வெள்ளி, 9 ஜூன், 2017

பாண்டியர் பல்லவர் தொடர்பு கல்வெட்டு

திருவேங்கட மலையில் வசித்தோரும்,
அஞ்சா நெஞ்சு படைத்தவர்களுமாகிய வேங்கட
நாட்டு போர்க்குடிகளிற் சிலர் "கள்ளர் பெருமகன்
தென்னவன்" எனும் பாண்டிய மன்னரால்
தென்னாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள் வீசங்கி நாட்டில் தலைமையேற்றனர்.
பாண்டிய மன்னர் உக்கிர வீர பாண்டியன், நீண்ட
நாட்கள் தொண்டை மண்டலத்தில் வேங்கடாசலப்
பல்லவராயரை அழைத்து வருவதற்காக
காத்திருந்து, பின் அவர் உதவியால்
சேதுபதி நந்தி மறவனை வென்றார். அதன்
பொருட்டு பாண்டிய மன்னர்,
பல்லவராயருக்கு பொன்னமராவதி பக்கத்தில்
நிலங்களும்,அரண்மனையும்
அளித்ததோடு பல்லவராயரை தமது மருமகன்
என அறிவித்தார். தொண்டைமண்டலத்தி
லிருந்து, பல்லவராயருடன் வந்த
தொண்டைமான் ஒருவருக்கு அம்பு கோவிலில்
நிலங்கள் அளிக்கப்பட்டன.
இச்செய்திகள் செப்புப் பட்டயத்தில்
குறிக்கப்பட்டுள்ளது.
திருமலைராய பல்லவராயர் என்பவர்
பாண்டியர்களைப் பாதுகாத்தவரென்று,
திருநாரண குளத்திலுள்ள கி.பி,1539-ஆம்
ஆண்டுக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
வழுத்தூர் பல்லவராயர்கள் பல
கோவில்களுக்கு நிலங்கள் அளித்துள்ளதுடன்,
"பல்லவன் குளம்" எனும் பெயரில் பல
வாவிகளும் உண்டாக்கியிருக்கின்றனர்.

திருப்பதி வேங்கடம் மறவர் கள்ளர் 

vijay pallava 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக