திங்கள், 19 மார்ச், 2018

ராஜஸ்தான் சென்று கொள்ளையரை பிடிக்க முயன்ற தமிழகம் போலீஸ் சாவு

aathi1956 aathi1956@gmail.com

13/12/17
பெறுநர்: எனக்கு
13-டிசம்பர்-2017 21:10 சென்னை No comments
கூடுதல் போலீசாரை அனுப்பியிருந்தால் உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது, காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மனைவி வேதனை
காவல் ஆய்வாளர் பெரியபாண்டின் சுட்டுக்கொல்லப்பட்டதால் அவரது குடும்பத்தினர் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
கூடுதல் போலீசாரை ராஜஸ்தானுக்கு அனுப்பியிருந்தால், உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது என்று காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மனைவி பானுரேகா தெரிவித்தார்.
ராஜஸ்தானுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற தனது தந்தை பெரியபாண்டியன், திங்கட்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு விரைவில் வீடு வரவுள்ளதாக கூறியதாகவும், ஆனால் இன்று செய்தியை பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்ததாகவும் அவரது மூத்த மகன் ரூபன் வேதனையுடன் கூறினார்
இதனிடையே, ராஜஸ்தானில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட காவல் ஆய்வாளர் முனிசேகரை சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை மேற்கு முகப்பேரில் உள்ள இல்லத்தில் பேட்டியளித்த காவல் ஆய்வாளர் முனிசேகரின் மனைவி உஷா, தனது கணவர் நாள்தோறும் தங்களை தொடர்பு கொண்டு பேசியதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாக அவரே கூறியதாகவும் தெரிவித்தார்.

ொன்ற கொள்ளையன் நாதுராமை உயிருடன் பிடிக்க முயற்சி
இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற கொள்ளையன் நாதுராமை உயிருடன் பிடிக்க முயற்சி தமிழக-ராஜஸ்தான் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
டிசம்பர் 13, 2017, 02:09 PM
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் எப்படி சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதில் மாறுபட்ட இருவேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. ராம்புரா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றபோது அறைக்குள் இருந்த கொள்ளையர்கள் சரமாரியாக சுட்டதாகவும் அதில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உயிர் இழந்ததாகவும் சென்னை போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
ராஜஸ்தானில் கொள்ளையர்களை தேடி தமிழக போலீசார் சென்ற இடம் செங்கல்சூளை. கொள்ளையன் நாதுராமை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் அவனை வேனில் ஏற்றினார் என்றும் அந்த சமயத்தில் நாதுராம் திடீரென பெரியபாண்டியனிடம் இருந்த துப்பாக்கியை பறித்து அவரை சுட்டுக் கொன்று விட்டு தப்பி ஓடி விட்டதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி ராஜஸ்தான் சென்றுள்ள சிறப்பு தனிப்படை போலீசார் விசாரணைக்கு பிறகே தெரிய வரும்.
தமிழக போலீசாரை நாதுராம் உறவினர்களும் தாக்கி உள்ளனர்.
கொள்ளையன் சுட்டு கொன்ற துப்பாக்கியுடன் ராம்புரா பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாதுராமை உயிருடன் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஹிந்தியர் வடயிந்தியர் நகைக்கடை திருட்டு கொள்ளை வந்தேறி பானிபூரி பெரியபாண்டியன் தேவர் ராஜஸ்தானி 

Sent from my Samsung Galaxy smartphone.

aathi tamil aathi1956@gmail.com

14/12/17
பெறுநர்: எனக்கு
சுரேஷ் தேவர் சாேழநாடு
தனது சாெந்த ஊரான மூவிருந்தாளியில்,ஆரம்ப கல்வி பயில குழந்தைகள் ஆறு
கிலாே மீட்டர் நடந்து சென்று வருகிறார்கள் என்று தெரிய வரவும் தனக்கு
சாெந்தமான இடம் பதினைந்து சென்டை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு கடந்த
ஆறு வருடங்களுக்கு முன் தானமாக காெடுத்துள்ளார்..
# வீர_வணக்கம்
# தீரன் பெரிய பாண்டி தேவர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக