திங்கள், 19 மார்ச், 2018

காமராசர் பிரதமருடன் பேசி நிலக்கரி தொண்ட அனுமதி வாங்கினார் நேரு நெய்வேலி

aathi tamil aathi1956@gmail.com

25/12/17
பெறுநர்: எனக்கு

நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் விவசாயி. வெள்ளையர் ஆட்சிக்கு தகவல் தந்தார். விடிவில்லை.
முதல்வர் ராசாசியிடம் முறையிட்டார். ஏற்கவில்லை. காமராசர் முதல்வரானதும் நேரில் சென்று பேசினார். பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர்.
மிக விரிவான விஞ்ஞானபூர்வமான திட்ட அறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.
தில்லி சென்று நேருவிடம் நெய்வேலி திட்டம் பற்றிப் பேசினார்.
காகிதங்களைப் புரட்டியவர் கையை விரித்தார் ..
" இதெல்லாம் சாத்தியமில்லை.."
"ஆய்வு செய்து இந்த அறிக்கையைத் தயாரித்தவர் அனுபவமுள்ள ஒரு பொறியாளர். இந்த திட்டத்தை மறுக்க இரண்டு காரணங்கள்தான் உள்ளன.
ஒன்று இந்த நாட்டில் பொறியியல் படிப்பு தரமாக இல்லை. அல்லது இதையெல்லாம் புரிந்து கொள்ளும் தகுதி அரசியல்வாதிகளான நமக்கு இல்லை.."
கேம்ப்ரிட்ஜில் படித்த அறிவாளியை கிழிகிழியென கிழித்துப் போட்டார் கைநாட்டு பேர்வழி, எருமைத் தோலர், அண்டங்காக்கா...! ( நன்றி.. மு.க)
கை சுத்தம் .. பிரதமராவது, பெரிய தலைவராவது ,. ..
( உள்துறை செயலாளரைப் பார்த்து நடுங்குகிறவர்கள், ஊழல் செய்து மாட்டிக் கொண்டு கைகால் பிடித்துவிடும் திராவிடான்சுகளுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை )
அடுத்தமுறை பொறியாளருடன் நேருவைச் சென்று சந்தித்தார். விளக்கினார். முதலீடு 150 கோடி என்றார்
"திட்டம் ஓகே.. நிதியில்லையே.. தமிழக அரசு நடத்தலாம்..."
"அரசின் ஆண்டு வருமானம் 150 கோடி ..
எங்களால் எப்படி...."
" நிலக்கரியை வெளியே கொண்டுவர மூன்றாண்டுகள் ஆகும் என்கிறார். ஆண்டுக்கு 50 கோடி போடுங்க..."
முடிவெடுத்தார் தமிழக முதல்வர் தமிழர் காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம். தமிழ்நாடுதானே காமராசருக்கு குடும்பம்.
1954 ல் 50 கோடி ஒதுக்கினார். பணிகள் தொடங்கப்பட்டன.
அடுத்த வருடம் 50 கோடி.
1956 ல் கடைசி தவணையைக் கொடுத்துவிட்டு தவிக்கத் தொடங்கினார்.
பிள்ளை பெண்டாட்டிகளுக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற இன்றைய திராவிட கவலையல்ல.
மக்கள் வரிப்பணமாச்சே.. மத்திய அரசு கேள்வி கேட்குமே ...!
சுரங்கப் பணிகள் முடிவடைந்து, நிலக்கரியை வெட்டியெடுத்து வெளியே கொண்டு வரும் நாளில்....
முதல்வர் நெய்வேலி வந்தார். சுரங்கத்தில் நின்றார்.
அதோ..
நீரும் நிலக்கரியும் கலந்து வழியும் கனிம வளத்தை தலையில் சுமந்தபடி தொழிலாளிகள் வருகின்றனர்.
ஓடினார் முதல்வர்....
மகனுக்கு மத்தியில் இலாக்கா வாங்கவா.. பேரனுக்கு சலுகை கேட்டா..?
தமிழ் மண்ணின் வளம்.. தமிழர் நலம் அல்லவா தலையிலிருந்து கறுப்பு தங்கமாக வழிகிறது ?
தாவியணைத்தார் அந்த தொழிலாளியை... கரியை அள்ளி கைகளால் முகர்ந்தார். ஆனந்தக் கூத்தாடினார்.
வெள்ளை கதர் சட்டை , கறுப்பாகி மின்னியது.
இன்று ஆண்டுக்கு லாபம் 2000 கோடிகள்...!
எங்கள் திமுக , அதிமுக தொழிற்சங்க தலைவர்களின் , அதிகாரிகளின் ஓராண்டு கொள்ளை 150 கோடி இருக்கலாம்.
* பெண்ணாடம் பயணத்தில் Villalan Neyveli வழங்கிய தகவல்கள்.
நாங்கள் சில வருடங்களுக்கு முன் பயங்கரமான பொரியார் பக்தர்கள்.. !

Kumarimainthan தமிழகத்தின் கரிம வளத்தை முழுமையாகக் கொள்ளையடிக்க தில்லிக்காரனுடன் மல்லுக்கட்டியவரை எப்படிப்பாராட்ட முடியும்? இந்தியாவிலிருந்த எந்தக் கனிம வளத்திலும் கைவாக்காத ஆங்கிலனைக் கும்பிட வேண்டும். அணுவுலை வேண்டாம், நெய்வேலி மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கு வேண்டும் என்று நாம் இன்றே இப்பொழுதே போரடத் தொடங்க வேண்டும். 

இதே கருத்தை ஒரு துண்டறிக்கை மூலம் சுப.உதயகுமாரும், சேசுராசா எனப்படும் மைபா ஆகிய மைக்கேல் பாண்டியன், அரிமாவளவன் எனப்படும் ரெசினால்டு ஆகிய இரு விடுதலை இறையியல் கத்தோலிக்கக் கிறித்துவச் சாமியார்களும் இருந்த கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டக் கூடாரத்தினுள் வழங்கிய எமது தோழர்களின் தோள்களில் கைவைத்து வெளியே அழைத்து வந்தவர்கள், நெய்வேலிக்கு எதிராக இப்படிப் போராடினால் "இந்திய ஒருமைப்பாடும் இறையாண்மையும் என்னாவது" என்று கடிந்து திருப்பிவிட்டார்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக