சனி, 3 ஜூன், 2017

வாட்டக்குடி இரணியன் மலேசியா கணபதி வீரசேணன் தோட்டத் தொழிலாளர் கொலை துப்பாக்கிச்சூடு மலாயா மலேசியா

aathi tamil aathi1956@gmail.com

12/12/14
பெறுநர்: எனக்கு
மே..5…
1950
தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை வட்டம்,
வாட்டாக்குடி கிராமத்தில் இராமலிங்கத்தேவர்-
தையல் அம்மாளுக்கு 1920, நவம்பர் 15
அன்று பிறந்தவர் மாவீரன் வாட்டாக்குடி இரணியன்.
இவரது இயற்பெயர் வெங்கடாச்சலம்.
தனது 13 வது வயதில் உறவினர்களுடன் சிங்கப்பூர்
சென்று கட்டிட வேலையிலும் தோட்டங்களிலும்
வேலைபார்த்தார். அங்கெல்லாம் ஆங்கிலேயர்கள்,
சீனர்கள்,மலேசியர்களின் தோட்டங்களில் தமிழர்கள்
அடிமைகளாக
நடத்தப்பட்டது கண்டு அவருக்கு பொதுவுடைமைச்
சிந்தனையாளர்களுடன் உறவு ஏற்பட்டது.
பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள்
மலேயா கணபதி,வீரசேனன் ஆகியோருடன்
இரணியனுக்கு தொடர்பு கிடைத்தது.நூல்
வாசிப்புப் பழக்கம்
உருவானது.பொதுவுடைமை மீதான
பிடிப்பு அதிகமானது.இரகசிய அரசியல்
கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புக்கிட்டியது.
சிங்கப்பூரில் பொதுவுடைமை மற்றும்
பகுத்தறிவு சிந்தனையை வளர்த்துக் கொண்டதால்
நாத்திக சிந்தனையாளன் “இரணியன்”
பெயரை தனது பெயராக மாற்றிக்கொண்டார்.
1943ல் சிங்கப்பூர் வந்த வங்கத்துச்சிங்கம்
நேதாஜியைச் சந்திக்கும் வாய்ப்புப்
பெற்றார்.”இரத்தம்
தாருங்கள்;விடுதலை பெற்றுத்தருகிறேன்”
என்று சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில்
நேதாஜி வீரமுழக்கமிட்டதில் ஈர்ப்படைந்த இரணியன்
நேதாஜி அமைத்த “இந்திய தேசிய இராணுவ”த்தில்
சேர்ந்து பயிற்சியாளராக உயர்ந்தார்.
சுமார் பன்னிரெண்டாயிரம் தொழிலாளர்களைக் கொண்ட
சிங்கப்பூர் துறைமுகத் தொழிலாளர்கள் சங்கத்தின்
தலைவரானார்.1946ல் தொழிற்சங்கத்தின்
முடிவுக்கு ஏற்ப தொழிலாளர்களின் நலனுக்காக
போராட்டம் நடத்தினார்.மலேசிய முதலாளிகளும்
ஆங்கிலேயர்களும் போராட்டத்தை ரவுடிகளைக்
கொண்டு நசுக்க நினைத்ததை எதிர்கொள்ள “இளைஞர்
தற்கொலைப் படை”ஒன்றை நிறுவினார்.
இளைஞர்களுக்கு கொரில்லா பயிற்சியும்
துப்பாக்கிச்சுடும் பயிற்சியும் கொடுத்தார்.
1948ல் மலேசியா பொதுவுடைமைக் கட்சியைத்
தடை செய்தது. பொதுவுடைமை இயக்கத்தலைவர்கள்
தலைமறைவானார்கள்.தனது 28 வது வயதில் இரணியன்
தனது சொந்த ஊரான வாட்டாக்குடிக்குத்
திரும்பினார்.1947ல் விடுதலையடைந்த
இந்தியாவில் நேதாஜிக்கு எதிர்
சிந்தனை கொண்டவர்களின்
காங்கிரசு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததும்
பணக்கார சக்திகள் தொழில் முதலாளிகளாகவும்
நிலப்பிரபுக்களாகவும் மாறியிருப்பதையும்
கண்டு இதற்காகவா இந்திய விடுதலைக்காக
நேதாஜி பாடுபட்டார் என்ற கலக்கம் அவருக்குள்
உருவானது.என்ற கலக்கம் அவருக்குள்
உருவானது.
இந்தியாவிலும்
பொதுவுடைமைக்கட்சி தடைசெய்யப்பட்டிருந்த
நேரம்.அவரது ஊரான வாட்டாக்குடியில்
நிலப்பிரபுக்களின் கொடுமை விவசாயத்
தொழிலாளர்களுக்கு எதிராக அதிகரித்திருந்தது.
”சாணிப்பாலும் சவுக்கடி”யும்
விவசாயத்தொழிலாளர்களுக்கு இயல்பான தண்டனையாக
இருந்தது.ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயத்
தொழிலாளர்களின் உரிமைக்காகவும் நண்பர்களுடன்
சேர்ந்து ”விவசாய சங்கம்” ஒன்றை உருவாக்கினார்.
நிலப்பிரபுக்களுடன் மோதி விவசாயத்
தொழிலாளர்களின்
கூலியை உயர்த்தினார்.இதை பொறுக்க முடியாத
நிலப்பிரபுக்கள் காவல்துறையின் உதவியுடன்
இவர்மீது பல வழக்குகளைப்
பதிவு செய்து கைது செய்ய முயன்றனர்.மீண்டும்
தலைமறைவு வாழ்க்கை தொடர்கதையானது.நிலப்பிரபு
க்களும் முதலாளித்துவ சிந்தனையாளர்களும்
காவல்துறையினர் உதவியுடன் இரணியனுடன்
தொடர்புடையவர்களைக் கொலை செய்யத் தொடங்கினர்.
1950 மே மாதம் 3 ஆம் நாள் இரணியனுடன்
இணைந்து செயல்பட்ட
சாம்பனோடை சிவராமனை (சாம்பவனோடை சிவராமன் ) காவல்துறை சுட்டுக்கொன்றத
ு. வடசேரிக் காட்டில் மறைந்திருந்த
இரணியனை காவல்துறை நெருங்கியது.காலில்
ஏற்பட்ட காயத்தால் அவரால்
ஓடமுடியவில்லை.இரணியனையும் அவருடன் இருந்த
ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவரையும்
வடசேரி சம்பந்தம் என்பவர் காவல்துறைக்குக்
காட்டிக்கொடுத்தார்.
1950 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் இரணியனையும்
ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும் காவல்துறையினர்
பிடித்தனர்.ஆறுமுகத்தின்
மீது வழக்கு ஏதுமில்லை என்பதால்
அவரை விடுவித்து தப்பிக்க காவல்துறையினர்
சொன்ன போதும் இரணியனை விட்டுச் செல்ல
மறுத்துவிட்ட ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும்
இரணியனையும் காவல்துறை சுட்டுக்கொன்றது.
வாட்டாக்குடி இரணியன்,ஆம்லாப்பட்டு ஆறுமுகம்,சா
ம்பனோடை சிவராமன் ஆகியோரின் உடல்கள்
பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு
கூராய்வு செய்யப்பட்டன.பின்னர்
பட்டுக்கோட்டை சுடுகாட்டில் அவர்களின் உடல்கள்
எரிக்கப்பட்டன. தனது 30 வது வயதில்
விவசாயிகளின்… தொழிலாளர்களின் உரிமைக்காகப்
பாடுபட்ட இரணியன் காவல்துறையால் கொல்லப்பட்ட
தினம் இன்று… மே 5…
சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்காக
பாடுபட்டு உயிர்நீத்த
வாட்டுக்குடி இரணியன்,சாம்பவனோடை சிவராமன்
ஆகிய இருவரும் “அகமுடையார்”சமுதாயத்தைச்
சேர்ந்தவர்கள். இவர்களுடன் இருந்து உயிர் நீத்த
ஆம்லாப்பட்டு ஆறுமுகம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச்
சேர்ந்தவர்.
தமிழ்ச்சாதியான இவர்களின் மறைக்கப்பட்ட
வாழ்க்கை வரலாறு வருங்கால
இளைஞர்களுக்கு சமர்ப்பணம்!
நன்றி: திரு. அரப்பா தமிழன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக