வெள்ளி, 16 மார்ச், 2018

வானியல் வேர்ச்சொல் சொல்லாய்வு புத்தாண்டு

aathi1956 aathi1956@gmail.com

23/11/17
பெறுநர்: எனக்கு

இந் நூல் முழுவதும் சொல்லாய்வுகள் பரந்து கிடக்கின்றன. தானே ஒளிர்வது ‘நாள்மீன்’ என்றும், தானே ஒளிராதது ‘கோள்மீன்’ என்றும் விண்மீன்களைப் பிரித்துக்காட்டுவது; ‘சிந்தை’ எனும் சொல்லின் வழிவந்த ‘சிந்தனை’ என்பது தமிழ்ச்சொல்லே என்பது; ‘நாளிகை’ என்பதே ‘நாழிகை’ என்றானதென்பது; ‘ஓரை மாதப்பெயர்’களை ‘நாள்மீன் மாதப்பெயர்’களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது; ‘விண்ஞாலம்’ என்பதே ‘விஞ்ஞானம்’ ஆனதென்பது; ‘மேகம்’ என்பது தமிழ்ச்சொல்லே என்பது; ‘புரம்’ என்பதும் ‘புரி’ என்பதும் வெவ்வேறு நகரமைப்புகளைக் குறிப்பனவென்பது முதலானவையெல்லாம் ஆசிரியரின் சொல்லாய்வுத் திறனைக் காட்டுவன.
இளவேனில் பருவத்தில் சித்திரையில் தொடங்குகின்ற ஆண்டு பிறப்பே இயற்கையின் இயங்கியலோடு இயைந்ததெனக் கூறும் நூலாசிரியர் அதனை ‘வருடப் பிறப்பு’ என்றும், உழவுத்தொழிலோடு தொடர்புடைய ஆண்டுப்பிறப்பை ‘மாதப்பிறப்பு’ என்றும் நயமுடன் வேறுபடுத்திக் காட்டுகிறார் (பக்கம் 49). இதனை மறுப்பது எளிதன்று.
ஆயினும், கடல்கொண்ட

அறிஞர் குணா அணிந்துரை 4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக