வெள்ளி, 16 மார்ச், 2018

குமரிக்கண்டம் நாடுகள் கிழக்காசிய நாடுகள் நூல் புத்தகம்

aathi1956 aathi1956@gmail.com

23/11/17
பெறுநர்: எனக்கு
ஆயினும், கடல்கொண்ட குமரிக்கண்டத்திலிருந்த ஏழ்தெங்க நாடுதான் இன்றைய சாவகம் (Java) என்பதும், சுமத்திரா தீவுதான் ஏழ்மதுரைநாடு என்பதும், ‘கழிபொருநை’யே ‘கலிபோர்னியா’ என்று கூறி அது குமரிநாட்டில் இருந்தது என்பதும், பாப்புவா கினியாத் தீவுதான் ஏழ்முன்பாலைநாடு என்பதும், சாலமோன் தீவுகள்தான் ஏழ்பின்பாலைநாடு என்பதும், மைக்கிரோனேசியப் பகுதித்தான் ஏழ்குணக்கரைநாடு என்பதும், ஈழத் தீவுகள்தான் ஏழ்குறும்பனைநாட
ு என்பதும் உலகப் புவியலைச் சிக்கலுக்குள்ளாக்கலாம். வெறும் வாயை மென்றுகொண்டிருக்கும் தமிழ்ப்பகைக்கு அஃது அவலாக ஆகிவிடக் கூடாது.
இருப்பினும், தமிழரின் வரலாற்று மெய்ம்மைகளை எளிமையான அழகுத் தனித்தமிழில் பாடநூலைப்போல் ஆக்கிப் பொறிஞர் அகன் வெள்ளோட்டம் விட்டுள்ளார். ‘மெய்ம்மை’ என்னும் இந்த அரிய படைப்பு, தமிழரில் இளையத் தலைமுறை தன்னையும் தன் இனத்தின் வரலாற்றையும் அறிந்துகொள்ள உதவும் என்பதில் எள்முனை அளவேனும் ஐயமில்லை. ஆசிரியரின் ஆக்கப்பணி போற்றுதற்குரியது.
குணா
வெண்களூர்
17.07.2017
21 நவம்பர், 11:34

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக