வெள்ளி, 16 மார்ச், 2018

நன்னர் நந்தர் ஆனது கங்கரிடை மகதம் ஆனது அரையர் ஆரியர் ஆனது மௌரியர் வடுகர்

aathi1956 aathi1956@gmail.com

23/11/17
பெறுநர்: எனக்கு
Gunaseelan Samuel
அகன் அவர்கள் எழுதிய “மெய்ம்மை” எனும் நூலுக்கு வழங்கிய அணிந்துரை:
என் நூல்களுக்கு யாரிடமிருந்தும் அணிந்துரை பெற்றதில்லை; ஓரிரண்டு தவிர. புலவர் மகிபை பாவிசைக்கோவிடம் நானே அணிந்துரையைக் கேட்டுப்பெற்ற ‘தொல்காப்பியத்தின் காலம்’ எனும் நூல் ஒரு விதிவிலக்கு. அதோடு, நான் பிறரின் நூல்களுக்கு அணிந்துரை வழங்கியதுமில்லை; ஓரிருவர் நூல்களைத் தவிர.
பொறிஞர் அகன் அவர்களின் ‘மெய்ம்மை’ எனும் இந் நூலுக்கு அணிந்துரை வழங்குமாறு ஆம்பூர் க. ஏ. மணவாளன் ஐயா சொன்னார். அகன் அவர்களின் எண்ணவோட்டமும் என்னுடைய எண்ண வோட்டமும் ஏறத்தாழ ஓரே அலைவரிசையில் இருப்பதால், நான் உடனே ஒப்பினேன்.
வடமேற்கிலிருக்கும் கைபர், போலன் கணவாய்களின் வழியாக ஆரியப்படையெடுப்புகள் வந்தனவென ஐரோப்பியர்கள் கட்டிவிட்ட கதையை நான் தொடர்ந்து மறுத்துவந்துள்ள
ேன். ‘ஆரியர்’ என்போர் வடுகரேயென வழக்குரைத்து வந்துள்ளேன். கீழைகங்கைக்கரையில் ஆண்டுவந்த தமிழர்களை வீழ்த்திய வடுக அநாகரிகர்கள், அத் தமிழர்களிடையே வழங்கிவந்த ஆட்சியியல் சொற்களை அப்படியே எடுத்தாளத் தொடங்கினர் என்றும் சொல்லிவருகிறேன்.
‘அஃது எப்படி?’ என்னும் வினா எழுவது இயல்புதானே?
அதற்கோர் ஒப்பியல் பாடம் அடியில்:
செருமானிய அநாகரிகரின் தலைவனாயிருந்த ‘அலாரீக்’ என்பான் அரண் சூழ்ந்த பண்டை உரோமாபுரியை மூன்று முறை முற்றினான்; மூன்றாவது முறைதான் அந்த நகரை அவன் முழுமையாகக் கைப்பற்றினான். ஆயினும், உரோமப் பண்பாட்டின்மீது அவனுக்கு ஓர் ஈர்ப்பு இருந்தது. அதனால், உரோம ஆண்டைகளுக்கிருந
்த பெயர் வழக்கைப் போன்று தன்னை ‘அலாரீக்கசு’ (Alaricus) என்று அழைக்குமாறு தன் குடியினரை வலியுறுத்தினான்; உரோமைக் கைப்பற்றிய பின், உரோம ஆட்சியியல் அமைப்புகளையும் அதிகாரக் கூறுகளையும் தம் பழங்குடி மரபுகளுடன் அப்படியே இணைத்துக்கொண்டான்.
அதேபோல், கீழைக்கங்கைக்கரையில் ‘கங்கரிடைநாடு’ (மகதம்) எனும் நாட்டை ஆண்டுவந்த தமிழ் நன்ன(நந்த)ரிடம் வழக்கிலிருந்த ‘அரையர்’ எனும் சொல்லாட்சியை வடுகர்கள் அப்படியே தமதாக்கிக் கொண்டனர். நந்தர்களை வீழ்த்திப்பின் வடுகர்கள் உருவாக்கிய பாகத மொழியில் ‘அரையர்’ எனும் தமிழ்ச்சொல், ‘அரிய’ என்றானது. அன்றிலிருந்து மூன்று நூற்றாண்டுகளுக்குப்பின் தோற்றுவிக்கப்பட்ட சமற்கிருதம் எனும் செயற்கை மொழியின் இலக்கணப்படி, அதுவே ‘ஆரிய’ என்று முதலெழுத்து நீட்டி ஒலிக்கப்பட்டது.
இந்தக் கருத்தை நான் மீண்டும் மீண்டும் சொல்லிவந்தபோதும், என்னொடு நெருக்கமாயிருந்தவர்களும்கூட அதைப் புரிந்துகொள்ளாது ‘கைபர், போலன் கணவாய்களின் வழியாக வந்த ஆரியர்கள்’ என்று பழைய கதையையே ஒப்புவித்தனர். ஆனால், அகன் ஒருவர் மட்டும்தாம் நான் சொன்னதை முழுமையாக விளங்கிக்கொண்டு அதற்கோர் ஒப்புதல் கொடுத்தவர்.

அறிஞர் குணா 1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக