்
அரமேயம்
ஆச்சரியவசமாக சமசுகிருதத்தில் ஒரு கல்வெட்டு கூட இதுவரை கிட்டவில்லை.
இதில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கின்றது என்று பார்த்தால், அசோகர்
பலிகள் இடும் பழக்கத்தை தடுப்பதற்கே முக்கியமாக கல்வெட்டுகளை
உருவாக்குகின்றார். வேதங்களோ பலியினை உடைய வழிபாட்டு முறையினை உடையதாக
உள்ளன. மேலும் வேதங்கள் அனைத்தும் சமசுகிருதத்திலேயே உள்ளன. இந்நிலையில்
வேதங்களை போற்றும் மக்கள் மத்தியில் உள்ள பலி இடும் பழக்கத்தினை மாற்ற
அசோகர் நிச்சயம் அம்மொழியில் கல்வெட்டுக்களை அமைத்து இருக்க
வேண்டும்தானே. ஆனால் அசோகரின் கல்வெட்டு ஒன்று கூட சமசுகிருதத்தில்
காணப்பட வில்லை.
“அட என்னங்க சமசுகிருதம் தெய்வ மொழி… அதனைப் பொது மக்கள் அறிந்து
கொள்ளுமாறு எவ்வாறு கல்வெட்டினை வடித்து வைப்பர்” என்று பார்த்தோமானால்,
கி.பி இரண்டாம் நூற்றாண்டில் நமக்கு முதல் சமசுகிருதக் கல்வெட்டுக்
கிடைக்கின்றது. அதுவும் சந்திர குப்த மௌரியர் கட்டிய ஒரு அணையைப் பழுது
பார்த்த செய்தியை சுமந்து கொண்டு கிடைக்கின்றது. ஆனால் இங்கு கிடைக்கும்
சமசுகிருதம் தனது முழுமையான வடிவத்தினை அடையவில்லை என்றே ஆராச்சியாளர்கள்
கருதுகின்றனர். செப்பமான சமசுகிருத கல்வெட்டுகள் மற்றும் எழுத்துகள்
கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தே கிடைக்கப் பெறுகின்றன.
அதாவது முதல் சமசுகிருதக் கல்வெட்டே கி.பி இரண்டாம் நூற்றாண்டில்தான்
கிடைக்கின்றது. அதுவும் செப்பமான வடிவில் அல்லாது கிடைக்கின்றது.
ஆய்வாளர்கள் கூறுவது, அசோகர் சமசுகிருதத்தை பயன்படுத்தவில்ல
ை காரணம் அவர் காலத்தில் சமசுகிருதம் என்ற மொழியே இல்லை.
ஒன்று கி.பி இரண்டாம் நூற்றாண்டின் வரை சமசுகிருதம் என்ற சொல் எங்கேயும்,
எந்த இலக்கியத்திலும் சரி கல்வெட்டுகளிலும் சரி காணப்படவில்லை. நான்
சமசுகிருத எழுத்துகளைச் சொல்ல வில்லை, சமசுகிருதம் என்ற சொல்லையே எங்கும்
காண முடியவில்லை. வேதங்களை வாய் மொழியில் சொன்னார்கள் சரி… அப்படி
அவர்கள் சொன்னார்கள் என்ற தகவலாவது காணப்பட வேண்டும் அல்லவா…இது வரை
அத்தகைய வேதங்கள் கி.மு காலங்களில் இருந்ததாகவும் சரி வேதங்களின் படி
மக்கள் பிரிந்து இருந்தார்கள் என்பதற்கும் சரி சான்றுகளே இல்லை.
மேலும் அசோகர் காலத்து எழுத்துகளை, பிராகிருத எழுத்துகள் என்பர்.
பிராகிருதம் என்றால் – இயற்கையாகவே எழுந்த மொழிகள் என்று பொருள்.
அனால் சமசுகிருதமோ – நன்கு செய்யப்பட்டது என்ற பொருளினைத் தருகின்றது.
நன்கு செய்யப்பட்டது என்றால் என்ன… யாரால் செய்யப்பட்டது என்றும் நாம்
காண வேண்டி இருக்கின்றது.
அதாவது ஒரு மொழி இருக்கின்றது. ஆனால் அம்மொழியின் எழுத்துகளோ…
அம்மொழியைப் பற்றிய தகவல்களோ, அதனை யார் பேசினர்… எங்கு பேசினர் என்ற
தகவல்களோ கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை கிட்டவில்லை.
இல்லை… சமசுகிருதத்தில் வேதப்பாடல்கள் உள்ளனவே. எனவே சமசுகிருதம்
பழமையானதான ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தும் இப்பொழுது
எழலாம். உண்மைதான்.
வேதங்கள் இன்று சமசுகிருதத்தில் இருக்கின்றன. ஆனால் அவை வெறும்
பாடல்களாய் இருந்த பொழுது சமசுகிருதத்தில்தான் இருந்தன என்று எவ்வாறு
நாம் சொல்ல முடியும். பின்னால் தொகுக்கப்பட்டு இருக்கலாம் அல்லவா.
ஏன் எனில் இந்திரன், வருணன் ஆகிய கடவுள்கள் தமிழில் மொழியில் தினைக்
கடவுள்களாக அறியப்பட்டு உள்ளனர். மேலும் வேதத்தில் உள்ள ‘தியெளசு’ என்ற
வான் கடவுள் கிரேக்கத்தில் உள்ள ‘சுஃசு’ கடவுளை நினைவுபடுத்துகி
ன்றார். மேலும் பெர்சியர்களின் வழிபாட்டுப் பழக்கங்களும் சரி கடவுள்களின்
பெயர்களும் சரி வேதங்களில் காணப்படும் சில பெயர்களையும் வழிபாட்டு
முறைகளையும் ஒத்தே இருக்கின்றன. அந்த வழிபாட்டுப் பழக்கங்கள் எல்லாம்
சமசுகிருதத்தின் காலத்துக்கு முன்னரே காணப்படுவதால் அப்பாடல்களே பின்னர்
வேதங்களாக தொகுக்கப்பட்டன என்றும் நாம் கருத வாய்ப்பிருக்கின்றது.
சான்றுக்கு, இன்று ஆங்கிலம் இருக்கின்றது. நம்முடைய நூல்கள் பலவற்றை
மக்கள் பலரும் அறிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கின்றோம். பல மொழி பேசும் மக்களின் இலக்கியங்கள், பாடல்கள்,
வழிபாட்டு பழக்கங்கள் ஆகியவை ஆங்கிலத்தில் இப்பொழுது காணப்படுகின்றன.
ஆனால் அதை வைத்துக் கொண்டே ஆங்கிலத்தில் இருந்துதான் அம்மொழிகளின்
இலக்கியங்கள் எல்லாம் வந்தது என்றுக் கருதுவது சரியாகுமா? அப்பொழுது எந்த
மொழியில் இருந்து எந்த மொழி வந்தது என்று அறிவதற்கு மொழியின் காலத்தைக்
கணக்கிட்டுத்தான் பார்க்க வேண்டும். ஆனால் அப்பொழுது ஆங்கிலம் எழுதப்படவே
இல்லை வாய் வழியாகவே நாங்கள் அந்தப் பாடல்களைக் கூறிக் கொண்டு வந்தோம்
பின்னரே அவற்றை எழுத நேர்ந்தது என்று கூறினால் அதை மறுக்க முடியுமா
அல்லது ஏற்றுக் கொள்ளத் தான் முடியுமா?
எனவே, சான்றுகள் இன்றி ஒரு மொழியின் காலத்தைக் கணிக்க முடியாது.
சமசுகிருத மொழி உலகில் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை
இருந்ததற்குச் சான்றுகளே இல்லை. எனவே சமசுகிருதத்தின் காலத்தினை, கி.பி
இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் தான் வைக்க முடியும் மாற்று ஆதாரங்கள்
கிட்டும் வரை.
@வழிப்போக்கன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக