சனி, 3 ஜூன், 2017

பத்மசிறி விருது விவசாயி தமிழர் படிக்காதவர் விஞ்ஞானி அறிவியல் வேளாண்மை புதுமுயற்சி கண்டுபிடிப்பு

aathi tamil aathi1956@gmail.com

30/11/14
பெறுநர்: எனக்கு
படித்தால்....பி டித்தால் ...பகிருங்கள்.. ..
புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச்
சேர்ந்த, வெங்கடபதி என்ற
விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீ விருது டெல்லியில்
வழங்கப்பட்டது.
தனது 19- வது வயது முதலே விவசாயத்தில் ஈடுபடத்
தொடங்கினார். தனது முதல் ஆராய்ச்சியில் உருவான
கனகாம்பரம் செடியை 1970-ல் அறிமுகம் செய்தார்.
100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார்.
சவுக்கு மரத்தில் 100 புதிய ரகங்களைக்
ண்டறிந்துள்ளார் .
மூன்று தலைமுறையாகவே விவசாயத்தில் ஈடுபடும்
குடும்பத்தில் பிறந்த வெங்கடபதி, 4-
வது வரை மட்டுமே படித்தவர் என்பது குறிப்பிட
தக்கது. இப்படிபட்டவர் பத்மஸ்ரீ
விருது வாங்கியதை பெருமையாக
வெளியில் சொல்ல வேண்டிய
அரசங்கமே அவரது தனி புகைப்படத்தை வெளியிடவில்லை.
ஊடகங்கள் ஒரு சிலவற்றை தவிர, இந்த
செய்தியை யாருமே வெளியிடவில்லை.
விவசாயம்தான் மனிதர்களுக்கு உயிர் நாடி. ஆனால்,
பொழுதுபோக்கு அம்சங்களான சினிமா, இசை,
விளையாட்டு போன்றவற்றுக்காக
விருது வாங்கியவர்களை எல்லாம்
முன்னிலை படுத்துபவர்கள்,
விவசாயியை மதிக்க தவறிவிட்டனர்.
பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களுக் கான
பாராட்டு விழாவை புது தில்லி தமிழ்ச்சங்கம்
நடத்தியது. அதுகுறித்த விளம்பரம்
இரண்டு தினங்களுக்கு முன்பே, தினசரிகளில்
வெளிவந்தது. அந்த விளம்பரத்தில்
விவசாயி வெங்கடபதியின் பெயர் இடம் பெறவில்லை.
‘பசுமை விகடன்'மூலம் தில்லி தமிழ் சங்க
நிர்வாகிகளின் கவனத்திற்கு இந்த
தகவலை கொண்டு சென்றோம்.
‘‘கட்டாயம் அவரை அழைத்து பாராட்டுகிறோம்'
'என்று சொன்னவர்கள்,
அதன்படியே சிறப்பாக பாராட்டியும் உள்ளார்கள்.
நடிகையின் தொப்புளை வைத்து பிழைப்பு நடத்திய
எந்த வாரஇதழும்
இச்செய்தியை வெளியிடவில்லை ..
ஒருவேளை தொப்புளைவிட விவசாயம் தரம் தாழ்ந்ததாக
நினைத்திருக்கலா ம்.
இதுவே ஒரு சினிமா நட்சத்திரம்
வாங்கி இருக்கிறார் என்றால் எத்தனை குடம்
பாலாபிசேகம் , வானுயர
கட்டவுட்டுகள் , வெடி என ஊரையே அமர்க்களப்படுத்
தி இருப்பார்கள் ...."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக