ஞாயிறு, 4 ஜூன், 2017

ஆப்பிரிக்கா தமிழர் தொடர்பு நீண்ட கட்டுரை 2


VI. பிற ஆப்பிரிக்க நாடுகளும் தமிழின் வேர்களும். 


எத்தியோப்பியாவுக்கு அருகில் உள்ள இன்னொரு பெரிய நாடு இன்றைய தான்சானியா (Tanzania). 
6.1. தான்சானியா என்ற பெயரும் தமிழ்ப்பெயரே

இந்த நாட்டின் பழைய பெயர் தான்கனைகா (Tanganyika) 

தங்கனைகா (Tanganyika) என்ற 1961 ல் விடுதலை பெற்ற உள்நாடும் 
சான்சிபார் (Zanzibar) என்ற1963 ல் விடுதலை பெற்ற அருகில் உள்ள  தீவுநாடும் 
1964 ல் ஒன்றாக இணைந்து தான்சானியா என அழைக்கப்படலாயிற்று. காண்க:

 

பழைய தான்கனிகா என்ற பெயர் அந்த நாட்டிலுள்ள 
தான்கனிகா ஏரியின் பெயரில் உருவான நாடு
தான்கனிக்கா ஏரி உலகின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரி.


சுவாகிலி மொழியில் தாங்கல் என்றால் நீர்வழி அல்லது ஏரி என்றே பொருள். காண்க:

தாங்கல் என்றால் தமிழில் ஏரி என்றே பொருள்.  
(எ.கா. வேடந்தாங்கல், ஐயப்பன்தாங்கல்... காண்க:)



6.2. சான்சிபார் ஒரு தமிழ்ச்சொல் 
சான்சிபார் (Zanzibar) என்ற தான்சானியாவின் தீவு நாடு. தென் இந்தியாவின் பாதிப்பு காரணமாக இன்றும் அந்த தீவு நறுமணப்பொருள் தீவு  (Spices Island) என்றே அழைக்கப்படுகிறது. சான்சிபார் என்பதன் அராபிய வேர்ச்சொல் கருப்பர்களின் தீவு என்று இருந்தாலும், சான்சிபாரின்  மூலச்சொல் சங்கு தீவு என்பதே ஆகும்.காண்க:
அங்குள்ள ஒரு கடற்கரை இடத்தின் பெயர் சங்குதான். காண்க:  

Sankha-Dwipa signifies the Island of Shells. 

அடுத்து 

6.3.  ஆப்பிரிக்காவின் பெரெனிக்கெ (Berenike) நகரமும் 
தமிழர்களின் வணிகமும்.
 

தமிழர்களின் தென் இந்தியாவுக்கும் ரோம் நகர ரோமையர்களுக்கும் இடையே அமைந்த வாணிபம் முக்கியத்துவம் வாய்ந்தது. அன்று சூயஸ் கால்வாய் இல்லாத காரணத்தினால் நைல் நதி சூயஸ் கால்வாய் போல் பயன்படுத்தப் பட்டது. தென்னிந்தியா விலிருந்து அரபிக்கடல் வழியாக செல்லும் கப்பலின் சரக்குகள் செங்கடலின் அருகில் அமையப்பெற்ற நகரமான பெரெனிக்கெ (Berenike) வரை சென்று அங்கிருந்து ஒட்டகங்களில் நைல் நதி வரை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து நைல் வழியே கப்பலில் பின்னர் ரோமை வரை செல்லும்.

பெரெனிக்கெ வுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஹிந்துவின் பிரண்ட்லைன் (Frontline) பத்திரிகை விளக்கமாக ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. காண்க:

In wide-ranging and ongoing excavations at Berenike launched from 1994 (and at many other places on the Eastern Desert), a team of dedicated archaeologists from the University of Delaware (United States) led by Prof. Steven E. Sidebotham, along with partners from several other institutions, has documented evidence of the cargo from the Malabar coast and people from South India being at the last outpost of the Roman Empire and of Indians on the Berenike-Nile road.
Among the unexpected discoveries at Berenike were a range of ancient Indian goods, including the largest single concentration (7.55 kg) of black peppercorns ever recovered in the classical Mediterranean world (“imported from southern India” and found inside a large vessel made of Nile silt in a temple courtyard); substantial quantities of Indian-made fine ware and kitchen cooking ware and Indian style pottery; Indian-made sail cloth, basketry, matting, etc. from trash dumps; a large quantity of teak wood, black pepper, coconuts, beads made of precious and semi-precious stones, cameo blanks; “a Tamil Brahmi graffito mentioning Korra, a South Indian chieftain”; evidence that “inhabitants from Tamil South India (which then included most of Kerala) were living in Berenike, at least in the early Roman period”; evidence that the Tamil population implied the probable presence of Buddhist worshippers; evidence of Indians at another Roman port 300 km north of Berenike; Indian-made ceramics on the Nile road; a rock inscription mentioning an Indian passing through en route; “abundant evidence for the use of ships built and rigged in India”; and proof “that teak wood (endemic to South India), found in buildings in Berenike, had clearly been reused”(from dismantled ships).

நன்றி: பிரண்ட்லைன் (Frontline)

 [Ships would sail between Berenike and India during the summer, when monsoon winds were strongest, Wendrich said. From Berenike, camel caravans probably carried the goods 240 miles (386 kilometers) west to the Nile, where they were shipped by boat to the Mediterranean port of Alexandria, she said. 




VII. ஆப்பிரிக்காவும் - தமிழும் பண்பாட்டுத் தொடர்புகளில்

தாமரை இரவில் நீரினுள் இருந்து பகலில் நீருக்கு வெளியில் வருவதைப்போல இறப்புக்குப் பின் மன்னர்கள் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையோடு மன்னர்களின் கல்லறைகளில் தாமரை கொண்ட தூண்கள் அமைக்கப்பட்டன.


Forms of the Djed column - Egypt Pharaonic Age 
  • Two native species of lotus grew in Egypt, the white and the blue lotus, the sacred blue lotus was the flower most commonly used and the one depicted in the hieroglyphs
  • The lotus closes at night and sinks underwater, In the morning it re-emerges and blooms again. Thus the flower became a natural symbol of the sun god Ra
  • The Egyptians saw that the blue water lotus opened up each morning, seeing the intense golden center set against the blue petals, an imitation of the golden sun appearing in the blue sky
  • In the Book of the Dead, "transforming oneself into a lotus" is synonymous with resurrection.
  • According to the Creation Myth it was a giant lotus which first rose out of Nun the watery chaos at the beginning of time. From this giant lotus the sun god Ra itself rose on the first day.
  • In Hall of Maat, the Four Sons of Horus were shown standing on a lotus in front of Osiris, signaling that the deceased organs are ready for resurrection and rebirth from the lotus flower
  • The blue lotus was also the emblem of the god Nefertem; 'The Lord of Perfume '.
காண்க:

 


Ashokan pillar with lion capital. India.   Lotus pillar surmounted with lion heads Egypt. Pharanoic Age.

(image source: India and Egypt - edited by Saryu Doshi p. 66).


7.2. ஆப்பிரிக்காவின் பல்லாங்குழிகள்











7.3. நம்மூரு இமயமலை என்ற மேரு மலையும் ஆப்பிரிக்க மேரு மலையும்

 --> உயிர் உருவாக காற்று அவசியம். பனியிலிருந்து நீர் உருவாகி (H2O)உயிர் உருவாக்கத்திற்கு காரணமாய் அமைவது மட்டுமல்ல ஏராளமானஆறுகள் உற்பத்தியாகி தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவையேவாழச்செய்யும் மலை இமய மலை. ஆதலால்,உலகின் தொப்பூழ்க்கொடிஎன்று அழைக்கப்படுகிறது இந்த மலை. (காண்க: Himalaya: Michael Palin).

ஆந்திராவிலுள்ள திருக்காளத்தி கோயில் தென் கயிலாயம் எனப்படுகிறது.திருகாளத்தி கோயில் ஐம்பூதங்களில் ஒன்றான காற்றை அதன் சிறப்பாகக்கொண்டிருக்கிறது. காண்க

தென் கயிலாயம், காற்றை மையமாகக் கொண்டது என்றால் மூலமான(வட) கைலாயமும் அப்படிப்பட்டது தானே.
ஏன் காற்று அடிப்படை?

காற்று, பிராண வாயுவான பிரம்மன் இங்கிருந்து உயிர் கொடுக்கும்ஆறுகளாய் கிளம்புகிறது. அதனால் மிக நீளமான நதிக்குப்பெயர்பிரம்மபுத்ரா (பிரம்மனின் புத்திரன், மகன்). எத்தனை ஆறுகள் இங்கிருந்துஉற்பத்தியாகிறது என்று பாருங்கள். தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாமுழுவதும் சோறு போடுவது, உயிர் கொடுப்பது இம்மேரு மலை.





--> இத்தனை ஆறுகளின் மூலம் இங்கு இருப்பதால்தான் சீனா திபெத்தினைஆக்கிரமித்து விடுதலை தர மறுக்கிறது.
அதிலும் குறிப்பாக சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா நதிகள் ஒரே இடத்தில்கைலாயத்திலிருந்து உற்பத்தியாகிறது.




--> இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மேரு என்ற இமய மலையைதமிழர்கள் செல்லுமிடமெல்லாம் மேரு என்ற அப்பெயர் சொல்லியேஅனைத்து உயரமான மலைகளையும் அழைத்தனர்.  

இந்தியாவின் தென் முனை குமரி முனை என்று சொல்கிறோம். அது தவறு.அது குமரி முனை அல்ல, மாறாக குமேரு முனை. காரணம், மேற்குதொடர்ச்சி மலை குறுகி கடலுள் மூழ்கும் இடம்.


உலகின் பல இடங்களில் உள்ள மலைகளின் பெயர்கள் நமது இமய மலையின்மேரு என்ற தமிழ்ப் பெயரையே கொண்டிருக்கின்றன.

இந்தோனேசியாவில் செமெரு, காண்க:  
இமய மலையின் மேற்கில் சுமேரு, காண்க:  
இமய மலையின் கிழக்கில் குமேரு
ஆஸ்திரேலியாவிற்கருகில் தெற்கு மேரு எனும் திமேரு (Timor), காண்க:  
அமெரிக்காவில் மிசைமேருக்கா காண்க: 
இஸ்ரேல் நாட்டில் மோரியா,

இந்த மேரு மலை இந்தியா, தென்கிழக்காசியாவில் மட்டுமல்ல, ஆப்பிரிக்காவிலும் இருக்கிறது.
ஆப்பிரிக்காவிலுள்ள தன்சானியாவில் கிளிமாஞ்சாரோ மலைச்சிகரத்திற்கு அருகில் உள்ள ஒரு உயர்ந்த மலையின் பெயர் மேரு தான்.


--> 
ஆப்பிரிக்க தான்சானியாவில் மேரு மலை. கீழே நிலப்படத்தில்3 வது வட்டப்பகுதி.



ஆப்பிரிக்காவில் ஒரு நாட்டின் பெயரே கு மேரு தான். அந்தத் தீவு நாட்டின் பெயர்கொமொரோஸ் 



7.4.  சூத்திரர்கள் (Sudras): எத்தியோப்பியர்களும் - தமிழர்களும்

--> கிரேக்கர்கள் ஆப்பிரிக்கர்களை கருப்பர்களாகத்தான் கருதினார்கள்.எத்தியோப்பியன் என்பதற்கு கருப்பன் என்றுதான் பொருள். ஆப்பிரிக்ககருப்பர்கள் மேற்கு எத்தியோப்பியர்கள் என்றும், இந்தியக் கருப்பர்கள்கிழக்கு எத்தியோப்பியர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.European scholars considered the name to be derived from the Greek words aitho "I burn" + ops"face". காண்க:

ஆரியர்கள் இந்தியாவில் புகுந்து ஆக்கிரமித்த சமயத்தில் இந்திய பூர்வகுடிமக்களை அடக்கி ஆள சாதி என்ற வர்ணாசிரம தர்மத்தை புகுத்தி சாதிஅடிப்படையிலான தொழில் மற்றும் மனித ஏற்றத்தாழ்வை செயற்கையாகஏற்படுத்தினர். நான்காவது சாதி சூத்திர சாதி. ஆக இந்திய பூர்வகுடிஅனைவருமே அவர்களின் பார்வையில் சூத்திரர்களே. காண்க:

என்னைப் பொருத்தவரை சூத்திரர்கள் என்ற வேர்ச்சொல் குறிப்பதுதெற்கத்தியர்கள் என்ற பொருளே. பின்னாளில் சாதி என்ற இழிசொல்லாக்கப்பட்டு விட்டது அன்றைய அந்நிய ஆரிய ஆக்கிரமிப்பாளர்களால். 

அவாள்களின் வர்ணாசிரம தர்மப்படி (தர்மம்?) 4 சாதிகள். ஐந்தாவது பிரிவினர் சாதிக்குள்ளே கூட சேர்க்க முடியாத ஒதுக்கப்பட்டவர்கள். 

ஆனால், அவர்கள் தான் இந்த மண்ணின் பூர்வ குடி மக்கள். தொல் தமிழர்கள். மற்றெல்லாரும் கலப்படமே, சூத்திரர்களே.

ஆப்பிரிக்க சூடான் (Sudan) என்பதும் இந்திய சூத்திரர் (Sudra) என்பதும் தெற்குஎன்ற பொருள் குறிக்கும் ஒரே சொல்லே. காண்க:

(காரணம் SUD என்றால் தெற்கு திசையைக் குறிக்கும் சொல் என ஏற்கனவே கண்டோம்.) 


சூத்திரர்கள் இந்தியாவில் தெற்கு பகுதியில் வாழ்பவர்கள். காண்க: 





VIII. ஆப்பிரிக்க மொழிகளும் தமிழின் வேர்களும் 

ஆப்பிரிக்கா ஏறக்குறைய 2000 மொழிகளைக் கொண்ட ஒரு கண்டம். 2000 மொழிகளையும் 3 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள்.
1. ஆசிய-ஆப்பிரிக்க மொழிக்குடும்பம்,
2. நைல்-சகாரா மொழிக்குடும்பம்,
3. நைஜர்-காங்கோ மொழிக்குடும்பம். காண்க:




8.1. கனாரி தீவு மொழியும் தமிழும்
கானரி தீவும் தமிழும். காண்க:
 (ஸ்பானியர் வசம் உள்ள ஆப்பிரிக்க தீவுகள் கனாரி தீவுகள்-Canary Islands)

கனாரியின் குவாஞ்சே மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.
ஒரு சில வார்த்தைகள். காண்க:
மற்றும் இங்கும் காணலாம்.


 குவாஞ்சே மொழி (Canary Islands )
 தமிழ் மொழி 
 Ere 
 ஏரி 
 Adit amane 
 ஆதி அம்மன் 
 Xerco 
 செருப்பு 
 Irrichen 
 அரிசி 


8. 2. துவாரக் மொழியும் தமிழ் மொழியும் 

--> 
வட ஆப்பிரிக்காவில் வாழும் துவாரக் (Tuareg) இன மக்கள் காலனியாதிக்கவாதிகளால் பெர்பெர்கள் (Berbers) என அழைக்கப்பட்டாலும் இன்றுதங்களது மொழியை அடிப்படையாகக் கொண்டு அமார்சி இனம் என்றுஅழைக்கப்படுகின்றனர். மொராக்கோ, அல்ஜீரியா, லிபியா போன்றநாடுகளில் வசிக்கிறார்கள். அவர்களின் மொழி தமிழித் என்றும்அழைக்கப்படுகிறது. காண்க:






துவாரக் இனம் 


--> 
"துவாரக் இன மக்கள் குறைந்தது ஐந்து ஆப்பிரிக்க நாடுகளில் பரந்துவாழ்கின்றனர். ஆனால், அவர்களுக்கு என்றொரு நாடில்லை."ஆப்பிரிக்காவில் அனைத்து மக்களும் ஒரே இனத்தை (race) சேர்ந்தவர்களாககருதுவது தவறு. வட ஆப்பிரிக்காவில் வாழும் அரேபியர்கள், பெர்பர்கள்மட்டுமல்ல, துவாரக் இனத்தவர்களும் தம்மை பிற ஆப்பிரிக்க இனங்களில்இருந்து வேறுபடுத்திப் பார்க்கின்றனர். அவர்களது தோற்றமும் நிறமும்கூட வித்தியாசமாக இருக்கும். நண்பர் கலையரசன் கூறுகிறார் அவர் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த காலத்தில், அவரோடு ஒரு மாலி நாட்டு அகதிதங்கியிருந்தார். "இந்தியர்களைப் போன்ற தோற்றமுடைய இனம் ஒன்றுமாலி நாட்டில் இருப்பதாக," அவர் அவரைப் பார்த்து கூறினார். "ஆப்பிரிக்காவில் இந்தியர்களைப் போன்ற தோல் நிறம், முகத் தோற்றம்கொண்ட மக்கள்" என்ற தகவல், அன்று புதிதாக இருந்தது. அது குறித்துதுருவித் துருவிக் கேட்டதில், துவாரக் மக்களின் விடுதலைப் போராட்டம்எனக்கு அறிமுகமானது. என்னோடு தங்கியிருந்த நண்பர், தென் மாலியைசேர்ந்த பம்பாரா மொழி பேசும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்.வழமையான ஆப்பிரிக்கர்களைப் போன்ற தோற்றம் கொண்டவர்.

இந்த ஆப்பிரிக்க மாலி நாட்டு சிறுவர்களைப் பார்த்தால் நம்மூர்க்குழந்தைகள் மாதிரி இல்லை?



அதே போல எத்தியோப்பிய இளைஞர்கள் 

 

8.3. காமரூன் நாட்டில் தமிழ் பேசப்படுகிறது. 

தமிழ் சிந்தனையாளர் பேரவை ஆய்வு செய்துள்ள கானொளியில் கீழ்க்கண்ட தமிழ் வார்த்தைகள் காமரூன் நாட்டில் பேசப்படுவதைத் தெரிவிக்கிறார்கள். 

1. மண் தூர்ந்த, 2. சோளம், 3. கட்டெறும்பு, 4. தரை, 5. வறண்ட, 6. இது என்ன?, 7. பிடி, 8. இங்கு இருக்கு, 9. அதோ பார், 10. அது என்னமா, 11. செவள வாய். அவர்களுக்கு பாராட்டுக்கள். 
காணொளி காண்க:



IX. சர்வதேச மொழி-இன ஆய்வாளர்களும் ஆப்பிரிக்க-தமிழ் தொடர்புகளும்

1. வரலாற்றின் தந்தை என்று ஐரோப்பியர்களால் சொல்லிக்கொள்ளப்படும், கி. மு. 5 ம் நூற்றாண்டில் வாழ்ந்தஹெரோடோடஸ் என்பவர் கூற்றுப்படி, ஆப்பிரிக்க எத்தியோப்பியர்களும் ஆசிய இந்தியர்களும் ஒரே இன மக்களே. இவர்கள் ஆப்பிரிக்க எத்தியோப்பியர்கள், அவர்கள் ஆசிய எத்தியோப்பியர்கள்.

1. Herodotus, who lived in the fifth century B.C., still called the inhabitants of Baluchistan, a country situated between India and Elam, “Asiatic Ethiopians” (that is, “Asiatic Negroes”), which might mean that dark-skinned people inhabited the area between Iran and India as late as about 2,500 years ago.
  
2. இன்றைய வரலாற்று ஆய்வாளர் வாலிஸ் பட்ஜ் கூற்றுப்படி எத்தியோப்பியா என்பது ஆப்பிரிக்காவில் தொடங்கி இந்தியாவில் முடிகிறது.
 
2. In modern geography the name Ethiopia is confined to the country known as Abyssinia, an extensive territory in East Africa. In ancient times Ethiopia extended over vast domains in both Africa and Asia. "It seems certain," declares Sir E. A. Wallis Budge, "that classical historians and geographers called the whole region from India to Egypt, both countries inclusive, by the name of Ethiopia, and in consequence they regarded all the dark-skinned and black peoples who inhabited it as Ethiopians. Mention is made of Eastern and Western Ethiopians and it is probable that the Easterners were Asiatics and the Westerners Africans." (History of Ethiopia, Vol. I., Preface, by Sir E. A. Wallis Budge.) In addition Budge notes that, "Homer and Herodotus call all the peoples of the Sudan, Egypt, Arabia, Palestine and Western Asia and India Ethiopians." (Ibid., p. 2.) Herodotus wrote in his celebrated History that both the Western Ethiopians, who lived in Africa, and the Eastern Ethiopians who dwelled in India, were black in complexion, but that the Africans had curly hair, while the Indians were straight-haired. 

3.  ரஷ்ய நாட்டு இந்திய ஆய்வாளர் சோக்ராப் கூற்றுப்படி திராவிடத் தமிழர்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வந்தவர்களே யன்றி வடக்கிலிருந்து தெற்கே போன இனமல்ல. 

3. In a survey of the languages of’ India, Pakistan, Ceylon and Nepal, Soviet Indologist G. Zograf notes that the theory that the Dravidian peoples moved from south to north and not in the oppo­site direction has gained more and more recognition of late. (For example, tribes speaking Kurukh, a Dravidian language, and living in the north eastern part of Central India, have a legend which says that their ancestors once lived in Southern India.)



4. சூடான் நாகரீக மக்கள் இந்தியாவிலிருந்து வந்த மக்கள் தான் என்பதை ஜெர்மானிய இன ஆய்வாளர்கள் பவுமான் உறுதிப்படுத்துகின்றனர்.

4. Since 1946 onwards, we affirm that certain languages of Africa have some similarities with Dravidian languages. (See: Our compa­rative study of the Peul language of the scattered shepherd from Bagiorni to Senegal and hereby mentioned Brahui). But our papers have accepted with scepticism in spite of the affirmation ofProfessor Baumann, a German ethnologist and an expert in African studies ‘who has declared in his work published in 1940 (French translation, Payot, 1940) that all theNeo-Sudanese Civilization had come from the South of Asia especially from India.

5. An Indian Professor Upadhyaya identified a number of Linguistic similarities between Dravidian Languages and Senegal Languages.  Upadhyaya U P. IFAN, University of Dakar, Senegal. 

6. ஹால் (Dr. H.R. Hall) சொல்கிறார்: எகிப்தியர்கள் தாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்றுதான் சொல்கிறார்கள். எகிப்தியர்கள் தங்களின் இந்திய நிலத்தை புன்ட் (Punt) என அழைக்கிறார்கள்.

7. புன்ட் தேசம் என்பது எது என விளக்குகிறார்கள் பிரெட்ரிக் வில்ஹெம் (Friedrich Wilhelm மற்றும் Freiherr Von Bissing-1873-1956): இன வரலாற்று ஆய்வின் படி புன்ட் தேசம் என்பது இந்திய தக்கான பீடபூமியில் உள்ள மலபார் கடல் பகுதியே (சேர நாடு). புன்ட் தேசம் புவாணித்  அல்லது பணிஸ் (Puanit அல்லது Panis ) என்றும் அழைக்கப்பட்டது. அதாவது பயணிஸ் (Phoenicians) அல்லது வியாபாரிகள் என்பதே அதன் பொருள் என விளக்குகிறார்கள். பினீசியர்கள் என்றால் பயணிகள் வெகுதொலைவு பயணம் செய்து பொருள் ஈட்டிய வியாபாரிகள் என்பதே பொருள். 
எபோனி மரம், விலை உயர்ந்த மரங்கள், நறுமண தைலங்கள், இரத்தினக் கற்கள் போன்றவைகள் மலபாரிளிருந்து எகிப்தில் இறக்குமதி செய்யப்பட்டன என்கிறார்கள். (source: Prehistoricsche Topfen aus Indien and Aegypten - By Friedrich Wilhelm, Freiherr von Bissing. Chapter VIII ).

8. யூசேபியஸ் (Eusebius) என்ற கிரேக்க எழுத்தாளர் சொல்கிறார். தொல் எத்தியோப்பியர்கள் சிந்து சமவெளி பகுதியிலிருந்து வந்தவர்கள்.

9. பிரித்தானிய ஆய்வாளர் வில்போர்ட் (Lt. Colonel. Wilford) தனது கட்டுரையில் (Asiatic Researchers Vol. III, 1792) எகிப்தியர்கள் இந்தியர்களே என்பதற்கு ஏராளமான தகவல்களை தருகிறார்.

10. பிரித்தானிய கண்டுபிடிப்பாளர் ஜான் ஹானிங் (John Hanning Speke) கூறுகிறார். நைல் நதி உற்பத்தியாகும் விக்டோரியா ஏரியைக் கண்டறிந்த இவர் இந்தியர்களே நைல் நதி பற்றிய முழுமையான அறிவு பெற்றிருந்தனர் என்கிறார்.

11. சர் வில்லியம் ஜோன்ஸ் (Sir William Jones) எத்தியோப்பியர்களும்-இந்தியர்களும் மிகச்சிறப்பான, உயர்ந்த  இனத்தினர் என்கிறார்.(source: Asiatic Researches - volume I p. 426).

1933 ல் Et Tuttle  "In Journal of the American Oriental Society" Dravidian and Nubian

ஆப்பிரிக்காவுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகளைக் கண்டுபிடிக்க நடந்த முதல் முயற்சி.

12. ஹோம்புர்கர் (L. Homburger)  என்ற பிரெஞ்ச் பெண் ஆய்வாளர் செனகலின் கினிய மொழி, சூடானின் மாண்டே மொழி, கிழக்கு ஆப்பிரிக்க பாண்டு மொழி இவைகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகளை கண்டுபிடித்து எழுதினார்.
13. ஜெர்மானிய இனவியலாளர்கள் பவுமான் மற்றும் வெசடர்மான் (H. Baumann, D. Westermann) இருவரும் ஆப்பிரிக்கருக்கும் தமிழருக்கும் இடையே இருக்கும் பலவகை பண்பாட்டுத் தொடர்புகள், இலக்கண, தொழில், மதம் தொடர்பான ஒற்றுமைகளைக் கண்டு பிடித்தனர்.
14. கிரீன்பர்க் (J. H. Greenburg) என்பவர் சூடானின் சகேலியன் மொழி, மற்றும் லிபிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகளைக் கண்டனர்.
15. கொர்நேலியுஸ் (J. T. Cornelius) என்பவர் லிபிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகளை எழுதியுள்ளார்.
16. தியர்னோ முபன்கே (Thierno Amath Mbengue) என்ற மவுரித்தானியா (Mauritania) நாட்டுக்காரர் அவர்களது மூதாதையர் இந்திய வங்காளத்திலிருந்து வந்தவர்கள் என்கிறார். (Mbengue has Bengal connection, he says)
17. The Languages of Africans and Dravidians என்ற கட்டுரையில் சாந்தாராம் (S. R. Santharam) என்பவர் ஆப்பிரிக்க - தமிழ் மொழித் தொடர்புகளை விவரிக்கிறார்.
ஆப்பிரிக்க மொழிகளை மூன்று குழுக்களாகப் பிரிக்கிறார்.
1. வடக்கு ஆப்பிரிக்க மொழிகள். (செமிட்டிய, அராபிய மொழிகள்)
2. சகாராவுக்கு கீழுள்ள மொழிகள் (நைஜர்-காங்கோ குழு) இக்குழுவில் சுவாகிலி, புலானி, யொருபா, ஜுலு மொழிகள் உண்டு.
3. சாரி - நைல் குழு (நுபியன், கொய்சான் மொழிக்குடும்பங்கள்)
உடலியல் தொடர்புகள் - அந்தமான் ஜரவா (அரவா - நாகா)
பண்பாட்டுத் தொடர்புகள் (கண்ணன் கம்சனைக் கொல்லுதல் - சோனி அலி பேர் தொன்மக் கதைகள்)
18. ஜீன்பர்க் (Geenberg) என்பவர் நைஜர் காங்கோ குழு மொழிகளில் 6 பிரிவுகளைக் கூறி (1. Western Asiatic Languages, 2. Mamde, 3. Gur, 4. Kwa, 5. Adamawa, 6. Benne - Congo) அவற்றிற்கும் தமிழுக்கும் உள்ள இலக்கணத் தொடர்புகளை தெரிவிக்கிறார்.



ஆப்பிரிக்காவுக்கும் தமிழருக்கும் உள்ள 
நெருங்கிய தொடர்பு பற்றி கூற 
இயற்கையான  3 காரணங்கள்:

I. பருவகால காற்றின் திசை தென்னிந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே இயற்கையாகவே அமைந்திருப்பது.

உதாரணமாக:
இந்தோனேசியாவில் ஏற்பட்டு 2 மணி நேரத்தில் இந்தியாவை பாதித்த சுனாமி அடுத்த சில மணி நேரங்களில் சென்றது ஆப்பிரிக்க கடற்கரைக்குத்தான். காரணம் கடல் அலை வழி அது. 


அதனாலேயே தமிழர்கள் தென்மேற்கு திசையில் உள்ள ஆப்பிரிக்கா நோக்கிய பயணங்களை பருவக்காற்று காலங்களில் அமைத்துக்கொண்டனர்.


2. The Periplus of the Erythraean sea of First century A.D. mentions that the Indian colonies appeared on the coast of East Africa.
- Indian textiles also were imported from India to Africa. It has been identified in the North Cemestry at Meroe. A kind of water reservoir found in Meroe too must have come from India for it is unknown in Egypt. Both Dravidians and Africans have similar physical appearance and cultural identities. 




 1. எகிப்தில் காராவி (Garawi) ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சாத் எல் காபாரா (Sadd El Kafara) என்ற அணைதான் உலகின் மிகப் பழைமையான அணை என்று சொல்லப்படுகிறது. காண்க:

கி.மு 2650 ல் கற்களாலேயே கட்டப்பட்டதாக சொல்லப்படும் அந்த அணையின் இன்றைய நிலை 

 

அணை இருந்ததற்கான அடையாளமே இல்லை. அணையின் எச்சமாக வெற்றுத்தரை தான் உள்ளது.

ஆனால் 
அழிந்துபோன தங்கள் அணையின் தொழிநுட்பம் உலகில் வேறெங்கும் உண்டா என்று அலைந்த எகிப்தின் நீரியல் வல்லுனர்கள் இறுதியில் வந்த இடம் நம்ம கரிகால் சோழன் கட்டிய கல்லனைக்குத்தான்.செயற்கையான காரை பூசாமல் கற்களால் கட்டப்பட்ட அணை. 


மணற்பாங்கான பகுதி ஆதலால் மேலுள்ள படம் காட்டும் zigzag வடிவில் அதாவது ஒரு கல் மற்றொரு கல்லை இணைக்கும்

காடி வடிவில் கற்களை தரை மணலின் அடி ஆழத்தில் இணைத்து அடித்தளத்தை அமைத்திருக்கிறார்கள் சோழத்தமிழர்கள்.

 

இன்றும் செயல்பாட்டில்  உள்ள உலகின் மூத்த அணை நம் கல்லணை.

 



3. ஆப்பிரிக்கர்களுக்கு அடுத்து உலகளவில் கருத்த நிறம் கொண்டவர்கள் தென் இந்தியர்களே, தமிழர்களே. அதிலும் குறிப்பாக அந்தமான்-நக்காவர (Nicobar) தீவுகளில் உள்ள ஜரவா (Jarawa) இனம் தான் உலகின் மிகக் கறுப்பானவர்கள். காண்க:தமிழகத்தின் இருபுறமும் இன நிறத் தொடர்ச்சி இருப்பது இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. அந்தமான் தீவு மக்களின் மரபணு ஆய்வும் அவர்களின் தமிழின தொடர்புகளையும் ஆப்பிரிக்க தொடர்புகளையும் உறுதிப்படுத்துகிறது. காண்க:
  The early colonization of the Andaman archipelago by bearers of the M2 lineage supports the growing evidence of an early movement of humans through southern Asia and indicates that phenotypic similarities with African groups are convergent.


இராஜேந்திர சோழனின் கல்வெட்டில் நிகோபார் தீவு பற்றிய குறிப்பு


இராஜேந்திர சோழனின் கல்வெட்டு வார்த்தைகள் இதோ அங்குள்ள அன்றைய நாடுகளின் பெயர்களோடு:
 தொல்பெருங் காவற் பல்பழந் தீவும்
செருவிற் சினவி யிருபத் தொருகால்
அரசுகளை கட்ட பரசு ராமன் (பிலிப்பைன்சின் முன்னாள் தமிழ்ப்பெயர் )மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதி
இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் (20)
அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வர்ம
னாகிய கடாரத் தரசனை வாகையும்
பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத் (50)


துரிமையிற் பிறக்கிய பருநிதிப் பிறக்கமும்
ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில்
விச்சா திரத்தோ ரணமு மொய்த்தொளிர்
புனைமணிப் புதவமுங் கனமணிக் கதவமும்
நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும்
வன்மலை யூரெயிற் றொன்மலை யூரும்
ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா சோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்
காவலம் புரிசை மேவிலிம் பங்கமும்
 (60)

 
விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
கலைத்தக் கோர்புகழ் தலைத்தக் கோலமும்
தீதமர் பல்வினை மாதமா லிங்கமும்
கலாமுதிர் கடந்திற லிலாமுரி தேசமும்
தேனக்க வார்பொழில் மானக்க வாரமும் (65)


தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும்
மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான
உடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு..."
விளக்கம் 

மாயிருதிங்கம் மற்றும் மாவிலிம்பங்கம் இரண்டும் பிலிப்பைன்சில் உள்ள தீவுகள்.
சிரிவிஜயா - சுமத்ரா
பனை - பிலிப்பைன்ஸ்
மலையூர் - மலேசியா
இலங்காசோகம் - இலங்கை தேசம் 
வளைப்பந்துரு - வியட்நாம் ?
நக்காவரம் - நிகோபார்
கடாரம் - கெடா
இலைமுரிதெசம் - சுமத்ராவில் Aceh பகுதி (2004 ல் சுனாமி பாதித்த பகுதி )  
மாபாளம் - பெகு
மடமாலிங்கம் - தம்ப்ரளிங்கா
தக்கோலம் - தகோபா 

[நக்கவாரி=தென்னை வகையைச் சார்ந்தது. நக்கவரம்=நிக்கோபார் என்றுத் திரிந்தது.]
சூர்மலை வாழும் நக்க சாரணர், நயமிலர் என்ற மணிமேகலை (16 55, 56) வரிகளில்இந்தச் செய்தி உண்டு.சங்க காலத்திற்கு முன்பிருந்தே ஆடையின்றி அம்மணராகவாழ்ந்த நக்கசாரணர், அவ்வாறே மணிமேகலையின் காலத்திலும் ஆடையின்றித்தொடர்ந்தனர், இன்று வரை அவர்களுட் பலர் ஆடையின்றியே வாழ்கின்றனர்.
அந்த நக்கசாரணர் வாழ்கின்ற இடமே நக்காவரம்
 நக்காவரம்: நிக்கோபார் என்ற இன்றைய வழக்குச் சொல் நக்காவரத்தின் போலி.
X. ஆப்பிரிக்க மதங்களும், கடவுள்களும் தமிழகத் தொடர்புகளும்

10.1 கிருஷ்ணன் அல்லது கண்ணன் வரலாறு-தொன்மக்கதை 

கிருஷ்ணன் கதை யும் ஆப்பிரிக்காவில் அதன் வடிவமும்.
கிருஷ்ணா மதுராவில் பிறந்தார். அவர் தாயின் பெயர் தேவகி. தேவகியின் சகோதரன் கம்சன் தான் நாட்டை ஆளும் மன்னன். தன் சகோதரியின் மகன்களில் ஒருவன், குறிப்பாக எட்டாவது மகன், தன்னைக் கொன்று ஆட்சி பீடம் ஏறுவான் என்று கனவில் தெரிவிக்கப்பட்டதால் தன் சகோதரியின் ஆண் குழந்தைகளை கொல்கிறான். எட்டாவதாக கிருஷ்ணன் பிறக்கிறான். கிருஷ்ணனை காப்பாற்ற ஒரு ஆடு மேய்ப்பவனின் பெண் குழந்தைக்கு மாற்றாக கிருஷ்ணன் விற்கப்படுகிறான். ஆடு மேய்க்கும் தொழிலை தன் சகோதரன் பலராமா வோடு சேர்ந்து செய்கிறான். பின்னாளில் உண்மை தெரியவர கம்சன் கிருஷ்ணனை கொல்ல முயல்கிறான். ஆனால் கிருஷ்ணன் கம்சனை போரில் கொன்று நாட்டை திறம்பட ஆட்சி செய்கிறார். 

  
ஆப்பிரிக்காவில் முழுவதிலும் இதே வகையில் ஒரு வாய்வழி தொன்மக்கதை. அக்கதையின் பெயர் சோனி-அலி-பெர்.
(Soni-Ali-Ber)
சோனி அவ் பெர் (Soni Au Ber) சோங்கை (Songai) நாட்டின் மன்னன். வாண்டூ (Wandou) மன்னனின் நண்பன் மன்னனை காண வந்த போது முந்தைய நாள் தான் கண்ட இறப்புக் கனவை சொல்லி விளக்கம் கேட்கிறான். ஜோதிடர்களிடம் அவர்கள் சென்று விளக்கம் கேட்க அந்த சோதிடர் மன்னனிடம் மன்னன் அதிகம் நேசிக்கும் அவரது சகோதரி காசே (Kassei) யின் மகன் மன்னனைக் கொன்று ஆட்சியை பிடிப்பான் என சொல்கிறான். அரசவை கூடி விவாதித்து காசே யின் அனைத்து ஆண் குழந்தைகளையும் கொல்ல முடிவு செய்கின்றனர். கொல்லும் செயலைச் செய்ய நீதி அமைச்சர் பலமா (Balama) பணிக்கப்படுகிறார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு கொலை செயல் தொடர்கிறது. இடையில் சகோதரி காசே யிடம் பணி செய்யும் பணிப்பெண் ஒரு பெண் குழந்தை பெற காசே தனக்குப் பிறந்த ஆண் குழந்தையை மாற்றி பெண் குழந்தையை ஏற்றுக்கொள்கிறார். பணிப்பெண் பார்கூ (Bargou) விடம் வளரும் ஆண் குழந்தை வளர்ந்ததும் தெரியவந்து மன்னன் கொல்ல முயல்கிறான். இறுதியில் பார்கூ வின் மகனாக வளர்க்கப்பட்ட அஸ்கியா முகமது (Askia Mohamed) மன்னனைக் கொன்று ஆட்சியைப் பிடிக்கிறார். இசுலாம் மதத்தையும் வளர்க்கிறார். 

இரண்டு தொன்மைக்கதையிலும் ஒரே மாதிரியான நிகழ்வுகள். இறுதியில் கிருஷ்ணன் விஷ்ணுவின் அவதாரமாயும், முகமது இசுலாம் மத நிறுவனராயும் மாறுகின்றனர். கிருஷ்ண தொன்மம் கி. மு. 6 ம் நூற்றாண்டில் சாண்டோக்கிய உபநிஷத்தில் (Chandogya Upanishad) சொல்லப்பட்டுள்ளதால் வரலாற்றில் முந்தி உள்ளது. விவிலியத்திலும் கிறிஸ்துவின் பிறப்பு சமயத்தில் இத்தகைய நிகழ்வு சொல்லப்பட்டுள்ளது இங்கே இணைத்துப் பார்க்கலாம். 
 [ Ref: Bruce Franklin - The wake of the gods - 1963 P. 174, 175]
  
இரண்டு வகை தொன்மக் கதைகளிலும் அடிப்படையாக உள்ள தமிழ்க்கூறு: 

தமிழரின் தாய் வழிச் சமூகம்.



10.2. ஆப்பிரிக்க சிங்க முக கடவுளும் தமிழக தொடர்புகளும்.
ஆப்பிரிக்க மெரோ (Meroe) நகரத்தில் நடந்த அகழ்வாய்வில் சிங்க கடவுளரின் உருவங்கள் கிடைத்துள்ளன. இவை இந்திய தொடர்புள்ளவை.

வியாசரின் மகாபாரதத்தில் 38 ம் அத்தியாயத்தில் வரும் ஹிரண்ய கயிப்பு மன்னன் அசுர பலம் கொண்டவன். அவன் மகன் பிரகலாதன் விஷ்ணு பக்தன். விஷ்ணு பக்தியிலிருந்து மாற மகனை பலமுறை கேட்டும் மாறாததால் இந்த தூணில் இருக்கிறானா உன் விஷ்ணு என்று தூணை உதைக்க கீழே விழுந்து உடைந்த தூணில் வெளிப்பட்டார் விஷ்ணு நரசிம்ம அவதாரமாய்.

இரண்டாம் நூற்றாண்டு சிலப்பதிகாரத்திலும் (17 ம் அத்தியாயம்), 9 ம் நூற்றாண்டு சீவக சிந்தாமணியிலும் சிங்க முக கடவுள் பற்றிய குறிப்புகள் உண்டு.
தசாவதாரத்தில் ஒரு அவதாரம் சிம்ம அவதாரம்.
the ancient rulers of the Cusha Dwipas were said to be men of Meru or Meroe – Meroe was the ancient name for Sudan. காண்க:


10.3. எகிப்திய கடவுள் ஏதன் ஒரு தமிழ்க் கடவுள்
எகிப்திய அரசர்கள் பல தெய்வ வழிபாட்டை கொண்டிருந்த சமயத்தில்
ஒரே கடவுள் என்ற புதிய தத்துவத்தை, கருத்தை உலகிலேயே முதல் முதலாக சொன்னவர் எகிப்திய மன்னன் ஏக நாதன்.  
(கி. மு. 1353 முதல் 1336 வரை எகிப்தை ஆண்ட மன்னன்)
அந்த ஒரே கடவுள் பெயர் ஏதன் - அது 
உலகுக்கு வாழ்வு கொடுக்கும், ஒளி கொடுக்கும் சூரியனே.

ஏதன்-ஏகன்-ஏக்-ஏகம்-ஒரு-ஒருமை-ஒரே இறைவன். 


அமினதாப் என்ற தன் பெயரையே 
தனது ஒரு கடவுள் கொள்கையின் காரணமாக 
ஏக நாதன் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டவர் அந்த மன்னன்.
 Akhenaten is especially noted for abandoning traditional Egyptian polytheism and introducing worship centered on the Aten, which is sometimes described as monotheistic or henotheistic. An early inscription likens the Aten to the sun as compared to stars, and later official language avoids calling the Aten a god, giving the solar deity a status above mere gods. காண்க:
மன்னன் ஏகநாதனின் மரணத்திற்கு பின் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மோசே (Moses) அதே ஒரு கடவுள் கொள்கையை மக்களிடம் கொண்டு சென்றார். அதனால் இன்று 
யூத சமயம், இசுலாம் சமயம், பகாய் சமயம், கிறித்தவ சமயம் எல்லாம் ஒரே கடவுள் கொள்கையை போதிக்கின்றன. 
In Year 5 of his reign, Amenhotep IV took decisive steps to establish the Aten as the exclusive, monotheisticgod of Egypt: the pharaoh "disbanded the priesthoods of all the other gods...and diverted the income from these [other] cults to support the Aten". To emphasize his complete allegiance to the Aten, the king officially changed his name from Amenhotep IV to Akhenaten or 'Living Spirit of Aten.  காண்க:

மோசேயும் (Moses)  அவரது எகிப்திய அரசன் 

ஏகநாதனும் (Akhenaton) வழிபட்ட ரே கடவுளின் பெயர் ஏதன்.  (Aten)

யூத, இசுலாமிய, கிறித்தவ சமயங்கள் இறைவன் ஒருவனே என சொல்லும் ஏகத்துவ சமயங்களாக இருப்பதற்கு காரணம் இதுதான். மோசே எ மோயீசன் இடமிருந்து வந்தவை தான் அனைத்து 3 மதங்களும். ஆனால், அவைகளுக்கெல்லாம் காரணமான ஏகத்துவம் என்ற மூலச்சொல்லின் வேர் தமிழே. காண்க: 
அந்த ஒரே கடவுள், சூரியக்கடவுள்:



ஆக,  


 எபிரேயக்கடவுளும் எல் (El) என்றே ஒளி  என்ற பொருளில் அழைக்கப்பட்டார். (Beth-el)  பெத்-தேல்- இறைவனின் வீடு. (Emmanu-el) இம்மானுவேல் மனுவோடு, மனிதனோடு கடவுள் என்று அழைக்கப்பட்டார்.
  
சுலாமியர்களின் இறைவனும் 'அல்லா' (Allah) என்று அழைக்கப்படுவது இந்த ஒளியானவர் என்ற பொருளில் தான். காண்க: 

தமிழில் தெய்வம் - தீய்வம் - தீயான சூரியன் - என்று கடவுளை அழைப்பதுவும் அதே பொருளில். 

ஈழத்தில் இருந்த தமிழ் மன்னன் பெயர் எல்லாளன் - சூரியப்புதல்வன் என்ற பொருளில் 
அதனால்தான் அராபிய வானியலில் அனைத்து நட்சத்திரங்களும் AL என்ற முதல் வார்த்தையாகக் கொண்டுதான் குறிப்பிடப்படுகிறது.

The idea of Akhenaten as the pioneer of a monotheistic religion that later became Judaism has been considered by various scholars. One of the first to mention this was Sigmund Freud, the founder of psychoanalysis, in his book
Moses and Monotheism, Freud argued that Moses had been an Atenist priest forced to leave Egypt with his followers after Akhenaten's death. Freud argued that Akhenaten was striving to promote monotheism, something that the biblical Moses was able to achieve. Following his book, the concept entered popular consciousness and serious research. காண்க:
 Other scholars and mainstream Egyptologists point out that there are direct connections between early Judaism and other Semitic religious traditions. They also state that two of the three principal Judaic terms for God, Yahweh, Elohim (morphologically plural, lit. "gods"), and Adonai (lit. "My Lord" ) have a connection to Aten. Freud commented on the connection between Adonai, the Egyptian Aten and the Syrian divine name of Adonis as a primeval unity of language between the factions. காண்க:
 
10.4.  பண்டைய எகிப்தின் 3 முக்கியக்கடவுள்கள் 

 பண்டைய எகிப்தின் 3 முக்கியக்கடவுள்களையும், அவற்றிற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பையும் காண்போம்.

1. ஹோருஸ் (Horus)
2. ரா (Ra)
3. சேத் (Set)

பழமையான எகிப்தியக் கடவுள்களில் முக்கியமானது ஹோருஸ் (Horus). நமது வருண பகவான் போல இது வான் கடவுள். அதனால் இதன் தலை கருடனின் தலை. வானிலிருந்து கண்காணிக்கும் கருடன் போல. காண்க: 


அடிப்படையில் ஹோருஸ் (ஹோருஸ்) என்பது சுத்த தமிழ் வார்த்தை. Horus என்பது தமிழில் ஓரை அதாவது நட்சத்திரக்கூட்டம் என்பது பொருள். 
9) ஓரை ōrai (p. 70) {*}, s. the rising of a sign, லக்னம்; 2. opportunity, time, நேரம், காலம்; 3. an hour, ஒருமணி நேரம்.  

                  4 திசையும் காலத்தின் (Time) 4 பிள்ளைகள். 



ஓரியன் (Orion) நட்சத்திரக்கூட்டம், Hour என்பதெல்லாம் இந்தத் தமிழ் ஓரையிலிருந்தே.
இந்த ஹோருஸ் கடவுளோடு தொடர்புடையது ரா (Ra) என்ற சூரியக்கடவுள்(ரா-என்றால் அரசனையும் குறிப்பது). சூரியனும் வானில் உள்ள நட்சத்திரம் தானே.காண்க:


இந்த "ரா" வுக்கு அதாவது சூரியனுக்கு எதிரானது சேத் (Set) என்ற இருளின் கடவுள். பகலுக்கு எதிரி இரவு தானே. காண்க: 


 அவ்வளவுதான். இப்ப தமிழோடு உள்ள தொடர்பு. 

தமிழ் சாத்தான்: யாரும் பயப்படாதீங்க...

இந்த பேய், பிசாசு, சாத்தான் எல்லாம் உருவகங்கள். எதுவும் உண்மையில்லை. தமிழர்கள் சூரியன் சாய்ந்து மாலை நேரம் வருவதை, பொழுது சாயும் நேரம், அல்லது பொழுது சேரும் நேரம் என்பார்கள். மேற்கு திசையில் மறைவதால் மேற்கில் இருந்த தமிழர் பகுதியை சேர நாடு, பொழுது சேரும் நாடு என்று அழைத்திருந்தார்கள். மறையும் பொழுதில் மேற்கே இருக்கும் மலையை ஒட்டிய அடிவாரப்பகுதிகள் விரைவில் இருட்டத்தொடங்கும். எனவே சேரும் இரவை, சேருதலை சாமியாக்கி சேர்ந்தான், சேர்த்தான், சார்த்தான், சாத்தான், சாஸ்தா என்றாக்கினார்கள். விடாது கறுப்பு, கறுப்பு அடிச்சிறும் என்று சொல்வது இருளை, அல்லது இருள் தரும் பயத்தை. 
தமிழக மேற்கு மலை அடிவார நெடுகிலும் சாஸ்தா என்ற பெயரைக் கொண்ட கோயிலைக்காண முடியும். 



இந்த சாஸ்தா அய்யப்பனாக்கப்பட்ட வரலாறும் உண்டு. அதே போல் சாஸ்தா என்பதும் அய்யனார் என்பதும் ஒன்றே அவை குறிப்பது புத்தனை என்ற வரலாறும் உண்டு. 

இந்த தமிழ் சாத்தான் தான் வட மொழியில், சைத்தான், ஆங்கிலத்தில் satan, இத்தாலியில், satana. உலகின் பல மொழிகளிலும் அதே பெயர்.

- English Language: Satan
- Afrikaans Language : Satan
- Albanian Language : Satani
- Arabic Language : "Shaytan"
- Armenian Language :satani
- Azerbaijani Language : Åžeytan
- Basque Language : Satan
- Belarusian Language :sejtankij
- Bulgaria Language :Сатаната
- Catalan Language : Satanàs
- Chinese (Simplified) Language :shawshaw
- Croatian Language : Sotona
- Czech Language : Satan
- Danish Language : Satan
- Dutch Language : Satan
- Estonian Language : Saatan
- Filipino Language : Satanas
- Finnish Language : Saatana
- French Language : Satan
- Galician Language : Satanás
- German Language : Satan
- Haitian Creole Language : Satan
- Hebrew Language: şeytan
- Hindi Language :saiththaan
- Hungarian Language : Sátán
- Icelandic Language : Satan
- Indonesian Language : Setan
- Italian Language : Satana
- Latvian Language : Sātans - Lithuanian Language : Šėtonas
- Malay Language : Setan
- Maltese Language : Satana
- Norwegian Language : Satan
- Polish Language : Szatan
- Portugese Language : Satanás
- Romanian Language : Satana
- Russian Language :Szatan
- Slovak Language : Satan
- Slovenian Language : Satan
- Spanish Language : Satanás
- Swahili Language : Shetani
- Swedish Language : Satan
- Turkish Language : Åžeytan 
- Vietnamese Language : Satan
- Welsh Language : Satan

ஒவ்வொரு நாளும் மாறும் இருள்-பகல் மாற்றம் தான் "ஒளி - இருளாக", "கடவுள்-சாத்தானாக" மாறியது என்கிறது zeitgeist. அங்கும் இருளாக இருப்பது "சேத்" (set) என்ற தமிழ் தான். 

தமிழ் ஓரை (Horus-Hour) என்ற ஒளியின் சக்திக்கும் 
தமிழ் சாத்தான் (Set - Satan - Darkness) என்ற இருளின் சக்திக்கும் 

தினமும் நடக்கும் போர் தான் பகல் - இரவு
இது அப்படியே உருவகமாக நன்மையின் சக்திக்கும் தீமையின் சக்திக்கும்பொருத்தப்படுவது நாம் அறிந்த ஒன்றே.


                                     தொடர்ந்து தேடுவோம்...









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக