ஞாயிறு, 4 ஜூன், 2017

அம்பேத்கர் தமிழே மூத்தமொழி நாகர் இனப்பெயர் தமிழர் மொழிப்பெயர்

டாக்டர் அம்பேத்கர் - தீண்டப்படாதவர்கள் யார்? தமிழ் மொழிபெயர்ப்பு பக்கம் - 94.

மேலும் தாசர்கள் எனப்படுவோரும் நாகர்களே என்று அம்பேத்கர் விளக்கமளிக்கிறார்.  வேதகால இலக்கியத்தில் நாகர்கள் எவ்வாறு தாசர்கள் என அழைக்கப்பட்டனர் என்பதைப் புரிந்து கொள்வது சிரமம் ஒன்றுமல்ல.  தஹாகா என்னும் இந்தோ ஈரானிய சொல்லின் சமற்கிருத மொழி வடிவமே தாசர் என்பது .  தஹாகா என்பது நாகர்களுடைய மன்னனின் பெயர்.  எனவே நாகர்களை அவர் களுடைய மன்னன் தஹாகாவின் பெய ரால் ஆரியர்கள் அழைக்க ஆரம்பித் தனர். இதுவே அதன் சமற்கிருத வடிவத்தில் தாசர் என்றாகி அனைத்து நாகர்களையும் குறிப்பிடும் இனப் பெயராயிற்று.

ரிக் வேதத்தில் நாகர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதானது நாகர்கள் மிகப் பண்டைக் காலத்து மக்கள் என்பதைக் காட்டுகிறது.  நாகர்கள் எவ்வகையிலும் ஆதிவாசிகளோ அல்லது நாகரிகமற்ற மக்களோ அல்லர் என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.  நாகர்கள் உயர்ந்த பண்பாட்டுத் தரத்தை எய்தி இருந்தது மட்டு மன்றி இந்தியாவில் ஒரு கணிசமான பகுதியில் அவர்கள் ஆட்சி செய்தும் வந்தனர்.  என்பதையும் வரலாறு காட்டுகிறது.  மராட்டியம்தான் நாகர்களின் தாயகம்.  அதன் மன்னர்களும், மக்களும் நாகர்களாகவே இருந்தனர்.

(மேற்குறிப்பிட்ட நூல் பக்கம் 82_83)

மனுவின் காலத்தில் ஆரியமொழி யில் அசுரர்கள் மொழியும் புழக்கத்தில் இருந்தன.  ஆயினும் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலத்தில் ஆரியமயமான குலங்களிடையே அசுர மொழி கிட்டத்தட்ட வழக்கொழிந்து போயிருக்க வேண்டும்.  எனவே, இனம் மாறிய தங்களுடைய சகோதர்கள் தங்களைப் புறக்கணித்த போதிலும் அசுரர்கள் தங்களுடைய முன்னோர்கள் சென்ற மொழியையும் சமயத்தையும் பழக்க வழக்கங்களையும் பாதுகாத்து வந்தனர் என்றே தோன்றுகிறது.  புத்தெழுச்சி பெறாத இத்தகைய குலங்களுக் கிடையேதான் பைசாசி பேச்சுவழக்கு மொழிகள் பயன்பாட்டில் இருந்தன என்பதும் இவர்களில் திராவிட பாண்டியரும் அடங்குவர் என்பதும் தெரியவருகிறது.

(மேற்படி நூல் பக்கம் 93, 94)

திராவிடர்கள் என்ற சொல் தென்இந்தியாவில் தமிழ்பேசும் மக்களை மட்டும் ஏன் குறிப்பிடுகிறது என்பது பற்றி அம்பேத்கர் எழுதி இருப் பது அப்படியே கீழே தரப்படுகிறது:

நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விடயம் திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச் சொல் அல்ல என்ப தாகும்.  தமிழ் என்னும் சொல்லின் சமற்கிருத வடிவமே இந்தச் சொல்.  தமிழ் என்னும் மூலச் சொல் முதன் முதலில் சமற்கிருதத்தில் இடம் பெற்றிருந்தபோது தமிதா என்று உச்சரிக்கப்பட்டது.  பின்னர் தமில்லா வாகி முடிவில் திராவிடா என உருத்திரிந்தது.  திராவிடா என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை.  நாம் ஞாபகத்திற்குக் கொள்ள வேண்டிய விடயம் தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை.  மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாகவும் இருந்தது; காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்தது என்பதேயாம்.  உண்மையில் இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டு வந்த மொழியாகவும் திகழ்ந்தது. 

ஆரியர்களுக்கும், நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுத்திய தாக்கத்தையும் அடுத்த படியாக நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். இதில் விந்தை என்னவென் றால், இந்தத் தொடர்பு வடஇந்திய நாகர்களிடம் ஏற்படுத்திய விளைவு தென்இந்திய நாகர்களிடம் தோற்று வித்த விளைவிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதாகும்.  வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டு, அதற்குப் பதில் சமற்கிருதத்தை வரித்துக்கொண்டனர்.  அனால் தென்இந்தியாவிலிருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை; தமிழையே தங்களது தாய் மொழியாகத் தொடர்ந்து பேணிக்காத்து வந்தனர்; ஆரியர்களின் மொழியான சமற்கிரு தத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக் கொள்ளவில்லை. இந்த வேறுபாட்டை மனதிற் கொண்டால் திராவிடர் என்ற பெயர் தென் இந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

திராவிடர் என்ற சொல்லை வட இந்திய நாகர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; ஏனென்றால் திராவிட மொழியைப் பேசுவதை அவர்கள் விட்டுவிட்டனர்.  ஆனால், தென் இந்தியாவின் நாகர்களைப் பொறுத்தவரையில் திராவிட மொழியை தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்த தால் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர்; அதுமட்டுமன்றி, வட இந்திய நாகர்கள் திராவிட மொழி யைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு விட்டதன் காரணமாக திராவிடமொழி பேசும் ஒரே மக்கள் என்ற முறையில் தங்களைத் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்வது மிகமிக அவசியமாயிற்று.  தென் இந்தியர்கள் திராவிடர்கள் என ஏன் அழைக்கப் படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.

எனவே, தென்னிந்திய மக்களுக்குத் திராவிடர் என்ற சொல் விசேடமாகப் பயன்பட்டிருப்பதானது நாகர்களும், திராவிடர்களும் ஒரே இனத்தவர்களே என்ற உண்மையை மூடி மறைக்க அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவேயாகும்.  நாகர்கள் என்பது இனம் அல்லது கலாச்சாரப் பெயர்.  திராவிடர் என்பது மொழியின் அடிப்படையில் அமைந்த அவர்களது பெயராகும்.

(மேல் கூறப்பட்ட நூல் பக்கம் 94_96)
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக