வியாழன், 22 பிப்ரவரி, 2018

காந்தி யை ஏன் கொன்றேன் கோட்சே வாக்குமூலம் சுருக்கம்

aathi tamil aathi1956@gmail.com

1/11/17
பெறுநர்: எனக்கு
# காந்தியைக் சுட்டுக் கொன்ற
# கோட்சேவின் வாக்குமூலம் இது, ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.
டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், காந்தி கொலை
வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி கோட்சே வாக்குமூலம்
கொடுத்தார். வாக்குமூலம், ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில்
எழுதப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே
வாக்குமூலத்தை கோட்சே படித்தார்.
வாக்குமூலத்தில் கோட்சே கூறியிருந்ததாவது:-
“காந்தியின் கொள்கையால் நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும்’ என்று அவரின்
கால்களுக்கு செருப்பாக இருக்க ஆசை பட்டு அவருடன் சேர்ந்தேன்.
“தெய்வ பக்தியுள்ள பிராமணக் குடும்பத்தில் நான் பிறந்தேன். இந்துவாகப்
பிறந்ததில் பெருமைப் படுகிறேன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக்கு
மிகுந்த பற்றுதல் ஏற்பட்டது.
ஆனால் எனக்கு எவ்வித மூட நம்பிக்கையும் ஏற்படவில்லை.
முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதியில் பகவத் கீதையை மகாத்மா காந்தியால்
படிக்க முடியுமா? 1947_ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15_ந்தேதி விளக்குகள்
அலங்காரத்துடன் நாடெங்கும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட அதே நாளில்
பஞ்சாபில் இந்துக்கள் உடைமைகளை முஸ்லிம்கள் தீக்கு இரையாக்கினார்கள்.
இந்துக்களின் ரத்தம், பஞ்சாப் ஆற்று நீரில் கலந்தோடியது. மேற்கு
பாகிஸ்தானில் இருந்த சிறுபான்மை இந்துக்கள் சித்திரவதை செய்யப்பட்டனர்.
அதேபோல கிழக்குப் பாகிஸ்தானில் இருந்த முகமதியர்களும் நடந்து கொண்டனர்.
11 கோடி மக்கள் வீடு இழந்தனர். இவ்வளவு நடந்தும் மகாத்மா காந்தி,
“முகமதியர்களின் செயலில் ஒரு களங்கமுமில்லை” என்று பரிந்து பேசினார். என்
ரத்தம் கொதித்தது. இனிமேல் நான் பொறுமையாக இருக்க முடியாத சூழ்நிலை
உருவானது. காந்தியடிகளை கடுமையான வார்த்தைகளால் நான் தாக்க
விரும்பவில்லை. அவருடைய கொள்கையும், மார்க்கத்தையும் முழுவதாக
நிராகரிப்பதாகச் சொல்ல விரும்பவில்லை. பிரிட்டிஷ்காரர்கள், நம்மிடையே
பிரிவினையை உண்டாக்கி, சுகமாக நம் நாட்டை ஆண்டு வந்தபோது, மகாத்மா காந்தி
அதை எதிர்த்துப் போராடி பெரும் வெற்றியை நமக்குத் தந்தவர் என்பதை நான்
மறுக்கவில்லை; அதற்காக அவரைப் பாராட்டுகிறேன்.
ஆனால் இந்தியா பிரிக்கப்படுவதற்குக் காரணமாகவும், துணையாகவும் இருந்தவர்
அவர். அதனால் அவர் இன்னும் நாட்டில் இருந்தால், இந்தியாவிற்குத்
துன்பமும், இழப்பும் ஏற்படும். முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கும்,
அட்டூழியத்திற்கும் பக்கபலமாக இருப்பார் என்பதை உணர்ந்து கொண்டேன்.
நல்லதோ, கெட்டதோ அவர் எடுக்கும் முடிவினையே இந்தியா ஏற்றுக் கொள்ள
வேண்டும் என்ற பிடிவாதம் அவரிடம் காணப்பட்டது. இந்தியா அவருடைய தலைமையை
நாடினால் அது நம் நாட்டை எங்கேயோ கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். அவரே
இங்கு உள்ள எல்லாவற்றையும் இயக்குபவர்; ஒரு நீதிபதி என்றும் கூறலாம்.
“சத்தியாக்கிரகம்” என்றும் அழியாது என்பது அவர் அறிந்த சூத்திரம்.
காந்திஜியே தன் செயல்களுக்குத் தாமே வழக்கறிஞரும், நீதிபதியும் எனலாம்.
அவரது அரசியல், பகுத்தறிவு இல்லாதது எனப் பெரும்பாலானோர் நினைத்தனர்.
நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி
எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான
கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை
ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ்
சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு.
காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை,
காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.
சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ்
அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு
வார்த்தைகூட சொல்லவில்லை.
15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான
பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த
இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர்.
இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி
ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல்
நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு
என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித்
துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான்.
தேசத்தந்தை என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு
தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான்
அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத்
துரோகம் செய்துவிட்டார். பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர்
இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து
விட்டார். ‘பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கி இருக்காவிட்டால், நமக்கு
சுதந்திரம் கிடைத்திருக்காது: என்று சிலர் கூறுவது தவறான கருத்து.
தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே
எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர
நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து
முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த
மதிப்பும் தராமல் பாகிஸ்தான் நாடு உருவாக்கப் பட்டது. பிரிக்கக்கூடாத
பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு
நிறுவப்பட்டது.
‘1948 ஜனவரி 17ஆம் தேதி
சாவர்க்காரை பார்த்தோம்’ என்றும் அவர் “வெற்றியோடு திரும்புங்கள்” என்று
வாழ்த்தி வழியனுப்பினார் என்றும் கூறுவதை நான் மறுக்கிறேன். ‘இந்து
மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன்’ என்ற மன நிறைவு எனக்கு
ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன்.
இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும்
அடிப்படையாகக் கொண்டதுதான்.
நம் நாடு “இந்துஸ்தான்” என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா
மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி
நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால்,
அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து,
உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”
இவ்வாறு கோட்சேயின் வாக்குமூலம் இருக்கிறது.
# பிராமணஇந்து வெறியன் # பொந்து பிராமண வெறியனை # கொன்றான் பிராமணியத்தை
நிலைநாட்ட..!
# வந்தேறிகளின் வெறியாட்டம் எம்
# தேசத்தின் சாபக்கேடு..!!
12 மணி நேரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக