ஞாயிறு, 11 ஜூன், 2017

2500 ஆண்டு பழமையான நெல் பொருந்தல் ஊர் அகழ்வாராய்ச்சி பழமை சான்று வேளாண்மை

aathi tamil aathi1956@gmail.com

15/10/14
பெறுநர்: எனக்கு
மாவீரன் அருள் ஒளி அவர்கள் பக்கத்தில் இருந்து.
புதிய தலைமுறை: பேராசிரியர் ராஜனின் நேர்காணல்
Posted: 10 Oct 2014 09:35 AM PDT
தொன்று நிகழ்ந்தது அனைத்தும். . .
2500 ஆண்டுகளுக்கு முன்பே நெல் பயிரிட்டவன்
தமிழன் அந்த நெல்மணிகள் இப்போதும் இருக்கின்றன
நீங்கள் தினமும் உண்ணும் அரிசி எத்தனை ஆண்டுகளாக
தமிழர்களின் உணவாக இருந்திருக்கும்
என்று எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?
அண்மையில் நான் சுமார் 2600ஆண்டுகளுக்கு முந்தைய
நெல் மணிகளைப் பார்த்தேன். தொல்லியல் அறிஞரான
பேராசிரியர் ராஜன் அவர்களிடம் அந்த நெல்மணிகள்
உள்ளன
பேராசிரியர் ராஜன் உலக அளவில் மதிக்கப்படும்
தொல்லியல் அறிஞர்களில் ஒருவர்.ஆழ்கடலுக்குக் கீழ்
சென்று ஆய்வுகள் நடத்திய முதல் இந்தியத் தொல்லியல்
வல்லுநர். கொடுமணல்,பொருந்தல் போன்ற இடங்களில் அவர்
மேற்கொண்ட ஆய்வுகள் தமிழர்களின் தொன்மை, சங்க காலம்
இவற்றைப் பற்றிய புதிய செய்திகளையும்
வெளிச்சங்களையும் அளித்துள்ளன.
தற்போது புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின்
வரலாற்றுத்துறை தலைவராகப் பணியாற்றிவரும்
பேராசிரியர் ராஜனுடன் புதிய தலைமுறை ஆசிரியர்
மாலன் நிகழ்த்திய உரையாடலில் இருந்து . . . . . . . .
மாலன்: கிறிஸ்துவிற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்
கு முன்னரே அதாவது 2500
ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இந்தப் பகுதியில்
(ஈரோட்டிற்கு அருகில் உள்ள கொடுமணல் என்ற இடத்தில்
நடத்திய ஆய்வுகள்) வாழ்ந்திருந்தார்கள்
என்பது பெருமைக்குரிய செய்திதான். ஆனால்
அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டுமல்லவா?
பேரா.ராஜன்: அறிவியல்பூர்வமாக உறுதி செய்ய
வேண்டும் என்றுதான் நானும் விரும்பினேன். அதற்கான
வாய்ப்பு பழனிக்குப் பக்கத்தில் உள்ள பொருந்தலில்
அகழாய்வு செய்தபோது கிடைத்தது. பொருந்தல்
அகழ்வாய்வை 2010ல் செய்தோம்.
ஒரு கல்லறையை தோண்டும்போது வட்டமாக
ஒரு தாங்கி(மட்பாண்டங்களை வைக்க ஸ்டாண்ட் போல்
பயன்படும் மண் வளையம்) அந்த கல்லறையில் இருந்தது.
அதற்கு வைரா என்று பெயர். அதில் பெரிய ஜாடியில்
2கிலோ நெல் வைத்திருந்தார்கள். முதல் தடவையாக
தமிழகத்தில் நெல் கிடைக்கிறது.
அறிவியல் பூர்வமாக கால கணிப்பு செய்தால் நன்றாக
இருக்கும் என்ற செய்தோம். தானியங்களை காலக்
கணிப்பு செய்ய கார்பன் டேட்டிங்கை விட நவின
முறையான ஆக்ஸ்சிலேட்டர் மாஸ் ஸ்பெக்ட்டேராமெட
்ரி முறையில் செய்தபோது காலக்
கணிப்பு கிமு 490என்று வந்தது.
உலகத்திலேயே பீட்டா அனலிட்டிக்கல்
லேபாரட்டரி அமெரிக்காவில்தான் உள்ளது. அங்க
அனுப்பியபோது இந்த காலக் கணிப்பு வந்தது..
அதாவது இந்த நெல் கிறிஸ்து பிறப்பதற்கு 490
ஆண்டுகளுக்கு முன்,இன்றைக்கு 2600
ஆண்டுகளுக்கு முந்தையது.
மாலன்: இது வேளாண்மை செய்து பெறப்பட்ட நெல்லா?
அப்படி இருந்தால் அந்தக் காலத்திலேயே தமிழர்கள்
வேளாண்முறைகளை அறிந்திருந்தார்கள்
என்பது உறுதியாகுமல்லவா, அதனால் கேட்கிறேன்.
அப்படி இருந்தால் தமிழர்களின் காலம் இன்னும்
பழமையானதாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில்
வேட்டைச் சமூகம் வேளாண் சமூகமாக மாற சில
நூறாண்டுகள் ஆகியிருக்குமல்லவா?
பேரா.ராஜன்: உண்மைதான் மூன்று வகையான நெல்
இருக்கின்றன வேளாண்மை செய்து வளர்க்காமல்
தானே விளையக்கூடிய காட்டு நெல்
இதற்கு புழுதி நெல் என்ற பெயர்.
இரண்டாவது விதைத்து வளர்க்கிற விளைச்சல் நெல்
மற்றொன்று நாற்று விட்டுப் பறித்து நடுகின்ற
ரீபிளான்டேஷன் நெல்.
காட்டு நெல்லாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
என்று கேள்வி எழுப்பினார்கள். தவிர ஒரு ஆய்வுக்
கூடத்தில் மட்டும் செய்யும்போது இந்தக் காலக்
கணிப்பு அங்கு நடந்த சிறு தவறாக கூட
இருக்கலாம். அப்படி என்றால் காட்டு நெல்லா, பயிர்
செய்த நெல்லா என்று தெரிவதற்கு இதை உறுதி செய்ய
இன்னொரு சோதனை வேண்டும். நம்முடைய
அரசு சட்டப்படி நெல்லை வெளியில் அனுப்பக்
கூடாது என்பதால்,Indian institute of advance
archeological study என்று இலங்கையில் உள்ள
மையத்தில் இருந்து டாக்டர் பிரேம திலகர்
என்பவரை இங்க வரச் சொன்னோம். அவரோடு பாண்டிச்
சேரியில் உள்ள பிரஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆப்
பாண்டிச்சேரி ஆய்வாளர்களும் சேர்ந்து இது விளைச்சல்
நெல்தான். இதன் தாவரவியல் பெயர்
ஒரைசா சட்டைவா இண்டிகா என்று உறுதி செய்தார்கள்
இதேபோல 4
பெருங்கற்படை சின்னங்களை ஆய்வு செய்தோம்.
நான்கிலும் நெல் கிடைத்தது.

நெல்நாகரீகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக